search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    எடப்பாடி பழனிசாமி தஞ்சையில் 4-ந்தேதி பேசுகிறார்
    X

    எடப்பாடி பழனிசாமி தஞ்சையில் 4-ந்தேதி பேசுகிறார்

    • அ.தி.மு.க 52-வது ஆண்டு தொடக்க விழா தஞ்சையில் 4-ந்தேதி நடக்கிறது.
    • பொதுக்கூட்டத்தில் எடப்பாடி. பழனிசாமி பங்கேற்று சிறப்பு பேருரை ஆற்ற உள்ளார்.

    தஞ்சாவூர்:

    அ.தி.மு.க. தலைமை கழகம் சார்பில் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிப்பதாவது:-

    அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக 52-வது ஆண்டு தொடக்க விழாவை முன்னிட்டு, கழக அமைப்புரீதியாக செயல்பட்டு வரும் மாவட்டங்களுக்கு உட்பட்ட சட்டமன்றத் தொகுதிகளில், கழகத்தின் சார்பில் 52-வது ஆண்டு தொடக்க விழா பொதுக்கூட்டங்கள் நடைபெற்று வருகின்றன.

    அந்த வகையில், வருகிற 4.11.2023 - சனிக்கிழமை மாலை 5 மணியளவில், தஞ்சை மாநகரில் நடை பெற உள்ள, அ.தி.மு.க. 52-வது ஆண்டு தொடக்க விழா பொதுக்கூட்டத்தில், அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகப் பொதுச்செயலாளரும், சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர், தமிழ் நாடு முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி. பழனிசாமி பங்கேற்று சிறப்பு பேருரை ஆற்ற உள்ளார்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    Next Story
    ×