search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பேரணி"

    ஜெயங்கொண்டம் அருகே வாக்காளர் விழிப்புணர்வு பேரணி

    ஜெயங்கொண்டம், 

    அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே கங்கை கொண்ட சோழபுரம் கிராமத்தில் பிரகதீஸ்வரர் கோவில் முன்பு வாக்காளர் விழிப்புணர்வு பேரணி நடைப்பெற்றது.

    இதில் உடையார்பாளையம் வருவாய் கோட்டாட்சியர் பரிமளம் கொடி அசைத்து தொடங்கி வைத்தார். உடன் ஜெயங்கொண்டம். தாசில்தார் கலியலூர் ரகுமான், தேர்தல் துணை தாசில்தார், கிராம நிர்வாக அலுவலர் காமராஜ், கிராம உதவியாளர் தனசேகர் மற்றும் குண்டவெளி பகுதி கிராம நிர்வாக அலுவலர்கள், கிராம உதவியாளர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

    இதில் ஜெயங்கொண்டம் நேஷனல் தொழில் பயிற்று நிறுவனம் மாணவர்கள், அரசு மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் திரளாக பேரணியில் கலந்துக் கொண்டு வாக்காளர் சுருக்க முறை திருத்தம்- ஜெயங்கொண்டம் சட்டமன்ற தொகுதி உட்பட்ட அனைத்து வாக்குச்சாவடிகளிலும் இன்று மற்றும் நாள தேர்தல் சிறப்பு முகாம் நடைபெற உள்ளது.

    இது குறித்தும் அதில் பெயர் சேர்த்தல், நீக்கல், திருத்தம் செய்தல், புதிய வாக்காளர் அடையாளத்தை பெறுதல் ,தொகுதி மாற்றம் செய்தல், ஆதார் அட்டை இணைத்தல் குறித்து பேரணியில் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு செய்தனர். வாக்காளர் விழிப்புணர்வு பேரணி கங்கைகொண்டசோழபுரம் பிரகதீஸ்வரர் கோவில் முன்பு ஆரம்பித்து அரசு மேல் நிலைப்பள்ளி வளாகம் சென்று பொதுமக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் நடைபெற்றது. இதில் அரசு அலுவலர்கள் பொதுமக்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

    • தருமபுரியில் இளைஞரணி இருசக்கர வாகன பேரணிக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
    • அனைவருக்கும் நெல்லிக்கனி அளித்தனர்.

    தருமபுரி கிழக்கு மாவட்டத்திற்கு வந்த தி.மு.க இளைஞரணி இருசக்கர வாகன பேரணிக்கு தி.மு.க கிழக்கு மாவட்ட செயலாளர் தடங்கம் சுப்ரமணி தலைமையில் மேள தாளங்களுடன் மாலைகள் அணிவித்து உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. தி.மு.க இளைஞர் அணி மாநில உரிமை மீட்பு இரண்டாவது மாநாடு சேலத்தில் டிசம்பர் 17 ந்தேதி நடைபெற உள்ளது. இம்மாநாட்டில் திரளான இளைஞர்கள் பங்கேற்க வேண்டும் என வலியுறுத்தியும், நீட் விலக்கு - நம் இலக்கு என்ற முழக்கத்தோடு சேலத்தில் நடைபெறும் தி.மு.க இளைஞரணி மாநாட்டையொட்டி நவம்பர் 15 ந்தேதி முதல் கன்னியாகுமரியில் இருசக்கர வாகனப் பேரணியை இளைஞரணி செயலாளரும் விளையாட்டுதுறை அமைச்சருமான உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.

    இந்த இரண்டு சக்கர வாகனப் பேரணி தமிழகத்தில் 234 சட்டப்பேரவை தொகுதிகளுக்கு பயணம் செய்து, தி.மு.க அரசின் சாதனைகள் குறித்தும், நீட் பாதிப்பை குறித்தும் பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறது. அதன் தொடர்ச்சியாக இன்று இருசக்கர வாகன பேரணியானது தருமபுரி கிழக்கு மாவட்ட பகுதிக்கு வந்தடைந்தது. தருமபுரி நகர எல்லைக்கு இருசக்கர வாகனத்தில் வந்த இளைஞரணி நிர்வாகிகளுக்கு தி.மு.க சார்பில் கிழக்கு மாவட்ட செயலாளர் தடங்கம் சுப்ரமணி தலைமையில் மேளதாளங்களுடன் மாலைகள் அணிவித்து தமிழுக்காக சேவையாற்ற நீண்ட நாள் வாழ மன்னன் அதியமான் அவ்வை பிராட்டிக்கு நெல்லிக்கனியை அளித்தந்ததை நினைவு கூறும் வகையில் அனைவருக்கும் நெல்லிக்கனி அளித்து உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. அதனை தொடர்ந்து மாவட்ட செயலாளர் இரு சக்கர பேரணியில் இருசக்கர வாகனத்தை ஓட்டி தருமபுரி பேருந்து நிலையம், கடைவீதி தருமபுரி சேலம் தேசிய நெடுஞ்சாலை வழியாக நல்லம்பள்ளி சென்று அடைந்த பேரணிக்கு நல்லம்பள்ளி கிழக்கு ஒன்றிய செயலாளர் சண்முகம் மேற்கு ஒன்றிய செயலாளர் வைகுந்தம், தி.மு.க, கிழக்கு மாவட்ட மகளிரணி அமைப்பாளர் முத்து லெட்சுமி ஆகியோர் உற்சாக வரவேற்பு அளித்தனர். பின்னர் அங்கிருந்து புறப்பட்ட வாகன பேரணி ஒகேனக்கல் சென்றடைந்தது. பேரணி செல்லும் வழியெல்லாம் பொது மக்கள் கல்லூரி மாணவர்கள் சிறப்பான வரவேற்பு அளித்தனர். இந்த பேரணியில் நகர மன்ற தலைவர் லட்சுமி மாது, தலைமை செயற்குழு உறுப்பினர்கள் சேகர், ரேணுகா தேவி, இளைஞரணி அமைப்பாளர் வெங்கடேஷ்வரன் துணை அமைப்பாளர்கள், ஒன்றிய, நகர, பேரூர் கழக செயலாளர்கள் உள்ளிட்ட ஏராளமான இளஞரணியினரும் பேரணியில் கலந்து கொண்டனர்.

    62-ம் தேசிய மருந்தியல் வார விழாவையொட்டி டெங்கு விழிப்புணர்வு பேரணி நடந்தது

    பெரம்பலூர் 

    பெரம்பலூர் தந்தை ரோவர் மருந்தியல் கல்லூரி சார்பில் 62-ம் தேசிய மருந்தியல் வார விழாவையொட்டி டெங்கு விழிப்புணர்வு பேரணி நடந்தது.பெரம்பலூர் பாலக்கரை கலெக்டர் அலுவலக நுழைவு வாயில் முன்பு துவங்கிய பேரணிக்கு ரோவர் கல்வி நிறுவனங்களின் மேலாண் தலைவர் வரதராஜன் தலைமை வகித்தார். மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் மணிவண்ணன், கல்லூரி முதல்வர் நெப்போலியன், துணை முதல்வர் மாரியம்மாள் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    சிறப்பு விருந்தினராக கலெக்டர் கற்பகம் கலந்து கொண்டு கொடியசைத்து பேரணி தொடங்கி வைத்தார். பாலக்கரையில் ஆரம்பித்து, சங்குபேட்டை, கடைவீதி, பழைய பஸ்ஸ்டாண்ட், காமராஜ் ஆர்ச் வரை சென்று ரோவர் மருந்தியல் கல்லூரியில் முடிவடைந்தது. பேரணியில் மாணவ,மாணவிகள் டெங்கு காய்ச்சல் வருவதை தடுக்க மேற்கொள்ளவேண்டிய வழிமுறைகள் குறித்த விழிப்புணர்வு வாசங்கள் அடங்கிய பாதாகைகளை ஏந்தி சென்று கோஷமிட்டு பொதுமக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தினர். பேரணியில் தாசில்தார் சரவணன் மற்றும் ரோவர் மருந்தியல் கல்லூரி பேராசிரியர்கள், மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர்.

    • வீர வாஞ்சி திடலில் தென்காசி மாவட்ட ஆர்.எஸ்.எஸ். பேரணி மற்றும் பொதுக்கூட்டம் நடந்தது.
    • நிகழ்ச்சியில் ஆர்.எஸ்.எஸ்.,இந்து முன்னணி, பா.ஜ.க நிர்வாகிகள், தொண்டா்கள் பலா் கலந்து கொண்டனா்.

    செங்கோட்டை:

    செங்கோட்டை வடக்கு ரதவீதி அப்பா மாடசாமி கோவில் முன்பு வீர வாஞ்சி திடலில் தென்காசி மாவட்ட ஆர்.எஸ்.எஸ். சார்பில் 98-ம் ஆண்டு நிறைவு தினத்தை முன்னிட்டு பேரணி மற்றும் பொதுக்கூட்டம் நடந்தது. ஐந்தருவி சுவாமி விவேகானந்தா ஆசிரமம் அகிலானந்த மகராஜ் பேரணியை தொடங்கி வைத்து பேசினார்.

    பேரணியானது வடக்கு ரதவீதி, கீழ ரதவீதி, கே.சி. ரோடு, வண்டிமலைச்சி அம்மன் கோவில், சேர்வைகாரன் புதுத்தெரு, ஜவஹர்லால் ரோடு வழியாக வந்து அப்பாமாடசாமி கோவில் அருகில் நிறைவடைந்தது.

    பின்னா் நடந்த பொதுக்கூட்டத்திற்கு தென்காசி மாவட்ட தலைவா் குருமூர்த்தி தலைமை தாங்கினார். கன்னியாகுமரி கோட்ட செயலாளா் ஜேதீந்திரன் சிறப்புரையாற்றினார். மாவட்ட பொறுப்பாளர் முருகேசன் நன்றி கூறினார்.

    நிகழ்ச்சியில் ஆர்.எஸ்.எஸ்.,இந்து முன்னணி, பா.ஜ.க நிர்வாகிகள், தொண்டா்கள் பலா் கலந்து கொண்டனா். பேரணியில் சுமார் 700-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனா்.

    • அடுத்த மாதம் 17 ம் தேதி சேலத்தில் தி.மு.க. இளைஞர் அணி மாநில மாநாடு நடைபெற உள்ளது.
    • வானவேடிக்கை, கிராமிய இசையுடன் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

    தஞ்சாவூர்:

    அடுத்த மாதம் 17 ம் தேதி சேலத்தில் தி.மு.க. இளைஞர் அணி மாநில மாநாடு நடைபெற உள்ளது.

    இந்த மாநாட்டில் பங்கேற்க அழைப்பு விடுக்கும் வகையில், கன்னியாகுமரியில் இருந்து இளைஞர் அணி சார்பில் இருசக்கர வாகன பேரணி தொடங்கப்பட்டது.

    இந்த வாகன பேரணி பல்வேறு மாவட்டங்கள் வழியாக சென்று நேற்று தஞ்சாவூர் மாவட்டம் கல்லணையை வந்தடைந்தது.

    பின்னர் அங்கிருந்து திருவையாறு, கும்பகோணம், பாபநாசம், வழியாக இரவு தஞ்சை புன்னை நல்லூர் மாரியம்மன் கோவில் பகுதிக்கு வந்தடைந்தது.

    தொடர்ந்து தொம்பன் குடிசை பகுதிக்கு வருகை தந்த இருசக்கர வாகன பேரணியை தஞ்சை மத்திய மாவட்ட தி.மு.க செயலாளர் துரை. சந்திரசேகரன் எம்.எல்.ஏ., எஸ். எஸ்.பழநிமாணிக்கம் எம்.பி, டி.கே.ஜி.நீலமேகம் எம்.எல்.ஏ., மாநகராட்சி மேயர் சண்.இராமநாதன், துணை மேயர் அஞ்சுகம் பூபதி உள்ளிட்ட நிர்வாகிகள், தொண்டர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.

    இந்நிகழ்ச்சியில் வான வேடிக்கை, கிராமிய இசையுடன் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

    அதனை தொடர்ந்து புதிய பஸ் நிலையம் சென்ற இரு சக்கர வாகன பேரணிக்கு தி.மு.க.வினர் மலர் தூவி உற்சாக வரவேற்பளித்தனர்.

    பின்னர் தஞ்சை பெரிய கோவிலில் இருந்து வாகன பேரணி புறப்பட்டது.

    இந்நிகழ்ச்சியில் முன்னாள் எம்.எல்.ஏ. மகேஷ் கிருஷ்ணசாமி, மாவட்ட பொருளாளர் எல்.ஜி. அண்ணா , ஒன்றிய செயலாளர் முரசொலி, மாவட்ட துணை செயலாளர் கனகவல்லி பாலாஜி, மண்டலக்குழு தலைவர் மேத்தா, பகுதி செயலாளர்கள் கார்த்திகேயன், சதாசிவம், நீலகண்டன், கோட்டை பகுதி சுரேஷ், வார்டு கவுன்சிலர்கள், நிர்வாகிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • ஜெயங்கொண்டத்தில் ஆர்.எஸ்.எஸ். அணிவகுப்பு பேரணி, பொதுக்கூட்டம் நடைபெற்றது
    • பா.ஜ.க., ஆர்.எஸ்.எஸ். நிர்வாகிகள் உள்ளிட்ட ஏராளமானனோர் கலந்து கொண்டனர்

    ஜெயங்கொண்டம்,

    அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் வேலைநகர் மகா மாரியம்மன் கோவிலில் இருந்து ஆர்.எஸ்.எஸ். மாவட்ட தலைவர் ஞான கார்த்திகேயன் தலைமையில் ஆர்.எஸ்.எஸ். பேரணி நடந்தது.

    இதில் 200-க்கும் மேற்பட்ட ஆர்.எஸ்.எஸ். அமைப்பினர் மற்றும் நிர்வாகிகள் பேரணியாக பஸ் நிலையம் வழியாக சென்று சன்னதி தெரு வழியாக அண்ணா சாலையில் அமைக்கப்பட்டுள்ள பொதுக் கூட்டத்தில் கலந்து கொண்டனர். சுமார் ஒரு மணி நேரம் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் மாநில நிர்வாகி ராஜேந்திரன். இந்துக்களின் பெருமைகளைப் பற்றி பேசினார். பொ துக்கூட்டத்திற்கு ஆர்.எஸ்.எஸ். நிர்வாகி விஜயகுமார் முன்னிலை வகித்தார். மேலும் ஆர்.எஸ்.எஸ். உறுப்பினர்கள் தங்களுடைய பயிற்சிகளை செய்தனர். ஆர்.எஸ்.எஸ். மாநில நிர்வாகிகள் பேசினர்.

    இதில் பா.ஜ.க. நிர்வாகிகள் ,உறுப்பினர்கள், ஆர்.எஸ்.எஸ். நிர்வாகிகள் உள்ளிட்ட ஏராளமானனோர் கலந்து கொண்டனர்.

    • மாவட்ட செயலாளர் பா.மு. முபாரக் கொடியசைத்து தொடங்கி வைத்தார்
    • குன்னூரில் முக்கிய வீதிகள் வழியாகச் சென்று ஊட்டியை அடைந்தது

    அருவங்காடு,

    சேலத்தில் டிசம்பர் 17-ந் தேதி தி.மு.க. இளைஞர் அணி மாநாடு நடக்கிறது. இந்த மாநாடு தொடர்பான இருசக்கர வாகன பிரசார பேரணி நடந்து வருகிறது. கன்னியாகுமரியில் இந்த பேரணியை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.

    இந்த பேரணி நேற்று குன்னூர் வந்தது. குன்னூரில் இருந்து ஊட்டி வரை நடந்த பேரணியை மாவட்ட செயலாளர் பா.மு. முபாரக் கொடியசைத்து தொடங்கி வைத்தார். மாவட்ட இளைஞர் அணி செயலாளர் பத்மநாபன் தலைமை தாங்கினார். நகர செயலாளர் ராமசாமி முன்னிலை வகித்தார். பேரணி குன்னூரில் முக்கிய வீதிகள் வழியாகச் சென்று ஊட்டியை அடைந்தது.

    நிகழ்ச்சியில் மாநில பொறியாளர் அணி செயலளார் பரமேஸ்குமார், மாநில விளையாட்டு அணி துணை செயலாளர வாசிம் ராஜா, நகராட்சி உறுப்பினர்கள் ஜாகிர், சையது மன்சூர், கட்சி நிர்வாகிகள் பிரவீன், செலின் மற்றும் நிர்வாகிகள பலர் கலந்து கொண்டனர்.

    • கரூர் மாவட்டத்தில், வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்கம், திருத்தம் முகாம் 2 நாட்கள் நடைபெறுகிறது.
    • இதற்கான விழிப்புணர்வு பேரணி யானது தோகைமலையில் நடைபெற்றது.

    குளித்தலை

    கரூர் மாவட்டத்தில், வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்கம், திருத்தம் முகாம் 2 நாட்கள் நடைபெறுகிறது. இதற்கான விழிப்புணர்வு பேரணி யானது தோகைமலையில் நடைபெற்றது.

    தோகைமலை ஆய்வாளர் அலுவலகத்தில் இருந்து புறப்பட்ட இந்த பேரணியானது, தோகைமலை பேருந்து நிலையம் வழியாக முக்கிய வீதிகளில் நடைபெற்றது. இந்த பேரணியில் கலந்து கொண்ட நூற்றுக்கும் மாணவர்கள், வாக்காளர் பட்டியில் திருத்த முகாம் குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், பதாகைகளை கையில் ஏந்தியும், முழக்கங்கள் எழுப்பியும் கலந்து கொண்டனர்.

    பேரணிக்கு சமூக பாதுகாப்பு தனி தாசில்தார் வெங்கடேசன் தலைமை தாங்கினார். பேரணியில் தேர்தல் துணை தாசில்தார் நீதிராஜன், வருவாய் ஆய்வாளர் மாதேஸ்வரி, மற்றும் கிராம நிர்வாக அலுவலர்கள் மணி, தீபக் மற்றும் மற்றும் கிராம நிர்வாக அலுவலர்கள், கிராம நிர்வாக அலுவலரின உதவியாளர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    சேலத்தில் அடுத்த மாதம் 17-ந்தேதி நடைபெறும் தி.மு.க. இளைஞர் அணி மாநாட்டு விளக்க மோட்டார்சைக்கிள் பேரணி ஆலங்குடி வந்தது

    ஆலங்குடி, 

    தி.மு.க. இளைஞர் அணியின் 2-வது மாநில மாநாடு சேலத்தில் டிசம்பர் 17-ம் தேதி நடைபெறுகிறது. இதை முன்னிட்டு இளைஞரணி நிர்வாகிகள் மோட்டார் சைக்கிள் பேரணியாக தமிழகம் ம்ழுவதும் சென்று கட்சியினர், தொண்டர்களை சந்தித்து வருகிறார்கள்.

    பேரணியை கன்னியாகுமரி முக்கடல் சங்கமத்தில் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி தொடங்கி வைத்தார். 188 மோட்டார் சைக்கிள்களில் பேரணி தொடங்கப்பட்டது. 234 தொகுதிகளிலும் 15 நாட்களில் 8647 கிலோ மீட்டர் பயணம் செய்கின்றனர். இவர்களுக்கு 504 இடத்தில் வரவேற்பு வழங்கப்படுகிறது. நவம்பர் 27-ம் தேதி சேலம் சென்றடைகிறது.

    அதன் ஒரு பகுதியாக ஆலங்குடி தொகுதியில் சுப்பிரமணியபுரம், கீரமங்கலம், கொத்தமங்கலம் வழியாக ஆலங்குடிக்கு வருகைதந்த இளைஞரணியின் இருசக்கர வாகன பேரணியை தமிழ்நாடு சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத் துறை அமைச்சர் சிவ.வீ. மெய்யநாதன் தலைமையில் தி.மு.க.வினர் திரளாக வரவேற்றனர்.

    நிகழ்ச்சியில் திருவரங்குளம் மேற்கு ஒன்றிய செயலாளர் தங்கமணி, தெற்கு ஒன்றிய செயலாளர் அருவடிவேல், கிழக்கு ஒன்றிய செயலாளர் ரவி, ஆலங்குடி பேரூராட்சி தலைவர் ராசி முருகானந்தம், ஆலங்குடி நகர செயலாளர் பழனிக்குமார், துணைச் செயலாளர் செங்கோல், கவுன்சிலர்கள் சஷ்டிமுருகன், சையது இப்ராகிம், கிருஷ்ணமூர்த்தி, கருணாநிதி மற்றும் மாவட்ட ஒன்றிய நகர கிளை கழக நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

    சென்னையில் 28-ந் தேதி அரசு ஊழியர்கள்,ஆசிரியர்கள் கோட்ைட நோக்கி பேரணி

    கந்தர்வ கோட்டை, 

    புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வ கோட்டையில் வட்டார அளவிலான ஜாக்டோ ஜியோ ஆலோசனைக் குழு கூட்டம் நடைபெற்றது.

    ஜாக்டோ ஜியோவின் ஒன்றிய ஒருங்கிணைப்பா ளர்கள், தமிழ்நாடு ஆரம்ப பள்ளி ஆசிரியர் கூட்ட ணியின் வட்டாரச் செயலா ளர் சண்முகம், தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்ற சங்கத்தின் புதுக்கோட்டை மாவட்ட அமைப்பு செயலா ளர் முத்துக்குமார், தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றத்தின் பொருளாளர் வெங்கடேஷ், தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் பொறுப்பாளர் தெட்சண மூர்த்தி ஆகியோர் தலைமை வகித்தனர்.

    தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் வட்டாரத் தலைவர் சேகர் அனைவரையும் வரவேற் றார். கந்தரவக்கோட்டை ஒன்றிய தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்ற சங்கத்தின் ஒன்றிய தலைவர் ரவி, செய்தித் தொடர்பாளர் ரகமதுல்லா, மகளிர் அணி செயலாளர் கலைமணி ஆகியோர் முன்னிலை வகித்தார்.

    ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும். காலவரையின்றி முடக்கி வைக்கப்பட்டுள்ள சரண் விடுப்பு ஒப்படைப்பு, உயர்கல்விக்கான ஊக்க ஊதிய உயர்வு வழங்க வேண்டும் என உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி

    வருகிற 24-ந் தேதி வரை அரசு ஊழியர்கள், அரசு பணியாளர்கள் சந்திப்பு போராட்ட பிரச்சார இயக்கமும், 25-ந் தேதி மாவட்ட தலைநகரங்க ளில் மறியல் போராட்டமும், டிசம்பர் 28-ந் தேதி சென்னை யில் லட்சக்கணக் கான அரசு ஊழியர், ஆசிரி யர்கள் பங்கேற்கும் கோட்டை முற்றுகை போரா ட்டமும், கோரிக்கைகளை நிறைவேற்ற முதலமைச்ச ரின் கவனத்தை ஈர்க்கும் வகையில் நடைபெறுகிறது. கந்தர்வகோட்டை ஒன்றி யத்தின் சார்பில் அனைத்து ஆசிரியர்களும், அரசு ஊழியர்களும் கலந்து கொள்ள வேண்டும் என தீர்மானம் நிறைவேற்றப் பட்டது.

    • மாநகராட்சி மேயர் சுந்தரி ராஜா ஆகியோர் முன்னிலையிலும் கொடி அசைத்து தொடங்கி வைக்கப்பட்டது.
    • முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது

    கடலூர்:

    கடலூர் மாநகராட்சி சார்பில் டெங்கு காய்ச்சல் தடுப்பு விழிப்புணர்வு பேரணி கடலூர் டவுன்ஹால் எதிரில் நடைபெற்றது. இதற்கு கலெக்டர் அருண் தம்புராஜ் தலைமையிலும் அய்யப்பன் எம்.எல்.ஏ., மாநகராட்சி மேயர் சுந்தரி ராஜா ஆகியோர் முன்னிலையிலும் கொடி அசைத்து தொடங்கி வைக்கப்பட்டது. இந்தப் பேரணியில் டெங்கு காய்ச்சல் பரவாமல் தடுப்பதற்கு முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. இதில் மாநகர ஆணையாளர் காந்திராஜ், மாநகர நல அலுவலர் எழில் மதனா, மண்டல குழு தலைவர் சங்கீதா, மாநகராட்சி கவுன்சிலர்கள் அருள் பாபு, சுபாஷ்ணி ராஜா, டாக்டர் காரல் மற்றும் பலர் உடன் இருந்தனர்.

    • இருசக்கர வாகனத்தில் தீயணைப்பு துறை வீரர்கள் மற்றும் காவலர்கள் விழிப்புணர்வு பேரணி நடத்தினர்.
    • துண்டு பிரசுரங்கள் வழங்கியும் ஒலிபெருக்கி மூலம் விபத்தில்லா தீபாவளியை கொண்டாடுவதற்கான அறிவுரை வழங்கியும் விழிப்புணர்வை ஏற்படுத்தினர்

    முசிறி

    முசிறி தீயணைப்புத்துறை மற்றும் காவல் துறை இணைந்து விபத்தில்லா தீபாவளி கொண்டாட வேண்டும் என்பதனை வலியுறுத்தி இருசக்கர வாகனத்தில் தீயணைப்பு துறை வீரர்கள் மற்றும் காவலர்கள் விழிப்புணர்வு பேரணி நடத்தினர். பேரணியை கரூர் மாவட்ட தீயணைப்பு மீட்பு பணித்துறை அலுவலர் வடிவேல் கொடியசைத்து துவக்கி வைத்தார்.

    நிலைய அலுவலர் கர்ணன், காவல் உதவி ஆய்வாளர் ஆசை தம்பி, தீயணைப்பு நிலைய போக்கு வரத்தாளர் அந்தோணி ஆகியோர் முன்னிலை வகித்தனர். இப்பேரணி முசிறி நகரின் முக்கிய வீதி வழியாக சென்று தீயணைப்பு துறை நிலை யத்தில் நிறைவடைந்தது.

    பேரணியில் காவல் ஆய்வாளர் கதிரேசன் மற்றும் காவலர்கள், தீயணைப்பு துறை வீரர்கள் கலந்து கொண்டு, பொதுமக்களிடையே பட்டாசுகளை பாதுகாப்பாக வெடிப்பது குறித்து, துண்டு பிரசுரங்கள் வழங்கியும் ஒலிபெருக்கி மூலம் விபத்தில்லா தீபாவளியை கொண்டாடுவதற்கான அறிவுரை வழங்கியும் விழிப்புணர்வை ஏற்படுத்தினர்.

    ×