என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
விபத்தில்லா தீபாவளி விழிப்புணர்வு பேரணி
- இருசக்கர வாகனத்தில் தீயணைப்பு துறை வீரர்கள் மற்றும் காவலர்கள் விழிப்புணர்வு பேரணி நடத்தினர்.
- துண்டு பிரசுரங்கள் வழங்கியும் ஒலிபெருக்கி மூலம் விபத்தில்லா தீபாவளியை கொண்டாடுவதற்கான அறிவுரை வழங்கியும் விழிப்புணர்வை ஏற்படுத்தினர்
முசிறி
முசிறி தீயணைப்புத்துறை மற்றும் காவல் துறை இணைந்து விபத்தில்லா தீபாவளி கொண்டாட வேண்டும் என்பதனை வலியுறுத்தி இருசக்கர வாகனத்தில் தீயணைப்பு துறை வீரர்கள் மற்றும் காவலர்கள் விழிப்புணர்வு பேரணி நடத்தினர். பேரணியை கரூர் மாவட்ட தீயணைப்பு மீட்பு பணித்துறை அலுவலர் வடிவேல் கொடியசைத்து துவக்கி வைத்தார்.
நிலைய அலுவலர் கர்ணன், காவல் உதவி ஆய்வாளர் ஆசை தம்பி, தீயணைப்பு நிலைய போக்கு வரத்தாளர் அந்தோணி ஆகியோர் முன்னிலை வகித்தனர். இப்பேரணி முசிறி நகரின் முக்கிய வீதி வழியாக சென்று தீயணைப்பு துறை நிலை யத்தில் நிறைவடைந்தது.
பேரணியில் காவல் ஆய்வாளர் கதிரேசன் மற்றும் காவலர்கள், தீயணைப்பு துறை வீரர்கள் கலந்து கொண்டு, பொதுமக்களிடையே பட்டாசுகளை பாதுகாப்பாக வெடிப்பது குறித்து, துண்டு பிரசுரங்கள் வழங்கியும் ஒலிபெருக்கி மூலம் விபத்தில்லா தீபாவளியை கொண்டாடுவதற்கான அறிவுரை வழங்கியும் விழிப்புணர்வை ஏற்படுத்தினர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்