என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
ரெவாரி கூட்டு பாலியல் பலாத்காரம் - போலீசார் தேடி வந்த ராணுவ வீரர் உள்பட 2 பேர் கைது
Byமாலை மலர்23 Sep 2018 6:52 AM GMT (Updated: 23 Sep 2018 6:52 AM GMT)
அரியானா மாநிலம் ரெவாரியில் மாணவியை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் தேடப்பட்ட ராணுவ வீரர் உள்ளிட்ட 2 பேரை போலீசார் இன்று கைது செய்யப்பட்டுள்ளனர். #RewariGangRape
சண்டிகர்:
அரியானா மாநிலம் மகேந்திரகர் மாவட்டத்தில் உள்ள குருகிராம் நகரில் வசித்து வரும் 19 வயது இளம்பெண் சி.பி.எஸ்.இ. தேர்வில் முதல் மதிப்பெண் பெற்றதற்காக பிரதமர் மோடியிடம் விருது பெற்றவர்.
அவர், கடந்த 15-ம் தேதி சிறப்பு பயிற்சி வகுப்புக்கு சென்று விட்டு வீட்டுக்கு திரும்பும் போது வழிமறித்த மூன்று வாலிபர்கள் ஒரு காரில் கடத்தி சென்றனர். அவரை ஆள்நடமாட்டம் இல்லாத பகுதிக்கு அழைத்து சென்றுள்ளனர். அங்கு அவரை அந்த மூவரும் கூட்டு பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர். அங்கு வயலில் இருந்த மற்றவர்களும் இளைஞர்களுடன் சேர்ந்து அந்த பெண்ணை பலாத்காரம் செய்துள்ளனர்.
அப்போது அந்த பெண் சுயநினைவை இழக்கவே, அவரை பேருந்து நிலையத்தில் கொண்டு வந்து தள்ளி விட்டு சென்றுள்ளனர். இது குறித்து அந்த பெண் தன்னை பலாத்காரம் செய்தவர்கள் அதே ஊரை சேர்ந்தவர்கள் என தெரிவித்துள்ளார்.
இந்த விவகாரம் ஊடகங்களில் வெளியானதை அடுத்து விழிப்படைந்த காவல்துறை குற்றவாளிகளை தேடும் பணியில் இறங்கியது. பங்கஜ், மணிஷ், நிஷ்ஷு ஆகிய மூன்று பேரும் முக்கிய குற்றவாளிகள் என அறிவிக்கப்பட்டனர். இதில் பங்கஜ் என்ற முக்கிய குற்றவாளி ராஜஸ்தான் பாதுகாப்பு படையில் பணியாற்றி வருபவர் என தெரியவந்து உள்ளது.
இதனை அடுத்து, நிஷ்ஷு மற்றும் அவருக்கு உதவி செய்ததாக சஞ்சிவ் என்ற மருத்துவர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். பங்கஜ் மற்றும் மணிஷ் ஆகியோரை போலீசார் தீவிரமாக தேடி வந்த நிலையில், இன்று அவர்கள் இருவரும் கைது செய்யப்பட்டுள்ளதாக அரியானா போலீசார் தெரிவித்துள்ளனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X