தஞ்சை ஸ்டெம் பூங்காவை சுற்றியுள்ள தார்சாலையை சீரமைக்க வேண்டும்

தொழில்நுட்பம், பொறியியல் மற்றும் கணிதம் பூங்கா (ஸ்டெம் பூங்கா) அமைக்கப்பட்டுள்ளது. பூங்காவில் வாகனம் நிறுத்துமிடத்தின் சுற்றுச்சுவர் பழுதடைந்து காணப்படுகிறது.
சேதமடைந்து காணப்படும் தார்சாலை.
சேதமடைந்து காணப்படும் தார்சாலை.
Published on

தஞ்சாவூர்:

தஞ்சை அருளானந்த நகரில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் ரூ.11.50 கோடி மதிப்பில் அறிவியல், தொழில்நுட்பம், பொறியியல் மற்றும் கணிதம் பூங்கா ( ஸ்டெம் பூங்கா ) அமைக்கப்பட்டுள்ளது.

இந்த ஸ்டெம் பூங்காவை வருகிற 27 ஆம் தேதி முதல் -அமைச்சர் மு.க.ஸ்டாலினால் திறந்து வைக்கப்பட உள்ளது. இந்நிலையில் இந்த பூங்காவில் வாகனம் நிறுத்தும் இடத்தின் சுற்று சுவர் பழுது அடைந்து காணப்படுவதாக பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர். மேலும் பூங்கா முன்பு அமைந்துள்ள சாலைகள் சேதமடைந்து காணப்படுவதாகவும் கூறுகின்றனர்.

எனவே பூங்கா திறக்க இன்னும் ஒரு வாரமே உள்ள நிலையில் அதற்குள் சுற்று சுவரை சீரமைத்து சாலையை சீர் செய்ய வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com