search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கும்பகோணம் சிறுவன்"

    • வயதான பின் வந்த விபரீத ஆசையால் முதியோர் இல்லம் நடத்தி வந்த சூரியகலா தற்போது சிறைக்கு பின்னால் கம்பி எண்ணி கொண்டு உள்ளார்.
    • பருவ வயதில் ஏற்படும் எண்ணங்களை நாம் சிறிது நேரம் சிந்தித்து செயல்பட்டால் நலமுடன் வாழலாம் என்பதே பொதுவான கருத்து.

    தமிழகத்தில் சிறுவர், சிறுமிகளின் மீதான பாலியல் தொல்லைகள் அதிகரித்து வருகிறது. இதனை தடுக்க போக்சோ உள்ளிட்ட பல கடுமையான சட்டங்கள் மூலம் அதனை கட்டுப்படுத்த அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. இருந்தாலும் சிறார்கள் மீதான பாலியல் தொல்லை பல்வேறு இடங்களில் அரங்கேறி வருகிறது. அதைப்போல் தஞ்சை மாவட்டம் கும்பகோணத்தில் 15 வயது சிறுவனை மயக்கி 55 வயது பெண் பாலியல் தொல்லை கொடுத்த சம்பவம் தமிழகத்தில் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தி உள்ளது. அதன் பற்றிய விவரம் வறுமாறு:-

    கும்பகோணம் அருகே சோழன் மாளிகையை சேர்ந்தவர் வீரசோழன். இவரது மனைவி சூரியகலா (வயது55). இவர் கும்பகோணம் அருகே திருவலஞ்சுழியில் முதியோர் காப்பகத்தை நடத்தி வருகிறார்.

    கும்பகோணம் பேட்டை ஆற்றங்கரை தெருவை சேர்ந்தவர் முருகன் (52). இவர்கள் இருவரும் நண்பர்கள். முருகன் அந்த பகுதியில் பைனான்ஸ் தொழில் செய்து வந்தார்.

    இந்நிலையில் அதே பகுதியை சேர்ந்த பெண் ஒருவர் குடும்ப வறுமை காரணமாக வீட்டில் சமையல் செய்து அந்த பகுதியில் உணவு வழங்கி வந்துள்ளார். இவரது 15 வயதுகுட்பட்ட மகன் ஒரு பள்ளியில் படித்து வந்தான், மேலும் இரவு நேரங்களில் அம்மாவிற்கு உதவியாக இரவு உணவு தயார் செய்தும் அப்பகுதியில் வினியோகம் செய்து வந்தான். அவ்வாறு இரவு உணவை முதியோர் இல்லம் நடத்தி வரும் சூரியகலாவிற்கு கொடுத்து வந்துள்ளான். இந்நிலையில் தான் சூரியகலாவிற்கு விபரீத ஆசை உருவானது. அவர் பள்ளி மாணவனை தனது காதல் (காம) வலையில் வீழ்த்த நினைத்தார். அதற்காக அவர் அச்சிறுவனிடம் பாலியல் உணர்வுகளை தூண்டும் வகையில் பேசியும், ஆபாச வீடியோக்களை காட்டியும் உள்ளார். பருவவயதில் எதையும் சிந்திக்காமல், பின்விளைவுகள் பற்றியும் அறியாமல் அந்த பள்ளி மாணவன் சூரியகலாவின் வலையில் சிக்கி கொண்டான்.

    இந்நிலையில் சுறுசுறுப்பாக சுற்றி திரியும் தனது மகன் சிலநாட்களாக ஒரு அறையில் தனிமையில் இருப்பதும், உடல் மெலிந்து காணப்படுவதும் அவரது பெற்றோருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இது குறித்து மகனிடம் விசாரித்த போது அவன் எதையும் கூறாமல் மறைத்து உள்ளார்.

    இதனால் மகனின் விபரீத நிலைமை உணர்ந்த பெற்றோர் அவனை உடனடியாக சிகிச்சைக்காக கும்பகோணம் அரசு ஆஸ்பத்திரிக்கு அழைத்து சென்றனர். அங்கு அவனுக்கு சிகிச்சையளித்த டாக்டர்கள் அதிர்ச்சி அடைந்தனர். ஏனென்றால் அந்த பள்ளி மாணவன் பாலியல் தொல்லைக்கு ஆளாக்கப்பட்டிருப்பது தெரிய வந்தது. இதுகுறித்து டாக்டர்கள் அவரது பெற்றோரிடம் தெரிவித்தனர். தொடர்ந்து மாணவனிடம் விசாரித்ததில் சூரியகலா தன்னிடம் தவறாக நடந்து கொண்டாக கூறினான்.

    இதைத் தொடர்ந்து இது குறித்து சுவாமிமலை போலீசாரிடம் சிறுவனின் பெற்றோர் புகார் அளிக்க சென்றனர்.

    அவர்கள் இந்த வழக்கை விசாரித்து பெண்ணால் பாதிக்கப்பட்ட சிறுவன் 18 வயதுக்கு கீழ் உள்ளவர் என்பதால் இந்த வழக்கை கும்பகோணம் அனைத்து மகளிர் காவல் நிலையத்திற்கு மாற்றினர்.

    அதன்படி கும்பகோணம் அனைத்து மகளிர் போலீஸ் இன்ஸ்பெக்டர் நாகலட்சுமி இந்த வழக்கை விசாரித்து சிறுவனிடம் பாலியல் வன்புணர்வில் ஈடுபட்ட சூரியகலா மற்றும் அவருக்கு உடந்தையாக இருந்த முருகன் ஆகியோரை போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குபதிவு செய்து கைது செய்தார். தொடர்ந்து கும்பகோணம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய பின் திருச்சி மத்திய சிறையில் இருவரும் அடைக்கப்பட்டனர்.

    வயதான பின் வந்த விபரீத ஆசையால் முதியோர் இல்லம் நடத்தி வந்த சூரியகலா தற்போது சிறைக்கு பின்னால் கம்பி எண்ணி கொண்டு உள்ளார். பருவ வயதில் ஏற்படும் எண்ணங்களை நாம் சிறிது நேரம் சிந்தித்து செயல்பட்டால் நலமுடன் வாழலாம் என்பதே பொதுவான கருத்து.

    ×