search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "போக்சோ சட்டம்"

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • ஏரியூர் போலீஸ் நிலையத்தில் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் சகாதேவன் என்பவர் விசாரணை அதிகாரியாக செயல்பட்டுள்ளார்.
    • தன்னை கணவர் கொடுமைப்படுத்துவதாக உதவி மையத்திற்கு சிறுமி புகார் தெரிவித்ததை தொடர்ந்து அவரை மீட்டு காப்பகத்தில் சேர்த்துள்ளனர்.

    தருமபுரி:

    தருமபுரி மாவட்டம் பென்னாகரம் அருகே உள்ள ஏரியூர், சிங்கிலி மேடுவை சேர்ந்த பழனிச்சாமி (28).

    இவருக்கும் ஓசூர் அருகே உள்ள கிராமத்தைச் சேர்ந்த 17 வயது சிறுமிக்கும் கடந்த 2020-ம் ஆண்டு குழந்தை திருமணம் நடந்தது. அந்த சிறுமிக்கு 2 வயது மதிக்கத்தக்க ஆண் குழந்தை உள்ளது. இந்நிலையில் கடந்த 8 மாதங்களுக்கு முன்பு, சிறுமிக்கும் அவரது மாமியாருக்கும் ஏற்பட்ட தகராறைத் தொடர்ந்து, ஏரியூர் போலீஸ் நிலையத்தில் சிறுமி புகார் அளித்துள்ளார்.

    இதில் ஏரியூர் போலீஸ் நிலையத்தில் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் சகாதேவன் (55) என்பவர் விசாரணை அதிகாரியாக செயல்பட்டுள்ளார்.

    விசாரணையின்போது சிறுமியின் தொலைபேசி எண்ணை பெற்றுக்கொண்ட சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் சகாதேவன், முதலில் மிரட்டியும், பின்பு அதையே காரணம் காட்டியும், பாலியல் தொடர்பில் இருந்ததாக கூறப்படுகிறது. இந்தப் பாலியல் தொடர்பு குறித்து சிறுமியின் கணவர் பழனிசாமிக்கு தெரிந்ததால், கணவன், மனைவிக்கிடையே தகராறு ஏற்பட்டுள்ளது.

    இந்நிலையில், தன்னை கணவர் கொடுமைப்படுத்துவதாக உதவி மையத்திற்கு சிறுமி புகார் தெரிவித்ததை தொடர்ந்து அவரை மீட்டு காப்பகத்தில் சேர்த்துள்ளனர்.

    தொடர்ந்து சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் சகாதேவன், வழிகாட்டுதலின்படி சந்தேகப்பட்டு தகராறில் ஈடுபட்டதற்காக, பழி வாங்கும் நடவடிக்கையாக, சிறுமியை திருமணம் செய்ததாக பழனிசாமி மற்றும் அவரது குடும்பத்தினர் மீது வழக்கு பதிவு செய்துள்ளார்.

    காப்பகத்தில் இருந்த குழந்தைகள் நல உறுப்பினரிடம் அளித்துள்ள புகாரில் ஏரியூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சகாதேவன் தன்னை மிரட்டி பலமுறை தகாத முறையில் நடந்து கொண்டார் என தெரிவித்துள்ளார். இதனை தொடர்ந்து குழந்தைகள் நல உறுப்பினர்கள் பென்னாகரம் நீதிமன்றத்தை நாடி உள்ளனர்.

    பென்னாகரம் குற்றவியல் நீதிமன்றத்தில் சிறுமி, நீதிபதியிடம் அளித்த வாக்குமூலத்தின் அடிப்படையில், சகாதேவனை ஏரியூர் போலீசார் மற்றும் பென்னாகரம் மகளிர் போலீசார் மன்மத லீலையில் ஈடுபட்ட சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் சகாதேவனை போக்சோ வழக்கில் கைது செய்யப்பட்டார். பின்னர் அவரை போலீசார் தருமபுரி கிளை சிறையில் அடைத்தனர்.

    வேலியே பயிரை மேய்ந்தது போல் பாதுகாப்பு கொடுக்க வேண்டிய போலீசே சிறுமியை பாலியல் தொல்லை கொடுத்ததாக போக்சோ வழக்கில் கைதான சம்பவம் ஏரியூரி பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

    • எனது பாட்டிக்கு உடல்நிலை சரியில்லாமல் கோவை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார்.
    • நாம் எங்காவது சென்று வாழலாம் என ஆஷிக் ஆசை வார்த்தைகள் கூறினார்.

    திருப்பூர்:

    திருப்பூர் காலேஜ் ரோடு பகுதியை சேர்ந்த 17 வயது சிறுமி திருப்பூர் வடக்கு அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் ஒரு புகார் மனு கொடுத்துள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:-

    எனது தாய் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு இறந்து விட்டதால் நான் மற்றும் தங்கை, தம்பி ஆகியோர் எனது தந்தை மற்றும் பாட்டியுடன் வசித்து வருகிறோம். நான் கடந்த ஆண்டு பள்ளிக்கு செல்லும்போது பனியன் பிரிண்டிங் நிறுவன தொழிலாளியாக வேலை பார்க்கும் ஆஷிக் (வயது 19) என்பவர் என்னிடம் நட்பாக பழகினார். இருவரும் அடி க்கடி போனில் பேசி வந்தோம்.

    பள்ளி படிப்பு முடிந்தும் எங்களது நட்பு தொடர்ந்தது. இந்தநிலையில் கடந்த மாதம் தன்னை காதலிப்பதாக ஆஷிக் கூறினார். முதலில் மறுத்த நான் பின் காதலை ஏற்றுக்கொண்டேன். இந்த நிலையில் எனது தந்தைக்கு காதல் விவகாரம் தெரிந்ததால் எனது போனை என்னிடம் இருந்து பறித்து வைத்துக்கொண்டார்.

    சிறிது நாட்கள் கழித்து வேறு ஒரு போன் நம்பரை மாற்றி அதை பயன்படுத்தி வந்தேன். இதனை அறிந்து கொண்ட ஆஷிக் என்னிடம் தொடர்பு கொண்டு பேசினார். நான் என்னிடம் பேச வேண்டாம் என மறுத்து விட்டேன்.

    இந்த நிலையில் எனது பாட்டிக்கு உடல்நிலை சரியில்லாமல் கோவை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார். இதனால் எனது தந்தை மற்றும் தம்பி, தங்கை ஆகியோர் கோவை அரசு ஆஸ்பத்திரியில் எனது பாட்டியுடன் தங்கி இருந்து வருகின்றனர்.

    நான் மட்டும் வீட்டில் தனியாக இருந்தேன். இதனை அறிந்து கொண்ட ஆஷிக் நேரடியாக எனது வீட்டிற்கு வந்தார். சிறிது நேரம் பேசிக்கொண்டிருந்த அவர் நான் உன்னை திருமணம் செய்து கொள்கிறேன். நாம் எங்காவது சென்று வாழலாம் என ஆசை வார்த்தைகள் கூறினார். அப்போது திடீரென என்னை வலுக்கட்டாயமாக பாலியல் பலாத்காரம் செய்தார். அதேபோல் நேற்று முன்தினமும் எனது வீட்டிற்கு வந்து என்னை மிரட்டி பாலியல் பலாத்காரம் செய்தார்.

    பின்னர் எனது வீட்டிலிருந்து தப்பி ஓடி விட்டார். இதுகுறித்து எனது சித்தப்பாவிடம் நான் கூறினேன். என்னை ஏமாற்றி பாலியல் பலாத்காரம் செய்த ஆஷிக் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அந்த மனுவில் கூறியிருந்தார். இந்த புகாரின் அடிப்படையில் திருப்பூர் வடக்கு மகளிர் போலீசார் போக்சோ வழக்கு பதிவு செய்து ஆஷிக்கை கைது செய்தனர். பின்னர் அவரை சிறையில் அடைத்தனர்.

    • ஏமாற்றி அழைத்துச் செல்லப்பட்ட சிறுமி, பலாத்காரம் செய்து கொலை செய்யப்பட்டார்.
    • சிசிடிவி காட்சிகளை வைத்து போலீசார் குற்றவாளிகளை கைது செய்தனர்.

    கேரள மாநிலம் ஆலுவா பகுதியில் பீகார் மாநிலத்தில் இருந்து புலம் பெயர்ந்து வந்த தொழிலாளி ஒருவர் குடும்பத்துடன் வசித்து வந்தார். அவரது 5 வயது பெண் குழந்தை கடந்த ஜூலை மாதம் 27-ந்தேதி காணாமால் போனார். இது தொடர்பாக அவர்கள் போலீசில் புகார் கொடுத்தனர்.

    புகாரின் பேரில் போலீசார் சிறுமியைத் தேடிவந்த நிலையில், அடுத்த நாள் (ஜூலை 28-ந்தேதி) ஆலுவாவில் உள்ள உள்ளூர் மார்கெட் அருகே சதுப்பு நிலப் பகுதியில் ஒரு சாக்குப்பையில் சடலமாக மீட்கப்பட்டார்.

    அவரது உடல் பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பிவைக்கப்பட்டது. அதன்படி சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கழுத்தை நெறித்து கொலை செய்யப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டது.

    அங்கிருந்த சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் பீகார் மாநிலத்தைச் சேர்ந்த அசாஃபக் அலாம் (29) என்பவரைக் கைது செய்த கேரள போலீசார் விசாரணை நடத்தினர். விசாரணையின் முடிவில் சிறுமியை வன்கொடுமை செய்து கொலை செய்ததை ஒப்புக்கொண்டார் அசாஃபக் அலாம்.

    இதனைத்தொடர்ந்து போக்சோ நீதிமன்றம் விசாரணை நடத்தி, கடந்த 4-ந்தேதி அசாஃபக் அலாம் குற்றவாளி என அறிவித்தது. தண்டனை வருகிற 14-ந்தேதி (இன்று) அறிவிக்கப்படும் எனத் தெரிவித்தது. அதன்படி இன்று மரண தண்டனை வழங்கி போக்சோ நீதிமன்றம் தண்டனை வழங்கியுள்ளது.

    இன்று குழந்தைகள் தினம். அதேபோல் போக்சா சட்டம் அறிமுகம் ஆகிய 11-வது ஆண்டாகும். இரண்டு முக்கியத்துவம் வாய்ந்த இன்றைய தினத்தில் சிறுமியை கொடுமை செய்து கொலை செய்த குற்றவாளிக்கு நீதிமன்றம் மரண தண்டனை வழங்கி தீர்ப்பு அளித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

    • போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு
    • போலீசார் தேடி வருகின்றனர்

    வந்தவாசி:

    வந்தவாசி அருகே ஒரு கிராமத்தை சேர்ந்த 17 வயது மாணவி செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள ஒரு பள்ளியில் பிளஸ்-2 படித்து வருகிறார்.

    அதே கிராமத்தை லாரி டிரைவர் உறவினர் என்பதால் மாணவியின் வீட்டுக்கு அடிக்கடி சென்று தனிமையில் சந்தித்து பேசி வந்துள்ளார். இதனால் இருவரும் நெருங்கி பழகி உள்ளனர்.

    இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு மாணவிக்கு உடல் நலம் பாதிக்கப்பட்டது. இதனால் மாணவியை செங்கல்பட்டு அரசு மருத் துவமனைக்கு அழைத்துச சென்றனர். அங்கு டாக்டர்கள் பரிசோதனை செய்தபோது மாணவி கர்ப்பமாக இருப்பது தெரியவந்தது.

    இதுகுறித்து வந்தவாசி அனைத்து மகளிர் போலீஸ் நிலை யத்திற்கு செங்கல்பட்டு அரசு மருத்துவமனை நிர்வாகம் தகவல் தெரிவித்தது.

    மேலும் மாணவியின் தந்தை கொடுத்த புகாரின் பேரில் போலீசார் வாலிபர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து அவரை தேடி வருகின்றனர்.

    • மேட்டுப்பாளையம் போலீசில் மகளை கண்டுபிடித்து தரும்படி பெற்றோர் புகார் அளித்தனர்.
    • விக்னேஷ், சிறுமியிடம் வெளியில் செல்லலாம் என்று கூறி வீட்டை விட்டு அழைத்து சென்றுள்ளார்.

    மேட்டுப்பாளையம்:

    கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தை சேர்ந்தவர் 14 வயது சிறுமி. இவர் அந்த பகுதியில் உள்ள பள்ளியில் படித்து வருகிறார்.

    மேட்டுப்பாளையம் எல்.எஸ்.புரத்தை சேர்ந்தவர் விக்னேஷ்(வயது24). கூலித்தொழிலாளி. இவர் வேலைக்கு செல்லும் சமயங்களில் பஸ் நிலையத்தில் வைத்து சிறுமியை பார்த்ததாக தெரிகிறது.

    அடிக்கடி பார்த்ததால், சிறுமியுடன் நட்பை ஏற்படுத்தி கொண்டார். அதனை தொடர்ந்து அவருடன் நட்பாக பழகி வந்தார். ஒரு நாள், சிறுமியிடம், காதலிப்பதாக கூறியுள்ளார். ஆனால் சிறுமி எதுவும் கூறவில்லை. இருந்தபோதிலும் அவர் சிறுமியிடம் காதலிக்க கூறி வந்தார்.

    இந்த நிலையில் சம்பவத்தன்று, விக்னேஷ் சிறுமியை சந்தித்து நான் உன்னை காதலிக்கிறேன். நாம் எங்காவது சென்று விடலாம் என ஆசை வார்த்தைகளை கூறியுள்ளார்.

    அதன்படி கடந்த 1½ மாதங்களுக்கு முன்பு வீட்டில் இருந்த சிறுமி பள்ளி செல்வதாக கூறி விட்டு சென்றார். ஆனால் நீண்ட நேரமாகியும் திரும்பி வரவில்லை.

    இதனால் சந்தேகம் அடைந்த பெற்றோர் அக்கம்பக்கம் தேடி பார்த்தனர். ஆனால் எங்கு தேடியும் கிடைக்கவில்லை.

    இதையடுத்து அவர்கள் மேட்டுப்பாளையம் போலீசில் மகளை கண்டுபிடித்து தரும்படி புகார் அளித்தனர்.

    போலீசார் சிறுமி மாயம் என வழக்குப்பதிவு செய்து, விசாரணை நடத்தி வந்தனர். மேலும் சிறுமியை கண்டுபிடிப்பதற்காக தனிப்படையும் அமைக்கப்பட்டது.

    தனிப்படையினர் பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தினர். விசாரணையில், சிறுமியை, விக்னேஷ் காதலிப்பதாக கூறி கடத்தி சென்றது தெரியவந்தது.

    ஆனால் அவர்கள் எங்கு இருக்கின்றனர் என்பது தெரியாமல் இருந்தது.

    விக்னேஷின் செல்போன் எண்ணை வைத்து, தேடி வந்தனர். அவரது செல்போன் சிக்னல் ஒவ்வொரு நேரமும் பல்வேறு இடங்களை காட்டியதால் போலீசாருக்கு குழப்பம் ஏற்பட்டது.

    இந்த நிலையில் விக்னேஷ் சிறுமியுடன், திருப்பூரில் பதுங்கி இருப்பது போலீசாருக்கு தெரியவந்தது.

    இதையடுத்து சப்-இன்ஸ்பெக்டர் செல்வ நாயகம் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர்.

    அங்கு ஒரு வீட்டில் பதுங்கி இருந்த விக்னேஷ் மற்றும் சிறுமியை மீட்டனர்.

    பின்னர் அவர்களை மேட்டுப்பாளையம் போலீஸ் நிலையத்திற்கு அழைத்து வந்து விசாரித்தனர்.

    அப்போது, விக்னேஷ் சிறுமியிடம் காதலிப்பதாக ஆசை வார்த்தைகளை கூறியுள்ளார். இதனை சிறுமியும் நம்பியுள்ளார்.

    இதை தனக்கு சாதமாக பயன்படுத்தி, விக்னேஷ், சிறுமியிடம் வெளியில் செல்லலாம் என்று கூறி வீட்டை விட்டு அழைத்து சென்றுள்ளார்.

    அவர் ஒரே இடத்தில் இருக்காமல் கேரளா, ஆந்திரா, கர்நாடகா போன்ற இடங்களுக்கு சிறுமியை அழைத்து சென்றதும் போலீசாரின் விசாரணையில் தெரியவந்தது.

    இதையடுத்து போலீசார் விக்னேஷ் மீது போக்சோ சட்டத்தில் வழக்குப்பதிவு செய்தனர். தொடர்ந்து அவரை கைது செய்து, ஜெயிலில் அடைப்பதற்கான நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர்.

    மேலும் சிறுமியை மீட்டு, அவரது பெற்றோருடன் அனுப்பி வைத்தனர்.

    • கைதான சத்யமூர்த்தி துவாக்குடி பெல் நிறுவனத்தில் பணியாற்றி ஓய்வு பெற்றவர்.
    • சத்தியமூர்த்தியின் பாலியல் தொல்லையால் பல இளம்பெண்கள் பாதிக்கப்பட்டு இருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.

    திருச்சி:

    திருச்சி திருவெறும்பூர் அருகே உள்ள நவல்பட்டு அண்ணாநகர் பகுதியைச் சேர்ந்தவர் சத்தியமூர்த்தி (வயது 68). இவர் நவல்பட்டு அண்ணா நகர் பகுதியில் தட்டச்சு பயிற்சி மையம் வைத்து நடத்தி வருகிறார்.

    இந்த இன்ஸ்டிட்யூட்டிற்கு அப்பகுதியில் உள்ள பள்ளி மாணவ-மாணவிகள், கல்லூரி மாணவிகள் மற்றும் திருமணமான இளம் பெண்கள் தட்டச்சு பயில்வதற்காக சென்றனர். காலை 7 மணி முதல் இரவு 8 மணி வரை இந்த இன்ஸ்டிட்யூட் இயங்கி வந்தது.

    இந்த நிலையில் தட்டச்சு பயில்வதற்கு வந்த ஒரு கல்லூரி மாணவிக்கு சத்தியமூர்த்தி பாலியல் தொல்லை கொடுத்ததாக கூறப்படுகிறது. இதனால் அதிர்ச்சடைந்த அந்த மாணவி பயிற்சிக்கு செல்வதை பாதியில் நிறுத்தினார்.

    இதையடுத்து பெற்றோர் மகளிடம் கேட்டபோது, நடந்த விவரத்தை கூறி அழுதுள்ளார். உடனே அந்த மாணவியின் பெற்றோர் திருவெறும்பூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். பின்னர் இன்ஸ்பெக்டர் மங்கையர்க்கரசி சத்தியமூர்த்தியை பிடித்து விசாரணை நடத்தினர்.

    பின்னர் அவரது ஆண்ட்ராய்டு செல்போனை வாங்கி சோதனையிட்டபோது அதில் தட்டச்சு பயில்வதற்காக வந்த இளம்பெண்கள் மற்றும் மாணவிகளின் புகைப்படங்கள் இருப்பது கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.

    அந்த மாணவிகளுக்கு தெரியாமல் அங்கங்களை புகைப்படம் எடுத்து ரசித்து வந்தது விசாரணையில் தெரியவந்தது. அதைத் தொடர்ந்து போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து சத்தியமூர்த்தியை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி ஜெயிலில் அடைத்தனர்.

    கைதான சத்யமூர்த்தி துவாக்குடி பெல் நிறுவனத்தில் பணியாற்றி ஓய்வு பெற்றவர். பணிக்காலத்தின் போதே இந்த டைப்ரைட்டிங் இன்ஸ்டிட்யூட்டை தொடங்கி நடத்தி வந்துள்ளார். 30 ஆண்டுகளாக இந்த இன்ஸ்டிட்யூட் இயங்கி வருகிறது. ஆகவே சத்தியமூர்த்தியின் பாலியல் தொல்லையால் பல இளம்பெண்கள் பாதிக்கப்பட்டு இருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.

    பாலியல் குற்றச்சாட்டில் டைப்ரைட்டிங் இன்ஸ்டிட்யூட் உரிமையாளர் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் அந்தப் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • வயதான பின் வந்த விபரீத ஆசையால் முதியோர் இல்லம் நடத்தி வந்த சூரியகலா தற்போது சிறைக்கு பின்னால் கம்பி எண்ணி கொண்டு உள்ளார்.
    • பருவ வயதில் ஏற்படும் எண்ணங்களை நாம் சிறிது நேரம் சிந்தித்து செயல்பட்டால் நலமுடன் வாழலாம் என்பதே பொதுவான கருத்து.

    தமிழகத்தில் சிறுவர், சிறுமிகளின் மீதான பாலியல் தொல்லைகள் அதிகரித்து வருகிறது. இதனை தடுக்க போக்சோ உள்ளிட்ட பல கடுமையான சட்டங்கள் மூலம் அதனை கட்டுப்படுத்த அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. இருந்தாலும் சிறார்கள் மீதான பாலியல் தொல்லை பல்வேறு இடங்களில் அரங்கேறி வருகிறது. அதைப்போல் தஞ்சை மாவட்டம் கும்பகோணத்தில் 15 வயது சிறுவனை மயக்கி 55 வயது பெண் பாலியல் தொல்லை கொடுத்த சம்பவம் தமிழகத்தில் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தி உள்ளது. அதன் பற்றிய விவரம் வறுமாறு:-

    கும்பகோணம் அருகே சோழன் மாளிகையை சேர்ந்தவர் வீரசோழன். இவரது மனைவி சூரியகலா (வயது55). இவர் கும்பகோணம் அருகே திருவலஞ்சுழியில் முதியோர் காப்பகத்தை நடத்தி வருகிறார்.

    கும்பகோணம் பேட்டை ஆற்றங்கரை தெருவை சேர்ந்தவர் முருகன் (52). இவர்கள் இருவரும் நண்பர்கள். முருகன் அந்த பகுதியில் பைனான்ஸ் தொழில் செய்து வந்தார்.

    இந்நிலையில் அதே பகுதியை சேர்ந்த பெண் ஒருவர் குடும்ப வறுமை காரணமாக வீட்டில் சமையல் செய்து அந்த பகுதியில் உணவு வழங்கி வந்துள்ளார். இவரது 15 வயதுகுட்பட்ட மகன் ஒரு பள்ளியில் படித்து வந்தான், மேலும் இரவு நேரங்களில் அம்மாவிற்கு உதவியாக இரவு உணவு தயார் செய்தும் அப்பகுதியில் வினியோகம் செய்து வந்தான். அவ்வாறு இரவு உணவை முதியோர் இல்லம் நடத்தி வரும் சூரியகலாவிற்கு கொடுத்து வந்துள்ளான். இந்நிலையில் தான் சூரியகலாவிற்கு விபரீத ஆசை உருவானது. அவர் பள்ளி மாணவனை தனது காதல் (காம) வலையில் வீழ்த்த நினைத்தார். அதற்காக அவர் அச்சிறுவனிடம் பாலியல் உணர்வுகளை தூண்டும் வகையில் பேசியும், ஆபாச வீடியோக்களை காட்டியும் உள்ளார். பருவவயதில் எதையும் சிந்திக்காமல், பின்விளைவுகள் பற்றியும் அறியாமல் அந்த பள்ளி மாணவன் சூரியகலாவின் வலையில் சிக்கி கொண்டான்.

    இந்நிலையில் சுறுசுறுப்பாக சுற்றி திரியும் தனது மகன் சிலநாட்களாக ஒரு அறையில் தனிமையில் இருப்பதும், உடல் மெலிந்து காணப்படுவதும் அவரது பெற்றோருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இது குறித்து மகனிடம் விசாரித்த போது அவன் எதையும் கூறாமல் மறைத்து உள்ளார்.

    இதனால் மகனின் விபரீத நிலைமை உணர்ந்த பெற்றோர் அவனை உடனடியாக சிகிச்சைக்காக கும்பகோணம் அரசு ஆஸ்பத்திரிக்கு அழைத்து சென்றனர். அங்கு அவனுக்கு சிகிச்சையளித்த டாக்டர்கள் அதிர்ச்சி அடைந்தனர். ஏனென்றால் அந்த பள்ளி மாணவன் பாலியல் தொல்லைக்கு ஆளாக்கப்பட்டிருப்பது தெரிய வந்தது. இதுகுறித்து டாக்டர்கள் அவரது பெற்றோரிடம் தெரிவித்தனர். தொடர்ந்து மாணவனிடம் விசாரித்ததில் சூரியகலா தன்னிடம் தவறாக நடந்து கொண்டாக கூறினான்.

    இதைத் தொடர்ந்து இது குறித்து சுவாமிமலை போலீசாரிடம் சிறுவனின் பெற்றோர் புகார் அளிக்க சென்றனர்.

    அவர்கள் இந்த வழக்கை விசாரித்து பெண்ணால் பாதிக்கப்பட்ட சிறுவன் 18 வயதுக்கு கீழ் உள்ளவர் என்பதால் இந்த வழக்கை கும்பகோணம் அனைத்து மகளிர் காவல் நிலையத்திற்கு மாற்றினர்.

    அதன்படி கும்பகோணம் அனைத்து மகளிர் போலீஸ் இன்ஸ்பெக்டர் நாகலட்சுமி இந்த வழக்கை விசாரித்து சிறுவனிடம் பாலியல் வன்புணர்வில் ஈடுபட்ட சூரியகலா மற்றும் அவருக்கு உடந்தையாக இருந்த முருகன் ஆகியோரை போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குபதிவு செய்து கைது செய்தார். தொடர்ந்து கும்பகோணம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய பின் திருச்சி மத்திய சிறையில் இருவரும் அடைக்கப்பட்டனர்.

    வயதான பின் வந்த விபரீத ஆசையால் முதியோர் இல்லம் நடத்தி வந்த சூரியகலா தற்போது சிறைக்கு பின்னால் கம்பி எண்ணி கொண்டு உள்ளார். பருவ வயதில் ஏற்படும் எண்ணங்களை நாம் சிறிது நேரம் சிந்தித்து செயல்பட்டால் நலமுடன் வாழலாம் என்பதே பொதுவான கருத்து.

    • சிறுவனின் பெற்றோர் கும்பகோணம் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தனர்.
    • போலீசார் வழக்கு பதிவு செய்து போக்சோ சட்டத்தின் கீழ் சூர்யகலாவையும், உடந்தையாக இருந்த முருகனையும் கைது செய்தனர்.

    கும்பகோணம்:

    தஞ்சை மாவட்டம் கும்பகோணத்தை அடுத்த பட்டீஸ்வரம் சோழன்மாளிகை பகுதியை சேர்ந்த வீரசோழன். இவரது மனைவி சூர்யகலா (வயது 55). இவர் அதே பகுதியில் முதியோர் இல்லம் நடத்தி வருகிறார். இவரது நண்பர் கும்பகோணம் பேட்டை ஆற்றங்கரை தெருவைச் சேர்ந்த முருகன் (52).

    அதே பகுதியை சேர்ந்த ஒரு பெண் வீட்டில் சமையல் செய்து அப்பகுதியில் வியாபாரம் செய்து வந்துள்ளார். இந்த பெண்ணின் 15 வயது மகன் இரவு நேர உணவை முதியோர் இல்லத்திற்கு சென்று சூர்யகலாவிற்கு வழங்குவது வழக்கமாக இருந்தது.

    இந்நிலையில் சிறுவன் திடீரென உடல்நிலை சோர்வுற்று காணப்பட்டான். இதனை கவனித்த பெற்றோர் அதிர்ச்சி அடைந்து விசாரித்தனர். அப்போது சிறுவன் கூறிய பதில் அவர்களை தூக்கி வாரி போட்டது.

    முதியோர் இல்லம் நடத்தி வரும் சூர்யகலா தனக்கு தொடர்ந்து பாலியல் தொல்லை கொடுத்து வருகிறார். அதற்கு உடந்தையாக முருகன் செயல்பட்டார். இதனால் உடல்நிலை சரியில்லாமல் போனது என கூறினார்.

    இதையடுத்து சிறுவனின் பெற்றோர் கும்பகோணம் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தனர். அதன்படி போலீசார் வழக்கு பதிவு செய்து போக்சோ சட்டத்தின் கீழ் சூர்யகலாவையும், உடந்தையாக இருந்த முருகனையும் கைது செய்தனர்.

    பின்னர் உடல்நிலை பாதிக்கப்பட்ட சிறுவனை மருத்துவ சிகிச்சைக்காக கும்பகோணம் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    • சிறுமியின் குடும்பத்தினர் கேரள மாநிலம் எர்ணாகுளத்துக்கு இடம்பெயர்ந்தனர்.
    • புகாரின் பேரில் போலீசார் சிறுமியிடம் கர்ப்பத்துக்கு யார் காரணம் என விசாரணை நடத்தினர்.

    கோவை:

    கோவை சூலூர் அருகே உள்ள அப்பநாயக்கன் பட்டியை சேர்ந்தவர் 18 வயது பெண். இவர் கடந்த 2020-ம் ஆண்டு அந்த பகுதியில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் பிளஸ்-2 படித்தார்.

    அப்போது சிறுமிக்கு மாரியம்மன் கோவில் வீதியை சேர்ந்த பிரவீன் என்ற அரவிந்த் (23) என்ற வாலிபருடன் பழக்கம் ஏற்பட்டது.

    இந்த பழக்கம் நாளடைவில் காதலாக மாறியது. 2 பேரும் அடிக்கடி நேரில் சந்தித்தும், செல்போனில் பேசியும் காதலை வளர்த்து வந்தனர்.

    கடந்த சில தினங்களுக்கு மாதங்களுக்கு முன்பு பிரவீனுக்கு பிறந்த நாள் என்பதால் அவரை நேரில் சந்தித்து வாழ்த்துக்கள் சொல்வதற்காக சிறுமி சென்றார்.

    அப்போது பிரவீன் சிறுமியை கட்டாயப்படுத்தி பாலியல் பலாத்காரம் செய்தார்.

    இதற்கிடையே சிறுமியின் குடும்பத்தினர் கேரள மாநிலம் எர்ணாகுளத்துக்கு இடம்பெயர்ந்தனர். அவர்களுடன் சிறுமியும் சென்றார்.

    இந்தநிலையில் சிறுமிக்கு திடீரென உடல் நலம் பாதிக்கப்பட்டது. அவரை பெற்றோர் அந்த பகுதியில் உள்ள ஆஸ்பத்திரிக்கு அழைத்து சென்றனர்.

    அங்கு டாக்டர்கள் சிறுமியை பரிசோதனை செய்த போது அவர் 3 மாத கர்ப்பமாக இருப்பதாக தெரிவித்தனர். இதனை கேட்டு மாணவியின் பெற்றோர் அதிர்ச்சியடைந்தனர். பின்னர் அவர்கள் இதுகுறித்து எர்ணாகுளம் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர்.

    புகாரின் பேரில் போலீசார் சிறுமியிடம் கர்ப்பத்துக்கு யார் காரணம் என விசாரணை நடத்தினர். அப்போது பிரவீன் தன்னை பாலியல் பலாத்காரம் செய்ததாக தெரிவித்தார்.

    சம்பவம் நடந்தது கோவை மாவட்டம் சூலூர் என்பதால் எர்ணாகுளம் போலீசார் இந்த வழக்கை கோவை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்துக்கு அனுப்பி வைத்தனர்.

    இது குறித்து சூலூர் போலீசார் விசாரணை நடத்தி 18 வயது சிறுமியை பிறந்த நாளுக்கு அழைத்து கட்டாயப்படுத்தி பாலியல் பலாத்காரம் செய்த பிரவீன் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • கிழக்கு மகளிர் போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து மாணவியின் கர்ப்பத்திற்கு காரணமானவர் யார்? என்பது குறித்து விசாரணை நடத்தினர்.
    • விசாரணையில் மாணவியை பாலியல் பலாத்காரம் செய்து கர்ப்பம் ஆக்கியது ராமநாதபுரத்தை சேர்ந்த கூலித்தொழிலாளி என்பது தெரியவந்தது.

    கோவை:

    கோவையை சேர்ந்தவர் 16 வயது மாணவி.

    இவர் அந்த பகுதியில் உள்ள அரசு பள்ளியில் பிளஸ்-1 படித்து வந்தார். கடந்த 10-ந்தேதி மாணவிக்கு திடீரென வலிப்பு ஏற்பட்டது.

    இதனையடுத்து அவரை அவரது பெற்றோர் சிகிச்சைக்காக கோவை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.

    அங்கு அவரை டாக்டர்கள் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதித்து சிகிச்சை அளித்தனர். ஆனால் மாணவி சிகிச்சை பலன் அளிக்காமல் பரிதாபமாக இறந்தார்.

    இதுகுறித்து டாக்டர்கள் சிங்காநல்லூர் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். உடனடியாக போலீசார் அரசு ஆஸ்பத்திரிக்கு விரைந்து சென்று மாணவியின் உடலை மீட்டு பிரத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். டாக்டர்கள் மாணவியின் உடலை பிரேத பரிசோதனை செய்தபோது அவர் 7 மாத கர்ப்பமாக இருப்பது தெரிய வந்தது.

    சிங்காநல்லூர் போலீசார் இந்த வழக்கை கிழக்கு அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்திற்கு மாற்றினர்.

    கிழக்கு மகளிர் போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து மாணவியின் கர்ப்பத்திற்கு காரணமானவர் யார்? என்பது குறித்து விசாரணை நடத்தினர்.

    விசாரணையில் மாணவியை பாலியல் பலாத்காரம் செய்து கர்ப்பம் ஆக்கியது ராமநாதபுரத்தை சேர்ந்த கூலித்தொழிலாளி பிரஷேஷ்(வயது19)என்பது தெரியவந்தது.

    போலீசார் அவரை கைது செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர் போலீசாரிடம் கூறியதாவது:-

    எனக்கும், மாணவிக்கும் இடையே கடந்த ஒரு ஆண்டுகளுக்கு முன்பு பழக்கம் ஏற்பட்டது. இந்த பழக்கம் நாளடைவில் காதலாக மாறியது.

    நாங்கள் 2 பேரும் அடிக்கடி நேரில் சந்தித்து காதலை வளர்த்து வந்தோம். கடந்த சில மாதங்களுக்கு முன்பு எனது வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் மாணவியை அங்கு அழைத்துச் சென்றேன்.

    அப்போது அவரிடம் திருமணம் செய்வதாக ஆசை வார்த்தை கூறி பாலியல் பலாத்காரம் செய்தேன். இதில் அவர் கர்ப்பமானார்.

    இவ்வாறு அவர் போலீசாரிடம் கூறினார்.

    இதையடுத்து போலீசார் கைது செய்யப்பட்ட பிரஷேசை கோர்ட்டில் ஆஜர்படுத்தி ஜெயிலில் அடைத்தனர்.

    • வயநாடு மாவட்டத்தை சேர்ந்த 14 வயது சிறுமி வயிறு வலிப்பதாக பெற்றோரிடம் கூறினா
    • சிறுமியை பரிசோதித்த டாக்டர்கள், வயிற்று வலி அல்ல என்றும் அது பிரசவ வலி என்று கூறினர்.

    திருவனந்தபுரம்:

    கேரளாவின் வயநாடு மாவட்டத்தை சேர்ந்த 14 வயது சிறுமி வயிறு வலிப்பதாக பெற்றோரிடம் கூறினார். இதனைத்தொடர்ந்து அவரை ஆஸ்பத்திரிக்கு பெற்றோர் அழைத்துச்சென்றனர். அங்கு பரிசோதித்த டாக்டர்கள், சிறுமிக்கு வயிற்று வலி அல்ல என்றும் அது பிரசவ வலி என்றும் கூறினர். இதனை கேட்டு சிறுமியின் பெற்றோர் அதிர்ச்சி அடைந்தனர். இதற்கிடையில் சிறுமிக்கு பெண் குழந்தை பிறந்தது.

    தொடர்ந்து சிறுமியிடம் விசாரித்தபோது, அவரது பக்கத்து வீட்டைச் சேர்ந்த 56 வயது தொழிலாளி தான் இதற்கு காரணம் என தெரியவந்தது. அவரை போக்சோ சட்டத்தின் கீழ் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

    • சிறுமி தனியாக இருப்பதை கண்ட உடற்பயிற்சி கூட பயிற்சியாளர் சிறுமிக்கு மிட்டாய் வாங்கி கொடுத்து உடற்பயிற்சி கூடத்திற்கு அழைத்துச் சென்றார்.
    • போலீசார் பயிற்சியாளர் மீது போக்சோ சட்டத்தில் வழக்கு பதிவு செய்து கைது செய்தனர்.

    திருப்பதி:

    ஐதராபாத் மேடிப்பள்ளியில் அடுக்குமாடி குடியிருப்பு உள்ளது. இந்த குடியிருப்பின் முதல் மாடியில் தனி நபர் ஒருவர் உடற்பயிற்சி கூடம் நடத்தி வருகிறார்.

    இந்த உடற்பயிற்சி கூடத்தில் 25 வயது மதிக்கத்தக்க வாலிபர் ஒருவர் பயிற்சியாளராக வேலை செய்து வருகிறார்.

    அடுக்குமாடி குடியிருப்பில் 7 வயது மதிக்கத்தக்க சிறுமி ஒருவர் தனது குடும்பத்துடன் வசித்து வருகிறார்.

    இவர் அதே பகுதியில் உள்ள பள்ளியில் 2-ம் வகுப்பு படித்து வருகிறார். சக நண்பர்களுடன் விளையாடுவதற்காக சிறுமி வீட்டிலிருந்து வெளியே வந்தார்.

    சிறுமி தனியாக இருப்பதை கண்ட உடற்பயிற்சி கூட பயிற்சியாளர் சிறுமிக்கு மிட்டாய் வாங்கி கொடுத்து உடற்பயிற்சி கூடத்திற்கு அழைத்துச் சென்றார்.

    அங்கு 3 மணிநேரம் அடைத்து வைத்து சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்தார். வீட்டில் இருந்து விளையாட சென்ற மகள் நீண்ட நேரம் ஆகியும் வீட்டிற்கு வராததால் அவரது தாய் மகளை தேடிச் சென்றார்.

    அடுக்குமாடி குடியிருப்பு வளாகத்தில் விளையாடிக் கொண்டு இருந்த சிறுமிகளுடன் தனது மகள் இல்லாத இதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். சுமார் 3 மணி நேரத்திற்கு மேல் மகளை தேடி அலைந்து திரிந்தார்.

    அடுக்குமாடி குடியிருப்பில் இருந்த சில பெண்கள் உடற்பயிற்சி கூடத்திற்கு சென்று கதவை தட்டினர். கதவு உள்பக்கமாக தாழிடப்பட்டு இருந்தது. சிறிது நேரம் கழித்து உடற்பயிற்சி கூட பயிற்சியாளர் கதவை திறந்தார்.

    அவரிடம் சிறுமி குறித்து விசாரித்தபோது சிறுமி உள்ளே இருப்பதாக தெரிவித்தார். அப்போது பெண்கள் சிறுமியை ஏன் உடற்பயிற்சி கூடத்திற்குள் நீண்ட நேரம் வைத்திருந்தாய் என கேள்வி கேட்டபோது அவர் அங்கிருந்து தப்பி செல்ல முயன்றார்.

    இதனால் சந்தேகம் அடைந்த பெண்கள் பயிற்சியாளரை சரமாரியாக தாக்கி, போலீசாருக்கு தகவல் அளித்தனர்.

    போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து உடற்பயிற்சி கூட பயிற்சியாளரை போலீஸ் நிலையம் அழைத்துச் சென்று விசாரணை நடத்தினர்.

    மேலும் சிறுமியை மருத்துவ பரிசோதனை செய்ததில் அவர் பாலியல் பலாத்காரம் செய்தது தெரிய வந்தது. இதையடுத்து போலீசார் பயிற்சியாளர் மீது போக்சோ சட்டத்தில் வழக்கு பதிவு செய்து கைது செய்தனர்.

    ×