search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பொதுக்கூட்டம்"

    • பொய்யான வாக்குறுதிகளை கூறி ஆட்சியை பிடித்தது தி.மு.க என்று அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் கூறி உள்ளார்.
    • தோகைமலை கிழக்கு ஒன்றிய பகுதியான காவல்காரன் பட்டியில் நடந்த அ.தி.மு.க. பொதுக்கூட்டத்தில் பேச்சு

    குளித்தலை,

    கரூர் மாவட்டம், குளித்தலை அருகே தோகைமலை ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட தோகைமலை கிழக்கு ஒன்றிய பகுதியான காவல்காரன் பட்டியில் அ.தி.மு.க. 52 -ம் ஆண்டு தொடக்க விழாவை முன்னிட்டு தோகைமலை கிழக்கு ஒன்றிய செயலாளர் சந்திரசேகர் தலைமையில் பொதுக்கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர் கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் பேசியதாவது:-

    அ.தி.மு.க. ஆட்சியில் கொண்டுவரப்பட்ட திட்டங்கள் அனைத்தும் தி.மு.க. அரசு செயல்படுத்தவில்லை. இரண்டரை ஆண்டுகள் முடிந்த பிறகு ஒரு கோடி பேருக்கு உரிமை தொகை வழங்குகிறார்கள். இதில் 40 லட்சம் பேருக்கு முதியோர் உதவித்தொகை, விதவை உதவித்தொகை உள்ளிட்டவைகளை நிறுத்தி உள்ளது.

    தொடர்ந்து மக்களை ஏமாற்றி பொய்யான வாக்குறுதிகளை கொடுத்து ஊரை ஏமாற்றி ஆட்சிக்கு வந்துள்ளது தி.மு.க. நகை கடன் தள்ளுபடி, கல்வி கடன் தள்ளுபடி என்று கூறி அதை நிறைவேற்றாமல் விடியாஅரசு ஆட்சி உள்ளது. மு.க. ஸ்டாலின் குடும்பத்தினர் 4 முதல்வராக செயல்படுகிறார்கள்.

    இந்தியாவிலேயே வாரிசு அரசியல் நடத்தும் கட்சி தி.மு.க.தான்.

    இவ்வாறு அவர் பேசினார். தொடர்ந்து முன்னாள் அமைச்சர் வளர்மதி சிறப்புரை ஆற்றினார். கூட்டத்தில் கரூர் மாவட்ட அண்ணா தொழிற்சங்க செயலாளர் வக்கீல் மருதூர் திருநாவுக்கரசு, கரூர் மாவட்ட மருத்துவர் அணி செயலாளர் டாக்டர் தர்மேந்திரன், கரூர் மாவட்ட மாணவர் அணி செயலாளர் சரவணன், மாவட்ட மாணவரணி துணைத் தலைவர் வழக்கறிஞர் குமார், மாவட்ட இளைஞரணி துணைத் தலைவர் பொருந்தலூர் ராமச்சந்திரன், தோகைமலை மேற்கு ஒன்றிய செயலாளர் ரங்கசாமி, குளித்தலை மேற்கு ஒன்றிய செயலாளர் விஜய விநாயகம், குளித்தலை கிழக்கு ஒன்றிய கழகச் செயலாளர் கருணாகரன்,

    கிருஷ்ணராயபுரம் கிழக்கு ஒன்றிய செயலாளர் வழக்கறிஞர் இளங்குமரன், குளித்தலை நகரச் செயலாளர் இன்ஜினியர் மணிகண்டன், தோகைமலை இளைஞர் அணி வழக்கறிஞர் பிரபு, வெங்கடாசலம் இளைஞர் அணி தோகைமலை, ஒன்றிய அவைத் தலைவர் பெரியசாமி, மாவட்ட பிரதிநிதிகள் கருப்பையா, கோவிந்தராஜ் ஒன்றிய பொருளாளர், கேசவன் ஒன்றிய இணைச் செயலாளர், கவிதா சத்தியமூர்த்தி ஒன்றிய துணைச் செயலாளர்கள் வசந்தா ராஜேந்திரன் மாவட்ட பிரதிநிதி செல்வி, சாமிநாதன், எம்ஜிஆர் இளைஞர் அணி ஒன்றிய செயலாளர் கலைராஜ் மற்றும் கரூர் மாவட்ட பொறுப்பாளர்கள், ஒன்றிய, நகர முக்கிய நிர்வாகிகள், மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்,

    • அ.தி.மு.க 52-வது ஆண்டு தொடக்க விழா தஞ்சையில் 4-ந்தேதி நடக்கிறது.
    • பொதுக்கூட்டத்தில் எடப்பாடி. பழனிசாமி பங்கேற்று சிறப்பு பேருரை ஆற்ற உள்ளார்.

    தஞ்சாவூர்:

    அ.தி.மு.க. தலைமை கழகம் சார்பில் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிப்பதாவது:-

    அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக 52-வது ஆண்டு தொடக்க விழாவை முன்னிட்டு, கழக அமைப்புரீதியாக செயல்பட்டு வரும் மாவட்டங்களுக்கு உட்பட்ட சட்டமன்றத் தொகுதிகளில், கழகத்தின் சார்பில் 52-வது ஆண்டு தொடக்க விழா பொதுக்கூட்டங்கள் நடைபெற்று வருகின்றன.

    அந்த வகையில், வருகிற 4.11.2023 - சனிக்கிழமை மாலை 5 மணியளவில், தஞ்சை மாநகரில் நடை பெற உள்ள, அ.தி.மு.க. 52-வது ஆண்டு தொடக்க விழா பொதுக்கூட்டத்தில், அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகப் பொதுச்செயலாளரும், சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர், தமிழ் நாடு முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி. பழனிசாமி பங்கேற்று சிறப்பு பேருரை ஆற்ற உள்ளார்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • பொதுக்கூட்டம் நடத்த முறையான அனுமதி பெறவேண்டும் என்று பேரூராட்சி கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
    • தலைவர் ஷாஜஹான் பானு ஜவஹர் அலிகான் தலைமையில் நடைபெற்றது.

    தொண்டி

    ராமநாதபுரம் மாவட்டம், தொண்டி முதல் நிலை பேரூராட்சி மன்ற கூட்டம் தலைவர் ஷாஜஹான் பானு ஜவஹர் அலிகான் தலைமை யில் நடைபெற்றது. செயல் அலுவலர் மகாலிங்கம், துணை தலைவர் அழகு ராணி ராஜேந்திரன் மற்றும் வார்டு கவுன்சிலர்கள் முன்னிலை வகித்தனர்.

    இதில் தொண்டி பேரூராட்சியின் மேலத்தெரு பகுதியில் 1 லட்சம் லிட்டர் கொள்ளவில் புதிதாக மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி கட்டுதல், பேரூ ராட்சிக்குட்பட்ட பகுதிகளில் மேல்நிலை, தரைமட்ட நீர்த்தேக்க தொட்டிகளின் பழுதடைந்த வால்வுகளை பழுது நீக்குதல், பாரூர் போர்வெல்லி லிருந்து திருவாடானை செல்லும் பைப் லைனை மர்ம நபர்கள் உடைப்பதால் தண்ணீர் வெளியேறி வீணாகிறது. அதனால் திருவாடனை மின் வாரிய அலுவலகம் முதல் ஆராய்குடி குளக்கால் வரை சுமார் 2.62 கிலோ மீட்டர் தொலைவில் புதிய குடிநீர் குழாய் பதிக்க வேண்டும் உள்ளிட்ட குடிநீர் சம்பந்தமான தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

    மழை காலமாக இருப்ப தால் பொது மக்களின் சுகாதார நலன் கருதி சாலை களில் தேங்கும் மழைநீரை வெளியேற்றுவதற்கு மணிமுத்து ஆற்றின் ஆரம்பம் முதல் இறுதி வரை இருபுறங்களில் கரை அமைத்து தண்ணீர்சீராக நடவடிக்கை எடுக்க வேண்டும். தொண்டி பேரூராட்சி பகுதிகளில் சாலைகள் மற்றும் தெருக்களில் பொதுக்கூட்டங்கள் அனுமதி பெறாமல் நடத்தப்படுகிறது. இதனால் பொது மக்களுக்கும், வாகன ஓட்டிகளுக்கும் மிகுந்த இடையூறாக இருப்பதால் இனி வரும் காலங்களில் சாலைகள் மற்றும் தெரு க்களில் பொதுக்கூட்டம் நடத்த பேரூராட்சி நீர்வாகத்திடம் முறையான அனுமதி பெற்று நடத்த நடவடிக்கை எடுக்க வேண்டும், ேமலும் கூட்டம் தொடர்பாக அனுமதி வழங்க மாவட்ட எஸ்.பி. மற்றும் தொண்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் ஆகி யோருக்கு தெரியப்படுத்து தல் தொடர் பாகவும் தீர் மானங்கள் நிறைவேற்றப் பட்டது.

    • அறந்தாங்கி அருகே தே.மு.தி.க. பொதுக்கூட்டம்
    • பொருளாளர் பிரேமலதா தலைமையில் நடைபெற்றது

    அறந்தாங்கி,

    அறந்தாங்கி அருகே ஆவுடையார்கோவில் கடைவீதியில் ஒன்றியச் செயலாளர் மகாலிங்கம் ஏற்பாட்டில் நடைபெற்ற கட்சியின் 19-வது ஆண்டு தொடக்கவிழா, விஜயகாந்த் பிறந்த நாள் விழா மற்றும் பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் முப்பெரும் விழா நடைபெற்றது.இதில் பிரேமலதா விஜயகாந்த் பங்கேற்று சிறப்புரை ஆற்றினார். அப்போது அவர் பேசுகையில், சனாதன கொள்கையை 40 ஆண்டுகளுக்கு முன்பு பங்காரு அடிகளார் கொண்டு வந்துள்ளார். அவர் மறைவிற்கு செல்ல முடியாததால் பொதுக்கூட்ட மேடையிலே பொதுமக்களுடன் சேர்ந்து அஞ்சலி செலுத்தினார். சென்னை சென்றவுடன் மேல்மருவத்தூருக்கு சென்று உறவினர்களிடம் ஆறுதல் கூற உள்ளதாக கூறினார்மேலும் புதுக்கோட்டை மாவட்டத்திற்கு ஒரு தனி பெருமை உண்டு. அதிக அளவில் ராணுவத்தில் சேருவது இங்கு உள்ள இளைஞர்கள் தான் இந்தப் பெருமை தமிழ்நாட்டிற்கு மட்டும் அல்ல, இந்தியாவிற்கே புகழ் சேர்க்கும் மாவட்டமாக விளங்கி வருவதால் அவர்களுக்கு ஒரு ராயல் சல்யூட் என்று புகழாரம் சூடினார்.பின்பு பொது மக்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். கட்சி நிர்வாகிகள் பிரேமலதா விஜயகாந்த்க்கு சந்தன மாலை அணிவித்து கையில் வீர வேல் வழங்கினர். நிகழ்ச்சியில் கட்சி நிர்வாகிகள் பொறுப்பாளர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

    • முன்னாள் எம்.எல்.ஏ.வுமான குணசேகரன், பகுதி செயலாளர்கள் கண்ணப்பன், கே.பி.ஜி.மகேஷ்ராம், ஹரிகரசுதன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
    • இயக்குனர் மனோஜ்குமார், முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் சிவசுப்பிரமணி, பழனிசாமி ஆகியோர் பேசினார்கள்.

    திருப்பூர்:

    அ.தி.மு.க. திருப்பூர் மாநகர் மாவட்டத்தின் தென்னம்பாளையம் பகுதி 56-வது வட்டம் சார்பில் கட்சியின் 52-வது ஆண்டு தொடக்க விழா பொதுக்கூட்டம் செரங்காட்டில் நடைபெற்றது. கூட்டத்துக்கு மாணவர் அணி துணை செயலாளர் ஹரிபிரசாந்த் தலைமை தாங்கினார். தென்னம்பாளையம் பகுதி செயலாளரும், மாமன்ற எதிர்க்கட்சி தலைவருமான அன்பகம் திருப்பதி வரவேற்று பேசினார். மாநகர் மாவட்ட எம்.ஜி.ஆர். இளைஞரணி செயலாளரும், முன்னாள் எம்.எல்.ஏ.வுமான குணசேகரன், பகுதி செயலாளர்கள் கண்ணப்பன், கே.பி.ஜி.மகேஷ்ராம், ஹரிகரசுதன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    மாநகர் மாவட்ட செயலாளர் பொள்ளாச்சி ஜெயராமன் எம்.எல்.ஏ. சிறப்புரையாற்றி பேசும்போது, 'அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் அமையும் கூட்டணி அடுத்து வரும் தேர்தல்களில் வெற்றி பெறும் வகையில் அனைவரும் ஒன்றிணைந்து பணியாற்ற வேண்டும்' என்றார். தலைமை கழக பேச்சாளர் திரைப்பட இயக்குனர் மனோஜ்குமார், முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் சிவசுப்பிரமணி, பழனிசாமி ஆகியோர் பேசினார்கள்.

    கூட்டத்தில் மாநகர் மாவட்ட அம்மா பேரவை தலைவர் அட்லஸ் லோகநாதன், அமைப்புசாரா ஓட்டுனர் அணி செயலாளர் மார்க்கெட் சக்திவேல் மற்றும் கட்சியினர் திரளாக கலந்து கொண்டனர்.

    • காளையார்கோவிலில் கிழக்கு ஒன்றிய தி.மு.க. சார்பில் பொதுக்கூட்டம் நடந்தது.
    • தி.மு.க. துணை பொதுசெயலாளரும், முன்னாள் மத்திய மந்திரியுமான ஆ.ராசா எம்.பி. கலந்து கொண்டு பேசினார்.

    காளையார்கோவில்

    சிவகங்கை மாவட்டம் காளையார் கோவிலில் காளையார்கோவில் கிழக்கு ஒன்றிய தி.மு.க. சார்பில் தெப்பக்குளம் கீழ்கரையில் கலைஞர் நூற்றாண்டு விழா மற்றும் 7,000 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா கிழக்கு ஒன்றிய செயலாளரும், முன்னாள் ஒன்றிய பெருந்தலைவருமான வே. ஆரோக்கியசாமி தலைமை யில் நடைபெற்றது. கூட்டத் திற்கு ஒன்றிய செயலாளர்கள் யோக.கிருஷ்ணகுமார், ஆர்.எம். கென்னடி, பேரூராட்சி மன்ற தலைவர் பிரியதர்ஷினி கவிராஜ், பொதுக்குழு உறுப் பினர் பி.டி.ஆர்.முத்து ஆகி யோர் முன்னிலை வகித்தனர்.

    கூட்டத்தில் கலந்துகொண்டு தி.மு.க. துணை பொது செயலாளரும், முன்னாள் மத்திய மந்திரியுமான ஆ.ராசா எம்.பி. பேசியதாவது:-

    இந்த ஆண்டு தமிழினத் தலைவர் கலைஞர் நூற் றாண்டு விழாவினை கொண் டாடி வருகிறோம். தலைவர் கலைஞரின் நூற்றாண்டு விழாவினை உலகம் முழுவ தும் உள்ள தமிழர்கள் கொண்டாடி வருகிறார்கள். கலைஞர் ஒரு தத்துவம். சமூக நீதி எங்கு வேண்டும் என்று விரும்புகிறார்களோ அங் கெல்லாம் கலைஞர் பிறந்த நாள் சிறப்பாக கொண்டா டப்பட்டு வருகிறது.

    13 வயதில் தனது பொது வாழ்க்கையை துவக்கிய வர். 94 வயது இறுதி வரை மொழி, இனம், நாட்டிற்காக அயராது பாடுபட்டவர். பேரறிஞர் அண்ணா மறை வுக்கு பிறகு கழகத் தலைவராக ஆண்டுகள் கழக தலைவரா கவும் சட்டமன்ற உறுப்பின ராக வும், ஐந்து முறை முதல்வராகவும் இருந்துள் ளார். கலைஞர் பெரியார் தத்துவத்தை தன் உள்ளடக்கிய பிதாமகன். திராவிடம் என்பது ஒரு தத்துவம். கலை ஞர் தமிழகத்தில் இருந்து டெல்லியை ஆட்சி செய்தார்.

    ஜனநாயகத்திற்கு எப்பொ ழுதெல்லாம் ஆபத்து வந்ததோ அப்போதெல்லாம் அதை எதிர்த்து முதலில் குரல் கொடுத்தவர். சிலர் வாக்கு வங்கிக்காக அரசியல் செய்கி றார்கள். ஆனால் தலைவர் கலைஞர் கொள்கையையும், தத்துவத்தையும் விடாமல் அரசியல் செய்தார்.

    பிரதமர் மோடி தொழில திபர் அதானியுடன் சேர்ந்து கொண்டு பல்வேறு ஊழல் முறைகேடுகளில் ஈடுபட்டுள் ளார். இதை அமெரிக்கா விலிருந்து வெளிவரும் பத்தி ரிகை ஆதாரத்துடன் வெளி யிட்டுள் ளது. இதுகுறித்து பாராளுமன்றத்தில் கேட்டால் மோடி பதில் சொல்வதே இல்லை. மாறாக அமலாக்கத் துறை வருமானவரித்துறை, சி.பி.ஐ. போன்றவர்களை நினைத்து அடக்க பார்க்கிறார். தி.மு.க. அதற்கு அஞ்சப்போவதில்லை.

    பாராளுமன்ற தேர்தலில் இந்தியா கூட்டணி வெற்றி பெற்றால் தொழிலதிபர் அதானி சிறைக்குப் போவார். மோடி குற்றவாளி கூண்டில் நிறுத்தப்பட்டு விசாரிக்கப்படு வார். 3 மாதங்களுக்கு மேலாக நடைபெற்று வரும் மணிப்பூர் கலவரத்திற்கு இதுவரை பிரதமர் மோடி சிறு வருத்தம் கூட தெரிவிக்க வில்லை. இத்தகைய பிரச்சினைகளை மறைப்பதற்காக ஜாதி, மத மோதல்கள், சிறுபான்மை யின மக்கள் மீது தாக்குதல்கள் நடத்தப்படுகிறது.

    பாராளுமன்ற தேர்தலில் பா.ஜ.க.வை வீழ்த்துவதற்கான பணிகளில் ஈடுபட வேண்டும். அப்பொழுது தான் இந்தி யாவை காப்பாற்ற முடியும். மூன்று மாதங்களாக இந்த பொதுக்கூட்டத்தை நடத்து வதற்காக மிகவும் சிறப்பான முறையில் மாநாடுபோல் ஏற்பாடு செய்து நடத்திய ஒன்றிய செயலாளர் ஆரோக் கியசாமி மற்றும் ஒன்றிய கழக நிர்வாகிகளுக்கு பாராட்டு களை தெரிவித்துக் கொள்கி றேன்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    பொதுக்கூட்டத்தில் மாவட்ட கழக செயலாளரும், கூட்டுறவுத்துறை அமைச்சரு மான கே.ஆர்.பெரிய கருப் பன், முன்னாள் அமைச் சர் மு.தென்னவன், தமிழரசி எம்.எல்.ஏ., ஆகியோர் சிறப்புரை ஆற்றினர். இதில் 7000 பயனா ளிகளுக்கு நலத்திட்ட உதவி களை அமைச்சர் கே.ஆர்.பெரியகருப்பன், ஆ.ராசா எம்.பி., முன்னாள் அமைச்சர் மு.தென்னவன், தமிழரசி எம்.எல்.ஏ. ஆகியோர் வழங்கினர்.

    பாக முகவர்களுக்கு கைபேசி, நலிந்த கழக முன்னோடிகளுக்கு பொற் கிழி, மாற்றுத்திறனாளிகள் மற்றும் ஏழை-எளிய மாணவி களுக்கு கல்வி நிதி உதவி, ஆதரவற்ற தொண்டு நிறுவ னங்களுக்கு அரிசி மூட்டை கள் ஆகியவை வழங்கப்பட் டது.

    இந்த பொதுக்கூட்டத்தில் மாவட்ட அவைத்தலைவர் வழக்கறிஞர் அ.கணேசன், மாவட்ட துணை செயலா ளர்கள் த.சேங்கை மாறன், கே.எஸ்.எம்.மணிமுத்து, முன்னாள் எம்.எல்.ஏ. சுப.மதியரசன், ஒன்றிய செயலா ளர்கள் எம்.ஜெயராமன், திருமலை முத்துராமலிங் கம், நாகனி ரவி, பூபால சிங்கம், நா.நெடுஞ்செழியன், குன்னக் குடி சுப்பிரமணியன், நகரச் செயலாளர்கள் பெரி. பாலா, க.பொன்னுச்சாமி பொதுக் குழு உறுப்பினர்கள் கரு.அசோகன்,

    பள்ளத்தூர் கே.எஸ்.ரவி, செயற்குழு உறுப்பினர் எஸ்.முத்துதுரை மாவட்ட மகளி ரணி அமைப்பாளர் பவானி கணேசன், மாவட்ட மகளிர் தொண்டரணி அமைப்பாளர் ஹேமலதா செந்தில், மாவட்ட மகளிர் தொண்டரணி துணை அமைப்பாளர் திலகவதி கண்ணன், மாவட்ட மாணவ ரணி அமைப்பாளர் கதி.ராஜ்குமார் கிழக்கு ஒன்றிய நிர்வாகிகள் சி.முத்து, வனிதா கண்ணதாசன், ஜான் சந்தி யாகு சி.குழந்தைசாமி, எம்.முருகேசன், முன்னாள் ஒன்றிய குழு தலைவர் அருட் செல்வி அரசு, எஸ்தர் மேரி ஸ்டீபன்,

    இளைஞரணி ஆர். சௌந்தரராஜன், பி தினேஷ் ராஜா, பேரூர் கழகச் செய லாளர் ஜெயராமன், எ.சந்திரபோஸ் மற்றும் ஏராள மானவர்கள் கலந்து கொண் டனர். பொதுக்கூட்டத்திற் கான ஏற்பாடுகளை காளை யார் கோவில் கிழக்கு ஒன்றிய செயலாளரும், முன்னாள் ஒன்றிய பெருந்தலைவருமான வே.ஆரோக்கியசாமி தலை மையில் ஒன்றிய கழக நிர்வாகி கள் செய்திருந்தனர்.

    • அலங்காநல்லூரில் அ.தி.மு.க. 52-ம் ஆண்டு தொடக்க விழா பொதுக்கூட்டம் நடந்தது.
    • இதில் முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் பங்கேற்று பேசினார்.

    அலங்காநல்லூர்

    மதுரை அ.தி.மு.க.வில் 52-ம் ஆண்டு தொடக்க விழாவை முன்னிட்டு பொதுக்கூட்டம் நடந்தது. மேற்கு, தெற்கு ஒன்றிய கழகம் சார்பில் பாசிங்கா புரம், சாய்பாபா கோவில் அருகில் ஒன்றிய செயலாளர் அரியூர் ராதாகிருஷ்ணன் தலைமை தாங்கினார்.

    இதில் ஒன்றிய செய லாளர்கள் ரவிச்சந்திரன், காளிதாஸ், கொரியர் கணேசன், வாடிப்பட்டி பேரூர் செயலாளர் அசோக் குமார் ஆகியோர் முன் னிலை வகித்தனர். முன் னாள் கூட்டுறவு தலைவர் மலர்கண்ணன், மாவட்ட பிரதிநிதி சுவாமிநாதன் ஆகியோர் வரவேற்றனர்.

    முன்னாள் அமைச்சர், சட்டமன்ற எதிர்க்கட்சி துணைத் தலைவர் ஆர்.பி.உதயகுமார் கலந்து கொண்டு பேசினார். முன்னாள் எம்.எல்.ஏ.க் கள் கருப்பையா, மாணிக் கம், தமிழரசன், சரவணன், மாவட்ட விவசாய அணி ராம்குமார், மாவட்ட மகளிரணி லட்சுமி, உள் ளிட்ட பலர் கலந்து கொண் டனர். முன்னதாக தி.மு.க.வை சேர்ந்த 20-க்கும் மேற்பட் டோர் ஒன்றிய செயலாளர் ராதா கிருஷ்ணன் தலைமை யில் அ.தி.மு.க.வில் இணைந் தனர். அவர்களை முன் னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் சால்வை அணிவித்து வரவேற்றார். முடிவில் பொதும்பு கிளைச் செயலாளர் ராகுல் நன்றி கூறினார்.

    • கருணாநிதி நூற்றாண்டு பிறந்தநாள் பொதுக்கூட்டம் வருகிற 17-ந் தேதி நடக்கிறது.
    • நலத்திட்ட உதவிகளை அமைச்சர் பெரியகருப்பன், ராசா எம்.பி., முன்னாள் அமைச்சர் தென்னவன் ஆகியோர் வழங்குகின்றனர்.

    காளையார்கோவில்

    முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதி நூற்றாண்டு பிறந்தநாள் விழாவை முன்னிட்டு சிவகங்கை மாவட்ட தி.மு.க. சார்பில் பொதுக்கூட்டமும், நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி போன்றவை நடத்தப்பட்டு வருகிறது.

    இதன் ஒரு பகுதியாக வருகிற 17-ந்தேதி (செவ்வாய்க்கிழமை) மாலை 5 மணி அளவில் காளையார் கோவில் கிழக்கு ஒன்றிய தி.மு.க. சார்பில் தெப்பக்குளம் கீழ்கரையில் கருணாநிதி நூற்றாண்டு பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் மற்றும் 7 ஆயிரம் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெறுகிறது.

    ஒன்றிய செயலாளர் ஆரோக்கியசாமி தலைமை தாங்குகிறார். முன்னாள் மத்திய அமைச்சர் ராசா எம்.பி. சிறப்புரை யாற்றுகிறார். அமைச்சர்கள் பெரியகருப்பன், முன்னாள் அமைச்சர் தென்னவன், தமிழரசி எம்.எல்.ஏ. ஆகியோர் பேசுகிறார்கள்.

    இதில் பாகமுகவர்களுக்கு செல்போன் கழக முன்னோடிகளுக்கு நிதி உதவி, தொண்டு நிறுவனங்களுக்கு அரிசி மூட்டைகள் ஆகியவை வழங்கப்படுகிறது. 7 ஆயிரம் பயனாளிகளுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகளை அமைச்சர் பெரியகருப்பன், ராசா எம்.பி., முன்னாள் அமைச்சர் தென்னவன் ஆகியோர் வழங்குகின்றனர்.

    கூட்டத்தில் மாவட்ட, ஒன்றிய, நகர, பேரூர் நிர்வாகிகள் கலந்து கொள்கி றார்கள்.

    இதற்கான ஏற்பாடுகளை கிழக்கு ஒன்றிய செயலாளர் ஆரோக்கியசாமி தலைமையில் நிர்வாகிகள் செய்து வருகிறார்கள்.

    • உசிலம்பட்டியில் பொதுக்கூட்டத்திற்கு அனுமதி மறுக்கப்பட்டது.
    • உசிலம்பட்டி தேவர் சிலை முன்பு தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    உசிலம்பட்டி

    மதுரை மாவட்டம், உசிலம்பட்டி முருகன் கோவில் முன்பு விஸ்வ இந்து பரிஷத்-பஜ்ரங்தள் அமைப்பின் சார்பில் பொதுக்கூட்டம் நடத்த முடிவு செய்யப்பட்டு அதற்காக மேடை அமைக்கும் பணிகள் நடைபெற்றது. இந்த நிலையில் இந்த கூட்டத்துக்கு போலீசார் திடீரென அனுமதி மறுத்தனர். போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து ேமடைகளை அப்புறப்படுத்துமாறு கூறினார். இதனால் போலீசாருக்கும், விஸ்வ இந்து பரிஷத் நிர்வாகிகளுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.

    இந்த நிலையில் பொதுக்கூட்டம் நடத்த அனுமதி வழங்கக் கோரி மாநில அமைப்பாளர் சேதுராமன், பொறுப்பாளர் பீமாராவ்ராம் தலைமையில் விஸ்வ இந்துபரிஷத் நிர்வாகிகள் 30 பேர் உசிலம்பட்டி தேவர் சிலை முன்பு தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களை போலீசார் கைது செய்து அப்புறப்படுத்தினர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

    • அ.தி.மு.க.வின் நெருக்கடியால்பெண்களுக்கு ஆயிரம் வழங்கப்பட்டது என்று முன்னாள் அமைச்சர் தங்கமணி பேசி உள்ளார்
    • பரமத்தி வேலூரில் அ.தி.மு.க. பொதுக்கூட்டத்தில் அமைச்சர் பேசினார்

     பரமத்திவேலூர்,

    நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூரில் கபிலர்மலை செல்லும் சாலை அருகே, பழைய தேசிய நெடுஞ்சாலை அருகில் அ.தி.மு.க சார்பில் அண்ணாவின் 115 -வது பிறந்த நாள் பொதுக்கூட்டம் நடைபெற்றது.

    பொதுக்கூட்டத்திற்கு பரமத்தி வேலூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் இன்ஜினீயர் சேகர் தலைமை வகித்தார். பொத்தனூர் பேரூராட்சி முன்னாள் தலைவரும், நகர கழக செயலாளருமான எஸ்.எம்.நாராயணன் அனைவரையும் வரவேற்றார். கபிலர்மலை ஒன்றிய செயலாளரும், ஒன்றியக்குழு தலைவருமான ஜே.பி.ரவி, பரமத்தி வடக்கு மற்றும் தெற்கு ஒன்றிய கழக செயலாளர்கள் வெற்றிவேல், ரவி, நகர செயலாளர்கள் சுகுமார், ரவீந்தர், வேலுச்சாமி மற்றும் செல்வராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    சிறப்பு அழைப்பாளர்களாக முன்னாள் அமைச்சரும், அ.தி.மு.க. மாவட்ட செயலாளரும், குமாரபாளையம் தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான தங்கமணி, வேடசந்தூர் தொகுதி முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் பரமசிவம் ஆகியோர் கலந்துகொண்டு பேசினார்கள்.

    முன்னாள் அமைச்சர் தங்கமணி பேசும்போது, தி.மு.க. ஆட்சி அமைந்து 2 1/2 ஆண்டுகள் ஆகியும் அவர்கள் தேர்தல் நேரத்தில் சொன்ன வாக்குறுதிகள் நிறைவேற்றவில்லை. அதேபோல் அதிமுக ஆட்சியில் நடைமுறையில் இருந்த படித்த பெண்களுக்கு திருமணத்திற்கு தாலிக்கு தங்கம் மற்றும் பணம் வழங்கும் திட்டம், ரூ.25 ஆயிரம் மானியத்தில் பெண்களுக்கு வழங்கப்படும் அம்மா ஸ்கூட்டர் திட்டமும் நிறுத்தப்பட்டு உள்ளது. அதேபோல் அதிமுக அரசு கொண்டு வந்த அனைத்து திட்டங்களையும் ரத்து செய்து விட்டனர். தற்பொழுது பாராளுமன்றத் தேர்தல் வரும் நிலையிலும் , எதிர்க்கட்சியான அதிமுகவின் நெருக்கடியால், குடும்பப் பெண்களுக்கு ஆயிரம் ரூபாய் வழங்கப்பட்டுள்ளது. அதுவும் 50 சதவீத குடும்பத்தினருக்கு மட்டும் வழங்கப்பட்டுள்ளது என்று அவர் பேசினார்.

    • கருணாநிதி நூற்றாண்டு பொதுக்கூட்டம்; 7 ஆயிரம் பேருக்கு நலத்திட்ட உதவிகளை அமைச்சர் கே.ஆர்.பெரியகருப்பன் - ஆ.ராசா. எம்.பி. ஆகியோர் வழங்குகின்றனர்.
    • தொண்டு நிறுவனங்க ளுக்கு அரிசி மூட்டை வழங்குதல் போன்ற நலத்திட்ட உதவிகள் வழங்கப்படுகின்றது.

    காளையார்கோவில்

    சிவகங்கை மாவட்டத்தில் கருணாநிதி நூற்றாண்டு பிறந்தநாள் பொதுக்கூட்டங் கள் ஒன்றிய, நகர, பேரூர் சார்பிலும் மற்றும் பல்வேறு அணிகளின் சார்பில் நடை பெற்று வருகிறது. இதன் தொடர்ச்சியாக காளையார் கோவில் கிழக்கு ஒன்றிய தி.முக. சார்பில் வருகிற 30-ந் தேதி (சனிக்கிழமை) மாலை 4 மணி அளவில் காளையார் கோவில் தெப்பக்குளம் தென்கரை யில் கருணாநிதி நூற்றாண்டு விழா பொதுக்கூட்டம், 7 ஆயிரம் பேருக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடக்கிறது.

    ஒன்றிய செயலாளரும், முன்னாள் ஒன்றியக்குழு தலைவருமான வே.ஆரோக்கியசாமி தலைமையில் நடைபெறு கிறது. ஒன்றிய செயலா ளர்கள் யோக.கிருஷ்ண குமார், ஆர்.எம்.கென்னடி ஆகியோர் வரவேற்றுப் பேசுகிறார்கள். பொதுக்குழு உறுப்பினர் பி.டி.ஆர்.முத்து, நாட்டரசன்கோட்டை பேரூராட்சி மன்ற தலைவர் பிரியதர்ஷணி கவிராஜ், நி ர்வாகிகள் முத்து, வனிதா கண்ணதாசன், கருப்புசாமி, பி.கந்தசாமி,சி.குழந்தை சாமி, எம்.முருகேசன், முன்னாள் ஒன்றியக்குழுத் தேவர் அருட்செல்வி அரசு, எஸ்தர்மேரி ஸ்டிபன், சவுந்திரராஜன், தினேஷ் அரசு, ஆர்.ஜெயராமன் ஆகியோர் முன்னிலை வகிக்கிறார்கள்.

    இந்த நிகழ்ச்சியில் 7 ஆயிரம் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கி யும், கருணாநிதி குறித்தும் சிவகங்கை மாவட்ட செய லாளரும், கூட்டுறவுத்துறை அமைச்சருமான கே.ஆர்.பெரியகருப்பன், தி.மு.க. துணை பொதுச்செயலாளர் முன்னாள் மத்திய அமைச்சர் ஆ. ராசா எம்.பி., முன்னாள் அமைச்சர்கள் தென்னவன், தமிழரசி ரவிக்குமார் எம்.எல்.ஏ. ஆகியோர் சிறப்புரை ஆற்றுகிறார்கள்.

    இந்த பொதுக்கூட்டத் தில் மாவட்ட, ஒன்றிய, நகர நிர்வாகிகள், சார்பு அணி நிர்வாகிகள், உள்ளாட்சி பிரதிநிதிகள் கலந்து கொள் கிறார்கள். கூட்டத்திற்கான ஏற்பாடுகளை கிழக்கு ஒன்றிய செயலாளர் வே.ஆரோக்கியசாமி தலைமையில் ஒன்றிய நிர்வாகிகள் செய்து வருகிறார்கள்.

    நிகழ்ச்சியில் பாக முக வர்களுக்கு கைபேசி வழங்குதல், கைம்பெண்க ளுக்கு தையல் எந்திரம் வழங்குதல், முன்னோடி களுக்கு பொற்கிழி வழங்கு தல், மாற்றுத்திறனாளிகள் மற்றும் ஏழை-எளிய மாணவர்களுக்கு கல்வி நிதி உதவி வழங்குதல், ஆதர வற்ற தொண்டு நிறுவனங்க ளுக்கு அரிசி மூட்டை வழங்குதல் போன்ற நலத்திட்ட உதவிகள் வழங்கப்படுகின்றது.

    • இந்து மக்கள் கட்சி சார்பில் 26 விநாயகா் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டது.
    • மகளிா் உரிமைத் தொகை திட்டத்தில் பல பேருக்கு தொகை சென்றடையவில்லை.

    பல்லடம், செப்.24-

    பல்லடத்தில் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு இந்து மக்கள் கட்சி சார்பில் 26 விநாயகா் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டது. இந்த நிலையில் விநாயகர் சிலைகள் விஜர்சனம் செய்வதற்காக விநாயகர் சிலைகள் ஊர்வலம் நடைபெற்றது. முன்னதாக கடைவீதியில் இந்து மக்கள் கட்சி சார்பில் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் கட்சித்தலைவர் அர்ஜுன் சம்பத் கலந்து கொண்டு பேசுகையில்:-

    விநாயகா் சிலைகளை வைத்து வழிபடுவது என்பது வழிபாட்டு உரிமையுடன் தொடா்புடையதாகும். விநாயகா் சதுா்த்தி தினத்தை புராண நம்பிக்கைகளின்படி ஏற்றுக் கொள்ளத்தக்கத்தல்ல என்பதால் வாழ்த்து தெரிவிக்க மாட்டோம் என்று தற்போதைய அரசு தெரிவித்துள்ளது. பல இடங்களில் புதிதாக விநாயகா் சிலைகளை பிரதிஷ்டை செய்ய அனுமதி வழங்கவில்லை. மகளிா் உரிமைத் தொகை திட்டத்தில் பல பேருக்கு தொகை சென்றடையவில்லை. இந்தத் திட்டத்தில் அனைத்து குடும்பத் தலைவிகளுக்கும் உதவித்தொகை வழங்க வேண்டும். இவ்வாறு அவர் பேசினார். இந்த நிகழ்ச்சியில் இந்து மக்கள் கட்சி மாநில செயலாளர் காலனி பிரபு, மாநில இளைஞர் அணி தலைவர் ஹோம் கார்டு பாலாஜி, கோவை மாவட்ட தலைவர் திருமுருகனார், மாநில இளைஞரணி துணைத் தலைவர் பிர்லா போஸ், பொதுக்குழு உறுப்பினர் ராஜேஷ் கண்ணன், நகரத் தலைவர் சரவணன் உள்பட பலர் கலந்து கொண்டனர். பின்னர் விநாயகர் சிலைகள் முக்கிய வீதிகளின் வழியாக ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு அவிநாசி பாளையம் அருகே உள்ள குளத்தில் கரைக்கப்பட்டது.

    விநாயகர் சிலை ஊர்வலத்தை முன்னிட்டு பல்லடம் துணை போலீஸ் சூப்பிரண்டு சவுமியா தலைமையில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.

    ×