search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "K. R. Periyagaruppan"

    • கருணாநிதி நூற்றாண்டு பொதுக்கூட்டம்; 7 ஆயிரம் பேருக்கு நலத்திட்ட உதவிகளை அமைச்சர் கே.ஆர்.பெரியகருப்பன் - ஆ.ராசா. எம்.பி. ஆகியோர் வழங்குகின்றனர்.
    • தொண்டு நிறுவனங்க ளுக்கு அரிசி மூட்டை வழங்குதல் போன்ற நலத்திட்ட உதவிகள் வழங்கப்படுகின்றது.

    காளையார்கோவில்

    சிவகங்கை மாவட்டத்தில் கருணாநிதி நூற்றாண்டு பிறந்தநாள் பொதுக்கூட்டங் கள் ஒன்றிய, நகர, பேரூர் சார்பிலும் மற்றும் பல்வேறு அணிகளின் சார்பில் நடை பெற்று வருகிறது. இதன் தொடர்ச்சியாக காளையார் கோவில் கிழக்கு ஒன்றிய தி.முக. சார்பில் வருகிற 30-ந் தேதி (சனிக்கிழமை) மாலை 4 மணி அளவில் காளையார் கோவில் தெப்பக்குளம் தென்கரை யில் கருணாநிதி நூற்றாண்டு விழா பொதுக்கூட்டம், 7 ஆயிரம் பேருக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடக்கிறது.

    ஒன்றிய செயலாளரும், முன்னாள் ஒன்றியக்குழு தலைவருமான வே.ஆரோக்கியசாமி தலைமையில் நடைபெறு கிறது. ஒன்றிய செயலா ளர்கள் யோக.கிருஷ்ண குமார், ஆர்.எம்.கென்னடி ஆகியோர் வரவேற்றுப் பேசுகிறார்கள். பொதுக்குழு உறுப்பினர் பி.டி.ஆர்.முத்து, நாட்டரசன்கோட்டை பேரூராட்சி மன்ற தலைவர் பிரியதர்ஷணி கவிராஜ், நி ர்வாகிகள் முத்து, வனிதா கண்ணதாசன், கருப்புசாமி, பி.கந்தசாமி,சி.குழந்தை சாமி, எம்.முருகேசன், முன்னாள் ஒன்றியக்குழுத் தேவர் அருட்செல்வி அரசு, எஸ்தர்மேரி ஸ்டிபன், சவுந்திரராஜன், தினேஷ் அரசு, ஆர்.ஜெயராமன் ஆகியோர் முன்னிலை வகிக்கிறார்கள்.

    இந்த நிகழ்ச்சியில் 7 ஆயிரம் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கி யும், கருணாநிதி குறித்தும் சிவகங்கை மாவட்ட செய லாளரும், கூட்டுறவுத்துறை அமைச்சருமான கே.ஆர்.பெரியகருப்பன், தி.மு.க. துணை பொதுச்செயலாளர் முன்னாள் மத்திய அமைச்சர் ஆ. ராசா எம்.பி., முன்னாள் அமைச்சர்கள் தென்னவன், தமிழரசி ரவிக்குமார் எம்.எல்.ஏ. ஆகியோர் சிறப்புரை ஆற்றுகிறார்கள்.

    இந்த பொதுக்கூட்டத் தில் மாவட்ட, ஒன்றிய, நகர நிர்வாகிகள், சார்பு அணி நிர்வாகிகள், உள்ளாட்சி பிரதிநிதிகள் கலந்து கொள் கிறார்கள். கூட்டத்திற்கான ஏற்பாடுகளை கிழக்கு ஒன்றிய செயலாளர் வே.ஆரோக்கியசாமி தலைமையில் ஒன்றிய நிர்வாகிகள் செய்து வருகிறார்கள்.

    நிகழ்ச்சியில் பாக முக வர்களுக்கு கைபேசி வழங்குதல், கைம்பெண்க ளுக்கு தையல் எந்திரம் வழங்குதல், முன்னோடி களுக்கு பொற்கிழி வழங்கு தல், மாற்றுத்திறனாளிகள் மற்றும் ஏழை-எளிய மாணவர்களுக்கு கல்வி நிதி உதவி வழங்குதல், ஆதர வற்ற தொண்டு நிறுவனங்க ளுக்கு அரிசி மூட்டை வழங்குதல் போன்ற நலத்திட்ட உதவிகள் வழங்கப்படுகின்றது.

    ×