என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "பாலியல் வன்கொடுமை"
- நிலப்பிரச்சனைக்கு பழிவாங்கும் நடவடிக்கையாக பாலியல் சித்ரவதை நடந்திருப்பது தெரியவந்திருக்கிறது.
- விசாரணை அறிக்கையை விரைவில் தாக்கல் செய்யும்படி காவல்துறைக்கு மகளிர் ஆணையம் நோட்டீஸ் அனுப்பி உள்ளது.
புதுடெல்லி:
தலைநகர் டெல்லியில் நிர்பயா சம்பவம் போன்று மீண்டும் ஒரு கொடூர சம்பவம் நடந்துள்ளது. டெல்லியைச் சேர்ந்த 36 வயது பெண் ஒருவரை, கூட்டு பாலியல் பலாத்காரம் செய்தது வெளிச்சத்திற்கு வந்துள்ளது.
காசியாபாத் ஆசிரமம் சாலையில் சாக்கு மூட்டையில் உயிரோடு பெண் ஒருவர் கிடப்பதாக போலீசுக்கு தகவல் கிடைத்தது. போலீசார் சம்பவ இடத்திற்குச் சென்று அந்த பெண்ணை மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர். அவருக்கு நடத்தப்பட்ட மருத்துவ பரிசோதனையில், அவர் இரண்டு நாட்களாக கூட்டு பாலியல் வன்கொடுமைக்கு ஆளானதும், கொடூரமாக சித்ரவதை செய்யபபட்டதும் தெரியவந்தது.
நந்த் நகரைச் சேர்ந்த அந்த பெண்ணுக்கு சிலருடன் நிலப்பிரச்சனை இருந்ததும், அதற்கு பழிவாங்கும் நடவடிக்கையாக இந்த பாலியல் சித்ரவதை நடந்திருப்பதும் தெரியவந்திருக்கிறது.
கடந்த ஞாயிறு அன்று தன் சகோதரர் பிறந்தநாள் விழாவை கொண்டாட வெளியில் சென்ற அந்த பெண், இரவு 9.30 மணியளவில் வீடு திரும்புவதற்காக பேருந்து நிறுத்தம் வந்துள்ளார். பேருந்துக்காக காத்திருந்த அவரை, 5 பேர் கொண்ட கும்பல் காரில் கடத்தி 2 நாட்களாக பாலியல் வன்கொடுமை செய்ததுடன், மர்ம உறுப்பில் இரும்பு கம்பியால் குத்தி சித்ரவதை செய்துள்ளனர். பின்னர் அவரது கை, கால்களை கட்டி சாக்குமூட்டையில் வைத்து சாலையில் வீசிவிட்டு தப்பிச் சென்றுள்ளனர்.
இந்த விவகாரம் மாநில மகளிர் ஆணையத்திற்கு தெரியவர, பூதாகரமாக உருவெடுத்தது. மகளிர் ஆணையம் அழுத்தம் கொடுத்த நிலையில், காவல்துறை தீவிர விசாரணையில் இறங்கியது. தன்னை சீரழித்த 5 பேர் குறித்த தகவலை பாதிக்கப்பட்ட பெண் தெரிவித்தார். அவர்களில் 4 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். விசாரணை அறிக்கையை விரைவில் தாக்கல் செய்யும்படி காவல்துறைக்கு மகளிர் ஆணையம் நோட்டீஸ் அனுப்பி உள்ளது.
நிர்பயா சம்பவத்தை மீண்டும் நினைவுபடுத்தும் வகையில் இப்போது நடந்துள்ள பாலியல் வன்கொடுமை சம்பவம் பெண்களிடையே கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
- பள்ளியின் சம்பந்தப்பட்டவர்களின் போட்டோக்களை காண்பித்து சிறுமியிடம் அடையாளம் காணும் நடவடிக்கையில் போலீசார் ஈடுபட்டனர்.
- ஆசிரியர் காமராஜ் மீது போக்சோ உள்பட 5 பிரிவுகளின் வழக்கு பதிவு செய்யப்பட்டு கைது செய்தனர்.
சேத்துப்பட்டு:
திருவண்ணாமலை மாவட்டம் சேத்துப்பட்டு அடுத்த மருத்துவம் பாடி கிராமத்தை சேர்ந்தவர் காமராஜ். உலகம்பட்டு அரசு பள்ளியில் கணித ஆசிரியராக பணியாற்றி வருகிறார்.
இவரது மனைவி பிரபாவதி கங்கை சூடாமணி கிராமத்தில் தனியார் மெட்ரிக் பள்ளி நடத்தி வருகிறார். இவர் அந்த பள்ளியின் தாளாளராக உள்ளார். காமராஜ் அடிக்கடி அவரது மனைவி நடத்தும் பள்ளிக்கு வந்து நிர்வாகத்தை கவனித்து வந்துள்ளார்.
அந்தப் பள்ளியில் யுகேஜி படிக்கும் 4 வயது சிறுமிக்கு திடீரென உடல் நலம் பாதிக்கப்பட்டது. சிறுமிக்கு அதிகளவில் ரத்தப்போக்கு ஏற்பட்டதால் சேத்துப்பட்டு மற்றும் போளூரில் உள்ள தனியார் ஆஸ்பத்திரிகளில் கடந்த 2 வாரங்களுக்கு முன்பு சிகிச்சை பெற்றனர்.
ஆனாலும் உடல் நிலையில் முன்னேற்றம் ஏற்படவில்லை. இதனைத் தொடர்ந்து வேலூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிறுமியை சேர்த்தனர். அங்கு சிறுமிக்கு சிகிச்சை அளித்த மருத்துவ குழுவினர் சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டு இருப்பதை தெரிவித்தனர்.
இதுகுறித்து திருவண்ணாமலை மாவட்ட சைல்டு லைன் பிரிவுக்கு தனியார் மருத்துவமனை நிர்வாகம் தகவல் தெரிவித்தது.
அவர்கள் திருவண்ணாமலை போலீஸ் சூப்பிரண்டு கார்த்திகேயனுக்கு தகவல் தெரிவித்தனர். இதற்கிடையில் போளூர் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் சிறுமியின் பெற்றோர் புகார் அளித்தனர். இதில் பள்ளிக்கு சென்ற சிறுமியை சாக்லேட் கொடுத்து தொடர்ந்து பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கியதாக தெரிவிக்கப்பட்டது.
அதன் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
இதையடுத்து பள்ளியின் சம்பந்தப்பட்டவர்களின் போட்டோக்களை காண்பித்து சிறுமியிடம் அடையாளம் காணும் நடவடிக்கையில் போலீசார் ஈடுபட்டனர்.
அப்போது சிறுமியை பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கியது பள்ளி தாளாளர் பிரபாவதியின் கணவர் காமராஜ் என்பது தெரிய வந்தது.
இந்த தகவல் வெளியானதும் நேற்று பள்ளி முன்பு பொதுமக்கள் திரண்டனர். இதனால் பதட்டமான சூழ்நிலை ஏற்பட்டது. பள்ளி வளாகம் முன்பு போலீசார் குவிக்கப்பட்டனர்.
இதற்கிடையே திருச்செந்தூர் சென்று விட்டு வீட்டுக்கு திரும்பி கொண்டிருந்த காமராஜை திருவண்ணாமலை மாவட்ட போலீசார் கொடுத்த தகவலின் பெயரில் எட்டயபுரம் போலீசார் மடக்கி பிடித்தனர். அவரை போளூருக்கு அழைத்து வந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருவண்ணாமலை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு கார்த்திகேயன் தலைமையிலான போலீசார் நேற்று பள்ளிக்கு சென்று விசாரணை நடத்தினர். அங்குள்ள ஆசிரியர்கள் பெற்றோர் ஊழியர்கள் ஆகிய இடம் தனித்தனியாக விசாரணை நடத்தப்பட்டது.
ஆசிரியர் காமராஜ் மீது போக்சோ உள்பட 5 பிரிவுகளின் வழக்கு பதிவு செய்யப்பட்டு கைது செய்தனர். மேலும் இந்த சம்பவத்தில் தொடர்புடைய அரசு பள்ளி ஆசிரியர் காமராஜ் மனைவியும் பள்ளி தாளாளருமான பிரபாவதியும் கைது செய்யப்பட்டார். ஆசிரியர் காமராஜை சஸ்பெண்டு செய்தனர்.
இந்த சம்பவத்தை தொடர்ந்து தனியார் பள்ளி முன்பு 200-க்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.
அங்கு பதட்டமான சூழ்நிலை நிலவியது. ஆசிரியர் காமராஜ், தாளாளர் பிரபாவதியிடம் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- பாலியல் வன்கொடுமையால் சிறுமிக்கு குழந்தை பிறந்ததும் அதனை தத்து கொடுக்க கூறி மிரட்டி உள்ளனர்.
- குற்றவாளி முகமது ரஜி என்பவரே பாதிக்கப்பட்ட பெண்ணின் உயிரியல் தந்தை என உறுதியானது.
லக்னோ:
உத்தர பிரதேசத்தில் பாலியல் வன்கொடுமையால் பிறந்த குழந்தை, 28 ஆண்டுகளுக்கு பின் தன் தாயை கண்டுபிடித்து நீதி கிடைக்க போராடிய சம்பவம் நடந்துள்ளது.
உத்தர பிரதேசத்தின் ஷாஜகான்பூரில் ஒரு குடும்பம் வசித்து வந்துள்ளது. அவர்களுடன் முகமது ரஜி என்ற குட்டு ஹசன் மற்றும் நாக்கி ஹசன் ஆகிய இரு சகோதரர்கள் நெருங்கி பழகியுள்ளனர். ஓரளவு பரிச்சயம் ஆனதும், அந்த குடும்பத்தினரின் நம்பிக்கையை அவர்கள் பெற்றுள்ளனர். அதனை பயன்படுத்தி கொண்டு அந்த குடும்பத்தில் இருந்த சிறுமியை 2 பேரும் பல முறை பாலியல் வன்கொடுமை செய்திருக்கின்றனர். இதில், 12 வயதில் சிறுமி கர்ப்பமுற்றுள்ளார். சிறுமிக்கு குழந்தை பிறந்ததும், அதனை தத்து கொடுக்க கூறி மிரட்டிய முகமது ரஜி, போலீசுக்கு போக கூடாது என எச்சரிக்கையும் விடுத்து உள்ளார். இந்த சம்பவம் 1994ல் நடந்துள்ளது.
சம்பவம் நடந்து பல ஆண்டுகள் ஆனது. 2021-ம் ஆண்டு அந்த சிறுமியின் மகன், பாதிக்கப்பட்ட தனது தாயாரை அலைந்து, தேடி கண்டுபிடித்து உள்ளார். நடந்த குற்ற சம்பவத்திற்கு நீதி கிடைக்க முயற்சிக்கும்படி கூறியுள்ளார். இதனை தொடர்ந்து 2021-ம் ஆண்டு மார்ச் 4ல் ஷாஜகான்பூரில் எப்.ஐ.ஆர். பதிவு செய்யப்பட்டது. வழக்கு கோர்ட்டுக்கு சென்றது.
இதன்பின் நடந்த விசயங்களை பற்றி ஷாஜகான்பூர் சிறப்பு போலீஸ் சூப்பிரெண்டு எஸ். ஆனந்த் விவரிக்கிறார். அவர் கூறியதாவது:-
2021-ம் ஆண்டு மார்ச் 4ல் ஷாஜகான்பூரில் எப்.ஐ.ஆர். பதிவு செய்யப்பட்ட பின்னர், கோர்ட்டு உத்தரவின்படி, இந்த குற்ற சம்பவம் எனது கவனத்திற்கு வந்தது. குற்றவாளிகளின் முழுமையான பெயர் தெரியவில்லை. அவர்களது முகவரியும் அப்போது பதிவு செய்யப்படவில்லை. இது முற்றிலும் ஒரு பழைய வழக்கு. ஆனால், புகாரானது உண்மை தன்மை வாய்ந்தது போல் தோன்றியது. அந்த பெண்ணுக்கு நீதி கிடைக்க உதவ வேண்டும் என நாங்கள் விரும்பினோம். ஏனெனில் குழந்தை பருவத்தில் இருந்தே அவர் பல வகையில் பாதிக்கப்பட்டு போயுள்ளார். ஒரு விரிவான தேடுதலுக்கு பின்னர், குற்றவாளிகளான சகோதரர்களை நாங்கள் அடையாளம் காண முடிந்தது. அவர்கள் ஹடாப் பகுதியில் சுதந்திரமாக வாழ்ந்து வந்தது தெரிய வந்தது. அவர்களை அதிகாரிகள் நெருங்கி விசாரிக்கும்போது, அப்படி ஒரு பெண்ணை வாழ்க்கையில் சந்தித்ததே இல்லை என அவர்கள் கூறியுள்ளனர்.
இதனை தொடர்ந்து மரபணு சோதனை நடந்தது. 2021-ம் ஆண்டு ஜூலையில் ஆய்வகத்திற்கு மாதிரிகள் அனுப்பப்பட்டன. இந்த ஆண்டு ஏப்ரல் மாதத்தில்தான் முடிவுகள் வெளிவந்தன. அதில், குற்றவாளி முகமது ரஜி என்பவரே பாதிக்கப்பட்ட பெண்ணின் மகனுக்கு உயிரியல் தந்தை என உறுதியானது. உடனடியாக கோர்ட்டில் இருந்து வாரண்ட் பெற்று அவரை கைது செய்ய காவலர்கள் முயன்றனர். ஆனால், அதற்கு முன்பே அவர்கள் தப்பி விட்டனர். கிட்டத்தட்ட வழக்கு முடிவடையும் சூழலை நாங்கள் நெருங்கி இருந்தோம். இதனால், பல தனிப்படைகளை அமைத்து பல்வேறு இடங்களில் சகோதர்கள் இருவரையும் தேடினோம். இருவரின் இருப்பிடம் பற்றி அறிவதில் கண்காணிப்பு குழுவின் பணி முக்கியம் வாய்ந்தது. பல ஆண்டுகளுக்கு பின்னர் அவர்களை கண்டறிவது அவ்வளவு எளிய பணியல்ல.
இறுதியாக, முகமது ரஜி கைது செய்யப்பட்டு நேற்று முன்தினம் சிறைக்கு கொண்டு செல்லப்பட்டார். 2வது குற்றவாளியான, நாக்கி ஹசன் ஒடிசாவில் மறைந்துள்ளார் என கூறப்படுகிறது. அவரை தேடும் பணி தொடர்கிறது.
இவ்வாறு சிறப்பு எஸ்.பி. கூறியுள்ளார்.
12 வயதில் பாலியல் வன்கொடுமைக்கு ஆளான தனது தாயை, தனித்து விடப்பட்ட அவரது மகன் 28 ஆண்டுகளுக்கு பின் தேடி கண்டுபிடித்து நீதி கிடைக்க உதவிய சம்பவம் அந்த பகுதியில் பரபரப்புடன் பேசப்பட்டுகிறது.
- விருத்தாசலத்தில் சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் வாலிபர் போக்சோவில் கைது செய்யப்பட்டார்.
- 17 வயது சிறுமியை காதலிப்பதாக கூறி சிறுமியை ஏமாற்றி பாலியல் வன்கொடுமை செய்துள்ளார்.
கடலூர்:
கடலூர் மாவட்டம் விருத்தாசலம் கார்கூடல் கிராமத்தைச் சேர்ந்த கதிர்வேல் என்பவரின் மகன் வெற்றிவேல் (20). இவர் விருத்தாசலம் பகுதியை சேர்ந்த 17 வயது சிறுமியை காதலிப்பதாக கூறி சிறுமியை ஏமாற்றி பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். இது குறித்து விருத்தாச்சலம் அனைத்து மகளிர் காவல்துறையினருக்கு வந்த புகாரின் பேரில் வெற்றிவேலை அழைத்து விசாரித்தனர். புகார் உறுதியான நிலையில் வெற்றிவேல் மீது வழக்கு பதிவு செய்து அவரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
உத்தரப்பிரதேசம் மாநிலம், நொய்டாவில் தனது தந்தை தன்னை கடந்த 3 ஆண்டுகளாக பாலியல் சித்ரவதை செய்ததாக 14 வயது சிறுமி காவல் நிலையத்தில் புகார் அளித்த சம்வபவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதைத்தொடர்ந்து சிறுமியின் தந்தை மீது வழக்கு பதிவு செய்த போலீசார் அவரை அதிரடியாக கைது செய்தனர்.
இது தொடர்பாக போலீசார் கூறுகையில், பீகாரில் இருந்து கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் பிழைப்புக்காக நொய்டா வந்த சிறுமியின் குடும்பம் சிஜார்சி எனும் கிராமத்தில் தங்கி வாழ்ந்து வருகின்றனர். தினக்கூலி தொழிலாளியான சிறுமியின் தந்தை போதைப்பழக்கத்திற்கு அடிமையானவர். பெற்ற மகளை வீட்டில் அடைத்து வைத்து அவர் கடந்த மூன்று ஆண்டுகளாக கற்பழித்து வந்துள்ளார்.
அவரது தந்தையிடம் இருந்து கடந்த 2 தினங்களுக்கு முன்னர் தப்பித்த சிறுமி உதவிக்காக காவல் நிலையம் வந்தடைந்தார். அங்கு அவர் அளித்த புகாரின் அடிப்படையில் தந்தை கைது செய்யப்பட்டுள்ளார். தந்தையின் இந்த கொடூர செயல் சிறுமியின் தாய்க்கும் தெரிந்தே நடந்துள்ளது. ஆனால் இது குறித்து வெளியில் தெரியக்கூடாது என அவர் மிரட்டியதால் தாயும், சிறுமியும் இது பற்றி வெளியில் சொல்ல முடியாமல் அமைதியாக இருந்துவிட்டனர் என போலீசார் தெரிவித்தனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்