search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பழங்குடியினர்"

    • முதன்முறையாக காணிக்கர் சாதி சான்றிதழ் வழங்கப்பட்டது.
    • 15 பேருக்கு பழங்குடியினர் (எஸ்.டி) என சான்றிதழ் வழங்கப்பட்டது.

    பரமக்குடி

    ராமநாதபுரம் மாவட்டத்தில் நரிக்குறவர் இன மக்களுக்கு முதல்முறையாக காணிக்கர் என சாதி சான்றிதழ் வழங்கப்பட்டது. தமிழகத்தில் கன்னியாகுமரி மாவட்டத்தில் நரிக்குறவர் சமுதாயத்தைச் சேர்ந்தவர்களுக்கு காணிக்கர் என ஜாதி சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது.

    இதனை அடுத்து ராமநாதபுரம் மாவட்டத்தில் வசிக்கும் நரிக்குறவர் இன மக்களுக்கும் பழங்குடியினர் பிரிவில் காணிக்கர் என சாதி சான்றிதழ் வழங்க வேண்டும் என கோரிக்கை வைக்கப்பட்டது. இதனை அடுத்து பரமக்குடி சார் ஆட்சியில் அலுவலகத்தில் 17 நபர்களுக்கு காணிக்கர் என சாதி சான்றிதழ் வழங்கப்பட்டது. அதேபோல் 15 பேருக்கு பழங்குடியினர் (எஸ்.டி) என சான்றிதழ் வழங்கப்பட்டது. பரமக்குடி எம்.எல்.ஏ, முருகேசன் காணிக்கர் சாதி சான்றிதழை வழங்கினார். இதில் பரமக்குடி உதவி ஆட்சியாளர் அப்தாப் ரசூல், பரமக்குடி தாசில்தார் ரவி, கமுதி தாசில்தார் சேதுராமன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். ராமநாதபுரம் மாவட்டத்தில் முதல்முறையாக நரிக்குறவர் இன மக்களுக்கு காணிக்கர் என ஜாதி சான்றிதழ் வழங்கப்பட்டதால் மிகுந்த மகிழ்ச்சி அடைந்ததுடன் தமிழக அரசுக்கு நன்றி தெரிவித்தனர்.

    • ராமநாதபுரத்தில் பழங்குடியினர் சான்று சிறப்பு முகாம் நடந்தது.
    • சான்றிதழ் வழங்க விரைந்து நடவடிக்கை எடுக்கப்படும் என வருவாய்த்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

    பரமக்குடி

    பரமக்குடி அருகே வைகை நகர், லீலாவதி நகர், வேந்தோணி உள்ளிட்ட பகுதிகளில் நரிக்குறவர் இனத்தைச் சேர்ந்த மக்கள் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு குடும்ப அட்டை, வாக்காளர் அட்டை, ஆதார் அட்டை உள்ளிட்டவை இல் லாததால் ஜாதி சான்றிதழ் பெறுவதில் மிகவும் சிரமம் பெற்றனர்.

    இதனை அடுத்து நரிக் குறவர் இன மக்கள் பழங் குடியினர் என சாதி சான்றி தழ் பெறுவதற்கு ஆவணங் களை மாற்றுவதற்கான சிறப்பு முகாம் பரமக்குடி தாலுகா அலுவலகத்தில் நடைபெற்றது. தாசில்தார் ரவி தலைமை வகித்தார். இதில் 100-க்கும் மேற்பட்ட பழங்குடியின சமுதாயத்தை சேர்ந்த மக்கள் ரேஷன் கார்டு, ஆதார் கார்டு, வாக் காளர் அட்டை உள்ளிட்டவற் றில் மாற்றம் செய்வதற்காக தங்களது ஆவணங்களை சமர்ப்பித்தனர். இவர் களுக்கு பழங்குடியினர் சான்றிதழ் கிடைப்பதற்கு விரைந்து நடவடிக்கை எடுக்கப்படும் என வருவாய்த்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

    இந்த சிறப்பு முகாமில் வட்ட வழங்கல் அலுவலர் சம்பத், மண்டல தாசில்தார் அமர்நாத் மற்றும் கிராம நிர் வாக அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

    • குழந்தைகளை கடந்த ஒரு வாரமாக பள்ளிக்கு அனுப்பாமல் பள்ளி புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர்.
    • போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கலெக்டர் இங்கு நேரடியாக வந்து எங்களிடம் பேச்சு வார்த்தை நடத்த வேண்டும் என்று கூறினர்.

    சத்தியமங்கலம்:

    ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அடுத்துள்ள கடம்பூர் மலைப்பகுதியில் 50-க்கும் மேற்பட்ட மலை கிராமங்கள் உள்ளன. இவற்றில் மலையாளி இன மக்கள் அதிக அளவில் வசித்து வருகின்றனர்.

    கால்நடை வளர்ப்பு மற்றும் விவசாய பணியில் ஈடுபட்டு வரும் இம்மக்களுக்கு வருவாய் துறை மூலம் வழங்கப்படும் சாதி சான்றிதழில் இதர வகுப்பினர் (ஓசி) என வழங்கப்படுகிறது.

    இதே மலையாள இனத்தை சேர்ந்த மக்கள் சேலம் மற்றும் நாமக்கல் மாவட்டங்களில் வசித்து வருகின்றனர். அவர்களுக்கு அந்த மாவட்டங்களில் வருவாய் துறை மூலம் தாழ்த்தப்பட்ட பழங்குடியினர் (எஸ்டி)எனக்கு சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது.

    இதனால் கடம்பூர் மலைப்பகுதியில் வசிக்கும் மலையாளி இன மக்கள் தங்களுக்கு இதர வகுப்பினர் என சாதி சான்றிதழ் வழங்கப்படுவதற்கு பதிலாக தாழ்த்தப்பட்ட பழங்குடியினர் என சாதி சான்றிதழ் வழங்க வேண்டும் என பல ஆண்டுகளாக கோரிக்கை விடுத்தும் இதுவரை வழங்கப்படவில்லை. இதற்காக அவர்கள் பல்வேறு கட்ட போராட்டங்களிலும் ஈடுபட்டு வந்தனர்.

    இதனால் மலையாளி இனத்தை சேர்ந்த மலை கிராம மக்கள் அரசு பணி மற்றும் அரசிடமிருந்து கிடைக்கப்படும் உதவிகள் எதுவும் வராததால் உயர் கல்வி பயிலும் மாணவர்கள் தங்களுக்கான வாய்ப்புகள் இல்லாமல் தவித்து வருவதாக கடம்பூர் மலையாளி பழங்குடியின சங்கத்தை சேர்ந்த நிர்வாகிகள் கூறுகின்றனர்.

    இந்நிலையில் கடம்பூர் மலைப்பகுதியில் வசிக்கும் மலையாளி இன மக்கள் தாழ்த்தப்பட்ட பழங்குடியினர் சான்றிதழ் வழங்க வலியுறுத்தி தங்கள் குழந்தைகளை கடந்த ஒரு வாரமாக பள்ளிக்கு அனுப்பாமல் பள்ளி புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர்.

    நேற்று காலை கடம்பூர் பஸ் நிலையம் அருகே மிகப்பெரிய அளவில் சாமியான பந்தல் அமைத்து அதில் பள்ளி மாணவர்கள் மற்றும் அவர்களது பெற்றோர்கள் என 2000-க்கும் மேற்பட்ட மக்கள் பழங்குடியினர் சாதி சான்றிதழ் வழங்க வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    காலை 10 மணிக்கு தொடங்கிய போராட்டம் மதியம் 2 மணி வரை தொடர்ந்து நடைபெற்ற நிலையில் பேச்சுவார்த்தை நடத்த எந்த அதிகாரிகளும் முன்வராததால் ஆத்திரமடைந்த பள்ளி மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் கடம்பூர் பெட்ரோல் பங்க் அருகே சக்தி சாலையில் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

    இதுகுறித்து தகவல் அறிந்த கோபி ஆர்.டி.ஓ பிரியதர்ஷினி சம்பவ இடத்திற்கு வந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கலெக்டர் இங்கு நேரடியாக வந்து எங்களிடம் பேச்சு வார்த்தை நடத்த வேண்டும் என்று கூறினர்.

    இதனால் போராட்டம் இரவு வரை தொடர்ந்து நடந்தது. இரவில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜவகர் போராட்டம் நடத்திய பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போதும் சுமூகமான முடிவு ஏற்படவில்லை. தொடர்ந்து இரவு போராட்டம் நீடித்தது.

    இந்நிலையில் நள்ளிரவு 12.30 மணியளவில் கலெக்டர் ராஜகோபால் சுன்கரா கடம்பூருக்கு நேரடியாக வந்து பொது மக்களிடம் பேச்சு வார்த்தையில் ஈடுபட்டார். அப்போது பொதுமக்கள் எங்களுக்கு தாழ்த்தப்பட்ட பழங்குடியினர் சான்றிதழ் வழங்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தனர்.

    அதற்கு பதில் அளித்து பேசிய கலெக்டர் ராஜகோபால் சுன்கரா, இதற்கு முன்பு இருந்த கலெக்டர் ஏற்கனவே இது சம்பந்தமாக ஆய்வறிக்கையை மத்திய அரசிடம் அனுப்பி உள்ளார். நானும் உங்கள் கோரிக்கை குறித்து அரசிடம் பேசி அதற்கு தீர்வு காண நடவடிக்கை எடுப்பேன்.

    எனவே உங்கள் போராட்டத்தை உடனடியாக கைவிடுங்கள் என்றார். இதனை ஏற்று பொதுமக்கள் தங்களது போராட்டத்தை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர்.

    இதனால் 14 மணி நேரம் நடந்த போராட்டம் முடிவுக்கு வந்தது.

    • 60 சதவீத மானியமாக அதிகபட்சம் ரூ.1.80 லட்சமும் வழங்கப்படும்.
    • விவசாயிகள் மீன் வளர்ப்பு செய்து பயன் பெறலாம்.

    திருப்பூர் :

    ஆதிதிராவிடர்-பழங்குடியினர் 60 சதவீத மானியத்தில் பிரதான் மந்திரி மீன் வளமேம்பாட்டு திட்டங்களில் மீன் வளர்ப்பு செய்து பயன் பெறலாம் என திருப்பூர் மாவட்ட கலெக்டர் கிறிஸ்துராஜ் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- பிரதான் மந்திரி மீன் வளமேம்பாட்டுத் திட்டம் 2021-22 ம் ஆண்டிற்கான திட்டங்களின் கீழ் ரூ.3 லட்சம் மதிப்பீட்டில் புறக்கடையில் சிறிய அளவிலான அலங்கார மீன்வளர்ப்பு அலகு அமைக்க ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின பிரிவினருக்கு 60 சதவீத மானியமாக அதிகபட்சம் ரூ.1.80 லட்சமும் வழங்கப்படும்.

    பிரதான் மந்திரி மீன் வளமேம்பாட்டுத் திட்டம் 2021-22 ம் ஆண்டிற்கான திட்டங்களின் கீழ் 1.0 ஹெக்டேர் பரப்பளவில் புதிய மீன்குஞ்சு வளர்ப்பு அலகு அமைக்க 60 சதவீத மானியமாக அதிகபட்சம் ரூ.4.20 லட்சம் மானியமும், புதிய மீன் வளர்ப்பு அலகு அமைத்து உள்ளீட்டு செலவினம் வழங்க 60 சதவீத மானியமாக அதிக பட்சம் ரூ.6.60 லட்சம் மானியமும் வழங்கப்படும்.

    மேற்காணும் மீன்வளர்ப்பு திட்டங்களில் ஏதேனும் ஒன்றில் விவசாயிகள் மீன் வளர்ப்பு செய்து பயன் பெறலாம். எனவே விருப்பமுள்ளவர்கள் நல்ல தங்காள் ஓடை அணை, கோனேரிப்பட்டி, தாராபுரத்தில் இயங்கி வரும் மீன்வளஆய்வாளர் (தொலைபேசி எண். 89037 46476 அலுவலகத்தினை தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.

    மேலும் விவரங்களுக்கு ஈரோடு மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை உதவி இயக்குநர் அலுவலகம் எண்: 7-ம் தளம், ஈரோடு மாவட்ட கலெக்டர் அலுவலகம் கூடுதல் கட்டட வளாகம், பெருந்துறை ரோடு, ஈரோடு 638 011 தொலைபேசி எண்: 0424 2221912 யை தொடர்பு கொள்ளுமாறு கலெக்டர் கிறிஸ்துராஜ் ெதரிவித்துள்ளார்.

    • பழங்குடியினருக்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட ரூ.265 கோடி பயன்படுத்தப்படவில்லை.
    • பல்வேறு நலத்திட்டங்கள் முழுமையாக சென்றடையாமல் உள்ளது.

    மதுரை

    மதுரையைச் சார்ந்த சமூக ஆர்வலர் கார்த்திக் என்பவர் தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் பெற்ற பதிலில் கூறியிருப்ப தாவது:-

    கடந்த 2018-ம் ஆண்டு முதல் பழங்குடியினர் நலத்துறைக்கென்று பிரத்யேகமாக தமிழ்நாடு பழங்குடியினர் நலத்துறை மற்றும் இயக்குநரகம் உருவாக்கப்பட்டு செயல்பாட்டிற்கு வந்தது. இதன் தொடர்ச்சியாக 50 ஆண்டுகளுக்கும் மேலாக செயல்பட்டு வந்த பழங்குடி யினர் ஆன்றோர் மன்றத்தின் செயல்பாடுகள் மாற்றிய மைக்கப்பட்டு புதிய அர சாணை வெளியிடப் பட்டது.

    அதன்படி ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறையின் அமைச்சர் தலைவராக கொண்டு அவரின் கீழ் செயலர், இயக்குநர், சட்டமன்ற உறுப்பினர்கள், பழங்குடியின அலுவல்சாரா உறுப்பினர்கள், பழங்குடியினர் அல்லாத அலுவல்சாரா உறுப்பினர்கள் என்று மொத்தம் 20 பேர் கொண்ட நிபுணர்கள் குழு 2018 பிப்ரவரி மாதத்தில் நியமிக்கப்பட்டது.

    இந்த நிலையில் கடந்த 1.2.2021 அன்று இந்த மன்றத்தின் பதவி காலம் முடிவடைந்து. அதன் பின்னர் 27 மாதங்கள் கடந்து விட்ட நிலையில் இன்றுவரை ஆன்றோர் மன்றத்திற்கான கூட்டங்கள் எதுவும் நடைபெறவில்லை. இதனை தமிழ்நாடு பழங்குடியினர் நல இயக்கு நரகத்தின் பொது தகவல் அலுவலர் தகவல் அறியும் உரிமைச்சட்டத்தின் கீழ் அளித்துள்ள பதிலில் தெரிவித்துள்ளார்.

    வீட்டு மனைப்பட்டா, தாட்கோ கடன், குடிதண்ணீர் வசதி, மின்சார வசதி, சாலை வழி அமைத்தல், கல்வி நிலையங்கள் மருத்துவமனை அமைத்தல் போன்ற முக்கிய தேவை களை அறிந்து அவற்றை பூர்த்தி செய்வதற்கு அரசுக்கு ஆலோசனை வழங்குவது ஆன்றோர் மன்ற உறுப்பி னர்களின் பணியாகும்.

    இந்த நிலையில் ஆன்றோர் மன்றம் செயல் படாமல் உள்ளதால் பல்வேறு நலத்திட்டங்கள் முழுமையாக சென்றடையாமல் உள்ளது.சான்றாக தமிழ்நாடு அரசு பழங்குடியினர் நலத்துறை கடந்த 2018-19, 2019-20 மற்றும் 2020-21 ஆகிய 3 ஆண்டுகளில் மட்டும் ரூ.265 கோடி நிதி பயன்படுத்தாமல் அரசு கஜானாவிற்கே திருப்பி ஒப்படைப்பு செய்யப்பட்டு வனத்துறை, ஊரக வளர்ச்சி துறை உள்ளிட்ட துறைகளுக்கு பகிர்ந்தளிக்கப்பட்டுள்ளது.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • ஆதிதிராவிடர்-பழங்குடியின மக்கள் முதல்-அமைச்சருக்கு நன்றி தெரிவித்தனர்.
    • பொருளாதார கடன் திட்டம் போன்ற பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது.

    ராமநாதபுரம்

    தமிழ்நாடு அரசு ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் மக்களின் நிலையான வளர்ச்சியே அரசின் முதன்மையான நோக்கம் என்பதை கருத்தில் கொண்டு அவர்களின் வாழ்வாதாரத்தினை மேம்படுத்திடுகின்ற வகையில் பல்வேறு நலத்திட்டங்களை அறிவித்து அதனை திறம்பட செயல்படுத்தி வருகிறது.

    அதனடிப்படையில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடி இனத்தை சேர்ந்த ஏழை, எளிய மக்களை அனைத்து வகையிலும் சமூக பொருளாதார முன்னேற்றம் அடைய செய்ய வேண்டும் என்பதனை கருத்தில் கொண்டு ஆதிதிராவிடர் வீட்டு வசதி மற்றும் மேம்பாட்டுக்கழகத்தின் (தாட்கோ) மூலம் மகளிர் நிலம் வாங்கும் திட்டம் (பெண்கள் மட்டும்), நிலம் மேம்படுத்துதல் (இரு பாலருக்கும்), தொழில் முனைவோர் பொருளாதார மேம்பாட்டுத் திட்டம், இளைஞர்களுக்கான வேலைவாய்ப்பு திட்டம், மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கான பொருளாதார கடன் திட்டம் போன்ற பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது.

    இந்த திட்டத்தில் பயன்பெற்ற கலையனூர் கிராமத்தைச் சேர்ந்த சரவணாதேவி கூறும்போது, நான் தினசரி விவசாயக் கூலி வேலைக்கு சென்று அதில் கிடைக்ககூடிய வருவாயினை கொண்டு, எனது குடும்பத்தினருடன் வாடகை வீட்டில் வசித்து வருகிறேன்.

    இந்த நிலையில் தமிழக அரசின் தாட்கோவின் மூலம் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின மக்களுக்காக செயல்படுத்தப்பட்டு வரும் திட்டங்கள் குறித்து அறிந்து இளைஞர்களக்கான சுயவேலை வாய்ப்பு திட்டத்தின் கீழ் சொந்தமாக டிராக்டர் வாங்க இணையதளம் மூலம் விண்ணப்பித்தேன்.

    சம்பந்தப்பட்ட துறை அலுவலர்கள் விண்ணப்பத்தினை எனது இருப்பிடத்திற்கு வந்து ஆய்வு மேற்கொண்டு அதன் பின் டிராக்டர் வாங்கிட ரூ.9 லட்சத்து 90 ஆயிரம் கடனுதவி வழங்கினர். இதற்கு அரசு மானியமாக ரூ.2 லட்சத்து 25 ஆயிரம் கிடைத்தது. இதனைக் கொண்டு மாதம் ரூ.25 ஆயிரத்திற்கு மேல் வருவாய் ஈட்டி, வங்கிக்கு மாதந்தோறும் ரூ.5 ஆயிரம் செலுத்தி வருகிறேன்.

    டிராக்டர் பராமரிப்பு செலவினங்கள் போக ரூ.10 ஆயிரம் சேமித்திட முடிகிறது. இந்த திட்டத்தை தமிழக அரசுக்கு நன்றி. இதேபோல் பயன்பெற்ற பயனாளிகள் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு நன்றி ெதரிவித்தனர்.

    • அசாம் உள்ளிட்ட மாநிலங்களில் ‘ஈரி’ வகை பட்டுப்புழுக்களை வளர்த்து, பட்டு நூல் உற்பத்தியில் பழங்குடியினர் ஈடுபட்டு வருகின்றனர்.
    • பட்டுப்புழுக்களுக்கு ஆமணக்கு, மரவள்ளி இலைகள் உணவாக வழங்கப்படுகிறது.

    உடுமலை :

    இந்தியாவில், அசாம் உள்ளிட்ட மாநிலங்களில் 'ஈரி' வகை பட்டுப்புழுக்களை வளர்த்து, பட்டு நூல் உற்பத்தியில் பழங்குடியினர் ஈடுபட்டு வருகின்றனர்.பட்டுப்புழு வளர்ப்புக்கான முட்டைகளை அம்மாநில அரசே 26 உற்பத்தி மையங்கள் வாயிலாக பழங்குடியினருக்கு வழங்கி வருகிறது.

    இவ்வகை பட்டுப்புழுக்களுக்கு ஆமணக்கு, மரவள்ளி இலைகள் உணவாக வழங்கப்படுகிறது. வனப்பகுதியில் நிலவும் தட்பவெப்ப நிலை 'ஈரி' வகை பட்டுப்புழு வளர்ப்புக்கு உகந்ததாக உள்ளது. ஆனால் தமிழகத்தில் 'ஈரி' வகை பட்டுப்புழு வளர்ப்பு தொழில் குறித்த விழிப்புணர்வு இல்லை.

    இந்நிலையில் பழங்குடியினருக்கு நிரந்தர வருவாய் கிடைக்கவும், மத்திய அரசு வாயிலாக மானியத்திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. புழு வளர்ப்பு மனை கட்ட மொத்த மதிப்பான ஒரு லட்சம் ரூபாயில் 90 ஆயிரம் ரூபாய் மானியமாக வழங்கப்படுகிறது.இதே போல் வீரிய ரக ஆமணக்கு சாகுபடி, புழு வளர்ப்பு தளவாடங்கள், பண்ணை உபகரணங்களும் 90 சதவீத மானியத்தில் கொள்முதல் செய்து வழங்கப்படும்.சம்பந்தப்பட்ட பட்டு வளர்ச்சித்துறை உதவி இயக்குனர் அலுவலகத்தில் மானியத்துக்கு பழங்குடியினர் விண்ணப்பிக்கலாம்.

    • 60 குடும்பம் வீடுகள் இல்லாதது குறித்து ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்கப்படும் என சார் ஆட்சியர் தெரிவித்தார்.
    • அங்கன்வாடி மையத்தை சார் ஆட்சியர் ஐஸ்வர்யா ராமநாதன் ஆய்வு செய்தார்.

    திருவள்ளூர்:

    மீஞ்சூர் அடுத்த நந்தியம் பாக்கம் ஊராட்சியில் 150-க்கும் மேற்பட்ட பழங்குடியின குடும்பங்கள் உள்ளன. இவர்களின் ஜாதி சான்றிதழ், இருப்பிடம், அடிப்படை தேவைகள், உள்ளிட்டவைகள் குறித்து பொன்னேரி சார் ஆட்சியர் ஐஸ்வர்யா ராமநாதன் வீடு வீடாக சென்று ஆய்வு செய்தார்.

    அப்போது 60 குடும்பம் வீடுகள் இல்லாதது குறித்து ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார். முன்னதாக அதே பகுதியில் அங்கன்வாடி மையத்தில் 30-க்கும் மேற்பட்ட குழந்தைகள் படித்து வருவதாகவும் அங்கன்வாடி மையம் மிகவும் பழுதடைந்து மோசமான நிலையில் காணப்படுவதாகவும் பொதுமக்கள் தெரிவித்தனர். பின்னர் அங்கன்வாடி மையத்தை சார் ஆட்சியர் ஐஸ்வர்யா ராமநாதன் ஆய்வு செய்தார்.

    • கோக்கால் கிராமத்தில் கோலகலமாக தொடங்கியது.
    • திரளானோர் கலந்து கொண்டனர்.

    ஊட்டி,

    நீலகிரி மலைப்பகுதியில் கோத்தர், தோடர், பணியர், குரும்பர், காட்டுநாயக்கர், இருளர் என 6 இனங்களைச் சேர்ந்த பண்டைய பழங்குடினர் வசித்து வருகின்றனர்.

    கோக்கால் என்பது கோத்தர் குடியிருப்பின் பெயர். இந்தியாவிலேயே சோலூர், திருச்சுக்கடி, கொல்லிமலை, குந்தா கோத்தகிரி, மேல் கூடலூர், கோத்தகிரி, கீழ் கோத்தகிரி என 7 இடங்களில் மட்டுமே இவர்களின் சமுதாயத்தினர் வாழ்ந்து வருகின்றனர்

    எருமை மேய்த்தல், இரும்புப் பொருட்கள் மற்றும் மண்பாண்டங்கள் செய்தல், விவசாயம் ஆகியவை இவர்களின் தொழில். ஆரம்பத்தில் பாரம்பரிய சிறுதானியங்களான ராகி, சாமை, தினை, கம்பு போன்றவற்றை விளைவித்தனர் இப்போது கேரட், பீட்ரூட், உருளைக்கிழங்கு பயிரிட்டு வருகின்றனர்.

    இவர்கள் கடவுள் நம்பிக்கை, பாரம்பரியத்தை விட்டுக் கொடுக்க வில்லை. பெண்கள் மண்டூ செடியை தலையில் சூடிக்கொண்டு, துபிட்டி எனும் வெள்ளை புடவையை அணிந்து கொள்வதும், ஆண்கள் வேட்டி கட்டிக் கொண்டு வராடு என்கிற துணியை போர்த்திக் கொள்வதும்தான் இவர்களின் உடைக் கலாசாரம்.

    ஐனூர், அம்மனூர் தான் இவர்களின் குல தெய்வம். இந்த நிலையில் ஆண்டுதோறும் ஜனவரி மாதத்தில் 7 கோக்கால்களிலும் ஐனூர், அம்மனூர் கோவில் திருவிழா கோலாகலமாக நடக்கும். அதன்படி இந்த ஆண்டுக்கான திருவிழா சோலூர் ஊராட்சிக்கு உட்பட்ட கோக்கால் கிராமத்தில் கோலகலமாக தொடங்கியது.

    பாரம்பரிய சிறப்புடன் தொடங்கிய இந்த திருவிழாவில் திரளான கோத்தர் இன மக்கள் கலந்து கொண்டு தங்களின் பாரம்பரிய உடை அணிந்து ஆடி பாடி திருவிழாவை கொண்டாடினர். இதில் திரளானோர் கலந்து கொண்டனர். 

    • விண்ணப்பதாரர் மற்றும் குடும்பத்தினர் தாட்கோ திட்டத்தின்கீழ் இதுவரை மானியம் ஏதும் பெற்றிருக்க கூடாது.
    • விண்ணப்பதாரர் மற்றும் வணிகத்தை தொடர்வதற்கு முன் விண்ணப்பதாரர் நிறுவனத்திலிருந்து உணவு உரிமத்தை பெற வேண்டும்.

    கடலூர்:

    தாட்கோ மூலம் செயல்படுத்தப்படும் தொழில் முனைவோர் திட்டத்தில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின மக்களின் பொருளாதார வளர்ச்சியை ஊக்குவிக்கும் வகையில் ஆவின் பாலகம் அமைக்க மின் வாகனம் , குளிர்விப்பான் மற்றும் உறைவிப்பான் கொள்முதல் தாட்கோ மானியம் ரூ.90 ஆயிரம் மானியத்துடன் திட்டம் செயல்படுத்த அரசாணையிடப்பட்டுள்ளது. இதில் ஆதிதிராவிடர் இனத்தை சேர்ந்தவராக இருக்க வேண்டும். 18 முதல் 65 வயதிற்குள்ளவராக இருக்க வேண்டும். விண்ணப்பதாரர் மற்றும் குடும்பத்தினர் தாட்கோ திட்டத்தின்கீழ் இதுவரை மானியம் ஏதும் பெற்றிருக்க கூடாது. கூடுதல் செலவினத்தை ஈடு செய்யவும் மற்றும் அதிக பட்ச மானியத் தொகை சென்றடைய ஆதிதிராவிட தனிநபர்களுக்கான திட்டத் தொகையில் 30 சதவீதம் விழுக்காடு அல்லது அதிகபட்சமாக 2.25 இலட்சம் மானியம் விடுவிக்கப்படும்.

    ஆவின் பாலகம் அமைக்க தேர்ந்தெடுக்கப்படும் கடையின் இடம் குறைந்த பட்சம் 100 சதுர அடியாக இருக்க வேண்டும். விண்ணப்பதாரர் அருகில் உள்ள மண்டல அலுவலகத்திலிருந்து விண்ணப்ப படிவத்தை பெற்று பூர்த்தி செய்து சமர்ப்பித்தவுடன் அந்தந்த மண்டல அலுவலகத்தின் பொது மேலாளர் மற்றும் துணை பொது மேலாளர் கடையை மதிப்பீடு செய்து ஒதுக்கீட்டு உத்தரவை வழங்குவார்கள். விண்ணப்பதாரர் மற்றும் வணிகத்தை தொடர்வதற்கு முன் விண்ணப்பதாரர் நிறுவனத்திலிருந்து உணவு உரிமத்தை பெற வேண்டும். ஆவின் பொருட்கள் ஆவின் மூலம் விற்பனை நிலையத்திற்கே நேரடியாக சென்று விநியோகம் செய்யப்படும். அதற்கான பணத்தை உடனடியாக செலுத்த வேண்டும். இத்திட்டம் தொடர்பான கூடுதல் தகவல்களை தெரிந்து கொள்ள கடலூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் செயல்படும் தாட்கோ மாவட்ட மேலாளர் அலுவலகத்திக தொடர்பு கொண்டு பயன் பெறலாம் என கலெக்டர் விடுத்துள்ள செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

    • தாட்கோ மூலமாக செயல்படுத்தப்படும் திட்டங்களில் அதிக எண்ணிக்கையிலான நபா்கள் பயனடைவா்.
    • குடும்ப ஆண்டு வருமான உச்சவரம்பு ரூ.2 லட்சத்தில் இருந்து ரூ.3 லட்சமாக உயா்த்தப்பட்டுள்ளது.

    திருப்பூர் :

    ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியினருக்கான வருமான உச்சவரம்பு ரூ.3 லட்சமாக உயா்த்தப்பட்டுள்ளது.இது குறித்து திருப்பூா் மாவட்ட கலெக்டர் வினீத் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

    ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியினருக்கான குடும்ப ஆண்டு வருமான உச்சவரம்பு ரூ.2 லட்சத்தில் இருந்து ரூ.3 லட்சமாக உயா்த்தப்பட்டுள்ளதால் தாட்கோ மூலமாக செயல்படுத்தப்படும் திட்டங்களில் அதிக எண்ணிக்கையிலான நபா்கள் பயனடைவா். எனவே திருப்பூா் மாவட்டத்தில் உள்ள ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியின இனத்தைச் சாா்ந்தவா்கள் இந்த சலுகையைப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • காந்திகிராம கிராமிய பல்கலைக்கழக தமிழ்த்துறை யு.ஜி.சி சிறப்பு ஆய்வு திட்டத்தின் சார்பில் உலக தொல்குடிகள் நாள் விழா கொண்டாடப்பட்டது.
    • விழாவை முன்னிட்டு பராம்பரிய கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றது.

    திண்டுக்கல்:

    திண்டுக்கல் மாவட்டம் ஓரக்கொம்பு கிராமத்தில் காந்திகிராம கிராமிய பல்கலைக்கழக தமிழ்த்துறை யு.ஜி.சி சிறப்பு ஆய்வு திட்டத்தின் சார்பில் உலக தொல்குடிகள் நாள் விழா கொண்டாடப்பட்டது. பல்கலைக்கழக பதிவாளர் சிவக்குமார் தலைமை வகித்து பேசியதாவது,

    பளியர், பழங்குடியின மக்கள் பல்வேறு போராட்டங்களை கடந்து வாழ்ந்து வருகின்றனர். நவீன வளர்ச்சிகள் பெருகினாலும் எந்த ஒரு இனமும் தனது பாரம்பரியத்தை இழந்துவிடக்கூடாது. உலகெங்கும் வாழ்கின்ற மக்கள் உடல் பருமன் நோயினால் அவதிப்படுவதை பார்க்க முடிகிறது.

    ஆனால் பளியர் சமூக மக்கள் கடுமையான உழைப்பாளிகளாவும், நடைப்பழக்கம் கொண்டவர்களாகவும் இருப்பதால் அவர்களிடம் உடல் பருமனான ஒருவரைக்கூட பார்க்க முடியவில்லை என்றார்.

    எழுத்தாளர் முத்துநாகு சிறப்புரையாற்றி பேசுகையில்,

    பழங்குடியின மக்களில் பளியர், புழையர், முதுவர் ஆகிய 3 இன மக்கள்தான் சுற்றுச்சூழலை நன்கு அறிந்தவர்களாகவும், தங்களை சுற்றி இருக்கின்ற தாவர இனங்களை அடையாளம் காண்கின்ற மரபு அறிவு உடையவர்களாகவும் உள்ளனர். ஒரு குடும்பத்திற்கு 12 ஏக்கர் நிலம் வரைக்கும் ஒதுக்கீடு செய்யலாம் என வனச்சட்டம் கூறுகிறது. ஆனால் அரசு இன்றுவரை அதனை நடைமுறைப்படுத்தவில்லை. பழங்குடியின மக்கள் மரபானஅறிவினை பாதுகாப்பதிலும், பரப்புவதிலும் கவனம் செலுத்த வேண்டும்.

    அதேபோல பழங்குடியினருக்கான உரிமைகளை பெறுவதற்காக ஊர்தலைவர் ஒருங்கிணைப்பின் கீழ் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும் என்றார். நிகழ்ச்சியில் தாண்டிக்குடி போலீஸ் இன்ஸ்பெக்டர் சுப்ரமணியன் பங்கேற்று பழங்குடியினருக்கு அரசு சார்பில் வழங்கப்படும் நலத்திட்டங்கள் பற்றி எடுத்து கூறினார்.

    பேராசிரியர் முத்தையா, அரசு பழங்குடியினர் உண்டு உறைவிடப்பள்ளி தலைமையாசிரியர் முருகன், கே.சி.பட்டி ஊராட்சி மன்ற தலைவர் ஜீவா, இளையராஜா, வார்டு உறுப்பினர் மகேஸ்வரி, குழந்தைகள் இல்லச்செயலாளர் ஸ்டான்லி மனோகரன், கொரன்கொம்பு வனக்குழு தலைவர் செல்வராஜ், ஊராட்சி மன்ற குழுச்செயலாளர் முருகேசன், சதாசிவம், எழுத்தாளர் பாரததேவி, பேராசிரியர் ராஜரத்தினம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    முடிவில் ஊர்தலைவர் சங்கர் நன்றி கூறினார். விழாவை முன்னிட்டு பராம்பரிய கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றது. பாறைப்பட்டி நல்லூர்காடு, கோரம்கொம்பு, கள்ளக்கிணறு, கருவேலம்பட்டி ஆகிய ஊர்களை சேர்ந்த இளைஞர்களுக்கு பல்கலைக்கழகத்தின் குழல்இசைக்கருவிகள் வழங்கப்பட்டன.

    ×