search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பேரணி"

    • இருசக்கர வாகனத்தில் தீயணைப்பு துறை வீரர்கள் மற்றும் காவலர்கள் விழிப்புணர்வு பேரணி நடத்தினர்.
    • துண்டு பிரசுரங்கள் வழங்கியும் ஒலிபெருக்கி மூலம் விபத்தில்லா தீபாவளியை கொண்டாடுவதற்கான அறிவுரை வழங்கியும் விழிப்புணர்வை ஏற்படுத்தினர்

    முசிறி

    முசிறி தீயணைப்புத்துறை மற்றும் காவல் துறை இணைந்து விபத்தில்லா தீபாவளி கொண்டாட வேண்டும் என்பதனை வலியுறுத்தி இருசக்கர வாகனத்தில் தீயணைப்பு துறை வீரர்கள் மற்றும் காவலர்கள் விழிப்புணர்வு பேரணி நடத்தினர். பேரணியை கரூர் மாவட்ட தீயணைப்பு மீட்பு பணித்துறை அலுவலர் வடிவேல் கொடியசைத்து துவக்கி வைத்தார்.

    நிலைய அலுவலர் கர்ணன், காவல் உதவி ஆய்வாளர் ஆசை தம்பி, தீயணைப்பு நிலைய போக்கு வரத்தாளர் அந்தோணி ஆகியோர் முன்னிலை வகித்தனர். இப்பேரணி முசிறி நகரின் முக்கிய வீதி வழியாக சென்று தீயணைப்பு துறை நிலை யத்தில் நிறைவடைந்தது.

    பேரணியில் காவல் ஆய்வாளர் கதிரேசன் மற்றும் காவலர்கள், தீயணைப்பு துறை வீரர்கள் கலந்து கொண்டு, பொதுமக்களிடையே பட்டாசுகளை பாதுகாப்பாக வெடிப்பது குறித்து, துண்டு பிரசுரங்கள் வழங்கியும் ஒலிபெருக்கி மூலம் விபத்தில்லா தீபாவளியை கொண்டாடுவதற்கான அறிவுரை வழங்கியும் விழிப்புணர்வை ஏற்படுத்தினர்.

    • அரியலூர் அடுத்த சிறு வளூர் கிராமத்தில், அரசு உயர்நிலைப் பள்ளி மாணவ, மாணவிகள் பங்கேற்ற மாசற்ற தீபாவளி விழிப்பு ணர்வு பேரணி நடை பெற்றது.
    • இந்த பேரணியானது கிராமத்தின் அனைத்து தெரு வழியாக சென்று மீண்டும் பள்ளியில் நிறை வடைந்தது.

    அரியலூர்

    அரியலூர் அடுத்த சிறு வளூர் கிராமத்தில், அரசு உயர்நிலைப் பள்ளி மாணவ, மாணவிகள் பங்கேற்ற மாசற்ற தீபாவளி விழிப்பு ணர்வு பேரணி நடை பெற்றது. இந்த நிகழ்ச்சிக்கு தலைமை ஆசிரியர் சின்ன துரை தலைமை வகித்தார். தனலட்சுமி சீனிவாசன் கல்வியியல் கல்லூரி முதல் வர் சாந்தகுமாரி கலந்து கொண்டு பேர ணியை கொடியசைத்து தொடக்கி வைத்து பேசினார்.

    இந்த பேரணியானது கிராமத்தின் அனைத்து தெரு வழியாக சென்று மீண்டும் பள்ளியில் நிறை வடைந்தது.

    பேரணியின் கலந்து கொண்ட மாணவ, மாணவி கள் மாசற்ற தீபாவளி கொண்டாட வேண்டும் என்று முழக்கமிட்டனர். முன்னதாக அனைவரும் உறுதி மொழி எடுத்துக் கொண்டனர்.

    பேரணியில் சுப்பராய புரம் கிராம நிர்வாக அலுவலர் சீனிவாசன், ஆசிரியர்கள் செந்தமிழ் செல்வி, தனலட்சுமி, செந் தில் குமரன், செவ்வேள்.தங்கபாண்டி, இளநிலை உதவியாளர் மணிகண்டன், பயிற்சி ஆசிரியர்கள் கண் ணகி, சரண்யா உள்ளிட் டோர் கலந்து கொண்டனர்.

    • புகைப்பட அட்டையை பெற விண்ணப்பம் பெற வாக்காளர் உதவி மைய செயலி அறிமுகம்
    • குன்னூர் தாசில்தார் கனிசுந்தரம் மற்றும் நகரமன்ற உறுப்பினர்ராஜ்குமார் உள்ளிட்டோர் பங்கேற்பு

    அருவங்காடு,

    பாராளுமன்ற தேர்தலை ஒட்டி நாடு முழுவதும் வாக்காளர்களுக்கு விழிப்புணர்வை தேர்தல் அதிகாரிகள் ஏற்படுத்தி வருகின்றனர் இதன் ஒருபகுதியாக குன்னூர் பஸ் நிலையத்தில் விழிப்புணர்வு பேரணி நடத்தப்பட்டது.

    இதனை ஆர்.டி.ஓ பூரணகுமார் தலைமை தாங்கிகொடித்து வைத்தார். அப்போது பஸ் பயணிகள் மற்றும் பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் துண்டு பிரசுரங்கள் வழங்கப்பட்டன. தொடர்ந்து இருசக்கர வாகன பேரணியும் நடந்தது.

    மேலும் புதிய வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க, ஆண்டுதோறும் வாக்காளர் புகைப்பட அட்டையை பெறுவதற்கான விண்ணப்பம் பெறுவதற்கும் வாக்காளர் உதவி மைய செயலி அறிமுகப்படுத்தப்பட்டு உள்ளது.

    விழிப்புணர்வு பேரணியில் பங்கேற்றவர்கள் மாற்றுத்திறனாளிகள் புதிய கைப்பேசி செயலியை அறிமுகப்படுத்தப்பட்டு உள்ளதாகவும், இதனை அனைவரும் பதிவிறக்கம் செய்து. பயன்படுத்திக் கொள்ள வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டது.

    நிகழ்ச்சியில் குன்னூர் தாசில்தார் கனிசுந்தரம், தேர்தல் அலுவலர் கோபி, மற்றும் நகரமன்ற உறுப்பினர் ராஜ்குமார் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

    பெரம்பலூரில்டெங்கு, மலேரியா ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி

    பெரம்பலூர் 

    பெரம்பலூரில் மாவட்ட ஜூனியர் ரெட் கிராஸ் அமைப்பின் சார்பில் டெங்கு, மலேரியா ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி நடந்தது. பெரம்பலூர் அரசு மேல் நிலைப்பள்ளியில் தொடங்கிய விழிப்புணர்வு பேரணிக்கு மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் எஸ். மணிவண்ணன் தலைமை வகித்தார்.

    மாவட்ட கல்வி அலுவலர் (மெட்ரிக்) கலாராணி, மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலர் அண்ணாதுரை, மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலரின் நேர்முக அலுவலர் (மேல்நிலை) சுரேஷ், இந்தியன் ரெட் கிராஸ் மாவட்ட கவுரவ செயலாளர் ஜெயராமன், பள்ளி தலைமை ஆசிரியர் முத்துசாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    டி.ஆர்.ஓ. வடிவேல்பிரபு கொடியசைத்து பேரணியினை தொடங்கி வைத்து பேரணியில் கலந்துகொண்டார். இந்த பேரணி மாவட்ட தலைமை மருத்துவமனை, பழைய பஸ்ஸ்டாண்ட், காமராசர் வளைவு, சங்கு பேட்டை, கடைவீதி வழியாக வழியாக மீண்டும் பள்ளியை வந்தடைந்தது. பேரணியில் ஜூனியர் ரெட் கிராஸ் அமைப்பின் கவுன்சிலர்கள் மற்றும் ஜூனியர்கள் கோஷமிட்டும், பதாகைகள் ஏந்தியும் பொதுமக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் துண்டு பிரசுரங்கள் வழங்கி விழிப்புணர்வை ஏற்படுத்தினர்.

    மாவட்ட கன்வீனர் ராதாகிருஷ்ணன் தலைமையில் மேல்நிலை, உயர்நிலை,மெட்ரிக், நடுநிலை ஆகிய 38 பள்ளிகளில் இருந்து 497 பேர் கலந்து கொண்டனர். இதற்கான ஏற்பாடுகளை மாவட்ட இணை கன்வீனர் துரை, வேப்பூர் மாவட்ட பொருளாளர் ராஜா, மண்டல அலுவலர்கள் செய்திருந்தனர். முன்னதாக ஜே.ஆர்.சி. மாவட்ட பொருளாளர் கருணாகரன் வரவேற்றார். முடிவில் மாவட்ட கன்வீனர் ஜோதிவேல் நன்றி கூறினார். 

    • பட்டுக்கோட்டை வருவாய் கோட்டாட்சியர் அக்பர் அலி பேரணியை கொடியசைத்து தொடங்கி வைத்தார்,
    • பதாகைகள் மூலம் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

    பட்டுக்கோட்டை:

    கலைஞர் நுாற்றாண்டு விழாவை முன்னிட்டு சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு பேரணி நெடுஞ்சாலைத்துறை தஞ்சாவூர் கட்டுமானம் மற்றும் பராமரிப்பு சார்பாக பட்டுக்கோட்டையில் நடைபெற்றது.

    பட்டுக்கோட்டை வருவாய் கோட்டாட்சியர் அக்பர் அலி கொடியசைத்து பேரணியை துவக்கி வைத்தார், இப்பேரணியில் தஞ்சாவூர் நெடுஞ்சாலைத்துறை கட்டுமானம் மற்றும் பராமரிப்பு கோட்டப் பொறியாளர் செந்தில்குமார், பட்டுக்கோ ட்டை நெடுஞ்சாலைத்துறை உதவிக்கோட்டப் பொறியாளர் விஜயக்குமார், திருச்சி சாலை பாதுகாப்பு அலகு கோட்டப் பொறியாளர் புவனேஸ்வரி, பட்டுக்கோட்டை நெடுஞ்சாலைத்துறை உதவிப் பொறியாளர் செல்வராஜ், பட்டுக்கோட்டை நகர் செந்தில்குமார், பட்டுக்கோ ட்டை மோட்டார் மன்ற வாகன தலைவர் சண்முகபிரியா ஆய்வாளர் சரவணன், நெடுஞ்சாலைத்துறை அலுவலர்கள், பணியாளர்கள் மற்றும் பட்டுக்கோட்டை பாலிடெக்னிக் கல்லுாரி, ஏனாதி ராஜப்பா கலை மற்றும் அறிவியல் கல்லுாரி மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர்.

    சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு குறித்த வாசகங்கள் மற்றும் பதாகைகள் மூலம் பொது மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

    அதனைத் தொடர்ந்து சாலை பாதுகாப்பு விழிப்பு ணர்வு நிகழ்ச்சியானது பட்டுக்கோட்டை ஏனாதி ராஜப்பா கலை மற்றும் அறிவியல் கல்லுாரியில் தஞ்சாவூர் நெடுஞ்சாலைத்துறை கட்டுமானம் மற்றும் பராமரிப்பு கோட்டப் பொறியாளர் செந்தில்குமார் தலைமையில் நடைபெற்றது.

    இந்நிகழ்ச்சியில் சிறப்பு விருந்துநர்களாக இக்கல்லுாரியின் செயலர். கணேசன், முதல்வர் விஜ யலெட்சுமி, நெடுஞ்சா லைத்துறை உதவிக்கோட்ட பொறியாளர்கள் பானுதாசன், செந்தில்தம்பி மற்றும் பேரணியில் பங்கேற்றோர் கலந்து கொண்டனர்.

    சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு குறித்து கல்லுாரி மாணவ மாணவிகளுக்கு காணெளி காட்சி மூலம் திருச்சி சாலை பாதுகாப்பு அலகு கோட்டப் பொறியாளர் புவனேஸ்வரி அறிவுரை வழங்கினார்.

    • முன்னாள் முதல்வர் கருணாநிதி கொண்டு வந்த அரசாணை 354-ஐ மதிப்பாய்வு செய்ய விரைவாக நடவடிக்கை எடுக்க வலியுறுத்தப்பட்டது.
    • அங்கி அணிவகுப்பு பேரணியில் ஆயிரக்கணக்கான மருத்துவர்கள் பங்கேற்க உள்ளனர்.

    சென்னை:

    தமிழ்நாடு அரசு டாக்டர்கள் சங்கம், ஜனநாயக தமிழ்நாடு அரசு டாக்டர்கள், அரசு மருத்துவர்கள் மற்றும் பட்ட மேற்படிப்பு மருத்துவர்கள் சங்கங்கள் ஒருங்கிணைந்து அரசு மருத்துவர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு தொடங்கப்பட்டுள்ளது. இந்த கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர் கே.செந்தில், பி. பாலகிருஷ்ணன், ஏ.ராமலிங்கம், சி.சுரேந்திரன் உள்ளிட்டோர் சென்னையில் நேற்று நிருபர்களிடம் கூறியதாவது:- மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் தலைமையில் கடந்த செப்டம்பர் 15-ந் தேதி உயர்நிலைக் கூட்டம் கூட்டப்பட்டது. அதில் அனைத்து அரசு மருத்துவர்கள் சங்கங்களும் ஒருங்கிணைந்து கையொப்பமிட்டு, அரசு மருத்துவர்களின் ஊதிய உயர்வுக்காக முன்னாள் முதல்வர் கருணாநிதி கொண்டு வந்த அரசாணை 354-ஐ மதிப்பாய்வு செய்ய விரைவாக நடவடிக்கை எடுக்க வலியுறுத்தப்பட்டது.

    இந்த கூட்டத்துக்கு பின்னர் ஏறத்தாழ 2 மாதங்கள் கடந்துவிட்ட போதிலும், அந்த அரசாணையை மதிப்பாய்வு செய்வதில் எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை.

    அதேநேரத்தில், தற்போதைய அரசு ஊதிய உயர்வுக்காக கொண்டு வந்த அரசாணை 293-ல் சங்கங்கள் கோரிய மாற்றங்களும் மேற்கொள்ளப் படவில்லை. அரசு மருத்துவர்கள் ஒருங்கிணைந்த கோரிக்கைகளை அரசுக்கு அளித்து தங்கள் ஒற்றுமையை வெளிப்படுத்திய பிறகும், அதன் பேரில் எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளப்படவில்லை.

    எனவே, எங்களது கோரிக்கைகளை வலியுறுத்தி, வருகிற 16-ந் தேதி சென்னை ஓமந்தூரார் அரசு பல்நோக்கு மருத்துவமனை வளாகத்தில் அமைந்துள்ள கருணாநிதி சிலை முன்வெள்ளை அங்கி அணிவகுப்பு பேரணி நடத்துவது என அரசு மருத்துவர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

    அதில் ஆயிரக்கணக்கான மருத்துவர்கள் பங்கேற்க உள்ளனர் என்றனர்.

    • 100 நாள் வேலைக்கான ஊதியத்தை உடனடியாக வழங்கக்கோரி போராட்டம் நடந்தது.
    • பேரணியாக வந்து வங்கி முன்பு பாத்திரங்களை வைத்து ஆர்ப்பாட்டம் செய்தனர்.

    பூதலூர்:

    பூதலூர் வடக்கு ஒன்றிய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் சார்பில் பூதலூர் வடக்கு ஒன்றிய பகுதியில் பல வாரங்களாக வழங்கப்படாமல் இருக்கும் 100 நாள் வேலைக்கான ஊதியத்தை வழங்க கோரி திருக்காட்டுபள்ளியில் உள்ள தேசிய மயமாக்கப்பட்ட வங்கி கிளை முன்பு கஞ்சி காய்ச்சும் நூதன போராட்டத்தை நடத்தினர்.

    பூதலூர் வடக்கு ஒன்றிய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் செயலாளர் ரமேஷ் தலைமை தாங்கினார்.

    மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் திருக்காட்டுபள்ளி காவிரி ஆற்றின் கரையில் இருந்து நிதி வழங்காத மத்திய அரசை கண்டித்து கோஷங்களை முழக்கியபடி பேரணி யாக வந்து வங்கி முன்பு பாத்திரங்களை வைத்து ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

    இதில் கட்சியின்மாவட்ட செயற் குழு உறுப்பினர் பக்கிரிசாமி மாவட்ட குழு உறுப்பினர்கள் காந்தி, கலைச்செல்வி, மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

    தகவல் அறிந்த திருக்காட்டுபள்ளி போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜெயக்குமார், பூதலூர் தாசில்தார் மரியஜோசப், வருவாய் ஆய்வாளர் சிவசங்கர், கிராம நிர்வாக அலுவலர் பூமிநாதன் ஆகியோர் நுதன ஆர்ப்பாட்டம் நடத்தியவர்களிடம் பேச்சு வார்த்தை நடத்தினார்கள்.

    பூதலூர் தாசில்தார் மரியஜோசப் அளித்த உறுதியை ஏற்று ஆர்ப்பாட்டம் நடத்தியவர்கள் ஆர்ப்பாட்டத்தை கைவிட்டனர்.

    இதனால் வங்கி முன் பரபரப்பாக காணப்பட்டது.

    • நீலகிரி மாவட்ட தலைவர் தலைமையில் ஆலோசனை கூட்டமும் நடந்தது
    • பொதுமக்களிடம் துண்டு பிரசாரங்கள் வழங்கப்பட்டது

    ஊட்டி,

    தேசிய நுகர்வோர் மற்றும் உரிமை இயக்கம் மற்றும் தேசிய லஞ்ச ஊழல் கண்காணிப்பு குழு சார்பில் லஞ்சம் ஊழல் விழிப்புணர்வு ஆலோசனைக் கூட்டம், நீலகிரி மாவட்ட தலைவர் ஜாம்பவான் ஜெரால்ட் தலைமையில் நடந்தது.

    பின்னர் ஊட்டியில் வசிக்கும் பொதுமக்களிடம் லஞ்சம்-ஊழல் குறித்த விழிப்புணர்வு துண்டு பிரசாரங்கள் வினியோகிக்கப்பட்டன.

    தொடர்ந்து பொதுமக்கள் மற்றும் நிர்வாகிகள் பங்கேற்ற பேரணி நடத்தப்பட்டது. இதில் மாவட்ட செயலாளர் ஜான்சிராணி, மாநில ஆலோசகர் நிக்கோலஸ் ஏசுராஜ், லஞ்ச ஒழிப்புக்குழு தலைவர் அசோக், மகளிரணி தலைவர் ஜெனிதாசிங், செயலாளர் கவிதா உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • அரியலூரில் வாக்காளர்கள் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது
    • கலெக்டர் ஆனிமேரி ஸ்வர்ணா கொடியசைத்து தொடங்கி வைத்தார்

    அரியலூர், 

    அரியலூரில் வாக்காளர் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. பேரணியை மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் கலெக்டர் ஆனிமேரி ஸ்வர்ணா கொடியசைத்து தொடங்கி வைத்தார். இப்பேரணி கலெக்டர் அலுவலக வளாகத்தில் தொடங்கி , அரசினர் தொழிற்பயிற்சி மையம், அரியலூர் நகராட்சி அலுவலகம் வழியாக சென்று அரியலூர் பேருந்து நிலையம் அருகில் நிறைவடைந்தது. மேலும் பேரணியில் கலந்து கொண்ட சுமார் 100 மாணவர்கள் வாக்களிப்பதன் அவசியம் குறித்த வாசகங்கள் அடங்கிய விழிப்புணர்வு பதாகைகளை ஏந்தியும், முழக்கமிட்டு சென்றனர். 

    • நாமக்கல்லில் அரசு மருத்துவமனை சார்பில் மார்பக புற்றுநோய் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.
    • இப்பேரணி மோகனூர் சாலை, பி.எஸ்.என்.எல். அலுவலகம், டாக்டர் சங்கரன் சாலை, திருச்சி சாலை வழியாக சென்று மீண்டும் மருத்துவமனையை வந்தடைந்தது.

    நாமக்கல்:

    நாமக்கல்லில் அரசு மருத்துவமனை சார்பில் மார்பக புற்றுநோய் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. நாமக்கல் அரசு மருத்துவமனை முன்பு முதல்வர் சாந்தாஅருள்மொழி கொடி அசைத்து பேரணியை தொடங்கி வைத்தார்.

    இப்பேரணி மோகனூர் சாலை, பி.எஸ்.என்.எல். அலுவலகம், டாக்டர் சங்கரன் சாலை, திருச்சி சாலை வழியாக சென்று மீண்டும் மருத்துவமனையை வந்தடைந்தது.

    இதில் மருத்துவ கல்லூரி பயிற்சி மருத்துவர்கள், பயிற்சி செவிலியர்கள் பங்கேற்று மார்பக புற்றுநோயை தடுக்க முறையாக மருத்துவர் ஆலோசனை பெற்று பரிசோதனை மேற்கொள்ள வலியுறுத்தி விழிப்புணர்வு பதாகைகளை கையில் ஏந்தி சென்றனர்.

    • குடிநீர் வடிகால் வாரியம் சார்பில் நடந்தது
    • மாணவ-மாணவிகள் பதாகைகளுடன் பங்கேற்பு

    ஊட்டி,

    நீலகிரியில், தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத்தின் சார்பில், நீர் சேகரிப்பு குறித்து பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் செய்தி மக்கள் தொடர்புத்துறையின் அதிநவீன மின்னணு பிரச்சார வாகனம் மற்றும் பள்ளி மாணவ, மாணவிகள் பங்கேற்ற விழிப்புணர்வு பேரணி நடந்தது. இதனை கலெக்டர் அருணா கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

    தொடர்ந்து பொது மக்கள், பள்ளி மாணவ, மாணவிகளுக்கு விழிப்பு ணர்வு துண்டு பிரசுரங்க ளையும் வழங்கி னார். கலெக்டர் அலுவலகத்தில் தொடங்கிய பேரணி, சேரிங்கிராஸ், கமர்சியல் சாலை வழியாக ஊட்டி அரசு மேல்நிலைப்பள்ளியில் சென்று நிறைவடைந்தது. இதில் ஊட்டி அரசு மேல்நிலைப்பள்ளியை சேர்ந்த 85 மாணவ, மாணவிகள், அரசுத்துறை அலுவலர்கள், பொதுமக்கள் உள்பட 100 பேர் பங்கேற்று விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய பதாகைகளை கையில் ஏந்தியபடி சென்றனர்.

    முன்னதாக, தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் சார்பில், மழைநீர் சேகரிப்பு குறித்து பொதுமக்களி டையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், செய்தி மக்கள் தொடர்புத்து றையின் அதிநவீன மின்னணு வீடியோ வாகனத்தில் திரையிடப்பட்ட மழைநீர் சேகரிப்பு தொடர்பான குறும்ப டங்களை பள்ளி மாணவ, மாணவிகளுடன் கலெக்டர் பார்வையிட்டார்.

    அதனை தொடர்ந்து, விழிப்புணர்வு வாக னத்தினை கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

    இந்த வாகனத்தின் மூலம் ஊட்டி, குன்னூர், கோத்தகிரி உள்ளிட்ட பகுதிகளில் பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் குறும்படங்கள் மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தும் பணி மேற்கொள்ளப்படும்.

    இதில், கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு சவுந்திரராஜன், ஊட்டி வருவாய் கோட்டாட்சியர் மகராஜ், தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய உதவி செயற்பொறியாளர் சுதாகர், உதவி பொறியாளர் சங்கீதா, துணை நிலநீர் வல்லுநர் குருமூர்த்தி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய பதாகையை கையில் ஏந்தியபடி ஊர்வலமாக சென்றனர்.
    • பொதுமக்களுக்கு துண்டு பிரசுரங்களை வழங்கப்பட்டது.

    நாகப்பட்டினம்:

    நாகப்பட்டினம் மாவட்டம் வேளாங்கண்ணி சிறப்பு நிலை பேரூராட்சி மற்றும் லயன்ஸ் கிளப், ரோட்டரி சங்கம், இன்னர்வீல் உள்ளிட்ட அமைப்புகள் இணைந்து வேளாங்கண்ணியில் புற்றுநோய் குறித்த விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.

    பேரணியை வேளாங்கண்ணி பேரூராட்சி தலைவர் டயானா சர்மிளா தொடங்கி வைத்தார். வேளாங்கண்ணி புனித ஆரோக்கிய மாதா மேல்நிலைப் பள்ளியில் இருந்து தொடங்கிய பேரணி பேருந்து நிலையம், பேராலயம், கடற்கரை சாலை, ஆரியநாட்டு தெரு,

    உத்திரமாதா கோவில் தெரு, செபஸ்தியார் நகர் வழியாக பள்ளியில் நிறைவடைந்தது இந்த பேரணியில் புற்றுநோய் குறித்த விழிப்புணர்வை பொதுமக்களுக்கு ஏற்படுத்தும் வகையில் அவற்றின் பாதிப்புகள், எவ்வாறு தடுப்பது, சுகாதாரத்தை பேணிக்காப்பது, உணவு பழக்க வழக்கங்கள் போன்ற விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய பதாகையை கையில் ஏந்தி ஊர்வலமாக சென்றனர்.

    மேலும் செல்லும் வழியில் பொதுமக்களுக்கு துண்டு பிரசுரங்களை பொதுமக்களுக்கு வழங்கினர். இந்த பேரணியில் பள்ளி மாணவ மாணவிகள், பேரூராட்சி தூய்மை பணியாளர்கள் மற்றும் தன்னார்வ அமைப்புகளை சேர்ந்தவர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

    ×