என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "பெண் கைது"
- பிரபல தனியார் நிறுவனத்தில் பணமுதலீடு செய்து வந்தார்.
- இந்துமதி நூதன முறையில் பணமோசடியில் ஈடுபட்டு இருப்பது தெரியவந்தது.
கொளத்தூர்:
சென்னை, பெரவள்ளூர், எஸ். ஆர். பி காலனி 8-வது தெருவை சேர்ந்தவர் ஜெரி மெசாக். தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார்.
இவர் பிரபல தனியார் நிறுவனத்தில் பணமுதலீடு செய்து வந்தார். இவருக்கு அதே நிறுவனத்தில் வேலை செய்து வந்த அனகாபுத்தூரைச் சேர்ந்த இந்துமதி (31) என்பவர் பணமுதலீடு சம்பந்தமாக உதவி செய்து வந்ததாக தெரிகிறது.
இதற்கிடையே வேலையை விட்டு நின்ற இந்துமதி தொடர்ந்து வீட்டில் இருந்தபடி பணமுதலீடு சம்பந்தமாக ஆலோசனை வழங்கி உதவி செய்து வருவதாக ஜெர்ரி மெசாக்கிடம் கூறினார். மேலும் அவரிடம் சிறுக சிறுக முதலீடு செய்ய பணத்தையும் வாங்கினார். ஜெர்ரி மெசாக் தனது மனைவி மற்றும் மகளின் பெயரில் ரூ.72 லட்சத்து 50 ஆயிரம் செலுத்தி இருந்தார். இதற்கான ரசீது மற்றும் மெயில் சம்பந்தமான பதிவுகளை சம்பந்தப்பட்ட நிறுவனத்தில் இருந்து அனுப்புவதாக இந்துமதி அனுப்பி வைத்து உள்ளார்.
இதற்கிடையே ஜெர்ரி மெசாக் தனது முதலீடு பணத்தை சரி பார்த்தபோது அதில் ரூ.44 லட்சம் தனது கணக்கில் இல்லை என்பது தெரிந்தது. இந்துமதி நூதன முறையில் பணமோசடியில் ஈடுபட்டு இருப்பது தெரியவந்தது.
இதுகுறித்து ஜெர்ரி மெசாக், பெரவள்ளுர் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து இந்துமதியை கைது செய்தனர்.
- சொத்துக்களை அபகரிக்க முயன்ற சாந்தி, சந்திரசேகர் உள்பட 11 பேரை போலீசார் தேடி வந்தனர்.
- முதல் குற்றவாளியான சாந்தியை போலீசார் கைது செய்ய மற்ற 10 பேர்களை தேடி வருகின்றனர்.
கொடைக்கானல்:
கொடைக்கானல் கான்வென்ட் ரோடு பகுதியில் உள்ள நிலத்தை நாகர்கோவிலைச் சேர்ந்த லெட்சுமணன் என்பவரிடம் இருந்து கடந்த 1968-ம் ஆண்டில் விருதுநகரைச் சேர்ந்த சந்திரசேகர் என்பவரும், கேரள மாநிலம் திருவனந்தபுரத்தைச் சேர்ந்த சங்கர் என்பவரும் இணைந்து வாங்கினர்.
இதில் தனது பகுதியான 97 செண்ட் நிலத்தை கொடைக்கானலைச் சேர்ந்த விஸ்வா உருமின் என்பவருக்கு சங்கர் விற்பனை செய்துள்ளார். இந்த விற்பனை தொடர்பாக பத்திரம் பதிந்து தருவதில் விஸ்வா உருமின், சங்கர் மற்றும் சந்திரசேகர் ஆகியோருக்கு இடையே கோர்ட்டில் வழக்கு நடந்து வந்தது.
இதனிடையே கடந்த 2012-ம் ஆண்டு சங்கர் இறந்து விட்டார். கொடைக்கானல் நாயுடுபுரம் பகுதியைச் சேர்ந்த சங்கர் என்பவரின் மகள் சாந்தி. இவரது கணவர் பெயர் சந்திரசேகர். இந்த பெயர் ஒற்றுமையை பயன்படுத்தி போலியான ஆவணம் தயார் செய்த சாந்தி இந்த சொத்துக்களை அபகரிக்க முயன்றார்.
இதற்காக போலியான ஆவணத்தை தயார் செய்து சங்கர் தனது மகள் சாந்தி, மருமகன் சந்திரசேகர் உள்ளிட்டவர்களுக்கு தானஷெட்டில்மென்ட் எழுதி கொடுத்தார். இந்த போலி ஆவணம் தயார் செய்து ரூ.பல கோடி மதிப்பிலான நிலத்தை அபகரிக்க உடந்தையாக இருந்த சாந்தியின் கணவர் சந்திரசேகர், இவர்களின் மகன் சித்தார்த், கிருஷ்ணசாமி, கொடைக்கானலைச் சேர்ந்த கணேசன், போலி ஆவணம் தயாரிக்க உதவிய ஆவண எழுத்தர்கள் மருதுபாண்டி, கில்பர்ட், பத்திரபதிவு செய்த முன்னாள் சார் பதிவாளர் முருகேசன், இந்த ஆவணத்தை தயாரிக்க உதவிய வக்கீல்கள் சுதாகர், முகமது மைதீன், ராகவேந்திரன் ஆகியோர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என சங்கரின் மனைவி ஜெயந்தியின் பவர் ஏஜெண்டான கோபி கொடைக்கானல் கோர்ட்டில் வழக்கு தாக்கல் செய்தார். இந்த வழக்கு விசாரணையில் இருந்து வந்த நிலையில் போலி ஆவணம் தயாரித்து பல கோடி ரூபாய் சொத்துக்களை அபகரிக்க முயன்ற சாந்தி, சந்திரசேகர் உள்பட 11 பேரை போலீசார் தேடி வந்தனர். இந்நிலையில் முதல் குற்றவாளியான சாந்தியை போலீசார் கைது செய்ய மற்ற 10 பேர்களை தேடி வருகின்றனர்.
- கவனித்த பயணிகள் சிலர், அதுகுறித்து அந்த ரெயிலின் டிக்கெட் பரிசோதகரிடம் தெரிவித்தனர்.
- குழந்தையை காண்பித்து பிச்சையெடுத்த அந்த பெண்ணிடம் விசாரணை நடத்தினர்.
திருவனந்தபுரம்:
கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் இருந்து சென்னை எக்ஸ்பிரஸ் ரெயில் புறப்பட்டு சென்றது. அப்போது அந்த ரெயிலில் இளம்பெண் ஒருவர், கைக்குழந்தையை காண்பித்து பிச்சையெடுத்தார். அந்த குழந்தைக்கு உடலில் தீக்காயங்கள் இருந்தது. அந்த காயத்தில் கையை வைத்து அழுத்தி குழந்தையை அழச்செய்து அந்த பெண் பிச்சையெடுத்துள்ளார். இதனை கவனித்த பயணிகள் சிலர், அதுகுறித்து அந்த ரெயிலின் டிக்கெட் பரிசோதகரிடம் தெரிவித்தனர்.
மேலும் அந்த ரெயில் எர்ணாகுளம் ரெயில் நிலையத்துக்கு வந்தபோது, அதுபற்றி போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. இதையடுத்து குழந்தையை காண்பித்து பிச்சையெடுத்த அந்த பெண்ணிடம் விசாரணை நடத்தினர். மேலும் அந்த பெண்ணை கைது செய்தனர். அவர் வைத்திருந்த குழந்தை எர்ணாகுளம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டது.
கைது செய்யப்பட்ட பெண்ணுக்கும், மீட்கப்பட்ட குழந்தைக்கும் உள்ள உறவு தொடர்பாக ஆவணத்தை சமர்ப்பிக்குமாறு அந்த பெண்ணுக்கு உத்தரவிட்டு இருப்பதாகவும், அதன் அடிப்படடையில் மேல் நடவடிக்கை எடுக்கப்பட உள்ளதாகவும் போலீசார் தெரிவித்துள்ளனர்.
- கோவில்களில் திருடிய நகைகளையும் மீட்டனர்.
- பல கோவில்களில் நகைகளை திருடியதாக கைதாகி சிறைக்கு சென்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.
கடையநல்லூர்:
தென்காசி மாவட்டம் கடையநல்லூர் மாவடிக்கால் பகுதியில் காளியம்மன் கோவில் உள்ளது. அதன் அருகில் கங்கை அம்மன் கோவில், முத்து விநாயகர் கோவில்கள் உள்ளன.
இந்த கோவில்களில் தினமும் காலை நேரத்தில் பக்தர்கள் சாமி தரிசனம் செய்வதற்காக வருவார்கள் என்பதால் கோவில் நடையை திறந்து வைப்பது வழக்கம். கடந்த 17-ந்தேதி கோவிலில் யாரும் இல்லாத நேரத்தில் ஒரு பெண் திடீரென கோவில் கருவறைக்குள் புகுந்து அம்மன் கழுத்தில் கிடந்த தங்க நகையை திருடி சென்றுள்ளார். மேலும், அதன் அருகில் உள்ள மேலும் 2 கோவில்களிலும் அம்மன் கழுத்தில் கிடந்த நகையை திருடிச்சென்றார்.
இதுகுறித்து ஊர் நாட்டாமை செல்வகுமார் கடையநல்லூர் போலீஸ் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் கடையநல்லூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து ரூ.60 ஆயிரம் மதிப்பிலான நகையை திருடிச்சென்ற பெண் குறித்து விசாரித்தனர்.
இதுதொடர்பாக கோவிலில் உள்ள சி.சி.டி.வி. கேமராக்களை ஆய்வு செய்து நடத்திய விசாரணையில், சங்கரன்கோவில் அருகே உள்ள சின்ன கோவிலாங்குளத்தை அடுத்த ராமசாமியாபுரத்தை சேர்ந்த அருள் செல்வன் மனைவி சண்முக சுந்தரி (வயது 35) என்பது தெரிய வந்தது. இதையடுத்து அவரை போலீசார் கைது செய்தனர்.
மேலும் கோவில்களில் திருடிய நகைகளையும் மீட்டனர். இவர் ஏற்கனவே பல கோவில்களில் நகைகளை திருடியதாக கைதாகி சிறைக்கு சென்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.
- நதியாவுக்கு பலத்த காயம் ஏற்பட்டது. உடனே அஸ்வினி அங்கிருந்து தப்பி சென்று விட்டார்.
- அக்கம்பக்கத்தினர் உயிருக்கு போராடிய நதியாவை மீட்டு செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.
மாமல்லபுரம்:
மாமல்லபுரம் பூஞ்சேரி நரிக்குறவர் பகுதியை சேர்ந்தவர் அஸ்வினி. இவர் மாமல்லபுரம் தலசயன பெருமாள் கோவிலில் அன்னதானம் மறுக்கப்பட்டதாக கூறி சமூக வலைதளங்களில் பிரபலமானவர்.
நேற்று மாலை கடற்கரை கோவில் நடைபாதையில் கடை வைப்பதில் இவருக்கும் திருக்கழுக்குன்றம் கொத்தி மங்கலம் பகுதியை சேர்ந்த நரிக்குறவர் பெண் நதியா (33) என்பவருக்கும் தகராறு ஏற்பட்டது.
இதில் ஆத்திரம் அடைந்த அஸ்வினி தனது கையில் வைத்து இருந்த கத்தியால் நதியாவின் தோள்பட்டை, வயிறு, கை உள்ளிட்ட பகுதியில் குத்தி கிழித்தார். இதில் நதியாவுக்கு பலத்த காயம் ஏற்பட்டது. உடனே அஸ்வினி அங்கிருந்து தப்பி சென்று விட்டார்.
அக்கம்பக்கத்தினர் உயிருக்கு போராடிய நதியாவை மீட்டு செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் பூஞ்சேரி பகுதியில் இருந்த அஸ்வினியை மாமல்லபுரம் போலீசார் கைது செய்தனர்.
அவர் மீது கொலை முயற்சி உள்ளிட்ட பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டு உள்ளது. கைதான அஸ்வினி மீது ஏற்கனவே பல்வேறு குற்றச்சாட்டுகள் உள்ளது குறிப்பிடத்தக்கது.
- போலீசார் விசாரணையும் ரகசிய கண்காணிப்பும் மேற்கொண்டனர் .
- மறைவான பகுதியில் சாராயம் விற்றவரை சுற்றி வளைத்து கைது செய்தனர்.
கடலூர்:
குள்ளஞ்சாவடி போலீஸ் சரகத்தில் கள்ளச்சாராயம் விற்பதாக போலீசுக்கு தகவல் கிடைத்தது. இதனை அடுத்து போலீசார் விசாரணையும் ரகசிய கண்காணிப்பும் மேற்கொண்டனர் . அதில் சுப்ரமணியபுரம் பகுதியில் கள்ளச்சாராயம் விற்பது தெரிய வந்தது. அங்கு சென்ற போலீசார்மறைவான பகுதியில் சாராயம் விற்ற நடுத்தெருவை செர்ந்த சின்ராஜ் மனைவி சத்தியவாணி மற்றும் அதே பகுதியைச் சேர்ந்த ஆறுமுகம் ஆகியோரை சுற்றி வளைத்து கைது செய்தனர். பின்னர் அவர்களிடம் இருந்த 40 லிட்டர் கள்ளச்சாராயத்தை பறிமுதல் செய்தனர்.
- மயிலாடுதுறையில் பதுங்கி இருந்த அவர்கள் 2 பேரையும் தனிப்டை போலீசார் கைது செய்தனர்.
- கடந்த 15-ந் தேதி கிண்டியில் மாநகர பஸ்சில் பயணம் செய்த பெண் ஒருவரிடம் 3½பவுன் நகையை பறித்ததையும் ஒப்புக்கொண்டனர்.
போரூர்:
சென்னை கே.கே.நகர் பகுதியை சேர்ந்தவர் விஜயகுமார். தொழிலாளி. இவர் கடந்த 16-ந் தேதி மாலை மகளின் திருமணத்திற்கு நகை வாங்குவதற்காக மனைவியுடன் ரூ.2½லட்சம் ரொக்கத்துடன் மாநகர பஸ்சில் (12ஜி) தி.நகருக்கு சென்றார்.
பஸ்சில் இருந்து இறங்கிய இருவரும் பிரபல கடையில் நகை வாங்கிவிட்டு பணத்தை செலுத்த பையை பார்த்தபோது ரூ.2½ லட்சம் மாயமாகி இருந்தது.
மாநகர பஸ்சில் கூட்ட நெரிசலை பயன்படுத்தி மர்ம நபர்கள் பணத்தை கொள்ளையடித்து சென்று இருப்பது தெரிந்தது. இதுகுறித்து மாம்பலம் போலீஸ் நிலையத்தில் புகார் செய்யப்பட்டது.
உதவி கமிஷனர் பாரதிராஜா, சப் - இன்ஸ்பெக்டர் மகாதேவன் தலைமையிலான தனிப்படை போலீசார் கண்காணிப்பு கேமிரா காட்சிகளை ஆய்வு செய்தபோது சந்தேகத்திற்கிடமான 2 பெண்கள் விஜயகுமார் பயணம் செய்த பஸ்சில் பயணம் செய்தது தெரிந்தது.
விசாரணையில் அவர்கள் பரமக்குடியை சேர்ந்த உறவினர்களான கவிதா மற்றும் ரேகா என்பது தெரிந்தது. மயிலாடுதுறையில் பதுங்கி இருந்த அவர்கள் 2 பேரையும் தனிப்டை போலீசார் கைது செய்தனர்.
இருவரும் சேர்ந்து தமிழகம் முழுவதும் பல்வேறு இடங்களில் பஸ்சில் தனியாக பயணம் செய்பவர்களை குறி வைத்து பணம் மற்றும் நகைகளை திருடி வந்தது தெரியவந்தது.
அவர்கள் மீது ஏற்கனவே பல்வேறு போலீஸ் நிலையங்களில் நகை பறிப்பு, திருட்டு வழக்குகள் இருப்பதும் தெரியவந்தது. கடந்த 15-ந் தேதி கிண்டியில் மாநகர பஸ்சில் பயணம் செய்த பெண் ஒருவரிடம் 3½பவுன் நகையை பறித்ததையும் ஒப்புக்கொண்டனர்.
- திவ்யா உள்பட 2 பேரும் குண்டர் சட்டத்திலும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
- விசாரணை நடைபெற்று வருவதால் மேலும் பல அதிர்ச்ச தகவல்கள் வெளியாகும் என்பதால் தொடர்ந்து பரபரப்பு நிலவி வருகிறது.
சேலம்:
சேலம் மாநகரில் கடந்த சில மாதங்களாக விபசாரம் அதிக அளவில் கொடி கட்டி பறப்பதாக போலீஸ் உயர் அதிகாரிகளுக்கு பரபரப்பு புகார்கள் சென்றது .
இதையடுத்து சேலம் மாநகர போலீஸ் கமிஷனர் விஜயகுமாரி உத்தரவின் பேரில் போலீசார் மாநகரம் முழுவதும் அதிரடி சோதனை நடத்தினர்.
இதையடுத்து அழகாபுரம், செவ்வாய்ப்பேட்டை, சூரமங்கலம், தாதகாப்பட்டி உள்பட பல பகுதிகளில் விபசாரம் நடப்பதாக கூறப்பட்ட வீடுகளில் போலீசார் அதிரடி சோதனை நடத்தினர். இதில் பாலியல் தொழிலில் பெண்களை ஈடுபடுத்திய புரோக்கர்கள் 20 பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். சம்பந்தப்பட்ட பெண்கள் 20 பேர் மீட்கப்பட்டு காப்பகத்தில் ஒப்படைக்கப்பட்டனர்.
இதில் முக்கிய நபர்களான சேலம் மாவட்டம் பூலாவரி ஏர்வாடி பகுதியை சேர்ந்த தியாகராஜன் (31) மற்றும் சேலம் ஜாகீர் அம்மாபாளைம் பொன்நகர் பகுதியை சேர்ந்த திவ்யா (36 ) ஆகியோர் ஜாகீர் அம்மாபாளையம் மற்றும் காசக்காரனூர் பகுதிகளில் வீட்டை வாடகைக்கு எடுத்து அதில் பெண்களை வைத்து விபசாரத்தில் ஈடுபட்டது தெரிய வந்தது.
கடந்த 20-ந் தேதி திருவாக்கவுண்டனூர் அருகே சென்று கொண்டிருந்த சிலரிடம் நெடுஞ்சாலை நகரில் உள்ள ஒரு வீட்டில் பெண்கள் இருப்பதாகவும், தன்னுடன் வந்தால் உல்லாசமாக இருக்கலாம் என்று தியாகராஜன் அழைத்து உள்ளார்.
இது குறித்து சம்பந்தப்பட்ட நபர் கொடுத்த புகாரின் பேரில் விசாரணை செய்ததில் தியாகராஜன் மற்றும் திவ்யா உள்பட சிலர் சேர்ந்து அந்த பகுதியில் 2 பெண்களை விபச்சாரத்தில் ஈடுபடுத்தி இருப்பது தெரிய வந்தது. இதையடுத்து அவர்கள் கைது செய்யபபட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.
மேலும் விபசார தொழிலில் மூலகாரணமாக செயல்பட்ட தியாகராஜன் மற்றும் திவ்யா ஆகியோர் அப்பாவி பெண்களை வலுக்கட்டாயமாக விபச்சாரத்தில் ஈடுபடுத்தியதாக கூறி சிறையில் உள்ள 2 பேரையும் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்ய சேலம் மாநகர போலீஸ் கமிஷனர் உத்தரவிட்டார். இதையடுத்து சிறையில் உள்ள 2 பேரிடமும் அதற்கான உத்தரவு நேற்று வழங்கப்பட்டது.
இதற்கிடையே போலீசார் நடத்திய தொடர் விசாரணையில் பரபரப்பு தகவல்கள் வெளியானது அதன் விவரம் வருமாறு-
ஓமலூர் பகுதியை சேர்ந்த திவ்யா சுகாதாரத்துறையின் கீழ் அரசு ஆஸ்பத்திரிகளில் இயங்கும் எய்ட்ஸ் கட்டுப்பாட்டு பிரிவில் தற்காலிக ஆலோசாகராக பணி புரிந்து உள்ளார். சேலம் அரசு ஆஸ்பத்திரியில் வேலை பார்த்த அவர் பின்னர் ஓமலூருக்கு இடமாறுதலாகி சென்றார்.
அப்போது விபசாரத்தில் ஈடுபட்டு ஆஸ்பத்திரிக்கு கவுன்சிலிங்கிற்கு வரும் பெண்களுக்கு ஆலோசனைகளை வழங்கி வந்தார்.
மேலும் எய்ட்ஸ் பாதித்தவர்களுக்கு ரத்தத்தில் வெள்ளை அணுக்கள் மிகவும் குறைவாக இருக்கும் என்பதால் அதற்கு தேவையான மருந்து மாத்திரைகளை ரத்தத்தை பரிசோதனை செய்து கொடுக்கும் பணியில் ஈடுபட்டு வந்தார். மேலும் கர்ப்பிணி பெண்களுக்கும் எய்ட்ஸ் பரிசோதனை கட்டாயம் என்பதால் ஏராளமான கர்ப்பிணி பெண்களும் இந்த மையங்களுக்கு வந்து பரிசோதனை செய்து கொள்வது வழக்கம்.
அதன்படி கவுன்சிலிங்குக்கு வந்த ஏராளமான பெண்களின்அறிமுகம் அவருக்கு கிடைத்தது. அப்போது அவர்களிடம் இனிக்க இனிக்க பேசும் திவ்யா நான் சொல்வதை கேட்டால் நீங்கள் ஏழ்மையில் இருந்து மீண்டு பல லட்சம் சம்பாதிக்கலாம், வசதியாக கார், பங்களா என்று வாழலாம் என்று கூறி மயக்கி உள்ளார்.
இதனை நம்பிய பெண்களை தனது வலையில் வீழ்த்தி புரோக்கர்கள் மூலம் முக்கிய நபர்களுக்கு அனுப்பி உள்ளார். அதன்படி சேலம், நாமக்கல், தருமபுரி, ஈரோடு, திருப்பூர், கிருஷ்ணகிரி என பாலியல் தொழில் தொடர்பான கவுன்சிலிங்கிற்கு வந்த 200-க்கும் மேற்பட்ட பெண்களை 6 மாவட்டங்களில் உள்ள முக்கிய பிரமுகர்களுக்கு அனுப்பியது தெரிய வந்தது.
மேலும் வறுமையில் வாடிய கர்ப்பிணி பெண்களின் போட்டோக்களை தொழில் அதிபர்கள் மற்றும் அதிகாரிகள் உள்பட வசதி படைத்தவர்களுக்கு ஆன்லைனில் அனுப்பி தங்களது வலையில் வீழ்த்தி தொழிலை விரிவு படுத்தி உள்ளார். இதன் மூலம் திவ்யா மற்றும் அவரது கூட்டாளிகள் பல லட்சங்களை அள்ளியதும் இதன் மூலம் அவர் சொகுசு வாழ்க்கை வாழ்ந்ததும், பல இடங்களில் சொத்துகள் வாங்கி குவித்ததும் தெரிய வந்தது. இதற்கு அவரது கணவரான மாநகராட்சி ஊழியரும் உடந்தையாக இருந்ததாக கூறப்படுகிறது.
மேலும் ஒரே நாளில் பலருக்கு ஒரு பெண்ணை அனுப்பி அதிக அளவில் பணத்தை சம்பாதித்து விட்டு ஒரு சிறிய தொகையை மட்டும் பாலியல் தொழிலில் ஈடுபடும் பெண்களுக்கு வழங்கி வந்ததும் தெரிய வந்தது. தொடர் விசாரணை மூலம் இந்த சம்பவங்கள் அறிந்த போலீசாரே திகைத்து உள்ளனர். இதையடுத்து தான் அவர்களிடம் இருந்து பாலியல் தொழிலில் ஈடுபட்ட பெண்கள் மீட்கப்பட்டு காப்பகத்தில் ஒப்படைக்கப்பட்டதுடன் திவ்யா உள்பட 2 பேரும் குண்டர் சட்டத்திலும் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும் இந்த விவகாரத்தில் தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருவதால் மேலும் பல அதிர்ச்சி தகவல்கள் வெளியாகும் என்பதால் தொடர்ந்து பரபரப்பு நிலவி வருகிறது.
- மது பாட்டில்கள் கடத்தி வருவதாக கலால் துறை போலீசாருக்கு ரகசிய தகவல் வந்தது.
- உளுந்தூர்பேட்டை அருகே உள்ள கிராமங்களில் விற்பனை செய்ததும் தெரியவந்தது.
கள்ளக்குறிச்சி:
புதுவை மாநி லத்தில் இருந்து உளுந்தூர் பேட்டைக்கு மது பாட்டில்கள் கடத்தி வருவதாக கலால் துறை போலீசாருக்கு ரகசிய தகவல் வந்தது. இதையடுத்து உளுந்தூர்பேட்டை கலால் சப்-இன்ஸ்பெக்டர் அலெக்ஸ் தலைமையிலான போலீசார் உளுந்தூர் பேட்டை பஸ் நிலையத்தில் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது ஒரு பெண் சந்தேகத்திற்கு இடமான வகையில் கையில் ஒரு பையுடன் பஸ்சில் இருந்து இறங்கினார். அவரை போலீஸ் நிலையம் அழைத்து சென்று மகளிர் போலீசாரை வைத்து விசாரணை நடத்தி, அவரை சோதனையிட்டனர்.
இதில் அவர் எடுத்த வந்த பையில் புதுவை மாநிலத்தில் வாங்கப்பட்ட மதுபாட்டில்கள் இருந்தது. மேலும், பெண் அணிந்திருந்த ஆடைக்குள்ளும் மது பாட்டில்களை மறைத்து வைத்திருந்தார். விசார ணையில் உளுந்தூர் பேட்டை அருகேயுள்ள எறையூர் கிராமத்தை சேர்ந்த மச்சக்காளி என்கிற நம்பிக்கைமேரி (வயது 48), என்பதும், புதுவை மாநிலத்தில் இருந்து மதுபாட்டில்களை வாங்கி வந்து உளுந்தூர்பேட்டை அருகே உள்ள கிராமங்களில் விற்பனை செய்ததும் தெரியவந்தது. இதனைத் தொடர்ந்து அவரை கைது செய்த உளுந்தூர்பேட்டை கலால் போலீசார், அவரிடமிருந்து 120 குவாட்டர் மது பாட்டில்களை பறிமுதல் செய்தனர்.
- அம்மன் கோவில் ஆடி மாதம் முழுவதும் திரளான பெண்கள் சாமி தரிசனம் செய்து வருகின்றனர்.
- திருட்டை பார்த்த பொதுமக்கள் அந்த மர்ம பெண்ணை பிடித்து திருவள்ளூர் தாலுகா போலீசில் ஒப்படைத்தனர்.
திருவள்ளூர்:
ஆடி மாதம் பிறந்ததை முன்னிட்டு அம்மன் கோவில்களில் பெண்கள் சிறப்பு வழிபாடு செய்து வருகின்றனர். இந்நிலையில் திருவள்ளூவர் அடுத்த புட்லூர் ராமாபுரம் கிராமத்தில் உள்ள ஸ்ரீ பூங்காவனத்தம்மன் (எ) ஸ்ரீ அங்காலபரமேஸ்வரி அம்மன் கோவில் ஆடி மாதம் முழுவதும் திரளான பெண்கள் சாமி தரிசனம் செய்து வருகின்றனர்.
இதில் வேப்பம்பட்டு அடுத்த பெருமாள்பட்டு மகாலட்சுமி நகரைச் சேர்ந்த வள்ளியம்மாள் (42) சாமி தரிசனம் செய்ய புட்லூர் கோவிலுக்கு வந்தார்.
அப்போது கோவிலில் இருந்த கூட்ட நெரிசலை பயன்படுத்தி வள்ளியம்மாள் வைத்திருந்த மணி பர்சில் வைத்திருந்த செல்போன் மற்றும் ரூபாய் 600 பணம் கொள்ளையடித்துள்ளனர்.
இந்தத் திருட்டை பார்த்த பொதுமக்கள் அந்த மர்ம பெண்ணை பிடித்து திருவள்ளூர் தாலுகா போலீசில் ஒப்படைத்தனர். திருவள்ளூர் தாலுக்கா போலீஸ் விசாரணையில் அம்பத்தூர் அய்யத்தூர் ஏரிக்கரை பகுதியைச் சேர்ந்த தவிதா (45) என்பது தெரிய வந்தது. இதுகுறித்து வழக்கு பதிவு செய்து நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்.
- சந்தேகம் அடைந்த கீர்த்தனா எண்ணூர் போலீசில் புகார் செய்தார்.
- பக்கத்துவீட்டில் வசிக்கும் அழகுநிலையத்தில் வேலைபார்த்து வரும் ஜான்சிராணி என்பவர் நகை திருடியது தெரிந்தது.
எண்ணூர், சிவன் படை வீதி பகுதியைச் சேர்ந்தவர் கீர்த்தனா. ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியை. இவரது வீட்டில் இருந்த 7 பவுன் நகை மாயமாகி இருந்தது. ஆனால் பீரோ உடைக்கப்படவில்லை. இதனால் சந்தேகம் அடைந்த கீர்த்தனா எண்ணூர் போலீசில் புகார் செய்தார்.
இன்ஸ்பெக்டர் சுதாகர் அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமரா காட்சியை ஆய்வு செய்தபோது பக்கத்துவீட்டில் வசிக்கும் அழகுநிலையத்தில் வேலைபார்த்து வரும் ஜான்சிராணி (34) என்பவர் நகை திருடியது தெரிந்தது. அவர் அங்குள்ள சகோதரி ஒருவரை பார்க்க வருவதை போல் நடித்து பூட்டிய வீட்டின் அருகில் வைக்கப்பட்டு இருந்து சாவியை எடுத்து நகையை திருடி சென்று இருப்பது தெரிந்து.
இதேபோல் அருகில் உள்ள பால்ராஜ் என்பவரது வீட்டிலும் 28 பவுன் நகையை ஜான்சிராணி சுருட்டி உள்ளார். அங்கு கண்காணிப்பு கேமரா இல்லாததால் சிக்காமல் இருந்தார். அவரை போலீசார் கைது செய்து மேலும் விசாரணை நடத்தி வருகிறார்கள.
- தனது வீட்டின் அருகில் உள்ள தோட்டத்தில் சாராயம் விற்பனை செய்து வருவதாக மரக்காணம் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
- கையும்- களவுமாக பிடித்து இவர் வைத்திருந்த புதுவை சாராய பாக்கெட் பறிமுதல் செய்தனர் .
விழுப்புரம்:
விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் அருகே உள்ள ஆலத்தூர் கிராமத்தில் கிழக்கு மடத் தெருவில் வசித்து வருபவர் குமாரி (வயது 50). இவர் தனது வீட்டின் அருகில் உள்ள தோட்டத்தில் சாராயம் விற்பனை செய்து வருவதாக மரக்காணம் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில் இன்ஸ்பெக்டர் பாபு, சப்-இன்ஸ்பெக்டர் ஜான் ஜோசப் மற்றும் போலீசார் முத்து, பிரபு ஆகியோர் தலைமையிலான போலீசார் ஆலத்தூர் கிராமத்திற்கு சென்று ஆய்வு செய்தனர். அப்போது அங்கு சாராயம் விற்பனை செய்து கொண்டிருந்த குமாரியை கையும்- களவுமாக பிடித்து இவர் வைத்திருந்த புதுவை சாராய பாக்கெட் 5 எண்ணிக்கை கொண்டவை பறிமுதல் செய்தனர் வழக்கு பதிவு செய்து திண்டிவனம் நீதி மன்றத்துக்கு அனுப்பி வைத்து பின்பு சிறையில் அடைத்தனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்