search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    குன்னூரில் வாக்காளர்களுக்கு விழிப்புணர்வு பேரணி
    X

    குன்னூரில் வாக்காளர்களுக்கு விழிப்புணர்வு பேரணி

    • புகைப்பட அட்டையை பெற விண்ணப்பம் பெற வாக்காளர் உதவி மைய செயலி அறிமுகம்
    • குன்னூர் தாசில்தார் கனிசுந்தரம் மற்றும் நகரமன்ற உறுப்பினர்ராஜ்குமார் உள்ளிட்டோர் பங்கேற்பு

    அருவங்காடு,

    பாராளுமன்ற தேர்தலை ஒட்டி நாடு முழுவதும் வாக்காளர்களுக்கு விழிப்புணர்வை தேர்தல் அதிகாரிகள் ஏற்படுத்தி வருகின்றனர் இதன் ஒருபகுதியாக குன்னூர் பஸ் நிலையத்தில் விழிப்புணர்வு பேரணி நடத்தப்பட்டது.

    இதனை ஆர்.டி.ஓ பூரணகுமார் தலைமை தாங்கிகொடித்து வைத்தார். அப்போது பஸ் பயணிகள் மற்றும் பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் துண்டு பிரசுரங்கள் வழங்கப்பட்டன. தொடர்ந்து இருசக்கர வாகன பேரணியும் நடந்தது.

    மேலும் புதிய வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க, ஆண்டுதோறும் வாக்காளர் புகைப்பட அட்டையை பெறுவதற்கான விண்ணப்பம் பெறுவதற்கும் வாக்காளர் உதவி மைய செயலி அறிமுகப்படுத்தப்பட்டு உள்ளது.

    விழிப்புணர்வு பேரணியில் பங்கேற்றவர்கள் மாற்றுத்திறனாளிகள் புதிய கைப்பேசி செயலியை அறிமுகப்படுத்தப்பட்டு உள்ளதாகவும், இதனை அனைவரும் பதிவிறக்கம் செய்து. பயன்படுத்திக் கொள்ள வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டது.

    நிகழ்ச்சியில் குன்னூர் தாசில்தார் கனிசுந்தரம், தேர்தல் அலுவலர் கோபி, மற்றும் நகரமன்ற உறுப்பினர் ராஜ்குமார் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

    Next Story
    ×