search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    குன்னூரில் இருந்து ஊட்டி வரை தி.மு.க. இளைஞர் அணி சார்பில் இருசக்கர வாகன பேரணி
    X

    குன்னூரில் இருந்து ஊட்டி வரை தி.மு.க. இளைஞர் அணி சார்பில் இருசக்கர வாகன பேரணி

    • மாவட்ட செயலாளர் பா.மு. முபாரக் கொடியசைத்து தொடங்கி வைத்தார்
    • குன்னூரில் முக்கிய வீதிகள் வழியாகச் சென்று ஊட்டியை அடைந்தது

    அருவங்காடு,

    சேலத்தில் டிசம்பர் 17-ந் தேதி தி.மு.க. இளைஞர் அணி மாநாடு நடக்கிறது. இந்த மாநாடு தொடர்பான இருசக்கர வாகன பிரசார பேரணி நடந்து வருகிறது. கன்னியாகுமரியில் இந்த பேரணியை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.

    இந்த பேரணி நேற்று குன்னூர் வந்தது. குன்னூரில் இருந்து ஊட்டி வரை நடந்த பேரணியை மாவட்ட செயலாளர் பா.மு. முபாரக் கொடியசைத்து தொடங்கி வைத்தார். மாவட்ட இளைஞர் அணி செயலாளர் பத்மநாபன் தலைமை தாங்கினார். நகர செயலாளர் ராமசாமி முன்னிலை வகித்தார். பேரணி குன்னூரில் முக்கிய வீதிகள் வழியாகச் சென்று ஊட்டியை அடைந்தது.

    நிகழ்ச்சியில் மாநில பொறியாளர் அணி செயலளார் பரமேஸ்குமார், மாநில விளையாட்டு அணி துணை செயலாளர வாசிம் ராஜா, நகராட்சி உறுப்பினர்கள் ஜாகிர், சையது மன்சூர், கட்சி நிர்வாகிகள் பிரவீன், செலின் மற்றும் நிர்வாகிகள பலர் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×