search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    மரக்காணம் அருகே சாராயம் விற்ற பெண் கைது
    X

    மரக்காணம் அருகே சாராயம் விற்ற பெண் கைது

    • தனது வீட்டின் அருகில் உள்ள தோட்டத்தில் சாராயம் விற்பனை செய்து வருவதாக மரக்காணம் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
    • கையும்- களவுமாக பிடித்து இவர் வைத்திருந்த புதுவை சாராய பாக்கெட் பறிமுதல் செய்தனர் .

    விழுப்புரம்:

    விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் அருகே உள்ள ஆலத்தூர் கிராமத்தில் கிழக்கு மடத் தெருவில் வசித்து வருபவர் குமாரி (வயது 50). இவர் தனது வீட்டின் அருகில் உள்ள தோட்டத்தில் சாராயம் விற்பனை செய்து வருவதாக மரக்காணம் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில் இன்ஸ்பெக்டர் பாபு, சப்-இன்ஸ்பெக்டர் ஜான் ஜோசப் மற்றும் போலீசார் முத்து, பிரபு ஆகியோர் தலைமையிலான போலீசார் ஆலத்தூர் கிராமத்திற்கு சென்று ஆய்வு செய்தனர். அப்போது அங்கு சாராயம் விற்பனை செய்து கொண்டிருந்த குமாரியை கையும்- களவுமாக பிடித்து இவர் வைத்திருந்த புதுவை சாராய பாக்கெட் 5 எண்ணிக்கை கொண்டவை பறிமுதல் செய்தனர் வழக்கு பதிவு செய்து திண்டிவனம் நீதி மன்றத்துக்கு அனுப்பி வைத்து பின்பு சிறையில் அடைத்தனர்.

    Next Story
    ×