search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பராமரிப்பின்றி பாழடைந்து கிடக்கும் 10 பூங்காக்கள்
    X

    அண்ணாநகர், பெத்தானியாபுரத்தில் உள்ள சிறுவர் பூங்காக்களின் அவல நிலை.

    பராமரிப்பின்றி பாழடைந்து கிடக்கும் 10 பூங்காக்கள்

    • பராமரிப்பின்றி பாழடைந்து கிடக்கும் 10 பூங்காக்களை சீரமைக்க நடவடிக்கை எடுக்கப்படும்.
    • பணிகள் தொடங்கிய நாளில் இருந்து 18 மாதங்க–ளில் முடிவடையும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    மதுரை

    கோவில் மாநகராக போற்றப்படும் மதுரையில் மக்களின் பொழுதுபோக்கு அம்சமாக திகழ்வது பூங்காக் கள் மட்டுமே. அரசின் பங்க–ளிப்போடு பிரமாண்ட–மாக அமைக்கப்படும் பூங்காங்கள் பல இன்று முறையான பராமரிப்பின்றி காணப்படு–கின்றன.

    மதுரை மாநகராட்சி, மாநகர பகுதிகளில் உள்ள பராமரிக்கப்படாமல் சிதி–லமடைந்து கிடக்கும் பூங்காக் களை கண்டறிந்து, அவற்றை சீரமைத்து, பசுமையை பாது–காக்கும் வகையில் மறு உரு–வாக்கம் செய்யும் பணியை தொடங்கி உள்ளது.

    குறிப்பாக இதில் பெத்தானியாபுரம் அம்மா பூங்கா, அண்ணாநகர் பூங்கா, ஜார்ஜ் ஜோசப் பூங்கா, பழங்காத்தம் பூங்கா உள்ளிட்ட பல்வேறு பூங்காக்கள் உரிய பராம–ரிப்பு இல்லாமல் மிகவும் மோசமான நிலையில் உள் ளன. மாநகராட்சிக்கு உட் பட்ட பகுதிகளில் மொத்தம் 199 பூங்காக்கள் உள்ளன. இதில் 80 பூங்காக்களில் பாதுகாப்பு கருதி வேலி அமைக்கப்பட்டுள்ளது. 34 பூங்காக்களுக்கு சுற்றுச்சுவர் அமைக்கப்பட்டுள்ளது. 33 பூங்காக்களுக்கு இன்னும் வேலி கூட அமைக்காமல் இன்னும் திறந்தவெளியா–கவே காட்சி அளிக்கிறது.

    இதுபற்றி பெத்தானியா–புரம் குடியிருப்பு வாசி ஒருவர் கூறுகையில், நகரில் உள்ள அம்மா குழந்தைகள் பூங்காவின் ஒரு பகுதியாக கட்டப்பட்ட பூங்காக்களில் பெத்தானியாபுரத்தில் உள்ள பூங்காவும் ஒன்று. கடந்த 3 ஆண்டுகளாக பூங்கா பராமரிப்பின்றி உள்ளது. பெரும்பாலும் மது அருந்துபவர்கள் மற்றும் பிற சட்டவிரோத செயல்க–ளின் ஈடுபடுவோரின் கூடா–ரமாக இந்த பூங்கா இருந்து வருகிறது என்றார்.

    இதுபற்றி மாநகராட்சி அதிகாரிகள் கூறுகையில், பாழடைந்த நிலையில் முதற் கட்டமாக 10 பூங்காக்கள் கண்டறியப்பட்டு புதுப்பிக் கப்பட இருக்கிறது. அதன் ஒரு பகுதியாக பழங்காநத்தம் மற்றும் பசுமை குடில் பூங் காக்கள் ரூ.1.5 கோடி செல–வில் புதுப்பிக்கப்படும்.

    அதுமட்டுமின்றி, பயன்ப–டுத்தப்படாத மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளை கண்ட–றிந்து, அதனை சிறுவர்க–ளுக்கான விளையாட்டு உபகரணங்கள் கொண்ட பூங்காவாக மாற்ற, குடிமைப் பணித்துறை முடிவு செய் துள்ளது. நமக்கு நாமே திட்டத்தின் கீழ் குடியிருப் ேபார் நலச்சங்கங்கள் உதவி–யுடன் வேலி அமைக் கப் பட்ட பூங்காக்கள் மேம்ப–டுத் தப்பட உள்ளன.

    இதுகுறித்து மேயர் இந்தி–ராணி கூறும்போது, மாநக–ராட்சி பட்ஜெட்டில் பூங்காக் களை சீரமைக்க திட்டமிட் டுள்ளோம். அதன் ஒரு பகுதியாக பழகாநத்தம் பூங்கா ரூ.75 லட்சம் செலவி–லும், பசுமை குடில் பூங்கா ரூ.35 லட்சம் செலவிலும் சீரமைக்கப்படும்.

    இதேபோல், மாநகர பகுதிகளில் மோசமாக பரா–மரிக்கப்படும் பூங்காக்கள் குறித்து பரிந்துரை செய்ய அனைத்து கவுன்சி–லர்கள் மற்றும் மண்டல தலைவர்க–ளுக்கு அறிவுறுத்தப்பட்டுள் ளது என்று கூறினார்.

    கடந்த 2022 நவம்பரில், பொதுப் பூங்காக்களை வசதிகள் மற்றும் பொது பொழுதுபோக்கிற்கான இடமாக கருதாமல், சமூக மற்றும் சூழலியல் தேவை–யாக மதிப்பதும், மாற்றுவதும் அவசியம் என்று கருதி, மதுரை ஐகோர்ட்டு மாநக–ராட்சிக்கு உத்தரவிட்டது. அதன்படி 199 பூங்காங்கள் முறையான பராமரிப்பை உறுது செய்துள்ளது. வண்டி–யூர் தெப்பக்குளத்தை அழகு–படுத்தும் பணிகள் இந்த மாத (ஜூலை) இறுதிக்குள் தொடங்கும். இதற்காக ரூ.41.2 கோடி நிதி ஒதுக்கி தனியார் நிறுவனத்துக்கு டெண்டர் விடப்பட்டுள்ளது. மேலும் 2 புதிய பூங்காக் கள் அமைக்கவும், அதற்கான பணிகள் தொடங்கிய நாளில் இருந்து 18 மாதங்க–ளில் முடிவடையும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    Next Story
    ×