என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Student awareness"

    • தூய்மை பாரத இயக்கம் மூலம் மகளிர் சுய உதவிக் குழுவினரிடம், வேளாண் கல்லூரி களப்பயிற்சி மாணவிகளால் விழிப்பு ணர்வு ஏற்படுத்தப்பட்டது.
    • இது நாடு முழுவதும் தேசிய இயக்கமாக செயல்படுத்தப்பட்டு வருகிறது.

    ஆத்தூர்:

    சேலம் மாவட்டம் கெங்கவல்லி வட்டாரம் மற்றும் அதை சுற்றி உள்ள கிராமப்புறப் பகுதிகளில், சுற்றுச்சூழல் சுகாதாரத்தை மேம்படுத்த ஊரக வளர்ச்சித் துறையின் தூய்மை பாரத இயக்கம் மூலம் மகளிர் சுய உதவிக் குழுவினரிடம், வேளாண் கல்லூரி களப்பயிற்சி மாணவிகளால் விழிப்பு ணர்வு ஏற்படுத்தப்பட்டது.

    இது நாடு முழுவதும் தேசிய இயக்கமாக செயல்படுத்தப்பட்டு வருகிறது. மேலும் பிளாஸ்டிக் பொருள்கள் பயன்பாட்டைக் குறைத்தல், துணிப்பைகளை பயன்ப

    டுத்துதல், மக்கும் மற்றும் மக்காக் குப்பைகளைப் பிரித்துக் கொட்டுதல், கழி வறைகளை பயன்படுத்துதல், சுகாதாரமான ஊராட்சியை உருவாக்குதல் குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

    • ஆசிரியர்கள் மாணவர்கள் இணைந்து போதை பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி நடத்தப்பட்டது.
    • போதைப் பொருள் விழிப்புணர்வு நாடகத்தை ஒருங்கிணைத்து மாணவர்களின் மூலம் நாட்டிற்கு விழிப்புணர்வை ஏற்படுத்தினார்.

    கடலூர்:

    சர்வதேச போதை பொருட்கள் ஒழிப்பு தினத்தை முன்னிட்டு எஸ்.ஆர்.கே. பள்ளியின் தாளாளர் சுந்தரவடிவேல் மற்றும் நிர்வாக இயக்குநர் திருநாவுக்கரசு ஆகியோர்களின் வழிகாட்டுதலின்படி பள்ளி முதல்வர் கஸ்தூரி துணை முதல்வர் பிரித்தி மற்றும் ஆசிரியர்கள் மாணவர்கள் இணைந்து போதை பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி நடத்தப்பட்டது. அதனுடன் தமிழாசிரியை பானுமதி போதைப் பொருள் விழிப்புணர்வு நாடகத்தை ஒருங்கிணைத்து மாணவர்களின் மூலம் நாட்டிற்கு விழிப்புணர்வை ஏற்படுத்தினார். ஆசிரியை ரேணுகா பயிற்சியில் 6ம் வகுப்பு மாணவன் ஜெய்சரண் போதைப் பொருள் விழிப்புணர்வு உரையை அழகாக எடுத்துக் கூறினார்.

    ×