என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
தி.மு.க. இளைஞரணி இருசக்கர வாகன பேரணிக்கு உற்சாக வரவேற்பு
- தருமபுரியில் இளைஞரணி இருசக்கர வாகன பேரணிக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
- அனைவருக்கும் நெல்லிக்கனி அளித்தனர்.
தருமபுரி கிழக்கு மாவட்டத்திற்கு வந்த தி.மு.க இளைஞரணி இருசக்கர வாகன பேரணிக்கு தி.மு.க கிழக்கு மாவட்ட செயலாளர் தடங்கம் சுப்ரமணி தலைமையில் மேள தாளங்களுடன் மாலைகள் அணிவித்து உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. தி.மு.க இளைஞர் அணி மாநில உரிமை மீட்பு இரண்டாவது மாநாடு சேலத்தில் டிசம்பர் 17 ந்தேதி நடைபெற உள்ளது. இம்மாநாட்டில் திரளான இளைஞர்கள் பங்கேற்க வேண்டும் என வலியுறுத்தியும், நீட் விலக்கு - நம் இலக்கு என்ற முழக்கத்தோடு சேலத்தில் நடைபெறும் தி.மு.க இளைஞரணி மாநாட்டையொட்டி நவம்பர் 15 ந்தேதி முதல் கன்னியாகுமரியில் இருசக்கர வாகனப் பேரணியை இளைஞரணி செயலாளரும் விளையாட்டுதுறை அமைச்சருமான உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.
இந்த இரண்டு சக்கர வாகனப் பேரணி தமிழகத்தில் 234 சட்டப்பேரவை தொகுதிகளுக்கு பயணம் செய்து, தி.மு.க அரசின் சாதனைகள் குறித்தும், நீட் பாதிப்பை குறித்தும் பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறது. அதன் தொடர்ச்சியாக இன்று இருசக்கர வாகன பேரணியானது தருமபுரி கிழக்கு மாவட்ட பகுதிக்கு வந்தடைந்தது. தருமபுரி நகர எல்லைக்கு இருசக்கர வாகனத்தில் வந்த இளைஞரணி நிர்வாகிகளுக்கு தி.மு.க சார்பில் கிழக்கு மாவட்ட செயலாளர் தடங்கம் சுப்ரமணி தலைமையில் மேளதாளங்களுடன் மாலைகள் அணிவித்து தமிழுக்காக சேவையாற்ற நீண்ட நாள் வாழ மன்னன் அதியமான் அவ்வை பிராட்டிக்கு நெல்லிக்கனியை அளித்தந்ததை நினைவு கூறும் வகையில் அனைவருக்கும் நெல்லிக்கனி அளித்து உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. அதனை தொடர்ந்து மாவட்ட செயலாளர் இரு சக்கர பேரணியில் இருசக்கர வாகனத்தை ஓட்டி தருமபுரி பேருந்து நிலையம், கடைவீதி தருமபுரி சேலம் தேசிய நெடுஞ்சாலை வழியாக நல்லம்பள்ளி சென்று அடைந்த பேரணிக்கு நல்லம்பள்ளி கிழக்கு ஒன்றிய செயலாளர் சண்முகம் மேற்கு ஒன்றிய செயலாளர் வைகுந்தம், தி.மு.க, கிழக்கு மாவட்ட மகளிரணி அமைப்பாளர் முத்து லெட்சுமி ஆகியோர் உற்சாக வரவேற்பு அளித்தனர். பின்னர் அங்கிருந்து புறப்பட்ட வாகன பேரணி ஒகேனக்கல் சென்றடைந்தது. பேரணி செல்லும் வழியெல்லாம் பொது மக்கள் கல்லூரி மாணவர்கள் சிறப்பான வரவேற்பு அளித்தனர். இந்த பேரணியில் நகர மன்ற தலைவர் லட்சுமி மாது, தலைமை செயற்குழு உறுப்பினர்கள் சேகர், ரேணுகா தேவி, இளைஞரணி அமைப்பாளர் வெங்கடேஷ்வரன் துணை அமைப்பாளர்கள், ஒன்றிய, நகர, பேரூர் கழக செயலாளர்கள் உள்ளிட்ட ஏராளமான இளஞரணியினரும் பேரணியில் கலந்து கொண்டனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்