search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "karunanidhi name"

    • கலைஞர் நூற்றாண்டு பூங்காவை அமைச்சர் பெரியகருப்பன் திறந்து வைத்தார்.
    • பூங்காவிற்கு முன்னாள் முதல்வர் கருணாநிதி பெயர் சூட்டப்பட்டுள்ளது.

    மானாமதுரை

    சிவகங்கை மாவட்டம் திருப்புவனத்தில் அமைக்கப்பட்டுள்ள கலைஞர் நூற்றாண்டு பூங்கா திறப்பு விழா நடந்தது. மாவட்ட வருவாய் அலுவலர் மணிவண்ணன் தலைமை தாங்கினார். தமிழரசி எம்.எல்.ஏ. முன்னிலை வகித்தார். விழாவில் அமைச்சர் பெரியகருப்பன் கலந்து கொண்டு பூங்காவை திறந்து வைத்தார்.

    பின்னர் அவர் பேசிய தாவது:-

    திருப்புவனம் பேரூராட்சி பகுதியில் பல்வேறு வளர்ச்சி பணிகள் பொதுமக்களுக்கு பயனுள்ள வகையில் தொடர்ந்து மேற்கொள்ளப் பட்டு வருகிறது. தற்போது கூடுதலாக இப்பேரூராட்சி பகுதியில் வளர்ச்சி பணி களை மேற்கொள்ளும் பொருட்டு, ரூ.30 லட்சம் மதிப்பீட்டில் பூங்கா ஒன்றும், பூங்காவிற்கு பெருமை சேர்க்கின்ற வகையில் முன்னாள் முதல்வர் கருணாநிதி பெயர் சூட்டப்பட்டுள்ளது.

    மேலும் இப்பேரூ ராட்சிக்குட்பட்ட பகுதி களில் மக்களுக்கும் கூடுதல் குடிநீர் தேவையை நிவர்த்தி செய்திடும் பொருட்டு அம்ருத் 2.0 திட்டத்தின் கீழ் குடிநீர் மேம்பாட்டு பணி களுக்கென ரூ.16.52 கோடி மதிப்பீட்டில் பணிகள் தொடங்கி வைக்கப்பட்டுள்ளது.

    இதுதவிர மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கியின் சார்பில், விவசாய பெருங்குடி மக்களுக்கு பயனுள்ள வகையிலும் பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு பல்வேறு வகையான கடனு தவிகளும் வழங்கப்பட்டு வருகிறது.

    இவ்வாறு அவர் பேசி னார்.விழாவில் திருப்புவனம் தேர்வுநிலை பேரூராட்சி பகுதியில் ரூ.30 லட்சம் மதிப்பீட்டில் முடிவுற்ற திட்டப்பணியினை அமைச்சர் பெரியகருப்பன் தொடங்கி வைத்தார். மேலும் ரூ.16.52 கோடி மதிப்பீட்டில் புதிய திட்டப்பணிக்கு அடிக்கல் நாட்டி 211 பயனாளிகளுக்கு ரூ.1 கோடியே 52 ஆயிரம் மதிப்பீட்டில் அரசின் நலத்திட்ட உதவிகளை வழங்கினார். இந்நிகழ்ச்சிகளில் சிவகங்கை மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கியின் மேலாண்மை இயக்குநர் ரவிச்சந்திரன், கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதி வாளர் ஜூனு, சிவகங்கை சரக துணைப்பதிவாளர் பாலசந்திரன், மத்திய கூட்டுறவு வங்கி பொது மேலாளர் மாரிச்சாமி, சிவகங்கை கோட்டாட்சியர் சுகிதா, திருப்புவனம் பேரூ ராட்சி தலைவர் சேங்கை மாறன், மானாமதுரை நகர் மன்ற தலைவர் மாரியப்பன் கென்னடி, உதவி இயக்குநர் (பேரூராட்சிகள்) ராஜா, பேரூராட்சி துணை தலை வர் ரகமத்துல்லாகான், பேரூராட்சி செயல் அலு வலர் ஜெயராஜ் மற்றும் 1-வது வார்டு உறுப்பினர் செல்வி ரவி உட்பட பலர் கலந்து கொண்டனர்.

    • மக்கள் நலன் சார்ந்த மசோதாக்களுக்கு அனுமதி அளிக்காத ஆளுநரை விடுவிக்க வேண்டும்.
    • மொத்தம் 114 தீர்மானங்கள் கொண்டுவரப்பட்டது.

    உடுமலை :

    உடுமலை நகர்மன்ற சாதாரண கூட்டம் அதன் தலைவர் மு. மத்தீன் தலைமையில் நடந்தது. இதில் ஆணையர் சத்தியநாதன் மற்றும் அனைத்து கவுன்சிலர்களும் பங்கேற்றனர். கூட்ட துவக்கத்தில் துணைத்தலைவர் கலைராஜன் திருக்குறளை வாசித்தார். நகராட்சி தலைவரின் நேர்முக உதவியாளர் ரஞ்சித் தீர்மானங்களை வாசித்தார். இதைத்தொடர்ந்து உடுமலை பொள்ளாச்சி சாலை சந்திப்பில் இருந்து திருப்பூர் வரை விரைவுச்சாலையாக மாற்றியமைக்க வலியுறுத்தி நகர்மன்ற தலைவர் மத்தீன் சிறப்பு தீர்மானம் கொண்டு வந்தார்.

    மேலும் உடுமலையில் புதிதாக கட்டப்பட்டு வரும் பேருந்து நிலையத்திற்கு கலைஞர் பெயர் வைக்க வேண்டும் .தமிழகத்தில் மக்கள் நலன் சார்ந்த மசோதாக்களுக்கு அனுமதி அளிக்காத ஆளுநரை விடுவிக்க வேண்டும் என்பது உள்ளிட்ட தீர்மானங்களை மூத்த கவுன்சிலரும் நகர தி.மு.க. செயலாளருமான வேலுச்சாமி கொண்டு வந்தார். மொத்தம் 114 தீர்மானங்கள் கொண்டுவரப்பட்டதில் ஒரு தீர்மானம் மட்டும் நிறுத்தி வைக்கப்பட்டு மற்றவை நிறைவேற்றப்பட்டன.

    புதுச்சேரியில் 2 சாலைகளுக்கு டாக்டர் கலைஞர் என்ற பெயர் சூட்டப்படும் என அறிவித்த முதலமைச்சர் நாராயணசாமிக்கு தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் நன்றி தெரிவித்துள்ளார். #DMK #MKStalin #Narayanasamy
    சென்னை:

    புதுச்சேரி முதல்-மந்திரி நாராயணசாமிக்கு நன்றி தெரிவித்து தி.மு.க. தலைவர் மு.க. ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். அதில் கூறியிருப்பதாவது:-

    தனது பொது வாழ்வில் புதுச்சேரி மக்களின் நல் வாழ்விற்காகவும், அவர்களது உரிமைகளுக்காகவும், தற்போது யூனியன் பிரதேசமாக உள்ள புதுவைக்கு, முழு மாநில அந்தஸ்து வழங்கப்பட வேண்டும் என்பதற்காகவும், தொடர்ந்து பாடுபட்ட தலைவர் கலைஞருக்குப் பெருமை சேர்த்து, அவருடைய நினைவைப் போற்றிடும் வகையில், புதுச்சேரியில் உள்ள இரண்டு முக்கிய சாலைகளுக்கு, தலைவர் கலைஞரின் பெயரை வைப்பது என்று முடிவு எடுத்துள்ள தங்களுக்கும் தங்கள் அமைச்சரவைக்கும் எனது மனமார்ந்த நன்றியினைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

    புதுச்சேரி 100 அடி சாலையில் உள்ள அன்னை இந்திரா காந்தி சிலை இந்தியாவின் இளந்தலைவர் ராஜீவ் காந்தி சிலை ஆகிய பகுதிகளுக்கு உட்பட்ட சாலைக்கும், காரைக்கால்- திருநள்ளாறு புறவழிச் சாலைக்கும் பட்டமேற்படிப்பு மையத்திற்கும் “டாக்டர் கலைஞர்” பெயர் சூட்டப்படும் என்று அமைச்சரவை முடிவு எடுத்திருப்பதற்கும், புதுச்சேரி பல்கலைக்கழகத்தில் தலைவர் கலைஞர் பெயரில் ஒரு இருக்கை அமைக்க முடிவு செய்துள்ளதற்கும், தி.மு.க.வின் சார்பில், பாராட்டுதலையும் நன்றியையும் தெரிவித்துக் கொள்கிறேன்.


    அதேவேளையில், பெரிதும் சிறப்பு வாய்ந்ததும் என்றென்றும் நிலைத்து நிற்கப் போவதுமான, இந்த முடிவினை எடுப்பதற்கு ஆதரவளித்த அமைச்சரவைக்கும், புதுச்சேரி மக்களுக்கும் தி.மு.க. என்றைக்கும் உணர்வுபூர்வமாகத் துணை நிற்கும் என்றும், தலைவர் கலைஞரின் வழியில் அயராது புதுச்சேரி மக்களின் நலன்களுக்காக தி.மு.க. குரல் கொடுக்கும்.

    தலைவர் கலைஞரின் அரசியல் வாழ்க்கை வரலாற்றில், மறக்க இயலாத இடத்தை புதுச்சேரி பெற்று இருக்கிறது.

    இவ்வாறு மு.க.ஸ்டாலின் எழுதியுள்ளார். #DMK #MKStalin #Narayanasamy
    ×