என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி
- பட்டுக்கோட்டை வருவாய் கோட்டாட்சியர் அக்பர் அலி பேரணியை கொடியசைத்து தொடங்கி வைத்தார்,
- பதாகைகள் மூலம் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
பட்டுக்கோட்டை:
கலைஞர் நுாற்றாண்டு விழாவை முன்னிட்டு சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு பேரணி நெடுஞ்சாலைத்துறை தஞ்சாவூர் கட்டுமானம் மற்றும் பராமரிப்பு சார்பாக பட்டுக்கோட்டையில் நடைபெற்றது.
பட்டுக்கோட்டை வருவாய் கோட்டாட்சியர் அக்பர் அலி கொடியசைத்து பேரணியை துவக்கி வைத்தார், இப்பேரணியில் தஞ்சாவூர் நெடுஞ்சாலைத்துறை கட்டுமானம் மற்றும் பராமரிப்பு கோட்டப் பொறியாளர் செந்தில்குமார், பட்டுக்கோ ட்டை நெடுஞ்சாலைத்துறை உதவிக்கோட்டப் பொறியாளர் விஜயக்குமார், திருச்சி சாலை பாதுகாப்பு அலகு கோட்டப் பொறியாளர் புவனேஸ்வரி, பட்டுக்கோட்டை நெடுஞ்சாலைத்துறை உதவிப் பொறியாளர் செல்வராஜ், பட்டுக்கோட்டை நகர் செந்தில்குமார், பட்டுக்கோ ட்டை மோட்டார் மன்ற வாகன தலைவர் சண்முகபிரியா ஆய்வாளர் சரவணன், நெடுஞ்சாலைத்துறை அலுவலர்கள், பணியாளர்கள் மற்றும் பட்டுக்கோட்டை பாலிடெக்னிக் கல்லுாரி, ஏனாதி ராஜப்பா கலை மற்றும் அறிவியல் கல்லுாரி மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர்.
சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு குறித்த வாசகங்கள் மற்றும் பதாகைகள் மூலம் பொது மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
அதனைத் தொடர்ந்து சாலை பாதுகாப்பு விழிப்பு ணர்வு நிகழ்ச்சியானது பட்டுக்கோட்டை ஏனாதி ராஜப்பா கலை மற்றும் அறிவியல் கல்லுாரியில் தஞ்சாவூர் நெடுஞ்சாலைத்துறை கட்டுமானம் மற்றும் பராமரிப்பு கோட்டப் பொறியாளர் செந்தில்குமார் தலைமையில் நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில் சிறப்பு விருந்துநர்களாக இக்கல்லுாரியின் செயலர். கணேசன், முதல்வர் விஜ யலெட்சுமி, நெடுஞ்சா லைத்துறை உதவிக்கோட்ட பொறியாளர்கள் பானுதாசன், செந்தில்தம்பி மற்றும் பேரணியில் பங்கேற்றோர் கலந்து கொண்டனர்.
சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு குறித்து கல்லுாரி மாணவ மாணவிகளுக்கு காணெளி காட்சி மூலம் திருச்சி சாலை பாதுகாப்பு அலகு கோட்டப் பொறியாளர் புவனேஸ்வரி அறிவுரை வழங்கினார்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்