search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    திருவள்ளூர் அருகே கோவில் கூட்ட நெரிசலில் திருடிய பெண் கைது
    X

    திருவள்ளூர் அருகே கோவில் கூட்ட நெரிசலில் திருடிய பெண் கைது

    • அம்மன் கோவில் ஆடி மாதம் முழுவதும் திரளான பெண்கள் சாமி தரிசனம் செய்து வருகின்றனர்.
    • திருட்டை பார்த்த பொதுமக்கள் அந்த மர்ம பெண்ணை பிடித்து திருவள்ளூர் தாலுகா போலீசில் ஒப்படைத்தனர்.

    திருவள்ளூர்:

    ஆடி மாதம் பிறந்ததை முன்னிட்டு அம்மன் கோவில்களில் பெண்கள் சிறப்பு வழிபாடு செய்து வருகின்றனர். இந்நிலையில் திருவள்ளூவர் அடுத்த புட்லூர் ராமாபுரம் கிராமத்தில் உள்ள ஸ்ரீ பூங்காவனத்தம்மன் (எ) ஸ்ரீ அங்காலபரமேஸ்வரி அம்மன் கோவில் ஆடி மாதம் முழுவதும் திரளான பெண்கள் சாமி தரிசனம் செய்து வருகின்றனர்.

    இதில் வேப்பம்பட்டு அடுத்த பெருமாள்பட்டு மகாலட்சுமி நகரைச் சேர்ந்த வள்ளியம்மாள் (42) சாமி தரிசனம் செய்ய புட்லூர் கோவிலுக்கு வந்தார்.

    அப்போது கோவிலில் இருந்த கூட்ட நெரிசலை பயன்படுத்தி வள்ளியம்மாள் வைத்திருந்த மணி பர்சில் வைத்திருந்த செல்போன் மற்றும் ரூபாய் 600 பணம் கொள்ளையடித்துள்ளனர்.

    இந்தத் திருட்டை பார்த்த பொதுமக்கள் அந்த மர்ம பெண்ணை பிடித்து திருவள்ளூர் தாலுகா போலீசில் ஒப்படைத்தனர். திருவள்ளூர் தாலுக்கா போலீஸ் விசாரணையில் அம்பத்தூர் அய்யத்தூர் ஏரிக்கரை பகுதியைச் சேர்ந்த தவிதா (45) என்பது தெரிய வந்தது. இதுகுறித்து வழக்கு பதிவு செய்து நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்.

    Next Story
    ×