search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    ஆர்.எஸ்.எஸ். அணிவகுப்பு பேரணி
    X

    ஆர்.எஸ்.எஸ். அணிவகுப்பு பேரணி

    • ஜெயங்கொண்டத்தில் ஆர்.எஸ்.எஸ். அணிவகுப்பு பேரணி, பொதுக்கூட்டம் நடைபெற்றது
    • பா.ஜ.க., ஆர்.எஸ்.எஸ். நிர்வாகிகள் உள்ளிட்ட ஏராளமானனோர் கலந்து கொண்டனர்

    ஜெயங்கொண்டம்,

    அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் வேலைநகர் மகா மாரியம்மன் கோவிலில் இருந்து ஆர்.எஸ்.எஸ். மாவட்ட தலைவர் ஞான கார்த்திகேயன் தலைமையில் ஆர்.எஸ்.எஸ். பேரணி நடந்தது.

    இதில் 200-க்கும் மேற்பட்ட ஆர்.எஸ்.எஸ். அமைப்பினர் மற்றும் நிர்வாகிகள் பேரணியாக பஸ் நிலையம் வழியாக சென்று சன்னதி தெரு வழியாக அண்ணா சாலையில் அமைக்கப்பட்டுள்ள பொதுக் கூட்டத்தில் கலந்து கொண்டனர். சுமார் ஒரு மணி நேரம் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் மாநில நிர்வாகி ராஜேந்திரன். இந்துக்களின் பெருமைகளைப் பற்றி பேசினார். பொ துக்கூட்டத்திற்கு ஆர்.எஸ்.எஸ். நிர்வாகி விஜயகுமார் முன்னிலை வகித்தார். மேலும் ஆர்.எஸ்.எஸ். உறுப்பினர்கள் தங்களுடைய பயிற்சிகளை செய்தனர். ஆர்.எஸ்.எஸ். மாநில நிர்வாகிகள் பேசினர்.

    இதில் பா.ஜ.க. நிர்வாகிகள் ,உறுப்பினர்கள், ஆர்.எஸ்.எஸ். நிர்வாகிகள் உள்ளிட்ட ஏராளமானனோர் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×