search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பூங்கா"

    • அமைச்சர் பொன்முடி கலந்து கொண்டு பூங்காவினை திறந்து பொதுமக்கள் பயன்பாட்டிற்கு ஒப்படைத்தார்.
    • உமா மகேஸ்வரி சுகுமார், பத்மாவதி திருசங்கு உட்பட பலர் கலந்து கொண்டனர்.

    விழுப்புரம்:

    விழுப்புரம் மாவட்டம் வளவனூர் பேரூராட்சியில் அம்ரூத் திட்டத்தின்கீழ், ரூ.30.60 லட்சம் மதிப்பீட்டில் அமைக்கப்பட்ட பூங்காவை திறந்து வைத்து, 48 பயனாளிகளுக்கு ரூ.80.23 லட்சம் மதிப்பீட்டில் நலத்திட்ட உதவிகளை வழங்கும் விழா நேற்று நடைபெற்றது. விழாவிற்கு விழுப்புரம் மாவட்ட கலெக்டர் பழனி தலைமை தாங்கினார். எம்.எல்.ஏ.க்கள் புகழேந்தி, லட்சுமணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். உயர்கல்வித் துறை அமைச்சர் பொன்முடி கலந்து கொண்டு பூங்காவினை திறந்து பொதுமக்கள் பயன்பா ட்டிற்கு ஒப்படைத்தார்.

    தொடர்ந்து, தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாடு வாரியத்தின் சார்பில், தலா ரூ.2.10 லட்சம் மானியம் வீதம், 38 நபர்களுக்கு ரூ.79.30 லட்சம் மதிப்பீட்டில் வீடுகள் கட்டுவதற்கான பணி ஆணை மற்றும் தனி நபர் கழிவறை அமைக்கும் திட்டத்தின்கீழ், தலா ரூ.9,300 வீதம் 10 நபர்களுக்கு ரூ.93 ஆயிரம் மதிப்பீட்டில் கழிவறை கட்டுவதற்கான ஆணை என மொத்தம் 48 பயனாளிகளுக்கு ரூ.80.23 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி வழங்கினார்.

    இதில் மாவட்ட ஊராட்சி குழுத் தலைவர் ஜெயச்சந்திரன், வளவனூர் பேரூராட்சி மன்ற தலைவர் மீனாட்சி ஜீவா, தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாடு வாரிய செயற்பொறியாளர் குமாரதுரை, பேரூராட்சி மன்ற துணைத் தலைவர் அசோக், செயல் அலுவலர் (பொ) ஷேக் லத்திப், கவுன்சிலர்கள் மகாலட்சுமி செந்தில், சசிகலா கபரியேல், சந்திர பாண்டியன், வடிவேல், யுவராஜா, ஆரிஸ், பாஸ்கரன், சிவசங்கரி அன்பரசு, கந்தன், பார்த்திபன், கீதா செந்தில், உமா மகேஸ்வரி சுகுமார், பத்மாவதி திருசங்கு உட்பட பலர் கலந்துகொண்டனர்.

    • ஆடிப்பெருக்கை யொட்டி பவானிசாகர் அணை பூங்காவில் ஒரே நாளில் 18 ஆயிரம் பேர் குவிந்த வண்ணம் உள்ளனர்
    • கொடிவேரியில் 13,500 பேர் குளித்து மகிழ்ந்தனர்

    சத்தியமங்கலம்,

    ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள கொடிவேரி தடுப்பணையில் கொட்டும் தண்ணீரில் குளித்து மகிழ்வ தற்கும், ரசிப்பதற்கும் ஈரோடு மாவட்ட பொது மக்கள் மட்டுமின்றி தமிழக த்தின் பல பகுதிகளில் இருந்தும் தினமும் ஏராள மான சுற்றுலா பயணிகள் வந்து செல்கிறார்கள். இதனால் விடுமுறை மற்றும் விஷேச நாட்களில் வழக்கத்தை விட ஏராள மான மக்கள் வந்து தண்ணீரில் குளித்து மகிழ் வார்கள். இதனால் தடுப்பணையில் எப்போது கூட்டம் இருந்து கொண்டே இருக்கும்.

    இந்த நிலையில் ஆடி பெருக்கை நேற்று வழக்க த்தை விட அதிகமான சுற்றுலா பயணிகள் தங்கள் குடும்பத்துடன் வந்து கொடி வேரி தடுப்பணையில் கொட்டும் தண்ணீரில் குளித்து மகிழ்ந்தனர். காலை முதலே ஈரோடு, திருப்பூர், கோவை, கரூர், சேலம் உள்பட தமிழகத்தின் பல பகுதிகளில் இருந்து பலர் தங்கள் குடும்பத்துடன் வந்திருந்தனர். காலை நேரத்தில் கூட்டம் குறைந்து காணப்பட்டாலும் நேரம் செல்ல, செல்ல பொதுமக்களின் கூட்டம் அதிகரித்து கொண்டே இருந்தது. இதனால் கொடி வேரி பகுதியில் எங்கு பார்த்தாலும் மக்களின் தலைகளாக காணப்பட்டது. இதனால் அந்த பகுதியில் கூட்டம் அலை மோதியது.

    இந்த நிலையில் ஆடி பெருக்கு விழாவையொட்டி நேற்று ஒரே நாளில் சுமார் 15 ஆயிரத்து 500 பேர் வந்து கொட்டும் தண்ணீரில் குளித்து விட்டு சென்றனர். இதன் மூலம் ரூ.67 ஆயிரத்து 500 வசூலானதாக அதிகாரிகள் தெரிவித்தனர். இதே போல் சத்திய மங்கலம் அருகே உள்ள பவானிசாகர் அணைக்கு ஆடிப்பெருக்கு விழாவை யொட்டி ஏராளமான பொதுமக்கள் வந்து இருந்த னர். பவானிசாகர் அணைக்கு காலை நேரத்தில் கூட்டம் குறைந்து காணப்பட்டாலும் நேரம் செல்ல, செல்ல மக்களின் கூட்டம் அதி கரித்து கொண்டே இருந்தது.

    ஆடி பெருக்கையொட்டி அணையின் மேல் பகுதியில் பொதுமக்கள் அனுமதி க்கப்படுவார்கள். ஆனால் இந்த ஆண்டு பாதுகாப்பு கருதி அணையின் மேல் பகுதிக்கு செல்ல தடை விதிக்கப்பட்டு இருந்தது. இதனால் பவானிசாகருக்கு வந்த மக்கள் ஏமாற்றம் அடைந்தனர்.இதை தொடர்ந்து அவர்கள் அணை பூங்காவில் விளையாடி மகிழ்ந்தனர். குழந்தைகளுடன் வந்து இருந்த மக்கள் அங்கு ஊஞ்சல் மற்றும் சறுக்கு விளையாடி மகிழ்ந்தனர். இதனால் பவானிசாகர் முழுவதும் மக்கள் கூட்டம் அலை மோதியது. தொடர்ந்து பொது அங்கு விற்பனை செய்யப்படும் மீன் வகைகளை ருசித்து விட்டு சென்றனர்.இதனால் நேற்று ஒரே நாளில் பவானிசாகர் அணை பூங்காவுக்கு சுமார் 18 ஆயிரத்து 394 பேர் கண்டு களித்தனர். இதன் மூலம் ரூ. 91 ஆயிரத்து 470 வசூலானதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

    • ஒற்றை யானையை பூங்காக்குள் மெதுவாக ஜாலியாக நடந்து சென்றது.
    • பவானி ஆற்றின் மேல் கட்டப்பட்ட பாலம் வழியாக பவானி சாகர் வனப்பகுதிக்குள் சென்றது.

    சத்தியமங்கலம்:

    ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் 10 வனச்சரகங்கள் உள்ளன. இதில் யானை, மான், சிறுத்தை, புலி, கரடி, காட்டெருமை என ஏராளமான வனவிலங்குகள் வசித்து வருகின்றன.

    இந்நிலையில் சத்தியமங்கலம் அருகே பவானிசாகர் வனச்சரகத்து க்குட்பட்ட பவானிசாகர் அணை நீர்த்தேக்க பகுதியில் தினமும் யானைகள் காட்டுப்பகுதியில் இருந்து வெளியேறி அணையின் மேல் பரப்பில் இருந்து அணைப்பகுதிக்கு வந்து தண்ணீர் குடிப்பது வாடிக்கையாகி வருகிறது.

    அதேபோல் இன்று காலை 7 மணியளவில் பவானிசாகர் வனப்பகுதி யில் இருந்து பவானிசாகர் அணை பகுதிக்கு தண்ணீர் குடிப்பதற்காக வந்த ஒற்றைக்காட்டு யானை அணையின் மேல் பகுதியில் அப்படியே நடந்து வந்து பவானிசாகர் அணை பூங்காவில் நுழைந்தது.

    இதைப்பார்த்து பூங்கா ஊழியர்கள், தூய்மை பணியாளர்கள் அலறி ஓட்டம் பிடித்தனர். காலை 7 மணி அளவில் யானை வந்ததால் பயணிகள் யாரும் உள்ளே இல்லை. இதனால் எந்த ஒரு அசம்பாவித சம்பவமும் நடைபெறவில்லை. பின்னர் ஒற்றை யானையை பூங்கக்குள் மெதுவாக ஜாலியாக நடந்து சென்றது.

    பின்னர் யானை மெல்ல மெல்ல பூங்காவில் உணவு கிடைக்குமா என அங்கும் இங்கும் அலை மோதி கடைசியாக ஒரு வழியில் பூங்காவில் நுழைவாயில் இருந்து வெளியே வந்தது. வெளியே வந்த யானை பூங்காவின் எதிரே உள்ள கடைகளுக்கு சென்று ஏதாவது உணவு கிடைக்குமா என தேடி பார்த்தது. அப்போது கடைகள் மூடி இருந்ததால் அவை ஒன்றும் செய்யாமல் சென்றுவிட்டது.

    பின்னர் சிறிது நேரம் அங்கும், இங்கும் பார்த்துவிட்டு பிறகு பவானி ஆற்றின் மேல் கட்டப்பட்ட பாலம் வழியாக பவானி சாகர் வனப்பகுதிக்குள் சென்றது.

    இதனால் அந்த பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.

    • கடந்த 5 ஆண்டுகளுக்கும் மேலாக, இந்த பூங்காவானது பூட்டியே கிடக்கிறது.
    • அதிவிரைவில் பூங்காவை சுத்தம் செய்து திறப்பு விழா நடத்த வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    பூங்காக்கள் என்பது மக்களின் பொழுது போக்கு அம்சத்தில் முக்கிய அங்கமாகும். கோவையில் சிறுவர் பூங்கா, முதியோர் பூங்கா, உயிரியல் பூங்கா என பல பூங்காக்களும் உள்ளது. இந்த பூங்காக்கள் மக்களுக்கு மன நிம்மதியையும், மன அமைதியையும் கொடுத்து வருகிறது.

    பரபரப்பான இந்த காலகட்டத்தில் மக்கள் அனைவரும் வார நாட்கள் முழுவதும் தங்கள் வேலைகளில் முழ்கி கிடப்பார்கள். வார இறுதி நாட்களில் யாராவது உறவினர்களை சந்திப்பது, பூங்காக்களில் சென்று பொழுதை கழிப்பது என தங்கள் நேரத்தை செலவிட்டு வருகின்றனர்.

    அதிலும் பூங்காவுக்கு தங்கள் குடும்பத்தினர் மட்டுமின்றி, உறவினர்களை அழைத்து வந்து, அன்றைய வாரத்தில் நிகழ்ந்த முக்கியமான சம்பவங்கள் உள்பட எண்ணற்ற தகவல்களை சிரித்து பேசி மகிழ்வார்கள்.

    தற்போது எல்லாம் பெரிய, பெரிய அடுக்குமாடி குடியிருப்புகளிலும் பூங்காக்கள் உள்ளன. மக்கள் பூங்காவை தேடி அலைய வேண்டாம் என்பதற்காக அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டப்படும் போதே, அதன் அருகே இடத்தை வாங்கி அங்கு பூங்காவையும் உருவாக்கி விடுகின்றனர். அந்த பூங்காவில் குழந்தைகளுக்கு பிடித்தமான விளையாட்டுகளை இடம் பெற செய்து விடுகிறார்கள்.

    இது குடியிருப்பில் வந்து வாழக்கூடிய பொதுமக்கள், தங்கள் குழந்தைகளுடன் சேர்ந்து நேரத்தை போக்குவதற்கு வரபிரசாதமாக உள்ளது.

    கோவையில் ஏராளமான பூங்காக்கள் இருந்தாலும், ஒரு சில பூங்காக்கள் எந்தவித பராமரிப்பும் இன்றி புதர் மண்டி மக்கள் முற்றிலும் பயன்படுத்த முடியாத நிலையிலேயே காணப்படுகிறது. இது மக்களுக்கு மிகவும் வருத்தத்தை தான் தெரிகிறது. தாங்கள் பயன்படுத்தி வந்த பூங்கா இப்போது இப்படி ஆகி விட்டதே என நினைத்து சிலர் வருந்தி சொல்லி கொண்டு செல்வதையும் காணதான் முடிகிறது.

    கோவை சாய்பாபா காலனி கே.கே புதூர் பகுதியில் இருந்து கிரி நகர் செல்லும் வழியில் கணபதி லே-அவுட் உள்ளது. இந்த பகுதியில் 20 ஆயிரத்திற்கு மேற்பட்ட பொதுமக்கள் வசித்து வருகிறார்கள்.

    அந்த பகுதி மக்களின் தேவைக்காகவும், குழந்தைகள் விளையாடுவதற்காக பூங்கா ஒன்று அமைக்கப்பட்டிருந்தது. அந்த பூங்காவில் சிறுவர்களுக்கு பிடித்தமான ஊஞ்சல், சறுக்கு விளையாட்டு, செயற்கை நிரூற்றுகள், ரெயில் வண்டிகள் உள்ளிட்டவை வைக்கப்பட்டிருந்தன.

    இதில் அந்த லேஅவுட்டில் வசிப்பவர்கள் மட்டுமின்றி அருகே உள்ள பகுதிகளை சேர்ந்த பொதுமக்களும் தங்கள் குழந்தைகளுடன் வந்து, பூங்காவை பார்வையிட்டு, அதில் சிறது நேரம் அமர்ந்து பேசி விட்டு செல்வார்கள். குழந்தைகள் அங்குள்ள விளையாட்டு உபகரணங்களில் விளையாடி மகிழ்வதும் வழக்கமாக இருந்து வந்தது.

    ஆனால் கடந்த 5 ஆண்டுகளுக்கும் மேலாக, இந்த பூங்காவானது பூட்டியே கிடக்கிறது. அந்த பூங்கா முழுவதும் செடி, கொடிகள் வளர்ந்து புதர் மண்டி ஒரு காடு போல காட்சியளிக்கிறது. உள்ளே யார் இருக்கிறார்கள் என்பது கூட தெரியாது. அந்தளவுக்கு இந்த பூங்காவானது மாறி விட்டது.இதுகுறித்து அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் கூறியதாவது:-

    கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு இந்த பூங்கா எப்படி இருந்தது தெரியுமா. எங்களின் நேர போக்கே இந்த பூங்காவாக தான் இருக்கும்.

    எங்களுக்கு ஏதாவது மன கவலையோ அல்லது ஏதாவது சிறு பிரச்சினைகள் வந்தாலோ உடனே நாங்கள் தேடி செல்லும் இடம் இந்த பூங்காவாக தான் இருக்கும். ஏனென்றால் அங்கு சென்றவுடன் குழந்தைகள் துள்ளி குதித்து விளையா டுவதும், அங்கு நிலவக்கூடிய அமைதியும், நம் மனதில் இருக்கும் அனைத்தையும் அப்படியே மறைத்து நம்மை வேறு நிலைக்கு மாற்றி விடும்.

    இதனாலேயே காலை, மாலை நேரங்களில் நாங்கள் எங்கள் குழந்தைகளை பூங்காவுக்கு அழைத்து வந்துவிடுவோம். அங்கு சிறிது நேரம் உட்கார்ந்து சற்று இளைப்பாறுவதுடன், குழந்தைகளுடன் சேர்ந்து விளையாடி எங்கள் பொழுதை கழித்து வந்தோம். இது எங்களுக்கும், குழந்தைகளுக்கும் மிகவும் சந்தோஷமாக இருந்தது.

    கை குழந்தைகளை தூக்கிக் கொண்டு வரும் பெற்றோர் தங்கள் பிள்ளைகளுக்கு நிலவை காட்டியும், அக்கம்பக்கத்தில் விளையாடி கொண்டி ருக்கும் குழந்தைகளை காண்பித்து ஏமாற்றி சாதம் ஊட்டுவோம். குழந்தைகளும் தன்னையே மறந்து வேடிக்கை பார்த்துக் கொண்டு சாதம் அனைத்தை யும் சாப்பிட்டுவிடும். ஆனால் தற்போது குழந்தை யை தூக்கிக்கொண்டு வீட்டை விட்டு வெளியே வந்தால் புழுதி பறக்கும் சூழ்நிலைதான் காணப்படுகிறது.

    இந்த பூங்கா பொழுதை கழிக்க மட்டும் உதவவில்லை. நல்ல தோழிகளையும், குடும்ப நண்பர்களையும் உருவாக்கி தந்தது. தோழிகள் அனை வரும் ஒருவ ருக்கொருவர் மனம்விட்டு பேசியும் வந்தோம். அந்தவுக்கு விளங்கிய இந்த பூங்கா தற்போது, 5 ஆண்டுகளுக்கும் மேலாக பூட்டியே கிடக்கிறது. இதன் காரணமாக தினமும் நேர போக்கிற்கே பொழுதை கழிக்க முடியாமல் சிரமப்படு கிறோம்.

    பணியில் இருந்து ஓய்வு பெற்றவர்கள் மாலை நேரங்களில் இங்கு வந்து நிம்மதியாக அமர்ந்து நேரத்தை போக்குவது வழக்கம். ஆனால் தற்போது அவர்கள் எங்கு செல்வது என்று தெரியாமல் வீட்டுக்கு ள்ளேயே முடங்கி கிடக்கும் அவல நிலை ஏற்பட்டு வருகிறது. ஆகவே வயதானவர்களின் வாழ்க்கையிலும் இந்த பூங்கா ஒரு இன்றியமையாத இடத்தை பிடித்திருக்கிறது என்பதில் சந்தேகம் இல்லை. தற்போதும் கூட ,இப்பகுதியில் நடைபயிற்சி செய்யும் வயதானவர்கள் பூங்காவை ஒரு நிமிடம் நின்று வெறித்து வெறித்து பார்த்துவிட்டு சொல்லும் சூழ்நிலையை காண முடிகிறது.

    மழையிலும், வெயிலி லும் காய்ந்த நிலையில் உள்ளதால் பூங்காவிற்குள் அமைந்துள்ள ஊஞ்சல், சறுக்கு விளையாட்டு போன்ற உபகரணங்கள் அனைத்தும் துருப்பிடித்த நிலையில் உள்ளது.

    மேலும் பூங்காவில் புதர் மண்டி கிடப்பதால் விஷ பூச்சிகள் வருவதுடன், நள்ளிரவு நேரங்களில் சில சமூக விரோத செயல்களும் இங்கு நடந்து வருகிறது.

    ஒரு சில பகுதிகளில் பூங்காவை சுத்தம் செய்து வருகின்றனர். ஆனால் இங்கு பகுதியில் உள்ள சிறுவர் பூங்கா எப்போது சுத்தம் செய்யப் போகிறார்கள்? எப்போது திறக்கப் போகிறார்கள்? என்று தான் நாங்கள் கேட்டு கொண்டிருக்கிறோம். அதிவிரைவில் பூங்காவை சுத்தம் செய்து திறப்பு விழா நடத்த வேண்டும்.

    மீண்டும் எங்களுக்கு நேரப்போக்கு அம்சத்தை உருவாக்கி தர வேண்டும் என்பதே எங்களுடைய கோரிக்கை யாகும். இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

    • நகராட்சி பூங்காவில் மின் வயர்கள் தாழ்வாக செல்கிறது.
    • பூங்காவிற்கு வரும் குழந்தைகள் திறந்த வெளி குடிநீர் வால்வு பள்ளங்களில் தவறிவிழும் வாய்ப்பு உள்ளது.

    மானாமதுரை

    சிவகங்கை மாவட்டம் மானாமதுரை கீழ்கரை பகுதியில் உள்ள சுந்தரபுரம் தெருவில் நகராட்சி சிறுவர் பூங்கா உள்ளது. இதனை சுற்றி சட்டமன்ற உறுப்பினர் அலுவலகம், நூலகம், வணிக வளாகத்துடன் கூடிய குடிநீர் மேல்நிலை தொட்டி உள்ளது.

    குறுகிய இடத்தில் அமைந்துள்ள இந்த பூங்கா வில் குடிநீர் குழாய்கள் திறக்க வால்வு பள்ளங்கள் 3 இடத்தில் மூடப்படாமல் உள்ளது. குழந்தைகள் பயன்படுத்தும் விளையாட்டு உபகரணங்கள் அருகில் மிகவும் தாழ்வான நிலையில் அறுந்து தொங்கும் மின் சப்ளை செல்லும் மின்சார வயர்கள் செல்கிறது.

    தினமும் மாலை நேரங்க ளில் மற்றும் விடுமுறை நாட்களில் பூங்காவிற்கு வரும் குழந்தைகள் திறந்த வெளி குடிநீர் வால்வு பள்ளங்களில் தவறிவிழும் வாய்ப்பு உள்ளது.

    எனவே நகராட்சி நிர்வாகம் தாழ்வாக செல்லும் மின்சார வயர்களை பூங்கா வழியே பயன்படுத்தாமல் மாற்று வழியே பயன்படுத்தி திறந்த வெளி பள்ளங்களை மூடி பூங்காவிற்க்கு கூடுதல் இடம் ஒதுக்கி விரிவாக்கம் செய்ய வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • தொழில்நுட்பம், பொறியியல் மற்றும் கணிதம் பூங்கா (ஸ்டெம் பூங்கா) அமைக்கப்பட்டுள்ளது.
    • பூங்காவில் வாகனம் நிறுத்துமிடத்தின் சுற்றுச்சுவர் பழுதடைந்து காணப்படுகிறது.

    தஞ்சாவூர்:

    தஞ்சை அருளானந்த நகரில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் ரூ.11.50 கோடி மதிப்பில் அறிவியல், தொழில்நுட்பம், பொறியியல் மற்றும் கணிதம் பூங்கா ( ஸ்டெம் பூங்கா ) அமைக்கப்பட்டுள்ளது.

    இந்த ஸ்டெம் பூங்காவை வருகிற 27 ஆம் தேதி முதல் -அமைச்சர் மு.க.ஸ்டாலினால் திறந்து வைக்கப்பட உள்ளது. இந்நிலையில் இந்த பூங்காவில் வாகனம் நிறுத்தும் இடத்தின் சுற்று சுவர் பழுது அடைந்து காணப்படுவதாக பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர். மேலும் பூங்கா முன்பு அமைந்துள்ள சாலைகள் சேதமடைந்து காணப்படுவதாகவும் கூறுகின்றனர்.

    எனவே பூங்கா திறக்க இன்னும் ஒரு வாரமே உள்ள நிலையில் அதற்குள் சுற்று சுவரை சீரமைத்து சாலையை சீர் செய்ய வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • திருச்சியில் கலாச்சாரம், வரலாற்றை பிரதிபலிக்கும் புரதான பூங்கா கட்டப்பட்டு உள்ளது
    • இந்த மாத இறுதியில் திறக்கப்படுகிறது

    திருச்சி,

    திருச்சியின் கலாச்சாரம் மற்றும் வரலாற்றை பிரதிபலிக்கும் வகையில் மலைக்கோட்டை அருகே பட்டர்வொர்ட் சாலையில் பாரம்பரிய பூங்கா அமைக்கும் பணி நடந்து வருகிறது. இந்தப் பணிகள் தற்போது இறுதி கட்டத்தை நெருங்கியுள்ள நிலையில் நடப்பு மாத இறுதியில் திறக்கப்பட உள்ளது.ஒரு காலத்தில் குதிரை லாயமாக பயன்படுத்த ப்பட்ட 1.27 ஏக்கர் நிலப்ப ரப்பில் கட்டப்பட்டு வரும் இந்த பூங்கா, ஸ்மார்ட் சிட்டிஸ் திட்டத்தின் கீழ் 6 கோடி மதிப்பீட்டில் அமைக்கப்படுகிறது. தற்போதும் அந்த தொழுவத்தின் வளைவு இடிக்கப்படாமல் அப்படியே வைக்கப்பட்டுள்ளது. இது பூங்காவின் முக்கிய நுழை வாயிலாக பயன்படுத்தப்படுகிறது.பூங்காவின் கட்டுமான பணிகள் கடந்த 2019 டிசம்பரில் தொடங்கப்பட்டது. கொரோனா வைரஸ் மற்றும் சிலைகள் வாங்குவதில் ஏற்பட்ட தாமதம் காரணமாக 2020 டிசம்பரில் முடிக்க திட்டமிடப்பட்ட தேதிக்கு அப்பால் இத்திட்டம் இழுத்தடிக்கப்பட்டு வருகிறது. பூங்காவில் ஓவியங்கள், சிலைகள் மற்றும் நகரின் பழமையான வரலாற்றை அறியும் பலகைகள் காட்சிப்படுத்தப்பட்ட உள்ளது. திருச்சியை ஆண்ட ராணி மங்கம்மாள், கரிகால் சோழன் மற்றும் ராஜ ராஜா சோழன் உட்பட நாட்டை ஆண்ட முன்னாள் மன்னர்களின் சிலைகளும் இதில் இடம்பெறுகிறது.கல்லால் செதுக்கப்பட்ட வளைவு நுழைவாயில், குழந்தைகள் விளையாடும் இடம், திறந்த உடற்பயிற்சி கூடம், நடைப் பாதை, பல்வேறு வகைகளைக் கொண்ட பெரிய மூலிகைத் தோட்டம் மருத்துவ தாவரங்கள் மற்றும் ரோஜாக்கள், இயற்கையை ரசித்தல் மற்றும் நீரூற்றுகள் மற்றும் கலாச்சார நிகழ்வுகளை நடத்தக்கூடிய ஒரு ஆம்பிதியேட்டர் ஆகியவை புரதான பூங்காவின் சிறப்பம்சங்களாகும். பூங்காவில் ஓய்வறைகள், குடிநீர் வசதி, இரு சக்கர மற்றும் நான்கு சக்கர வாகனங்கள் நிறுத்தும் வகையில் பார்க்கிங் இடம், பார்வையாளர்களின் பாது காப்பிற்காக கண்காணிப்பு கேமராக்களும் இடம் பெறுகிறது.இது தொடர்பாக திருச்சி மாநகராட்சி அதிகாரி ஒருவர் கூறும் போது, அறிவியல் பூங்காக்களை போன்று இந்த வரலாற்றை சொல்லும் புரதான பூங்கா மாணவர்களின் அறிவிப்பசி போக்க உதவும் என்றார்.

    • தற்போது இறுதி கட்டத்தை நெருங்கியுள்ள நிலையில் நடப்பு மாத இறுதியில் திறக்கப்பட உள்ளது.
    • ராணி மங்கம்மாள், கரிகால் சோழன் மற்றும் ராஜ ராஜா சோழன் உட்பட நாட்டை ஆண்ட முன்னாள் மன்னர்களின் சிலைகளும் இதில் இடம்பெறுகிறது.

    திருச்சி:

    திருச்சியின் கலாச்சாரம் மற்றும் வரலாற்றை பிரதி பலிக்கும் வகையில் மலை க்கோட்டை அருகே பட்டர்வொர்ட் சாலையில் பாரம்பரிய பூங்கா அமைக்கும் பணி நடந்து வருகிறது. இந்தப் பணிகள் தற்போது இறுதி கட்டத்தை நெருங்கியுள்ள நிலையில் நடப்பு மாத இறுதியில் திறக்கப்பட உள்ளது.

    ஒரு காலத்தில் குதிரை லாயமாக பயன்படுத்தப்பட்ட 1.27 ஏக்கர் நிலப்பரப்பில் கட்டப்பட்டு வரும் இந்த பூங்கா, ஸ்மார்ட் சிட்டிஸ் திட்டத்தின் கீழ் 6 கோடி மதிப்பீட்டில் அமைக்கப்படுகிறது. தற்போதும் அந்த தொழுவத்தின் வளைவு இடிக்கப்படாமல் அப்படியே வைக்கப்பட்டுள்ளது. இது பூங்கவின் முக்கிய நுழை வாயிலாக பயன்படுத்தப்படுகிறது.

    பூங்காவின் கட்டுமான பணிகள் கடந்த 2019 டிசம்பரில் தொடங்கப்பட்டது. கொரோனா வைரஸ் மற்றும் சிலைகள் வாங்குவதில் ஏற்பட்ட தாமதம் காரணமாக 2020 டிசம்பரில் முடிக்க திட்டமிடப்பட்ட தேதிக்கு அப்பால் இத்தி ட்டம் இழுத்தடிக்கப்பட்டு வருகிறது. பூங்காவில் ஓவியங்கள், சிலைகள் மற்றும் நகரின் பழமையான வரலாற்றை அறியும் பலகை கள் காட்சிப்படுத்தப்பட்ட உள்ளது. திருச்சியை ஆண்ட ராணி மங்கம்மாள், கரிகால் சோழன் மற்றும் ராஜ ராஜா சோழன் உட்பட நாட்டை ஆண்ட முன்னாள் மன்னர்களின் சிலைகளும் இதில் இடம்பெறுகிறது.

    கல்லால் செதுக்கப்பட்ட வளைவு நுழைவாயில், குழந்தைகள் விளையாடும் இடம், திறந்த உடற்பயிற்சி கூடம், நடைப்பாதை, பல்வேறு வகைகளைக் கொண்ட பெரிய மூலிகைத் தோட்டம் மருத்துவ தாவரங்கள் மற்றும் ரோஜாக்கள், இயற்கையை ரசித்தல் மற்றும் நீரூற்றுகள் மற்றும் கலாச்சார நிகழ்வுகளை நடத்தக்கூடிய ஒரு ஆம்பிதியேட்டர் ஆகியவை புரதான பூங்காவின் சிறப்பம்சங்களாகும். பூங்காவில் ஓய்வறைகள், குடிநீர் வசதி, இரு சக்கர மற்றும் நான்கு சக்கர வாகனங்கள் நிறுத்தும் வகையில் பார்க்கிங் இடம், பார்வையாளர்களின் பாதுகாப்பிற்காக கண்காணிப்பு கேமராக்களும் இடம் பெறுகிறது.

    இது தொடர்பாக திருச்சி மாநகராட்சி அதிகாரி ஒருவர் கூறும் போது, அறிவியல் பூங்காக்களை போன்று இந்த வரலாற்றை சொல்லும் புரதான பூங்கா மாணவர்களின் அறிவுப்பசி போக்க உதவும் என்றார்.

    • சுற்று சுவர் மற்றும் இரும்பு தகடுகளால் கொட்டகை அமைத்து இருந்தனர்.
    • சொத்தின் மதிப்பு ரூ.1½ கோடி என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

    நந்திவரம்-கூடுவாஞ்சேரி நகராட்சிக்கு உட்பட்ட 1-வது வார்டு, பத்மாவதி நகரில் பூங்காவுக்கு என்று ஒதுக்கப்பட்ட நிலம் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டு இருந்தது. அதில் சுற்று சுவர் மற்றும் இரும்பு தகடுகளால் கொட்டகை அமைத்து இருந்தனர்.

    இது குறித்து நடவடிக்கை எடுக்க கோரி நகராட்சி அதிகாரிகளுக்கு தொடர்ந்து புகார்கள் வந்தன. இதைத்தொடர்ந்து நகராட்சி கமிஷனர் இளம்பரிதி தலைமையில் ஊழியர்கள் அதிரடியாக பூங்கா ஆக்கிரமிப்பு நிலத்தில் ஆக்கிரமிப்புகளை அகற்றி மீட்டனர். இந்த சொத்தின் மதிப்பு ரூ.1½ கோடி என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

    • பராமரிப்பின்றி பாழடைந்து கிடக்கும் 10 பூங்காக்களை சீரமைக்க நடவடிக்கை எடுக்கப்படும்.
    • பணிகள் தொடங்கிய நாளில் இருந்து 18 மாதங்க–ளில் முடிவடையும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    மதுரை

    கோவில் மாநகராக போற்றப்படும் மதுரையில் மக்களின் பொழுதுபோக்கு அம்சமாக திகழ்வது பூங்காக் கள் மட்டுமே. அரசின் பங்க–ளிப்போடு பிரமாண்ட–மாக அமைக்கப்படும் பூங்காங்கள் பல இன்று முறையான பராமரிப்பின்றி காணப்படு–கின்றன.

    மதுரை மாநகராட்சி, மாநகர பகுதிகளில் உள்ள பராமரிக்கப்படாமல் சிதி–லமடைந்து கிடக்கும் பூங்காக் களை கண்டறிந்து, அவற்றை சீரமைத்து, பசுமையை பாது–காக்கும் வகையில் மறு உரு–வாக்கம் செய்யும் பணியை தொடங்கி உள்ளது.

    குறிப்பாக இதில் பெத்தானியாபுரம் அம்மா பூங்கா, அண்ணாநகர் பூங்கா, ஜார்ஜ் ஜோசப் பூங்கா, பழங்காத்தம் பூங்கா உள்ளிட்ட பல்வேறு பூங்காக்கள் உரிய பராம–ரிப்பு இல்லாமல் மிகவும் மோசமான நிலையில் உள் ளன. மாநகராட்சிக்கு உட் பட்ட பகுதிகளில் மொத்தம் 199 பூங்காக்கள் உள்ளன. இதில் 80 பூங்காக்களில் பாதுகாப்பு கருதி வேலி அமைக்கப்பட்டுள்ளது. 34 பூங்காக்களுக்கு சுற்றுச்சுவர் அமைக்கப்பட்டுள்ளது. 33 பூங்காக்களுக்கு இன்னும் வேலி கூட அமைக்காமல் இன்னும் திறந்தவெளியா–கவே காட்சி அளிக்கிறது.

    இதுபற்றி பெத்தானியா–புரம் குடியிருப்பு வாசி ஒருவர் கூறுகையில், நகரில் உள்ள அம்மா குழந்தைகள் பூங்காவின் ஒரு பகுதியாக கட்டப்பட்ட பூங்காக்களில் பெத்தானியாபுரத்தில் உள்ள பூங்காவும் ஒன்று. கடந்த 3 ஆண்டுகளாக பூங்கா பராமரிப்பின்றி உள்ளது. பெரும்பாலும் மது அருந்துபவர்கள் மற்றும் பிற சட்டவிரோத செயல்க–ளின் ஈடுபடுவோரின் கூடா–ரமாக இந்த பூங்கா இருந்து வருகிறது என்றார்.

    இதுபற்றி மாநகராட்சி அதிகாரிகள் கூறுகையில், பாழடைந்த நிலையில் முதற் கட்டமாக 10 பூங்காக்கள் கண்டறியப்பட்டு புதுப்பிக் கப்பட இருக்கிறது. அதன் ஒரு பகுதியாக பழங்காநத்தம் மற்றும் பசுமை குடில் பூங் காக்கள் ரூ.1.5 கோடி செல–வில் புதுப்பிக்கப்படும்.

    அதுமட்டுமின்றி, பயன்ப–டுத்தப்படாத மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளை கண்ட–றிந்து, அதனை சிறுவர்க–ளுக்கான விளையாட்டு உபகரணங்கள் கொண்ட பூங்காவாக மாற்ற, குடிமைப் பணித்துறை முடிவு செய் துள்ளது. நமக்கு நாமே திட்டத்தின் கீழ் குடியிருப் ேபார் நலச்சங்கங்கள் உதவி–யுடன் வேலி அமைக் கப் பட்ட பூங்காக்கள் மேம்ப–டுத் தப்பட உள்ளன.

    இதுகுறித்து மேயர் இந்தி–ராணி கூறும்போது, மாநக–ராட்சி பட்ஜெட்டில் பூங்காக் களை சீரமைக்க திட்டமிட் டுள்ளோம். அதன் ஒரு பகுதியாக பழகாநத்தம் பூங்கா ரூ.75 லட்சம் செலவி–லும், பசுமை குடில் பூங்கா ரூ.35 லட்சம் செலவிலும் சீரமைக்கப்படும்.

    இதேபோல், மாநகர பகுதிகளில் மோசமாக பரா–மரிக்கப்படும் பூங்காக்கள் குறித்து பரிந்துரை செய்ய அனைத்து கவுன்சி–லர்கள் மற்றும் மண்டல தலைவர்க–ளுக்கு அறிவுறுத்தப்பட்டுள் ளது என்று கூறினார்.

    கடந்த 2022 நவம்பரில், பொதுப் பூங்காக்களை வசதிகள் மற்றும் பொது பொழுதுபோக்கிற்கான இடமாக கருதாமல், சமூக மற்றும் சூழலியல் தேவை–யாக மதிப்பதும், மாற்றுவதும் அவசியம் என்று கருதி, மதுரை ஐகோர்ட்டு மாநக–ராட்சிக்கு உத்தரவிட்டது. அதன்படி 199 பூங்காங்கள் முறையான பராமரிப்பை உறுது செய்துள்ளது. வண்டி–யூர் தெப்பக்குளத்தை அழகு–படுத்தும் பணிகள் இந்த மாத (ஜூலை) இறுதிக்குள் தொடங்கும். இதற்காக ரூ.41.2 கோடி நிதி ஒதுக்கி தனியார் நிறுவனத்துக்கு டெண்டர் விடப்பட்டுள்ளது. மேலும் 2 புதிய பூங்காக் கள் அமைக்கவும், அதற்கான பணிகள் தொடங்கிய நாளில் இருந்து 18 மாதங்க–ளில் முடிவடையும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • கலைஞர் நூற்றாண்டு பூங்காவை அமைச்சர் பெரியகருப்பன் திறந்து வைத்தார்.
    • பூங்காவிற்கு முன்னாள் முதல்வர் கருணாநிதி பெயர் சூட்டப்பட்டுள்ளது.

    மானாமதுரை

    சிவகங்கை மாவட்டம் திருப்புவனத்தில் அமைக்கப்பட்டுள்ள கலைஞர் நூற்றாண்டு பூங்கா திறப்பு விழா நடந்தது. மாவட்ட வருவாய் அலுவலர் மணிவண்ணன் தலைமை தாங்கினார். தமிழரசி எம்.எல்.ஏ. முன்னிலை வகித்தார். விழாவில் அமைச்சர் பெரியகருப்பன் கலந்து கொண்டு பூங்காவை திறந்து வைத்தார்.

    பின்னர் அவர் பேசிய தாவது:-

    திருப்புவனம் பேரூராட்சி பகுதியில் பல்வேறு வளர்ச்சி பணிகள் பொதுமக்களுக்கு பயனுள்ள வகையில் தொடர்ந்து மேற்கொள்ளப் பட்டு வருகிறது. தற்போது கூடுதலாக இப்பேரூராட்சி பகுதியில் வளர்ச்சி பணி களை மேற்கொள்ளும் பொருட்டு, ரூ.30 லட்சம் மதிப்பீட்டில் பூங்கா ஒன்றும், பூங்காவிற்கு பெருமை சேர்க்கின்ற வகையில் முன்னாள் முதல்வர் கருணாநிதி பெயர் சூட்டப்பட்டுள்ளது.

    மேலும் இப்பேரூ ராட்சிக்குட்பட்ட பகுதி களில் மக்களுக்கும் கூடுதல் குடிநீர் தேவையை நிவர்த்தி செய்திடும் பொருட்டு அம்ருத் 2.0 திட்டத்தின் கீழ் குடிநீர் மேம்பாட்டு பணி களுக்கென ரூ.16.52 கோடி மதிப்பீட்டில் பணிகள் தொடங்கி வைக்கப்பட்டுள்ளது.

    இதுதவிர மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கியின் சார்பில், விவசாய பெருங்குடி மக்களுக்கு பயனுள்ள வகையிலும் பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு பல்வேறு வகையான கடனு தவிகளும் வழங்கப்பட்டு வருகிறது.

    இவ்வாறு அவர் பேசி னார்.விழாவில் திருப்புவனம் தேர்வுநிலை பேரூராட்சி பகுதியில் ரூ.30 லட்சம் மதிப்பீட்டில் முடிவுற்ற திட்டப்பணியினை அமைச்சர் பெரியகருப்பன் தொடங்கி வைத்தார். மேலும் ரூ.16.52 கோடி மதிப்பீட்டில் புதிய திட்டப்பணிக்கு அடிக்கல் நாட்டி 211 பயனாளிகளுக்கு ரூ.1 கோடியே 52 ஆயிரம் மதிப்பீட்டில் அரசின் நலத்திட்ட உதவிகளை வழங்கினார். இந்நிகழ்ச்சிகளில் சிவகங்கை மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கியின் மேலாண்மை இயக்குநர் ரவிச்சந்திரன், கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதி வாளர் ஜூனு, சிவகங்கை சரக துணைப்பதிவாளர் பாலசந்திரன், மத்திய கூட்டுறவு வங்கி பொது மேலாளர் மாரிச்சாமி, சிவகங்கை கோட்டாட்சியர் சுகிதா, திருப்புவனம் பேரூ ராட்சி தலைவர் சேங்கை மாறன், மானாமதுரை நகர் மன்ற தலைவர் மாரியப்பன் கென்னடி, உதவி இயக்குநர் (பேரூராட்சிகள்) ராஜா, பேரூராட்சி துணை தலை வர் ரகமத்துல்லாகான், பேரூராட்சி செயல் அலு வலர் ஜெயராஜ் மற்றும் 1-வது வார்டு உறுப்பினர் செல்வி ரவி உட்பட பலர் கலந்து கொண்டனர்.

    • மேற்குத்தொடர்ச்சி மலை அடிவாரத்தில் இயற்கை எழில் சூழ்ந்த பகுதியாக அமராவதி அணை அமைந்துள்ளது.
    • அணையில் படகு சவாரியும் துவக்கப்பட்டது.

    உடுமலை :

    உடுமலை அருகே மேற்குத்தொடர்ச்சி மலை அடிவாரத்தில் இயற்கை எழில் சூழ்ந்த பகுதியாக அமராவதி அணை அமைந்துள்ளது. பொதுப்பணித்துறை சார்பில் அணைக்கரையில் பூங்காவும் அமைக்க ப்பட்டுள்ளது. கேரளாவிலுள்ள முக்கிய சுற்றுலா தலமான மூணாறுக்கு செல்லும் வழியில் இருப்பதால் அமராவதி அணை பூங்காவுக்கும், சுற்றுலா பயணிகளிடையே முன்பு வரவேற்பு இருந்தது.

    எனவே அப்பகுதியில் முதலை பண்ணை, அரிய வகை கள்ளிச்செடிகளை உள்ளடக்கிய கள்ளிப்பூங்கா, உயிரியல் பூங்கா, மலைவாழ் மக்களுக்கான விற்பனையகம் உள்ளிட்ட பல்வேறு சுற்றுலா அம்சங்கள் மேம்படுத்த ப்பட்டது. அணையில் படகு சவாரியும் துவக்கப்பட்டது.இவ்வாறு வார விடுமுறை நாட்களிலும் கோடை விடுமுறையின் போதும் பிசியாக இருந்த அமராவதி அணை மற்றும் பூங்கா தற்போது எட்டிப்பார்க்க ஆளில்லாமல் பரிதாப நிலையில் உள்ளது. காரணம் அணை பூங்காவில் பசுமை காணாமல் போய் நீருற்றுகள், நடைபாதை, சிலைகள் அனைத்தும் உடைந்து உள்ளே செல்லவே பயப்பட வேண்டியுள்ளது.

    உயிரியல் பூங்காவில் பறவைகள், விலங்குகள் எதுவும் இல்லாமல் வெறும் கட்டடம் மட்டுமே காணப்படுகிறது. சிறுவர்களுக்கான விளையாட்டு உபகரணங்கள் துருப்பிடித்து மாயமாகி உள்ளது.அணை பூங்காவை பராமரித்து மேம்படுத்த வேண்டும் என நீண்ட காலமாக கோரிக்கை விடுக்கப்பட்டு வருகிறது.

    குறிப்பிட்ட இடைவெளியில் பொதுப்பணித்துறைக்கு ஒதுக்கப்படும் குறைந்த அளவு நிதியிலும் எவ்வித முறையான பணிகளும் மேற்கொள்ளப்படுவதில்லை.ஒவ்வொரு முறையும் அமராவதிக்கு வந்து ஏமாற்றத்துடன் திரும்பிய சுற்றுலா பயணிகள் தற்போது அப்பகுதிக்கு செல்வதை தவிர்த்து விடுகின்றனர்.இனியாவது திருப்பூர் மாவட்ட நிர்வாகம் அணை பூங்காவை மேம்படுத்தவும், படகு சவாரி விடவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என சுற்றுலா பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். 

    ×