என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
நகராட்சி பூங்காவில் மின் வயர்கள் தாழ்வாக செல்லும் அபாயம்
- நகராட்சி பூங்காவில் மின் வயர்கள் தாழ்வாக செல்கிறது.
- பூங்காவிற்கு வரும் குழந்தைகள் திறந்த வெளி குடிநீர் வால்வு பள்ளங்களில் தவறிவிழும் வாய்ப்பு உள்ளது.
மானாமதுரை
சிவகங்கை மாவட்டம் மானாமதுரை கீழ்கரை பகுதியில் உள்ள சுந்தரபுரம் தெருவில் நகராட்சி சிறுவர் பூங்கா உள்ளது. இதனை சுற்றி சட்டமன்ற உறுப்பினர் அலுவலகம், நூலகம், வணிக வளாகத்துடன் கூடிய குடிநீர் மேல்நிலை தொட்டி உள்ளது.
குறுகிய இடத்தில் அமைந்துள்ள இந்த பூங்கா வில் குடிநீர் குழாய்கள் திறக்க வால்வு பள்ளங்கள் 3 இடத்தில் மூடப்படாமல் உள்ளது. குழந்தைகள் பயன்படுத்தும் விளையாட்டு உபகரணங்கள் அருகில் மிகவும் தாழ்வான நிலையில் அறுந்து தொங்கும் மின் சப்ளை செல்லும் மின்சார வயர்கள் செல்கிறது.
தினமும் மாலை நேரங்க ளில் மற்றும் விடுமுறை நாட்களில் பூங்காவிற்கு வரும் குழந்தைகள் திறந்த வெளி குடிநீர் வால்வு பள்ளங்களில் தவறிவிழும் வாய்ப்பு உள்ளது.
எனவே நகராட்சி நிர்வாகம் தாழ்வாக செல்லும் மின்சார வயர்களை பூங்கா வழியே பயன்படுத்தாமல் மாற்று வழியே பயன்படுத்தி திறந்த வெளி பள்ளங்களை மூடி பூங்காவிற்க்கு கூடுதல் இடம் ஒதுக்கி விரிவாக்கம் செய்ய வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்