search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "போக்சோ சட்டம்"

    • பெற்றோருடன் கோபித்துக் கொண்டு வீட்டை விட்டு வெளியேறிய சிறுமி திருச்சி அருகேயுள்ள கல்லணைக்கு பேருந்தில் சென்று, அங்கிருந்த பூங்காவில் சுற்றித் திரிந்துள்ளார்.
    • சிறுமியிடம் பணத்தை கொடுத்து அவரை திருச்சி செல்லுமாறு கூறிவிட்டு சென்றுவிட்டார்.

    திருச்சி:

    திருச்சியை சேர்ந்த சிறுமி அடுத்தடுத்து 2 பேரால் பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

    திருச்சி உறையூர் பகுதியை சேர்ந்தவர் 14 வயது சிறுமி. இவர் அதே பகுதியில் உள்ள பள்ளியில் 9-ம் வகுப்பு படித்து வருகிறார்.

    இவர் கடந்த சில தினங்களுக்கு முன்பு தனது பெற்றோரிடம் கோபித்துக் கொண்டு வீட்டை விட்டு வெளியேறினார். பின்னர் அவர் வீடு திரும்பவில்லை. இது தொடர்பாக சிறுமியின் பெற்றோர் உறையூர் போலீசில் புகார் கொடுத்தனர்.

    புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்து தனிப்படை அமைக்கப்பட்டது. தனிப்படை போலீசார் விசாரரைண நடத்தினர்.

    மணப்பாறையை சேர்ந்த முருகேசன் (வயது 45) என்பவருடன் மணப்பாறையில் உள்ள ஒரு லாட்ஜியில் சிறுமி இருப்பது தெரிய வந்தது. இதனை தொடர்ந்து விரைந்து சென்ற போலீசார் சிறுமியை மீட்டு விசாரணை நடத்தினர்.

    பெற்றோருடன் கோபித்துக் கொண்டு வீட்டை விட்டு வெளியேறி, திருச்சி அருகேயுள்ள கல்லணைக்கு பேருந்தில் சென்று, அங்கிருந்த பூங்காவில் சுற்றித் திரிந்துள்ளார். இரவு வெகு நேரமானதால் அங்கிருந்து சத்திரம் பேருந்து நிலையத்திற்கு வந்துள்ளார்.

    அப்போது அடையாளம் தெரியாத நபர் அவரிடம் பேச்சுக்கொடுத்துள்ளார். வீட்டை விட்டு வெளியேறி வந்ததை தெரிந்து கொண்ட அவர், சிறுமியை மத்திய பேருந்து நிலையத்திற்கு அழைத்து வந்து அங்கிருந்து கோவைக்கு அழைத்து சென்று அங்கு ஒரு விடுதியில் தங்க வைத்து பாலியல் பலாத்காரம் செய்ததாக கூறப்படுகிறது.

    அதன் பின் சிறுமியிடம் பணத்தை கொடுத்து அவரை திருச்சி செல்லுமாறு கூறிவிட்டு சென்றுவிட்டார். இதையடுத்து அந்த சிறுமி மறுநாள் திருச்சி வந்தார். வீட்டுக்கு செல்ல விரும்பாத அச்சிறுமி, மணப்பாறை பகுதியில் உள்ள உறவினர் வீட்டுக்கு செல்ல முடிவு செய்து, பேருந்தில் ஏறி மணப்பாறை வந்துள்ளார். மணப்பாறை பேருந்து நிலையத்தில் வந்து இறங்கிய சிறுமியிடம் அங்கிருந்த ஒரு நபர் பேச்சுக் கொடுத்துள்ளார்.

    சிறுமி தனது உறவினர் வீட்டுக்கு செல்ல வேண்டும் எனக் கூறியுள்ளார். இதையடுத்து அந்த நபர் சிறுமிக்கு உடைகள், காலணி உள்ளிட்டவற்றை வாங்கி கொடுத்து, சிறுமியை ஒரு விடுதிக்கு அழைத்து சென்று பாலியல் பலாத்காரம் செய்ததாக போலீசார் விசாரணையில் தெரியவந்தது. இதனை தொடர்ந்து முருகேசனை போக்சோவில் கைது செய்தனர்.

    மேலும் சிறுமியை கோவைக்கு அழைத்து சென்ற மர்மநபர் குறித்து அப்பகுதியில் உள்ள சி.சி.டி.வி. கேமராவின் பதிவை ஆராய்ந்து விசாரணை நடத்தி அவரை தனிப்படை போலீசார் தேடிவருகின்றனர்.

    • மாணவியும், முத்தாலியை சேர்ந்த சிவா (25) என்ற வாலிபரும் காதலித்து வந்துள்ளனர். இது மாணவியின் பெற்றோருக்கு பிடிக்கவில்லை
    • சிறுமி காணாமல் போன நிலையில் அப்பகுதியில் உள்ள சிசிடிவி கேமராக்களை காவல்துறையினர் ஆய்வு செய்தனர்

    கிருஷ்ணகிரி மாவட்டம் ஒசூர் அருகே பாகலூர் பக்கமுள்ள பட்வாரப்பள்ளி கிராமத்தை சேர்ந்த பிரகாஷ் காமாட்சி தம்பதியின் மகளான ஸ்பூர்த்தி (வயது 16) பாகலூரில் உள்ள அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் 11-ம் வகுப்பு படித்து வந்துள்ளார்.

    இந்நிலையில் கடந்த 14-ம் தேதி வீட்டை விட்டு வெளியே சென்ற மாணவி வீடு திரும்பவில்லை. இதனையடுத்து அவர்களது குடும்பத்தினர் அக்கம் பக்கத்தில் தேடியுள்ளனர். இந்நிலையில் 15-ம் தேதி பட்டவாரப்பள்ளி பகுதியில் உள்ள ஏரியில் சிறுமி சடலமாக மிதந்தார்.

    இதுகுறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று சிறுமியின் உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக ஓசூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.

    அப்போது மாணவியும், முத்தாலியை சேர்ந்த சிவா (25) காதலித்து வந்துள்ளனர். கடந்த 2 வருடங்களுக்கு முன்பு சிறுமி அந்த வாலிபருடன் வீட்டை விட்டு வெளியேறியுள்ளார். அவரது பெற்றோர் கொடுத்த புகாரின் பேரில் மாணவியை மீட்டு மீண்டும் குடும்பத்தினருடன் அனுப்பி வைத்தனர். அந்த இளைஞரை போக்சோ சட்டத்தின் கீழ் காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

    சிறுமி காணாமல் போன நிலையில் அப்பகுதியில் உள்ள சிசிடிவி கேமராக்களை காவல்துறையினர் ஆய்வு செய்தனர். அப்போது சிறுமி வீட்டின் அருகில் இருந்த சிசிடிவி கேமராவை யாரோ துண்டை போட்டு மூடியுள்ளனர். இதனையடுத்து நடந்த விசாரணையில் அந்த சிறுமியின் பெற்றோரே அவரை கொலை செய்தது தெரியவந்தது.

    மாணவியும், முத்தாலியை சேர்ந்த சிவா (25) என்ற வாலிபரும் காதலித்து வந்துள்ளனர். இது மாணவியின் பெற்றோருக்கு பிடிக்கவில்லை. இதனால் அவர்கள் மகளை கண்டித்துள்ளனர். ஆனால் மாணவி காதலை கைவிட மறுத்து விட்டதாக கூறப்படுகிறது. இதனால் ஆத்திரம் அடைந்த அவர்கள் மகளை தாக்கி, ஏரியில் மூழ்கடித்து கொலை செய்துவிட்டு காணாமல் போனதாக நாடகமாடியது தெரிய வந்துள்ளது.

    தொடர்ந்து மாணவியின் தந்தை பிரகாஷ், தாயார் காமாட்சி மற்றும் இவர்களுக்கு உடந்தையாக இருந்த ஸ்பூர்த்தியின் பெரியம்மா மீனாட்சி ஆகியோரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். காதல் விவகாரத்தில் மகளை பெற்றோரே கொலை செய்த சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

    • விசாரணையில் அண்ணன் முறையிலான உறவினர்களே மாணவியை சீரழித்து இருப்பது தெரிந்தது.
    • அஜய் மற்றும் கண்ணா பாண்டா ஆகியோரும் தலைமறைவாகி விட்டனர். அவர்களை போலீசார் தேடி வருகிறார்கள்.

    ராயபுரம்:

    புதுவண்ணாரப்பேட்டை பூண்டி தங்கம்மாள் தெருவை சேர்ந்த ஒடிசா மாநிலத்தை சேர்ந்த 13 வயது சிறுமி பெற்றோருடன் வசித்து வருகிறார். சிறுமி அதே பகுதியில் உள்ள பள்ளியில் 8-ம் வகுப்பு படித்து வந்தாள்.

    சிறுமிக்கு கடந்த 2 நாட்களுக்கு முன்பு உடல் நலக்குறைவு ஏற்பட்டது. இதையடுத்து அவரை ராயபுரத்தில் உள்ள ஆர்.எஸ்.ஆர்.எம். ஆஸ்பத்திரிக்கு அழைத்து சென்றனர். டாக்டர்கள் அவரை பரிசோதித்த போது மாணவி 6 மாதம் கர்ப்பமாக இருப்பது தெரிந்தது. விசாரணையில் அண்ணன் முறையிலான உறவினர்களே மாணவியை சீரழித்து இருப்பது தெரிந்தது. வீட்டில் ஆட்கள் இல்லாத நேரத்தில் வந்து மாணவியிடம் தொடர்ந்து அத்துமீறலில் ஈடுபட்டு உள்ளனர்.

    இது தொடர்பாக ராயபுரம் அனைத்து மகளிர் போலீசார், சிறுமியின் தாயின் அக்கா மகனான மனோஜ், சிறுமியின் தந்தையின் அண்ணன் மகன்களான அஜய், கண்ணா பாண்டா ஆகிய 3 பேர் மீது போக்சோ சட்டத்தில் வழக்குப்பதிவு செய்து உள்ளனர்.

    இதில் மனோஜை போலீசார் கைது செய்தனர். அவர் ஐ.டி. நிறுவனத்தில் வேலை செய்து வந்ததாக தெரிகிறது.

    அஜய் மற்றும் கண்ணா பாண்டா ஆகியோரும் தலைமறைவாகி விட்டனர். அவர்களை போலீசார் தேடி வருகிறார்கள்.

    விருகம்பாக்கம் குமரன் காலனியை சேர்ந்த 10-ம் வகுப்பு மாணவியை அவரது பெற்றோர் ஆஸ்பத்திரிக்கு அழைத்து சென்ற போது 4 மாதம் கர்ப்பமாக இருப்பது தெரிந்தது.

    விசாரணையில் அவரது அக்காள் கணவர் அத்துமீறியது தெரிந்தது. இது தொடர்பாக விருகம்பாக்கம் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • தனியார் பள்ளியில் 700-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் படித்து வருகிறார்கள்.
    • முதல்வர் அழைத்தால் அவரது அறைக்கு செல்ல மாணவிகள் பயந்தனர்.

    விழுப்புரம்:

    விழுப்புரம் மாவட்டம் ரெட்டணை கூட்டேரிப்பட்டில் தனியார் சி.பி.எஸ்.இ. பள்ளி உள்ளது. இங்கு 700-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் படித்து வருகிறார்கள்.

    இப்பள்ளியின் முதல்வராக கார்த்திகேயன் இருந்து வருகிறார். இவர் பள்ளி மாணவிகளை தனது அறைக்கு அழைத்து கை, கால்களை அழுத்த சொல்லி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்தாக கூறப்படுகிறது. இதனால் முதல்வர் அழைத்தால் அவரது அறைக்கு செல்ல மாணவிகள் பயந்தனர்.

    இதுகுறித்து மாணவிகள் தங்கள் பெற்றோர்களிடம் தெரிவித்தனர். இது தொடர்பாக பெற்றோர்கள் பெரியதச்சூர் போலீசில் புகார் அளித்தனர். ஆனால் போலீசார் வழக்குப்பதிவு செய்யாமல் காலதாமதப்படுத்தி வந்தனர். இதனை தொடர்ந்து விழுப்புரம் மகளிர் போலீசில் புகார் அளிக்கப்பட்டது. மகளிர் போலீசார் வழக்குப்பதிவு செய்து பள்ளி முதல்வர் கார்த்திகேயனை போச்சோ சட்டத்தில் கைது செய்தனர்.

    • சின்னஞ்சிறிய குழந்தைகள் கூட பாலியல் தொல்லைக்கு ஆளாவது என்பது சர்வ சாதாரணமாக நடக்கிறது.
    • அனைத்து மாநிலங்களையும் ஒப்பிடுகையில் போக்சோ வழக்குகள் அதிகம் பதியப்படும் மாநிலத்தில் ஒன்றாக கேரளா இருக்கிறது.

    தகவல் தொழில் நுட்பத்தில் நாளுக்குநாள் வளர்ச்சி கண்டுவரும் காலக்கட்டத்தில் வாழ்ந்து வரும் நாம், பல்வேறு புதிய கண்டுபிடிப்புகளை கிடைக்கப் பெறுகிறோம். இதன் காரணமாக எந்த ஒரு விஷயத்தையும் நாம் எளிதாக செய்து முடிக்க முடிகிறது.

    இதுபோன்ற வளர்ச்சிகளை கண்டு வியக்கும் நாம், சில விஷயங்களை கண்டு அதிர்ச்சியடைய வேண்டி இருக்கிறது. அதில் ஒன்று தான் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வன்முறைகள். சின்னஞ்சிறிய குழந்தைகள் கூட பாலியல் தொல்லைக்கு ஆளாவது என்பது சர்வ சாதாரணமாக நடக்கிறது.

    அதுகுறித்து போதிய விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வந்த போதிலும், குழந்தைகளுக்கு எதிரான வன்முறைகள் தொடரத்தான் செய்கின்றன. ஆகவே அதனை கட்டுப்படுத்தும் வகையில் உருவாக்கப்பட்ட சட்டம் தான் போக்சோ சட்டம்.

    சிறுவர் பாலியல் துஷ்பிரயோகம் தொடர்பான பாலியல் குற்றங்களுக்கு எதிரான குழந்தைகளின் பாதுகாப்பு மசோதா (POCSO)-2011 நம் நாட்டு நாடாளுமன்றத்தில் 2012-ம் ஆண்டு மே 22-ந்தேதி நிறைவேற்றப்பட்டது.

    2019-ம் ஆண்டில், போக்சோ சட்டம் திருத்தப்பட்டு மேலும் கடுமையாக்கப்பட்டது. இந்த திருத்தம் குறைந்தபட்ச தண்டனையை 7 முதல் 10 ஆண்டுகள் மற்றும் 20 ஆண்டுகள் வரை உயர்த்தியது. பாதிக்கப்பட்டவர் 16 வயதுக்கு உட்பட்டவராக இருந்தால், குற்றத்தில் ஈடுபட்டவருக்கு அதிகபட்சமாக ஆயுள் தண்டனை விதிக்கப்படும். தீவிர தாக்குதலுக்கு மரண தண்டனை கூட விதிக்கப்படலாம்.

    போக்சோ சட்டம் உருவாக்கப்பட்டதில் இருந்து அனைத்து மாநிலங்களிலும் அது தொடர்பாக ஏராளமான வழக்குகள் பதியப்பட்டுள்ளன. சம்பந்தப்பட்டவர்களுக்கு கடுமையான தண்டனையும் கிடைத்துள்ளது. ஆனால் போக்சோ வழக்குகள் அதிகரித்ததே தவிர, குழந்தைகள் மீதான பாலியல் வன்முறைகள் குறைந்ததாக தெரியவில்லை.

    அனைத்து மாநிலங்களையும் ஒப்பிடுகையில் போக்சோ வழக்குகள் அதிகம் பதியப்படும் மாநிலத்தில் ஒன்றாக கேரளா இருக்கிறது. குட் டச், பேடு டச் என அனைத்து தொடுகைகளின் விவரத்தையும் சிறு குழந்தைகள் இன்று எளிதில் அறிந்து கொள்ள முடிகிறது. இதனால் பெரும்பாலான குழந்தைகளுக்கு தங்களுக்கு எதிரான பாலியல் வன்முறைகள் பற்றி அறிந்து கொண்டுள்ளனர் என்றால் அதை மறுக்கமுடியாது. இருந்தபோதிலும் போக்சோ சட்டம் பற்றி பள்ளி குழந்தைகள் எளிதில் தெரிந்துகொள்வதற்காக கேரள மாநில பள்ளி பாடத்திட்டத்தில் போக்சோ சட்டம் சேர்க்கப்படுகிறது.

    வருகிற கல்வியாண்டில் 7-ம் வகுப்பு சமூக அறிவியல் பாடத்தில் போக்சோ சட்டம் பற்றிய பாடம் இடம்பெற உள்ளது. இந்த தகவலை கேரள மாநில கல்வித்துறை மந்திரி சிவன்குட்டி தெரிவித்துள்ளார். அது பற்றி அவர் கூறியதாவது:-

    போக்சோ சட்டம் பற்றிய பாடம் அடுத்த கல்வியாண்டு முதல் பள்ளி பாடத்திட்டத்தில் சேர்க்கப்படும். சமீப காலமாக குழந்தைகளுக்கு எதிரான வன்முறைகள் அதிகரித்து வருவதால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. 7-ம் வகுப்பு சமூக அறிவியல் பாடத்தில் போக்சோ சட்டம் கற்பிக்கப்படும். இது அடுத்த ஆண்டு முதல் 8-ம் வகுப்பு சமூக அறிவியல் பாடத்திலும் சேர்க்கப்படும்.

    மேலும் 5 முதல் 10-ம் வகுப்பு வரை தொழிற்கல்வி சேர்க்கும் வகையில் பாடத்திட்டம் முழுமையாக திருத்தப்படும். 1,3,5,7,9 ஆகிய வகுப்பு பாடப் புத்தகங்களும் அடுத்த கல்வியாண்டில் மாற்றப் படும். 4,6,8,10 வகுப்புகளிலும் பாடத்திடம் அடுத்த ஆண்டு மாற்றப்படுகிறது.

    1-ம் வகுப்பில் உள்ள அனைத்து புத்தகங்களிலும் செயல்பாட்டு புத்தகங்கள் உள்ளன. ஆசிரியர்களுக்கான புத்தகங்களும் தயாராகி வருகின்றன. மேலும் நாட்டிலேயே முதன்முறையாக பெற்றோருக்கான புத்தகங்களும் தயாராகிறது.

    புதிய பாடத்திட்டத்தில் விளையாட்டு, கழிவு பிரச்சினை, தூய்மை, குடிமை உணர்வு, சமநீதியுடன் கூடிய பாலின விழிப்புணர்வு, அறிவியல் உணர்வு, விவசாயம், மதச்சார்பின்மை உள்ளிட்ட விஷயங்கள் இடம்பெற்றுள்ளன. பாட சாலைகள் திறப்பதற்கு இரண்டு வாரங்களுக்கு முன்னதாக புதிய பாட புத்தகங்கள் வழங்கப்படும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    கேரள மாநிலத்தில் இதற்கு முன்பு விரிவான பாடத்திட்ட திருத்தம் 2007-ம் ஆண்டு செய்யப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

    • பள்ளி செல்லும் வழியில் உள்ள கரும்பு தோட்டத்திற்கு அருகே மோட்டார் சைக்கிளை வீரன் நிறுத்தினார்.
    • சிறுமியை கரும்பு தோட்டத்திற்குள் அழைத்து சென்று பாலியல் துன்புறுத்தல் செய்தார்.

    விருத்தாசலம்:

    கடலூர் மாவட்டம் விருத்தாசலம் அடுத்த கம்மாபுரத்தில் உள்ள பள்ளியில் 9 வயது சிறுமி 4-ம் வகுப்பு படித்து வருகிறார். இச்சிறுமி நேற்று மதியம் வீட்டிற்கு வந்து சாப்பிட்டு பள்ளிக்கு நடந்து சென்று கொண்டிருந்தார்.

    அப்போது அவ்வழியே அதே ஊரைச் சேர்ந்த வீரன் (30) மோட்டார் சைக்கிளில் வந்தார். சாலையில் நடந்து சென்ற சிறுமியை ஏன் நடந்து செல்கிறாய். மோட்டார் சைக்கிளில் உட்கார், பள்ளியில் விடுகிறேன் என்று கூறினார். இதனை நம்பி அச்சிறுமி மோட்டார் சைக்கிளில் ஏறி உட்கார்ந்தார்.

    பள்ளி செல்லும் வழியில் உள்ள கரும்பு தோட்டத்திற்கு அருகே மோட்டார் சைக்கிளை வீரன் நிறுத்தினார். சிறுமியை கரும்பு தோட்டத்திற்குள் அழைத்து சென்று பாலியல் துன்புறுத்தல் செய்தார். இதில் அச்சிறுமி கூச்சலிட்டார். அப்பகுதியில் வேலை செய்து கொண்டிருந்த தொழிலாளர்கள் சிறுமியின் அலறல் சத்தம் கேட்டு ஓடிவந்தனர்.

    கரும்புதோட்டத்தில் வீரனிடம் சிக்கியிருந்த சிறுமியை மீட்டனர். வீரனுக்கு தர்மஅடி கொடுத்து, கடலூர் மாவட்ட சிறார் உதவி மையத்தை தொடர்பு கொண்டு நடந்த சம்பவத்தை கூறினர். அவர்கள் விருத்தாசலம் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்திற்கு தகவல் கொடுத்தனர்.

    தகவலின்பேரில் சம்பவ இடத்திற்கு இன்ஸ்பெக்டர் ரேவதி தலைமையிலான போலீசார் விரைந்து வந்தனர். அங்கு பொதுமக்கள் பிடித்து வைத்திருந்த வீரனை கைது செய்து போக்சோ வழக்குப் பதிவு செய்து சிறையில் அடைத்தனர்.

    மேலும், பாதிக்கப்பட்ட சிறுமியை அவளது பெற்றோருடன் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    • போலீசார் ஆனந்தகுமார் மீது போக்சோ சட்டத்தில் வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர்.
    • மாணவ, மாணவிகள் அனைவரும் சாலையில் அமர்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    கோவை:

    கோவை ஆலாந்துறையில் அரசு மேல்நிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது.

    இந்த பள்ளியில் 6-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை உள்ளது. இங்கு சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த 820 மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர்.

    இந்த பள்ளியில் கவுண்டம்பாளையம் அடுத்த வடிவேலம்பாளையத்தை சேர்ந்த ஆனந்தகுமார் (வயது36) என்பவர் உடற்கல்வி ஆசிரியராக வேலை பார்த்து வருகிறார். இவருக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை.

    இந்த நிலையில் அந்த பள்ளியில் படிக்கும் 9-ம் வகுப்பு மாணவி ஒருவருக்கு இவர் பாலியல் தொல்லை கொடுத்ததாக புகார் எழுந்தது.

    இதையடுத்து, போலீசார் ஆனந்தகுமார் மீது போக்சோ சட்டத்தில் வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர். பின்னர் அவரை கோர்ட்டில் ஆஜர்படுத்தி ஜெயிலில் அடைத்தனர்.

    இந்த நிலையில் இன்று காலை கைது செய்யப்பட்ட ஆசிரியர் ஆனந்தகுமாருக்கு ஆதரவாக ஆலாந்துறை அரசு பள்ளியை சேர்ந்த 800-க்கும் அதிகமான மாணவ, மாணவிகள் பள்ளி எதிரே உள்ள சிறுவாணி சாலையில் திரண்டனர்.

    பின்னர் மாணவ, மாணவிகள் அனைவரும் சாலையில் அமர்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கூறும்போது, ஆசிரியர் ஆனந்தகுமார் மீது பொய் புகார் கூறப்பட்டுள்ளது. அவர் மிகவும் நல்லவர்.

    அவரை உடனே விடுதலை செய்ய வேண்டும் என கூறி கோஷங்களை எழுப்பியபடியே இருந்தனர். இதனால் அந்த பகுதியில் பரபரப்பான சூழல் காணப்பட்டது.

    இதுபற்றிய தகவல் அறிந்ததும் ஆலாந்துறை போலீஸ் இன்ஸ்பெக்டர் செல்வராணி தலைமையிலான போலீசார் மற்றும் பள்ளி தலைமை யாசிரியர்(பொறுப்பு) கார்த்திகேயன் ஆகியோர் விரைந்து வந்து போராட்டத்தில் ஈடுபட்ட மாணவ, மாணவிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

    ஆனால் மாணவ, மாணவிகள் ஆசிரியரை உடனே விடுவிக்க வேண்டும் என்று கூறியபடியே போராட்டத்தை கைவிட மறுத்து கோஷங்களை எழுப்பி கொண்டிருந்தனர்.

    இதனால் பேச்சுவார்த்தை தோல்வி அடைந்தது. தொடர்ந்து மாணவ, மாணவிகள் அனைவரும் அங்கிருந்து எழுந்து 1 கி.மீ தூரம் நடந்து சென்றனர்.

    இதனால் சாலையின் இருபுறங்களிலும் வாகனங்கள் செல்ல முடியாமல் அணிவகுத்து நின்றன. இதன் காரணமாக அந்த பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

    இதற்கிடையே சம்பவம் பற்றிய தகவல் கிடைத்ததும், பேரூர் டி.எஸ்.பி ராஜபாண்டியன் அங்கு விரைந்து வந்தார்.

    அவர் மாணவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினார். பின்னர் மாணவர்கள் அனைவரையும் அங்கிருந்து நேராக பள்ளி வளாகத்திற்கு அழைத்து செல்ல முயன்றார்.

    அப்போது மாணவர்கள் பள்ளிக்குள் வர மறுத்தனர். போலீசார் ஆசிரியர்கள் உதவியுடன் மாணவர்களை பள்ளிக்கு வரவழைத்தனர். அப்போது அங்கு சிறிது நேரம் தள்ளுமுள்ளு ஏற்பட்டது.

    ஒருவழியாக மாணவர்களை உள்ளே அழைத்து சென்ற போலீசார் அவர்களை பள்ளி வளாகத்தில் அமர வைத்தனர். அவர்களுக்கு பேரூர் டி.எஸ்.பி. அறிவுரைகளை வழங்கினார்.

    மாணவர்களின் போராட்டத்தை பார்த்த அப்பகுதி மக்கள், ஆச்சரியமும், அதிர்ச்சியும் அடைந்தனர்.

    இதற்கிடையே இந்த பள்ளியில் படித்த முன்னாள் மாணவர்கள் 7 பேரை போலீசார் பிடித்து விசாரித்து வருகின்றனர்.

    இவர்கள் போராட்டத்தை தூண்டி விட்டிருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கின்றனர். இதன் காரணமாகவே அவர்களை பிடித்து விசாரித்து வருகின்றனர்.

    • பள்ளி மாணவியிடம், வருகைப்பதிவேடு, நோட்டு எடுத்து வா என்று கூறி உள்ளார்.
    • போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவுசெய்து உடற்கல்வி ஆசிரியர் ஆனந்தகுமாரை கைது செய்தனர்.

    கோவை:

    கோவையை அடுத்த துடியலூர் பகுதி தொப்பம்பட்டி பிரிவு, கோத்தாரி நகரை சேர்ந்தவர் ஹரிதாஸ். இவருடைய மகன் ஆனந்தகுமார் (வயது 38). இவர், கோவை அருகே உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில், உடற்கல்வி ஆசிரியராக பணியாற்றி வருகிறார். இவர் அதே பள்ளியில் 9-ம் வகுப்பு படிக்கும் 14 வயது மாணவிக்கு பாலியல் ரீதியாக துன்புறுத்தல் கொடுத்துள்ளார்.

    மேலும், அந்த பள்ளி மாணவியிடம், வருகைப்பதிவேடு, நோட்டு எடுத்து வா என்று கூறி உள்ளார். அவற்றை எடுத்துச் சென்றபோது அந்த மாணவிக்கு, உடற்கல்வி ஆசிரியர் ஆனந்தகுமார் அநாகரிகமாக நடந்து கொண்டு பாலியல் சீண்டலில் ஈடுபட்டு உள்ளார்.

    இதனால் மன உளைச்சலில் இருந்த மாணவி தனக்கு நேர்ந்த கொடுமை குறித்து பேரூர் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன் பேரில் போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவுசெய்து உடற்கல்வி ஆசிரியர் ஆனந்தகுமாரை கைது செய்தனர். 

    • கருத்து வேறுபாடு காரணமாக ஆசிரியரின் மனைவி 7 ஆண்டுகளுக்கு முன்பு பிரிந்து சென்று விட்டார்.
    • ஆசிரியர் சோமராஜூ மீது பாலியல் வன்முறை உள்ளிட்ட போக்சோ சட்டத்தில் போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.

    திருப்பதி:

    ஆந்திர மாநிலம், மேற்கு கோதாவரி மாவட்டம் யண்டகண்டியில் ஜில்லா பரிஷத் உயர்நிலைப்பள்ளி உள்ளது. இந்தப் பள்ளியில் இந்தி ஆசிரியராக கே.சோமராஜூ (வயது46) பணியாற்றி வருகிறார்.

    இவருக்கு திருமணமாகி 2 மகள்கள் உள்ளனர். கருத்து வேறுபாடு காரணமாக இவருடைய மனைவி 7 ஆண்டுகளுக்கு முன்பு பிரிந்து சென்று விட்டார்.

    இந்த நிலையில் ஆசிரியர் தனது பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வந்த 15 வயது மாணவியிடம் 4 மாதங்களாக பழகி வந்துள்ளார். அவருக்கு தனது ஸ்மார்ட்போனை வழங்கியுள்ளார்.

    சமீபத்தில் அந்த மாணவியை தனது வீட்டுக்கு வலுக்கட்டாயமாக அழைத்துச் சென்று தாலி கட்டி தன்னுடன் வைத்துக் கொண்டார்.

    இருப்பினும், அந்த மாணவி அவரிடமிருந்து தப்பி தனது வீட்டுக்கு திரும்பி வந்துவிட்டார். நடந்த சம்பவம் பற்றி அவர் தனது பெற்றோரிடம் கூறினார்.

    அதைத் தொடர்ந்து அந்த மாணவி, தனது தந்தையுடன் வந்து போலீசில் புகார் அளித்தார்.

    ஆசிரியர் சோமராஜூ மீது பாலியல் வன்முறை உள்ளிட்ட போக்சோ சட்டத்தில் போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.

    முதல்கட்ட விசாரணைக்குப் பின்னர் ஆசிரியர் சோமராஜூவை போலீசார் கைது செய்தனர். இந்தச் சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

    • இருவரும் கடந்த 1 மாதமாக காதலித்து வந்ததாக தெரிகிறது.
    • போலீசார் சுரேஷ் மீது போக்சோ பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்து, விசாரணை நடத்தி அவரை தேடி வருகின்றனர்.

    களக்காடு:

    நெல்லை மாவட்டம் களக்காடு அருகே உள்ள ஒரு கிராமத்தை சேர்ந்த 17 வயது மாணவி ஒருவர் கல்லூரியில் பி.ஏ. முதலாம் ஆண்டு படித்து வருகிறார்.

    இவருக்கும் களக்காடு அருகே உள்ள மூங்கிலடியை சேர்ந்த சுரேஷ் என்பவருக்கும் செல்போன் மூலம் பழக்கம் ஏற்பட்டது.

    இருவரும் கடந்த 1 மாதமாக காதலித்து வந்ததாக தெரிகிறது. சம்பவத்தன்று மாணவி களக்காட்டில் உள்ள தனது உறவினர் வீட்டிற்கு வந்துள்ளார். அங்கிருந்து சுரேசை செல்போனில் தொடர்பு கொண்டு பேசி உள்ளார். அப்போது சுரேஷ் வீட்டிற்கு வெளியே வந்து நிற்கும் படி கூறியுள்ளார். இதற்கு மாணவி மறுத்துள்ளார்.

    இதையடுத்து சுரேஷ் நீ வெளியே வராவிட்டால் நான் இறந்து விடுவேன் என்று மிரட்டினாராம். இதனால் அச்சமடைந்த மாணவி உறவினர் வீட்டில் இருந்து வெளியே வந்துள்ளார்.

    பின்னர் சுரேஷ் மாணவியை மூங்கிலடி வயல் காட்டிற்கு மோட்டார் சைக்கிளில் கடத்தி சென்று அங்கு வைத்து பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். பின்னர் மாணவியை களக்காட்டில் விட்டு, விட்டு சென்று விட்டார்.

    இதுபற்றி மாணவி நாங்குநேரி மகளிர் போலீசில் புகார் செய்தார். போலீசார் சுரேஷ் மீது போக்சோ பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்து, விசாரணை நடத்தி அவரை தேடி வருகின்றனர்.

    • சகாதேவன் தன்னை மிரட்டி பலமுறை தகாத முறையில் நடந்து கொண்டதாக தெரிவித்தார்.
    • போலீசார் சகாதேவனை போக்சோ வழக்கில் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

    தர்மபுரி மாவட்டம் பென்னாகரம் அருகே உள்ள ஏரியூர் காவல் நிலையத்தின் உதவி ஆய்வாளர் சகாதவேன் புகார் கொடுக்க வந்த சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். இது தொடர்பாக பாதிக்கப்பட்ட பெண் குழந்தைகள் நல உறுப்பினரிடம் அளித்த புகாரில் சகாதேவன் தன்னை மிரட்டி பலமுறை தகாத முறையில் நடந்து கொண்டதாக தெரிவித்தார்.

    இதன் அடிப்படையில் குழந்தைகள் நல உறுப்பினர்கள் பென்னாகரம் நீதிமன்றத்தை நாடினர். பென்னாகரம் குற்றவியல் நீதிமன்றத்தில் பாதிக்கப்பட்ட பெண் நீதிபதியிடம் அளித்த வாக்குமூலத்தின் அடிப்படையில் ஏரியூர் போலீசார் மற்றும் பென்னாகரம் மகளிர் போலீசார் சகாதேவனை போக்சோ வழக்கில் கைது செய்து தர்மபுரி கிளை சிறையில் அடைத்தனர்.

    இந்த நிலையில், போக்சோ வழக்கில் கைது செய்யப்பட்டு இருக்கும் உதவி ஆய்வாளர் சகாதவேன் பணி இடைநீக்கம் செய்யப்பட்டு உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. 

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • ஏரியூர் போலீஸ் நிலையத்தில் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் சகாதேவன் என்பவர் விசாரணை அதிகாரியாக செயல்பட்டுள்ளார்.
    • தன்னை கணவர் கொடுமைப்படுத்துவதாக உதவி மையத்திற்கு சிறுமி புகார் தெரிவித்ததை தொடர்ந்து அவரை மீட்டு காப்பகத்தில் சேர்த்துள்ளனர்.

    தருமபுரி:

    தருமபுரி மாவட்டம் பென்னாகரம் அருகே உள்ள ஏரியூர், சிங்கிலி மேடுவை சேர்ந்த பழனிச்சாமி (28).

    இவருக்கும் ஓசூர் அருகே உள்ள கிராமத்தைச் சேர்ந்த 17 வயது சிறுமிக்கும் கடந்த 2020-ம் ஆண்டு குழந்தை திருமணம் நடந்தது. அந்த சிறுமிக்கு 2 வயது மதிக்கத்தக்க ஆண் குழந்தை உள்ளது. இந்நிலையில் கடந்த 8 மாதங்களுக்கு முன்பு, சிறுமிக்கும் அவரது மாமியாருக்கும் ஏற்பட்ட தகராறைத் தொடர்ந்து, ஏரியூர் போலீஸ் நிலையத்தில் சிறுமி புகார் அளித்துள்ளார்.

    இதில் ஏரியூர் போலீஸ் நிலையத்தில் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் சகாதேவன் (55) என்பவர் விசாரணை அதிகாரியாக செயல்பட்டுள்ளார்.

    விசாரணையின்போது சிறுமியின் தொலைபேசி எண்ணை பெற்றுக்கொண்ட சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் சகாதேவன், முதலில் மிரட்டியும், பின்பு அதையே காரணம் காட்டியும், பாலியல் தொடர்பில் இருந்ததாக கூறப்படுகிறது. இந்தப் பாலியல் தொடர்பு குறித்து சிறுமியின் கணவர் பழனிசாமிக்கு தெரிந்ததால், கணவன், மனைவிக்கிடையே தகராறு ஏற்பட்டுள்ளது.

    இந்நிலையில், தன்னை கணவர் கொடுமைப்படுத்துவதாக உதவி மையத்திற்கு சிறுமி புகார் தெரிவித்ததை தொடர்ந்து அவரை மீட்டு காப்பகத்தில் சேர்த்துள்ளனர்.

    தொடர்ந்து சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் சகாதேவன், வழிகாட்டுதலின்படி சந்தேகப்பட்டு தகராறில் ஈடுபட்டதற்காக, பழி வாங்கும் நடவடிக்கையாக, சிறுமியை திருமணம் செய்ததாக பழனிசாமி மற்றும் அவரது குடும்பத்தினர் மீது வழக்கு பதிவு செய்துள்ளார்.

    காப்பகத்தில் இருந்த குழந்தைகள் நல உறுப்பினரிடம் அளித்துள்ள புகாரில் ஏரியூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சகாதேவன் தன்னை மிரட்டி பலமுறை தகாத முறையில் நடந்து கொண்டார் என தெரிவித்துள்ளார். இதனை தொடர்ந்து குழந்தைகள் நல உறுப்பினர்கள் பென்னாகரம் நீதிமன்றத்தை நாடி உள்ளனர்.

    பென்னாகரம் குற்றவியல் நீதிமன்றத்தில் சிறுமி, நீதிபதியிடம் அளித்த வாக்குமூலத்தின் அடிப்படையில், சகாதேவனை ஏரியூர் போலீசார் மற்றும் பென்னாகரம் மகளிர் போலீசார் மன்மத லீலையில் ஈடுபட்ட சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் சகாதேவனை போக்சோ வழக்கில் கைது செய்யப்பட்டார். பின்னர் அவரை போலீசார் தருமபுரி கிளை சிறையில் அடைத்தனர்.

    வேலியே பயிரை மேய்ந்தது போல் பாதுகாப்பு கொடுக்க வேண்டிய போலீசே சிறுமியை பாலியல் தொல்லை கொடுத்ததாக போக்சோ வழக்கில் கைதான சம்பவம் ஏரியூரி பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

    ×