search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    15 வயது சிறுவனுக்கு பாலியல் தொல்லை கொடுத்த 55 வயது பெண் போக்சோவில் கைது
    X

    15 வயது சிறுவனுக்கு பாலியல் தொல்லை கொடுத்த 55 வயது பெண் போக்சோவில் கைது

    • சிறுவனின் பெற்றோர் கும்பகோணம் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தனர்.
    • போலீசார் வழக்கு பதிவு செய்து போக்சோ சட்டத்தின் கீழ் சூர்யகலாவையும், உடந்தையாக இருந்த முருகனையும் கைது செய்தனர்.

    கும்பகோணம்:

    தஞ்சை மாவட்டம் கும்பகோணத்தை அடுத்த பட்டீஸ்வரம் சோழன்மாளிகை பகுதியை சேர்ந்த வீரசோழன். இவரது மனைவி சூர்யகலா (வயது 55). இவர் அதே பகுதியில் முதியோர் இல்லம் நடத்தி வருகிறார். இவரது நண்பர் கும்பகோணம் பேட்டை ஆற்றங்கரை தெருவைச் சேர்ந்த முருகன் (52).

    அதே பகுதியை சேர்ந்த ஒரு பெண் வீட்டில் சமையல் செய்து அப்பகுதியில் வியாபாரம் செய்து வந்துள்ளார். இந்த பெண்ணின் 15 வயது மகன் இரவு நேர உணவை முதியோர் இல்லத்திற்கு சென்று சூர்யகலாவிற்கு வழங்குவது வழக்கமாக இருந்தது.

    இந்நிலையில் சிறுவன் திடீரென உடல்நிலை சோர்வுற்று காணப்பட்டான். இதனை கவனித்த பெற்றோர் அதிர்ச்சி அடைந்து விசாரித்தனர். அப்போது சிறுவன் கூறிய பதில் அவர்களை தூக்கி வாரி போட்டது.

    முதியோர் இல்லம் நடத்தி வரும் சூர்யகலா தனக்கு தொடர்ந்து பாலியல் தொல்லை கொடுத்து வருகிறார். அதற்கு உடந்தையாக முருகன் செயல்பட்டார். இதனால் உடல்நிலை சரியில்லாமல் போனது என கூறினார்.

    இதையடுத்து சிறுவனின் பெற்றோர் கும்பகோணம் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தனர். அதன்படி போலீசார் வழக்கு பதிவு செய்து போக்சோ சட்டத்தின் கீழ் சூர்யகலாவையும், உடந்தையாக இருந்த முருகனையும் கைது செய்தனர்.

    பின்னர் உடல்நிலை பாதிக்கப்பட்ட சிறுவனை மருத்துவ சிகிச்சைக்காக கும்பகோணம் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    Next Story
    ×