search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    பெயர் ஒற்றுமையை பயன்படுத்தி போலி ஆவணம் மூலம் நிலம் மோசடி செய்த பெண் கைது
    X

    பெயர் ஒற்றுமையை பயன்படுத்தி போலி ஆவணம் மூலம் நிலம் மோசடி செய்த பெண் கைது

    • சொத்துக்களை அபகரிக்க முயன்ற சாந்தி, சந்திரசேகர் உள்பட 11 பேரை போலீசார் தேடி வந்தனர்.
    • முதல் குற்றவாளியான சாந்தியை போலீசார் கைது செய்ய மற்ற 10 பேர்களை தேடி வருகின்றனர்.

    கொடைக்கானல்:

    கொடைக்கானல் கான்வென்ட் ரோடு பகுதியில் உள்ள நிலத்தை நாகர்கோவிலைச் சேர்ந்த லெட்சுமணன் என்பவரிடம் இருந்து கடந்த 1968-ம் ஆண்டில் விருதுநகரைச் சேர்ந்த சந்திரசேகர் என்பவரும், கேரள மாநிலம் திருவனந்தபுரத்தைச் சேர்ந்த சங்கர் என்பவரும் இணைந்து வாங்கினர்.

    இதில் தனது பகுதியான 97 செண்ட் நிலத்தை கொடைக்கானலைச் சேர்ந்த விஸ்வா உருமின் என்பவருக்கு சங்கர் விற்பனை செய்துள்ளார். இந்த விற்பனை தொடர்பாக பத்திரம் பதிந்து தருவதில் விஸ்வா உருமின், சங்கர் மற்றும் சந்திரசேகர் ஆகியோருக்கு இடையே கோர்ட்டில் வழக்கு நடந்து வந்தது.

    இதனிடையே கடந்த 2012-ம் ஆண்டு சங்கர் இறந்து விட்டார். கொடைக்கானல் நாயுடுபுரம் பகுதியைச் சேர்ந்த சங்கர் என்பவரின் மகள் சாந்தி. இவரது கணவர் பெயர் சந்திரசேகர். இந்த பெயர் ஒற்றுமையை பயன்படுத்தி போலியான ஆவணம் தயார் செய்த சாந்தி இந்த சொத்துக்களை அபகரிக்க முயன்றார்.

    இதற்காக போலியான ஆவணத்தை தயார் செய்து சங்கர் தனது மகள் சாந்தி, மருமகன் சந்திரசேகர் உள்ளிட்டவர்களுக்கு தானஷெட்டில்மென்ட் எழுதி கொடுத்தார். இந்த போலி ஆவணம் தயார் செய்து ரூ.பல கோடி மதிப்பிலான நிலத்தை அபகரிக்க உடந்தையாக இருந்த சாந்தியின் கணவர் சந்திரசேகர், இவர்களின் மகன் சித்தார்த், கிருஷ்ணசாமி, கொடைக்கானலைச் சேர்ந்த கணேசன், போலி ஆவணம் தயாரிக்க உதவிய ஆவண எழுத்தர்கள் மருதுபாண்டி, கில்பர்ட், பத்திரபதிவு செய்த முன்னாள் சார் பதிவாளர் முருகேசன், இந்த ஆவணத்தை தயாரிக்க உதவிய வக்கீல்கள் சுதாகர், முகமது மைதீன், ராகவேந்திரன் ஆகியோர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என சங்கரின் மனைவி ஜெயந்தியின் பவர் ஏஜெண்டான கோபி கொடைக்கானல் கோர்ட்டில் வழக்கு தாக்கல் செய்தார். இந்த வழக்கு விசாரணையில் இருந்து வந்த நிலையில் போலி ஆவணம் தயாரித்து பல கோடி ரூபாய் சொத்துக்களை அபகரிக்க முயன்ற சாந்தி, சந்திரசேகர் உள்பட 11 பேரை போலீசார் தேடி வந்தனர். இந்நிலையில் முதல் குற்றவாளியான சாந்தியை போலீசார் கைது செய்ய மற்ற 10 பேர்களை தேடி வருகின்றனர்.

    Next Story
    ×