search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    மார்பக புற்றுநோய் விழிப்புணர்வு பேரணி
    X

    மார்பக புற்றுநோய் விழிப்புணர்வு பேரணி

    • நாமக்கல்லில் அரசு மருத்துவமனை சார்பில் மார்பக புற்றுநோய் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.
    • இப்பேரணி மோகனூர் சாலை, பி.எஸ்.என்.எல். அலுவலகம், டாக்டர் சங்கரன் சாலை, திருச்சி சாலை வழியாக சென்று மீண்டும் மருத்துவமனையை வந்தடைந்தது.

    நாமக்கல்:

    நாமக்கல்லில் அரசு மருத்துவமனை சார்பில் மார்பக புற்றுநோய் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. நாமக்கல் அரசு மருத்துவமனை முன்பு முதல்வர் சாந்தாஅருள்மொழி கொடி அசைத்து பேரணியை தொடங்கி வைத்தார்.

    இப்பேரணி மோகனூர் சாலை, பி.எஸ்.என்.எல். அலுவலகம், டாக்டர் சங்கரன் சாலை, திருச்சி சாலை வழியாக சென்று மீண்டும் மருத்துவமனையை வந்தடைந்தது.

    இதில் மருத்துவ கல்லூரி பயிற்சி மருத்துவர்கள், பயிற்சி செவிலியர்கள் பங்கேற்று மார்பக புற்றுநோயை தடுக்க முறையாக மருத்துவர் ஆலோசனை பெற்று பரிசோதனை மேற்கொள்ள வலியுறுத்தி விழிப்புணர்வு பதாகைகளை கையில் ஏந்தி சென்றனர்.

    Next Story
    ×