search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "காளையார்கோவில்"

    • காளையார்கோவிலில் கிழக்கு ஒன்றிய தி.மு.க. சார்பில் பொதுக்கூட்டம் நடந்தது.
    • தி.மு.க. துணை பொதுசெயலாளரும், முன்னாள் மத்திய மந்திரியுமான ஆ.ராசா எம்.பி. கலந்து கொண்டு பேசினார்.

    காளையார்கோவில்

    சிவகங்கை மாவட்டம் காளையார் கோவிலில் காளையார்கோவில் கிழக்கு ஒன்றிய தி.மு.க. சார்பில் தெப்பக்குளம் கீழ்கரையில் கலைஞர் நூற்றாண்டு விழா மற்றும் 7,000 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா கிழக்கு ஒன்றிய செயலாளரும், முன்னாள் ஒன்றிய பெருந்தலைவருமான வே. ஆரோக்கியசாமி தலைமை யில் நடைபெற்றது. கூட்டத் திற்கு ஒன்றிய செயலாளர்கள் யோக.கிருஷ்ணகுமார், ஆர்.எம். கென்னடி, பேரூராட்சி மன்ற தலைவர் பிரியதர்ஷினி கவிராஜ், பொதுக்குழு உறுப் பினர் பி.டி.ஆர்.முத்து ஆகி யோர் முன்னிலை வகித்தனர்.

    கூட்டத்தில் கலந்துகொண்டு தி.மு.க. துணை பொது செயலாளரும், முன்னாள் மத்திய மந்திரியுமான ஆ.ராசா எம்.பி. பேசியதாவது:-

    இந்த ஆண்டு தமிழினத் தலைவர் கலைஞர் நூற் றாண்டு விழாவினை கொண் டாடி வருகிறோம். தலைவர் கலைஞரின் நூற்றாண்டு விழாவினை உலகம் முழுவ தும் உள்ள தமிழர்கள் கொண்டாடி வருகிறார்கள். கலைஞர் ஒரு தத்துவம். சமூக நீதி எங்கு வேண்டும் என்று விரும்புகிறார்களோ அங் கெல்லாம் கலைஞர் பிறந்த நாள் சிறப்பாக கொண்டா டப்பட்டு வருகிறது.

    13 வயதில் தனது பொது வாழ்க்கையை துவக்கிய வர். 94 வயது இறுதி வரை மொழி, இனம், நாட்டிற்காக அயராது பாடுபட்டவர். பேரறிஞர் அண்ணா மறை வுக்கு பிறகு கழகத் தலைவராக ஆண்டுகள் கழக தலைவரா கவும் சட்டமன்ற உறுப்பின ராக வும், ஐந்து முறை முதல்வராகவும் இருந்துள் ளார். கலைஞர் பெரியார் தத்துவத்தை தன் உள்ளடக்கிய பிதாமகன். திராவிடம் என்பது ஒரு தத்துவம். கலை ஞர் தமிழகத்தில் இருந்து டெல்லியை ஆட்சி செய்தார்.

    ஜனநாயகத்திற்கு எப்பொ ழுதெல்லாம் ஆபத்து வந்ததோ அப்போதெல்லாம் அதை எதிர்த்து முதலில் குரல் கொடுத்தவர். சிலர் வாக்கு வங்கிக்காக அரசியல் செய்கி றார்கள். ஆனால் தலைவர் கலைஞர் கொள்கையையும், தத்துவத்தையும் விடாமல் அரசியல் செய்தார்.

    பிரதமர் மோடி தொழில திபர் அதானியுடன் சேர்ந்து கொண்டு பல்வேறு ஊழல் முறைகேடுகளில் ஈடுபட்டுள் ளார். இதை அமெரிக்கா விலிருந்து வெளிவரும் பத்தி ரிகை ஆதாரத்துடன் வெளி யிட்டுள் ளது. இதுகுறித்து பாராளுமன்றத்தில் கேட்டால் மோடி பதில் சொல்வதே இல்லை. மாறாக அமலாக்கத் துறை வருமானவரித்துறை, சி.பி.ஐ. போன்றவர்களை நினைத்து அடக்க பார்க்கிறார். தி.மு.க. அதற்கு அஞ்சப்போவதில்லை.

    பாராளுமன்ற தேர்தலில் இந்தியா கூட்டணி வெற்றி பெற்றால் தொழிலதிபர் அதானி சிறைக்குப் போவார். மோடி குற்றவாளி கூண்டில் நிறுத்தப்பட்டு விசாரிக்கப்படு வார். 3 மாதங்களுக்கு மேலாக நடைபெற்று வரும் மணிப்பூர் கலவரத்திற்கு இதுவரை பிரதமர் மோடி சிறு வருத்தம் கூட தெரிவிக்க வில்லை. இத்தகைய பிரச்சினைகளை மறைப்பதற்காக ஜாதி, மத மோதல்கள், சிறுபான்மை யின மக்கள் மீது தாக்குதல்கள் நடத்தப்படுகிறது.

    பாராளுமன்ற தேர்தலில் பா.ஜ.க.வை வீழ்த்துவதற்கான பணிகளில் ஈடுபட வேண்டும். அப்பொழுது தான் இந்தி யாவை காப்பாற்ற முடியும். மூன்று மாதங்களாக இந்த பொதுக்கூட்டத்தை நடத்து வதற்காக மிகவும் சிறப்பான முறையில் மாநாடுபோல் ஏற்பாடு செய்து நடத்திய ஒன்றிய செயலாளர் ஆரோக் கியசாமி மற்றும் ஒன்றிய கழக நிர்வாகிகளுக்கு பாராட்டு களை தெரிவித்துக் கொள்கி றேன்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    பொதுக்கூட்டத்தில் மாவட்ட கழக செயலாளரும், கூட்டுறவுத்துறை அமைச்சரு மான கே.ஆர்.பெரிய கருப் பன், முன்னாள் அமைச் சர் மு.தென்னவன், தமிழரசி எம்.எல்.ஏ., ஆகியோர் சிறப்புரை ஆற்றினர். இதில் 7000 பயனா ளிகளுக்கு நலத்திட்ட உதவி களை அமைச்சர் கே.ஆர்.பெரியகருப்பன், ஆ.ராசா எம்.பி., முன்னாள் அமைச்சர் மு.தென்னவன், தமிழரசி எம்.எல்.ஏ. ஆகியோர் வழங்கினர்.

    பாக முகவர்களுக்கு கைபேசி, நலிந்த கழக முன்னோடிகளுக்கு பொற் கிழி, மாற்றுத்திறனாளிகள் மற்றும் ஏழை-எளிய மாணவி களுக்கு கல்வி நிதி உதவி, ஆதரவற்ற தொண்டு நிறுவ னங்களுக்கு அரிசி மூட்டை கள் ஆகியவை வழங்கப்பட் டது.

    இந்த பொதுக்கூட்டத்தில் மாவட்ட அவைத்தலைவர் வழக்கறிஞர் அ.கணேசன், மாவட்ட துணை செயலா ளர்கள் த.சேங்கை மாறன், கே.எஸ்.எம்.மணிமுத்து, முன்னாள் எம்.எல்.ஏ. சுப.மதியரசன், ஒன்றிய செயலா ளர்கள் எம்.ஜெயராமன், திருமலை முத்துராமலிங் கம், நாகனி ரவி, பூபால சிங்கம், நா.நெடுஞ்செழியன், குன்னக் குடி சுப்பிரமணியன், நகரச் செயலாளர்கள் பெரி. பாலா, க.பொன்னுச்சாமி பொதுக் குழு உறுப்பினர்கள் கரு.அசோகன்,

    பள்ளத்தூர் கே.எஸ்.ரவி, செயற்குழு உறுப்பினர் எஸ்.முத்துதுரை மாவட்ட மகளி ரணி அமைப்பாளர் பவானி கணேசன், மாவட்ட மகளிர் தொண்டரணி அமைப்பாளர் ஹேமலதா செந்தில், மாவட்ட மகளிர் தொண்டரணி துணை அமைப்பாளர் திலகவதி கண்ணன், மாவட்ட மாணவ ரணி அமைப்பாளர் கதி.ராஜ்குமார் கிழக்கு ஒன்றிய நிர்வாகிகள் சி.முத்து, வனிதா கண்ணதாசன், ஜான் சந்தி யாகு சி.குழந்தைசாமி, எம்.முருகேசன், முன்னாள் ஒன்றிய குழு தலைவர் அருட் செல்வி அரசு, எஸ்தர் மேரி ஸ்டீபன்,

    இளைஞரணி ஆர். சௌந்தரராஜன், பி தினேஷ் ராஜா, பேரூர் கழகச் செய லாளர் ஜெயராமன், எ.சந்திரபோஸ் மற்றும் ஏராள மானவர்கள் கலந்து கொண் டனர். பொதுக்கூட்டத்திற் கான ஏற்பாடுகளை காளை யார் கோவில் கிழக்கு ஒன்றிய செயலாளரும், முன்னாள் ஒன்றிய பெருந்தலைவருமான வே.ஆரோக்கியசாமி தலை மையில் ஒன்றிய கழக நிர்வாகி கள் செய்திருந்தனர்.

    • காளையார்கோவில் அருகே 1008 திருவிளக்கு பூஜை நடந்தது.
    • ஆயிரத்திற்கும் மேற்பட்ட பெண்கள் கலந்து கொண்டனர்.

    சிவகங்கை

    சிவகங்கை மாவட்டம் காளையார்கோவில் அருகே உள்ள சிரமம் கிராமத்தில் பழமையான கொங்கேஸ்வரர் (சிவன்) கோவில் உள்ளது. இங்குள்ள ஏழுமுக காளியம்மன் சன்னதியில் ஆண்டுதோறும் ஆடி மாத பவுர்ணமி அன்று உலக நன்மை வேண்டி 1008 திருவிளக்கு பூஜை நடைபெறும். இந்த ஆண்டு ஆடி மாத பவுர்ணமியை முன்னிட்டு நேற்று 1008 திருவிளக்கு பூஜை நடைபெற்றது.

    இந்த ஆண்டு நாடு தனது 75-வது சுதந்திர தின பவள விழாவை கொண்டாட உள்ள நிலையில் சாதி, மதம் கடந்து அனைத்து தரப்பு மக்களும் நல்லுறவை பேணி வாழவும் உலக நண்மை வேண்டியும் இந்த திருவிளக்கு பூஜை நடைபெற்றது. இதில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட பெண்கள் கலந்து கொண்டனர். 

    ×