search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பள்ளிகள் திறப்பு"

    • கலவரம் மற்றும் வன்முறையால் மணிப்பூர் பாதிப்பு அடைந்துள்ளது.
    • ராகுல் காந்தி ஜூன் 29, 30-ம் தேதிகளில் அங்கு பயணம் மேற்கொண்டார்.

    இம்பால்:

    மணிப்பூரில் கடந்த மே மாதம் 3-ம் தேதி இரு சமூகத்தினருக்கிடையே கலவரம் மூண்டது. இதில் சுமார் 100 பேர் பலியானார்கள். தொடர்ந்து அடிக்கடி வன்முறை பரவி வரும் சூழலில் மக்கள் அச்சத்துடன் உள்ளனர்.

    மோதலைத் தூண்டும் வகையில் சமூக வலைதளங்களில் வதந்தி பரப்பப்படுவதை தடுக்க மே 3-ம் தேதி இணையதள சேவைக்கு தடை விதிக்கப்பட்டது. கலவரம் எதிரொலியாக இணையதள சேவைக்கான தடை தொடர்ந்து நீட்டிக்கப்பட்டது.

    இந்நிலையில், மணிப்பூரில் முதலமைச்சர் பிரேன் சிங் தலைமையில் ஆலோசனைக் கூட்டம் இன்று நடைபெற்றது.

    இந்தக் கூட்டத்தில், மாநிலத்தின் பிரதான தொழிலாக இருக்கும் விவசாயம் மீண்டும் சீரான முறையில் நடைபெறுவதற்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும். விவசாயிகளுக்கு கூடுதல் பாதுகாப்பு வழங்க வேண்டும் என முடிவெடுக்கப்பட்டுள்ளது.

    விரைவில் மாநிலம் முழுவதும் இயல்புநிலை திரும்ப வேண்டும்.

    வன்முறை குழுக்கள் உருவாக்கியுள்ள பதுங்கு குழிகள் அழிக்கப்பட வேண்டும். 1 முதல் 8-ம் வகுப்பு வரை பள்ளிகள் வரும் புதன்கிழமை முதல் இயங்கும் என முடிவெடுக்கப்பட்டுள்ளது.

    • 1-ம் வகுப்பு முதல் 5-ம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்பட்டன.
    • புதிதாக வந்த மாணவிகளுக்கு ஆசிரியர்கள் ரோஜாப்பூ கொடுத்து வரவேற்றனர்.

    ஈரோடு:

    தமிழகத்தில் உள்ள அனைத்து பள்ளிகளுக்கும் கடந்த ஏப்ரல் மாதம் கோடை விடுமுறை விட ப்பட்டது. இதனை யடுத்து மாணவர்கள் கோடை விடுமு றையை கொண்டாடு வதற்காக தங்களது சொந்த ஊர்க ளுக்கும், உறவினர்கள் வீடு களுக்கும் சென்றனர்.

    கோடை விடுமுறை முடிந்த பின் 6-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு ஜூன் 1-ந் தேதியும், 1-ம் வகுப்பு முதல் 5-ம் வகுப்பு வரை மாண வர்களுக்கு ஜூன் 5-ந் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என அரசு அறிவித்திருந்தது.

    இந்நிலையில் அக்னி நட்சத்திரம் என்ற கத்திரி வெயில் முடிந்த பின்னும் தமிழகம் முழுவதும் வெப்பத்தின் தாக்கம் குறையவில்லை. நாளுக்கு நாள் வெயிலின் தாக்கம் அதிகமாக பதிவாகி வந்த தால் பள்ளிகள் திறக்கும் தேதியை ஒத்திவைக்க வேண்டும் என பெற்றோ ர்கள் கோரிக்கை விடுத்தனர்.

    இதன்படி பள்ளிகள் திறக்கும் நாள் ஜூன் 7-ந் தேதிக்கு தள்ளி வைக்க ப்பட்டது. இருப்பினும் வெயிலின் தாக்கம் குறையாமல் வறுத்தெடுத்து வந்ததால் பள்ளி திறப்பை மீண்டும் தள்ளி போட வேண்டும் என பெற்றோர்கள், கல்வியா ளர்கள் கோரிக்கை விடுத்த னர். இதையடுத்து பள்ளிகள் திறக்கும் தேதி மீண்டும் தள்ளி வைக்கப்பட்டது.

    இதன்படி 6-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு ஜூன் 12-ந் தேதியும், 1-ம் வகுப்பு முதல் 5-ம் வகுப்பு வரை மாணவர்களுக்கு 14-ந் தேதி இன்று திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது.

    கடந்த 2 நாட்களுக்கு முன்பு 6-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு மாணவ-மாணவி களுக்கு பள்ளிகள் திறக்க ப்பட்டது. பள்ளி திறப்பை யொட்டி ஈரோடு மாவட்டம் முழுவதும் உள்ள முக்கிய கடைவீதிகளில் பெற்றோ ர்கள் கூட்டம் கடந்த 2 நாட்களாக அதிகமாக இருந்தது.

    நோட்டு புத்தகம், ஷூ, சாக்ஸ் போன்ற கடைகளில் கூட்டம் அதிகமாக இருந்தது. அதே நேரம் பள்ளி திறப்பை யொட்டி பள்ளிக்கல்வி த்துறை சார்பில் அந்தந்த பள்ளிகளில் தூய்மை பணிகள் நடந்து வந்தன.

    பள்ளி வளாகம், வகுப்ப றைகள் தூய்மைப்படு த்தப்பட்டன. பள்ளி திறப்பதற்காக அனைத்து ஏற்பாடுகளும் தயார் செய்யப்பட்டன.

    இந்நிலையில் இன்று காலை 1-ம் வகுப்பு முதல் 5-ம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்பட்டன. இதற்காக காலையிலேயே மாணவ ர்கள் குளித்து, பள்ளி சீருடை அணிந்து பெற்றோ ர்களுடன் பள்ளிக்கு கிளம்பி னர்.

    மாணவர்களை வரவேற்கும் விதமாக ஈரோடு எஸ்.கே.சி. ரோட்டில் உள்ள மாநக ராட்சி நடுநிலைப்பள்ளி யில் இன்று காலை புதிதாக பள்ளிக்கு வந்த மாணவ, மாண விகளுக்கு ஆசிரி யர்கள் சார்பில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

    புதிய மாணவர்களுக்கு பேன்டு வாத்தியம் முழங்க ஆசிரியர்கள் பூ கொத்து கொடுத்து அவர்களை ஆரத்தி எடுத்து வரவேற்று அவர்களுக்கு இனிப்பு வழங்கினர்.

    இதேபோல் ஈரோடு பன்னீர்செல்வம் பார்க்கில் உள்ள அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் நுழைவாயிலில் அலங்கார வளைவு அமைத்து சிவப்பு கம்பள வரவேற்பு அளிக்க ப்பட்டது.

    பள்ளிக்கு புதிதாக வந்த மாணவிகளுக்கு ஆசிரியர்கள் ரோஜாப்பூ கொடுத்து வரவேற்றனர். இன்னும் சில பள்ளிகளில் வாழ தோரணங்கள் கட்டப்ப ட்டு பள்ளிகளுக்கு புதிதாக வந்த மாணவர்க ளுக்கு ரோஜா பூ மற்றும் இனிப்பு வழங்கப்பட்டது.

    மாணவ- மாணவிகள் உற்சாகத்துடன் இன்று பள்ளிகளுக்கு வந்தனர். புதிய நண்பர்கள், புதிய சூழல் என மாணவர்கள் உற்சாகத்துடன் பள்ளிக ளுக்கு வந்தனர்.

    இதேபோல் யு.கே.ஜி. மாணவர்களுக்கும் இன்று பள்ளிகள் திறக்கப்பட்டன. கிட்டத்தட்ட ஒன்றரை மாத விடுமுறைக்கு பிறகு இன்று பள்ளிகள் திறக்கப்பட்டதால் சில மாணவ-மாணவிகள் அழுது கொண்டே பள்ளிக்கு வந்தனர்.

    பள்ளிக்குள் நுழைந்த தும் தாய், தந்தை யை கட்டி அரவணைத்து பள்ளிக்கு செல்ல மா ட்டோம் என்று அழுது அடம் பிடித்தனர். அவர்க ளை ஆசிரியர்கள் சமாதா னப்படுத்தி வகுப்பறைக்குள் அழைத்து சென்றனர்.

    ஈரோடு மாவட்ட அரசு பள்ளிகளில் 8,093 மாணவ-மாணவிகளுக்கு இன்று முதல் காலை உணவு வழங்கும் திட்டத்தில் உணவு வழங்கப்பட்டது.

    அரசு பள்ளிகளில் 1-ம் வகுப்பு முதல் 5-ம் வகுப்பு வரையிலான மாணவ- மாணவிகளுக்கு கடந்த ஆண்டு செப்டம்பர் முதல் காலை உணவு வழங்கும் திட்டம் நடைமுறையில் உள்ளது. இத்திட்டம் ஈரோடு மாவட்டத்தில் சோதனை அடிப்படையில் செயலில் இருந்து வருகிறது.

    இந்நிலையில் கோடை விடுமுறை முடிந்த பிறகு இன்று முதல் 1-ம் வகுப்பு முதல் 5-ம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்பட்டன.

    முதல் நாளான இன்று பொங்கல் சாம்பார் வழங்கப்பட்டது. ஈரோடு மாநகராட்சியில் 59 பள்ளிகளில் 8,238 மாணவர்களும், தாளவாடி மலைப்பகுதியில் 38 பள்ளிகளில் 665 மாணவர்கள் என 97 பள்ளிகளை சேர்ந்த 8903 மாணவ- மாணவிகளுக்கு காலை உணவு வழங்கப்பட்டு வருகிறது. 

    • தமிழகத்தில் கோடை விடுமுறை முடிந்து பள்ளிகள் திறப்பதில் தாமதம் ஏற்பட்டது. வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்து வருவதால் பள்ளிகள் திறப்பு தள்ளி வைக்கப்பட்டது.
    • 6 முதல் 12-ம் வகுப்பு வரை உள்ள மாணவ-மாணவிகளுக்கு கடந்த 12-ந் தேதி பள்ளிகள் திறக்கப்பட்டது. இதனை தொடர்ந்து 1 முதல் 5-ம் வகுப்பு மாணவர்களுக்கு இன்று பள்ளிகள் திறக்கப்பட்டு உள்ளது.

    சேலம்:

    தமிழகத்தில் கோடை விடுமுறை முடிந்து பள்ளிகள் திறப்பதில் தாமதம் ஏற்பட்டது. வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்து வருவதால் பள்ளிகள் திறப்பு தள்ளி வைக்கப்பட்டது.

    பள்ளிகள் திறப்பு

    6 முதல் 12-ம் வகுப்பு வரை உள்ள மாணவ-மாணவிகளுக்கு கடந்த 12-ந் தேதி பள்ளிகள் திறக்கப்பட்டது. இதனை தொடர்ந்து 1 முதல் 5-ம் வகுப்பு மாணவர்களுக்கு இன்று பள்ளிகள் திறக்கப்பட்டு உள்ளது.

    இதையடுத்து, அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகள், தனியார் மெட்ரிக்குலேசன் பள்ளிகளில் படிக்கும் குழந்தைகளுக்கு இன்று வகுப்புகள் தொடங்கியது.

    அடம்பிடித்து அழுதனர்

    அப்போது ஒரு சில குழந்தைகள் பெற்றோர் வண்டியில் இருந்து இறக்கி விடும் போது பள்ளிக்கு செல்லாமல் அடம்பிடித்து அழுதனர்.

    இந்த நிலையில், பள்ளிகள் திறக்கப் பட்டதால் 4 ரோடு, கோட்டை, சாரதா கல்லூரி சாலை, புதிய பஸ் நிலையம், திருவாகவுண்டனூர், ராமகிருஷ்ணா சாலை, குகை உள்ளிட்ட பகுதிகளில் போக்குவரத்து நெருக்கடி ஏற்பட்டது. போக்குவரத்து போலீசார் இல்லாததால் பொதுமக்கள் சிரமப்பட்டனர்.

    போக்குவரத்து நெரிசல்

    இதுகுறித்து பொதுமக்கள் கூறும்போது, பள்ளிகள் திறக்கும் போது ஒவ்வொரு ஆண்டும் பள்ளிகள் முன்பு போக்குவரத்து போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு போக்குவரத்து சரிசெய்யும் பணியில் ஈடுபடுவார்கள். ஆனால் இந்த ஆண்டு பள்ளியின் முன்பு போக்குவரத்து போலீசார் பாதுகாப்பு பணியில் இல்லை. இதனால் வாகன ஓட்டிகள் பெரும் சிரமத்திற்கு உள்ளா னார்கள் என்றனர்.

    • குழந்தைகளை நேரு வித்தியாசமாக குதிரையில் பள்ளிக்கு அழைத்து சென்றார்.
    • குழந்தைகளை வரவேற்க தோரணங்கள் பள்ளியில் கட்டப்பட்டிருந்தன.

    புதுச்சேரி:

    புதுச்சேரியில் கோடை விடுமுறை முடிந்து இன்று பள்ளிகள் திறக்கப்பட்டது.

    புதுவை லாஸ்பேட்டை அசோக் நகரை சேர்ந்த நேரு ஜிப்மரில் ஊழியராக பணியாற்றி வருகிறார். இவரது மகள் ஹனாஅமிழ்தினி (6). இவர் பாக்குமுடையான்பேட்டை அரசு தொடக்கப்பள்ளியில் 2-ம் வகுப்பு படிக்கிறார். தனது மகன் ஹனியல் யாழ் இன்பனை(4) இதே பள்ளியில் எல்.கே.ஜி. சேர்த்துள்ளார். கோடை விடுமுறைக்கு பின் இன்று பள்ளிகள் தொடங்கின.

    தனது குழந்தைகளை நேரு வித்தியாசமாக குதிரையில் பள்ளிக்கு அழைத்து சென்றார். ரூ.5 ஆயிரத்துக்கு வாடகைக்கு குதிரையை பெற்ற நேரு, தனது குழந்தைகளை அதில் ஏற்றி வீட்டிலிருந்து பள்ளிக்கு அழைத்து சென்றார். இதை வீதியில் மக்கள் அனைவரும் ஆச்சர்யத்தோடு பார்த்தனர்.

    இதனை பள்ளிக்கு வந்த பிற குழந்தைகள் ஆர்வத்துடன் கண்டுகளித்தனர். அவர்களையும் குதிரையில் ஏற்றி சிறிது தூரம் அழைத்துச் சென்று பின் பள்ளியில் இறக்கிவிட்டார். பள்ளிக்கு வந்திருந்த பெற்றோர் பலரும் இதனை ஆர்வத்தோடு புகைப்படம் எடுத்தனர்.

    இதுகுறித்து குழந்தைகளின் தந்தை நேரு கூறும்போது, புதுவையில் அரசு பள்ளியில் அனைத்து சலுகைகளும் கிடைக்கிறது. தரமான கல்வி வழங்கப்படுகிறது. பெற்றோர் அனைவரும் அரசு பள்ளியில் தங்களது பிள்ளைகளை சேர்க்க வேண்டும். இதை வலியுறுத்தும் வகையிலும், விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையிலும் அனைவரின் கவனத்தை ஈர்க்க குதிரையை வாடகைக்கு எடுத்து என் குழந்தைகளை அழைத்து வந்து பள்ளியில் சேர்த்துள்ளேன் என்றார்.

    குழந்தைகளை வரவேற்க தோரணங்கள் பள்ளியில் கட்டப்பட்டிருந்தன. பொம்மலாட்ட கலைஞர்கள் ஆடி, பாடி மகிழ்ச்சியோடு குழந்தைகளை வரவேற்றனர்

    • வெயிலின் தாக்கம் நாளுக்கு நாள் கடுமையாக உயர்ந்த காரணத்தினால் மாணவர்கள் நலன் கருதி பள்ளி திறக்கவில்லை.
    • ஒரு சில மாணவ மாணவிகள் பள்ளியில் விட்டுச்சென்ற தனது பெற்றோர்க ளிடமிருந்து பள்ளிக்கு செல்லாமல் அழுததையும் காண முடிந்தது.

    கடலூர்:

    தமிழகத்தில் 1-ம் வகுப்பு முதல் 12-ஆம் வகுப்பு வரை ஏப்ரல் மற்றும் மே மாதம் வரை முழு ஆண்டு மற்றும் பொதுத் தேர்வுகள் முடிந்து விடுமுறையில் இருந்து வந்தனர். இந்த நிலையில் தமிழகம் முழுவதும் வறண்ட வானிலை மற்றும் அனல் காற்று வீசிய காரணமாக பொதுமக்கள் உள்ளிட்ட அனைவரும் பெரும் பாதிப்படைந்து வந்தனர். 

    இதனை தொடர்ந்து கடந்த ஜூன் 7-ம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் வெயிலின் தாக்கம் நாளுக்கு நாள் கடுமையாக உயர்ந்த காரணத்தினால் மாணவர்கள் நலன் கருதி 6-ம் வகுப்பு முதல் 10-ம் வகுப்பு வரை 12-ந் தேதியும் மற்றும் 1-ம் வகுப்பு முதல் 5-ம் வகுப்பு வரை 14-ந் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என தமிழக அரசு சார்பில் அறிவிக்கப்பட்டிருந்தது.

    கூடுதலாக விடுமுறை விடப்பட்டிருந்த நிலையில் கடந்த 12-ந் தேதி தமிழக முழுவதும் 6-ம் வகுப்பு முதல் 10-ம் வகுப்பு வரை பள்ளிகள் திறக்கப்பட்டன. இதில் கடலூர் மாவட்டத்தில் அரசு மற்றும் தனியார் உயர்நிலைப்பள்ளி, மேல்நிலைப்பள்ளி, தொடக்கப்பள்ளிகள் என 2200-க்கும் மேற்பட்ட பள்ளிகள் இயங்கி வருகின்றது. இதில் இன்று 1-ம் வகுப்பு முதல் 5-ம் வகுப்பு வரை 1200-க்கும் மேற்பட்ட அரசு மற்றும் தனியார் பள்ளிகள் திறக்கப்பட்டன. 

    இதனை தொடர்ந்து இன்று பள்ளிகள் திறந்ததை முன்னிட்டு 1-ம் வகுப்பு முதல் 5-ம் வகுப்பு வரை மாணவ - மாணவிகள் பள்ளி சீருடையில் மகிழ்ச்சியாக பள்ளிகளுக்கு வந்தனர். அப்போது ஒரு சில மாணவ மாணவிகள் பள்ளியில் விட்டுச்சென்ற தனது பெற்றோர்க ளிடமிருந்து பள்ளிக்கு செல்லாமல் அழுததையும் காண முடிந்தது. இதன் காரணமாக கடலூர் மாவட்டத்தில் பள்ளியில் திறக்கப்பட்ட நிலையில் இன்று முதல் நாள் என்பதால் காலை முதல் முக்கிய சாலைகளில் பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளை மோட்டார் சைக்கிள் மற்றும் வாகன ங்களில் பாதுகாப்பாக பள்ளிக்கு அழைத்து வந்து விட்டு சென்றதை காண முடிந்தது.

    பள்ளி ஆசிரியர்கள் மாணவர்களை அன்புடன் வரவேற்று பள்ளி வகுப்பறைக்கு அழைத்துச் சென்றதையும் காணமுடி ந்தது. கடலூரில் பல்வேறு பள்ளிகளில் மாணவர்களு க்கு ரோஜா பூ மற்றும் பன்னீர் தெளித்தும், இனிப்பு வழங்கியும் ஆசிரியர்கள் அன்புடன் வரவேற்றனர்.

    • தமிழகத்தில் பள்ளிகள் திறக்கப்பட்டுள்ளதால், கூடுதல் பஸ்கள் இயக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது.
    • காலை மற்றும் மாலை நேரங்களில் பயணியர் அதிகமாக செல்லும், ‘பீக் ஹவர்களில்’ கூடுதல் பஸ்கள் இயக்கப்படுகின்றன.

    சென்னை:

    தமிழகத்தில் கோடை விடுமுறை முடிந்து, 6-ம் வகுப்பு முதல் பிளஸ்-2 வரையிலான மாணவர்களுக்கு நேற்று பள்ளிகள் திறக்கப்பட்டன. இதேபோல், 1 முதல் 5-ம் வகுப்பு மாணவர்களுக்கு நாளை பள்ளிகள் திறக்கப்பட உள்ளன.

    பொது பயணியரோடு, மாணவர்களும் பயணிப்பதால், அரசு பஸ்களில் கூட்டம் அதிகரிக்கும். எனவே, தேவைக்கு ஏற்றார் போல், கூடுதல் பஸ்களை இயக்க, கிளை மேலாளர்களுக்கு மாநகர போக்குவரத்து கழகம் ஏற்கனவே உத்தரவிட்டிருந்தது.

    இதுகுறித்து மாநகர போக்குவரத்து கழக அதிகாரிகள் கூறியதாவது:-

    தமிழகத்தில் பள்ளிகள் திறக்கப்பட்டுள்ளதால், கூடுதல் பஸ்கள் இயக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது.

    சென்னை மாநகர போக்குவரத்து கழகத்தில் வழக்கமாக இயக்கப்படும், 2,700 மாநகர பஸ்களோடு, மேலும், 150 பஸ்கள் நேற்று முதல் கூடுதலாக இயக்க, கால அட்டவணை தயாரிக்கப்பட்டுள்ளது.

    அதன்படி, காலை மற்றும் மாலை நேரங்களில் பயணியர் அதிகமாக செல்லும், 'பீக் ஹவர்களில்' கூடுதல் பஸ்கள் இயக்கப்படுகின்றன.

    இவ்வாறு அவர்கள் கூறினர்.

    • சிறு குழந்தைகளுக்கு வகுப்புகள் தொடங்குவதால் பாதுகாப்பு நடைமுறைகளை கடைபிடிக்க வேண்டும் என்று கல்வித்துறை அறிவுறுத்தி உள்ளது.
    • மாநகராட்சி, தனியார் பள்ளிகள், மழலையர் பள்ளிகளுக்கு முதன்முதலாக வரும் குழந்தைகளை வரவேற்க சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்படுகிறது.

    சென்னை:

    தமிழகத்தில் கோடை விடுமுறை முடிந்து பள்ளிகளை திறப்பதில் தாமதம் ஏற்பட்டது. வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்து வருவதால் பள்ளிகள் திறப்பு தள்ளி வைக்கப்பட்டது. 6 முதல் 12-ம் வகுப்பு வரை உள்ள மாணவ-மாணவிகளுக்கு நேற்று பள்ளிகள் திறக்கப்பட்டன.

    1 முதல் 5-ம் வகுப்பு மாணவர்களுக்கு நாளை (புதன்கிழமை) பள்ளிகள் திறக்கப்படுகிறது. அரசு, உதவி பெறும் பள்ளிகள், தனியார் மெட்ரிக்குலேசன் பள்ளிகளில் படிக்கும் குழந்தைகளுக்கு நாளை வகுப்புகள் தொடங்குகிறது.

    இது தவிர எல்.கே.ஜி., யு.கே.ஜி. படிக்கும் குழந்தைகளுக்கும் நாளை வகுப்பு நடைபெறுகிறது. சிறு குழந்தைகளுக்கு வகுப்புகள் தொடங்குவதால் பாதுகாப்பு நடைமுறைகளை கடைபிடிக்க வேண்டும் என்று கல்வித்துறை அறிவுறுத்தி உள்ளது.

    மாநகராட்சி, தனியார் பள்ளிகள், மழலையர் பள்ளிகளுக்கு முதன்முதலாக வரும் குழந்தைகளை வரவேற்க சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்படுகிறது. இதுவரையில் பெற்றோர் அரவணைப்பில் இருந்த குழந்தைகள், அவர்களை பிரிந்து பள்ளிக்கு வருவதால் அழவும், கூச்சலிடவும் வாய்ப்பு உள்ளது.

    அவர்களை அன்போடும், பாசத்தோடும் ஆசிரியர்கள் வரவேற்று வகுப்பறைக்கு அழைத்து செல்லவும், அழுதால், விளையாட்டு பொருட்களை கொடுத்து சிரிக்க வைக்கவும் தயார்படுத்தப்பட்டு உள்ளது. குழந்தைகளுக்கு விளையாட்டு சூழலை ஏற்படுத்தும் வகையில் பல பள்ளிகளில் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளது. ஆசிரியைகள் குழந்தைகளோடு குழந்தைகளாகவே மாறி வகுப்பறையில் அமர வைக்க பல்வேறு அணுகுமுறைகளை கையாள தயாராக உள்ளனர்.

    பள்ளிக்கு முதன்முதலாக தங்கள் குழந்தைகள் செல்ல இருப்பதால் இன்றே அவர்களை தயார்படுத்தும் பணியில் பெற்றோர்கள் ஈடுபட்டனர். செல்லக்கூட்டி அழக்கூடாது... அம்மா உன்பக்கத்தில் தான் இருப்பேன்... மிஸ்கூட ஜாலியா விளையாடணும் செல்லம்... என கொஞ்சி கொஞ்சி அவர்களை நாளைய வகுப்பறைக்கு தயார்படுத்தி வருகிறார்கள்.

    புதிய சீருடை, ஷூ, பெல்ட், சிறிய புத்தக பை இவற்றுடன் பள்ளிக்கு செல்லும் காட்சியை பெற்றோர் பார்க்க ஆர்வமாக உள்ளனர்.

    • பள்ளி தலைமையாசிரியர் கலைச்செல்வி மற்றும் ஆசிரியைகள் பூங்கொத்து கொடுத்து மாணவிகளை உற்சாகமாக வரவேற்றனர்.
    • மாணவிகளுக்கு தனியார் பள்ளியில் வழங்குவது போல் இன்று முதலே பாட புத்தகங்கள் வழங்கப்பட்டன.

    தருமபுரி,

    தமிழகத்தில் கோடைவிடுமுறைக்கு பின்பு 6-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்புகள் வரை இன்று (12-ந் தேதி) என்றும், 1-ம் முதல் 5-ம் வகுப்புகளுக்கு வருகிற 14-ந் தேதி என்றும், தமிழக பள்ளி கல்வித்துறை சார்பில் அறிவித்தது.

    இதைத்தொடர்ந்து இன்று 6-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்புகளுக்கு பள்ளிகள் தருமபுரி மாவட்டத்தில் அரசு மற்றும் தனியார் உயர்நிலைப் பள்ளிகள், மேல்நிலைப் பள்ளிகள் திறக்கப்பட்டன.

    பள்ளிக்கு வருவதற்காக மாணவ, மாணவிகள் சீருடைகளுடன் உற்சாகமாக வந்தனர்.

    தருமபுரியில் திருப்பத்தூர் சாலையில் உள்ள அவ்வையார் அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் இன்று காலை 8 மணி முதலே 6-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை பயில கூடிய மாணவிகள் புதிய வகுப்புகளில் பயிலும் ஆர்வத்துடன் சீருடையுடன் வந்தனர். அப்போது அவர்களுக்கு பள்ளி தலைமையாசிரியர் கலைச்செல்வி மற்றும் ஆசிரியைகள் பூங்கொத்து கொடுத்து உற்சாகமாக வரவேற்றனர்.

    இதைத்தொடர்ந்து மாணவிகள் பிரார்த்தனை யில் ஈடுபட்டனர். அப்போது 10-ம் வகுப்பு பொதுத்தேர்வில் சிறப்பிடம் பெற்ற 2 மாணவிகளுக்கு பரிசு அளித்து வாழ்த்தினர்.

    மேலும், பள்ளிக்கு மாணவிகளுக்கு தனியார் பள்ளியில் வழங்குவது போல் இன்று முதலே பாட புத்தகங்கள் வழங்கப்பட்டன.

    அவ்வையார் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி யில் இந்தாண்டு 6-ம் வகுப்பு முதல் 10-ம் வகுப்பு வரை 230 புதிய மாணவிகள் சேர்ந்துள்ளனர். இதேபோல் பிளஸ்-1 வகுப்பில் 540 புதிய மாணவிகள் சேர்ந்துள்ளனர். பள்ளியில் மொத்தம் 3364 மாணவிகள் பயின்று வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

    இதேபோல் தருமபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங் களில் இன்று கோடை விடுமுறை முடிந்து பள்ளி திறக்கப்பட்டதால் பள்ளிகளில் மாணவ-மாணவிகளுக்கு பூங்கொத்து கொடுத்து ஆசிரியர்கள் வரவேற்றனர்.

    • கோடை விடுமுறை முடிந்து இன்று முதல்நாள் பள்ளிக்குச் செல்லும் மாணவச் செல்வங்களுக்கு என் வாழ்த்துகள்.
    • நன்கு படியுங்கள், படிப்போடு நில்லாமல் விளையாடுங்கள், உலகைப் புரிந்து கொள்ளுங்கள்.

    விடுமுறை முடிந்து பள்ளி திறப்பதையொட்டி மாணவச் செல்வங்களை வாழ்த்தி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சமூக வலைதளங்களில் வெளியிட்டுள்ள பதிவில் கூறி இருப்பதாவது:-

    கோடை விடுமுறை முடிந்து இன்று முதல்நாள் பள்ளிக்குச் செல்லும் மாணவச் செல்வங்களுக்கு என் வாழ்த்துகள். நன்கு படியுங்கள், படிப்போடு நில்லாமல் விளையாடுங்கள், உலகைப் புரிந்து கொள்ளுங்கள்.

    நீங்கள் சிறகைப் பொருத்திக் கொண்டு வாழ்வில் வெற்றி பெற அரசு துணை நிற்கும்! நான் உறுதுணையாக இருப்பேன்.

    இவ்வாறு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அதில் கூறியுள்ளார்.

    • மதுரையில் கோடை விடுமுறை முடிந்து பள்ளிகள் இன்று திறக்கப்பட்டன.
    • மாணவ-மாணவிகள் வகுப்புகளுக்கு உற்சாகமாக வந்தனர்.

    மதுரை

    தமிழ்நாடு முழுவதும் கோடை விடுமுறை முடிந்து கடந்த ஜூன் 2-ந் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என்று அறிவிக்கப்பட்ட நிலையில் கோடை வெயிலின் தாக்கம் குறையாதால் பள்ளி திறப்பு தேதி தள்ளி வைக்கப்பட்டது. இந்தநிலையில் 1 முதல் 5-ம் வகுப்பு வரை உள்ள பள்ளிகள் ஜூன் 14-ந் தேதியும், 6-ம் வகுப்பு முதல் 12 -ம் வகுப்பு வரை இன்றும் (12-ந்தேதி)பள்ளிகள் திறக்கப்படுவதாக தமிழக அரசு ஏற்கனவே அறிவித்தது.

    அதன்படி இன்று மதுரை மாவட்டத்தில் உள்ள 6 முதல் 12-ம் வகுப்பு வரையிலான பள்ளிகள் அனைத்தும் திறக்கப்பட்டன. இதனால் வழக்கமான உற்சாகத்துடன் பள்ளிகளுக்கு மாணவ- மாணவிகள் புறப்பட்டு சென்றனர்.

    மதுரை மாவட்டத்தை பொருத்தவரை அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகள், தனியார் பள்ளிகள், மாநகராட்சி பள்ளிகள், ஆதிதிராவிடர் நலத்துறை பள்ளிகள், கள்ளர் சீரமைப்பு பள்ளிகள் என மொத்தம் 2,168 பள்ளிகள் உள்ளன. அனைத்து பள்ளிகளும் இன்று திறக்கப்பட்டதால் மாணவ-மாணவிகள் உற்சாகத்துடன் பள்ளிகளுக்கு சென்றனர்.

    பள்ளிகளில் ஆசிரியர்கள் மாணவ-மாணவிகளை 2023-24-ம் கல்வி ஆண்டான புதிய கல்வி ஆண்டில் வரவேற்கும் வகையில் பூக்களையும், இனிப்புகளையும் கொடுத்து இன்முகத்துடன் உற்சாகமாக வரவேற்றனர்.

    மதுரை மாநகராட்சி இளங்கோ மேல்நிலைப்பள்ளியில் மாணவ-மாணவிகளை மலர்தூவியும், நெற்றியில் திலகமிட்டும் ஆசிரியர்கள் வரவேற்றனர்.

    மேலும் மாணவ-மாணவிகளுக்கு இனிப்புகளையும் ஆசிரிரியர்கள் வழங்கினர். இது மாணவர்களுக்கு மகிழ்ச்சியையும், புதிய உத்வேகத்தையும் ஏற்படுத்தியது. இதைத்தொடர்ந்து அனைத்து மாணவ- மாணவிகளும் புன்னகை மலர்ந்த முகத்துடன் வகுப்பறைகளுக்கு சென்று அமர்ந்து முதல் நாள் பாடங்களை படிக்கத் தொடங்கினர்.



    மதுரை தெற்குவெளி வீதியில் உள்ள ஈ.வெ.ரா. மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் மாணவிகளுக்கு இனிப்பு கொடுத்து வரவேற்ற ஆசிரியர்கள்.

    பள்ளிகள் திறந்த இன்றே அனைத்து அரசு பள்ளிகள்,மாநகராட்சி பள்ளிகள் மற்றும் அரசு உதவி பெறும் அனைத்து பள்ளிகளிலும் மாணவ-மாணவிகளுக்கு பாட புத்தகங்கள் வழங்கப்பட்டன. மதுரை மாநகராட்சி பள்ளி களிலும் இன்று பாட புத்தகங்கள் அனைத்து மாணவ- மாணவிகளுக்கும் வழங்கப்பட்டது.

    மதுரை பொன்னகரம் பகுதியில் உள்ள வெள்ளிவீதியார் பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் நடந்த நிகழ்ச்சியில் மேயர் இந்திராணி, கமிஷனர் பிரவீன் குமார் ஆகியோர் மாணவிகளுக்கு பாட புத்தகங்களை வழங்கினர். மேலும் அனைத்து பள்ளி களிலும் சம்பந்தப்பட்ட ஆசிரியர்கள் மாணவர்களுக்கு பாட புத்தகங்களை வழங்கினர்.

    கோடை விடுமுறை முடிந்து இன்று பள்ளிகள் திறக்கப்பட்டதால் மதுரையின் பல்வேறு இடங்களில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. பள்ளி வாகனங்கள் மற்றும் பள்ளி குழந்தைகளை ஏற்றி சென்ற ஆட்டோக்கள் அதிகளவில் சாலைகளில் சென்றன. இரு சக்கர வாகனங்களிலும் மாணவ-மாணவிகள் அனைத்து வரப்பட்டதால் பல்வேறு இடங்களில் வாகன நெருக்கடிகள் ஏற்பட்டன.

    மதுரை மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளிகளிலும் மாணவ-மாணவிகளுக்கு செய்யப்பட்டுள்ள கட்டமைப்பு மற்றும் அடிப்படை வசதிகள் குறித்து மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி கார்த்திகா தலைமையில் ஆலோசனை கூட்டம் நடத்தப்பட்டது.

    மாவட்ட பள்ளி கல்வித் துறை சார்பில் அமைக்கப்பட்டுள்ள பல்வேறு குழுக்கள் அனைத்து பள்ளிகளிலும் ஆய்வு செய்தனர். மாணவர்களுக்கு சுத்தமான குடிநீர் மற்றும் அடிப்படை வசதிகளை சரியான முறையில் பராமரிக்க வேண்டும் என்றும், பள்ளி வாகனங்களை பாதுகாப்பான முறையில் இயக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    நாளை மறுநாள் (புதன்கிழமை) 1 முதல் 5-ம் வகுப்பு வரை உள்ள பள்ளிகள் திறக்கப்படுவதால் அதற்கான முன்னேற்பாடுகளிலும் மாவட்ட கல்வி அதிகாரிகள் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார்கள்.

    • மாணவர்களும் பெற்றோர்களும் இந்த அறிவிப்புக்கு வரவேற்பு தந்ததோடு மாண வர்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.
    • காலை 6-ம் வகுப்பு முதல் 10-ம் வகுப்பு வரை மாணவ - மாணவிகள் பள்ளி சீருடையில் மகிழ்ச்சியாக பள்ளிகளுக்கு வந்தனர்.

    கடலூர்:

    தமிழகத்தில் 1-ம் வகுப்பு முதல் 12-ஆம் வகுப்பு மாணவ-மாணவிகள் ஏப்ரல் மற்றும் மே மாதம் வரை முழு ஆண்டு மற்றும் பொதுத் தேர்வுகள் முடிந்து கோடை விடுமுறையில் இருந்து வந்தனர். இந்நிலையில் தமிழகம் முழுவதும் வறண்ட வானிலை மற்றும் அனல் காற்று வீசியதால் பொது மக்கள் அனைவரும் பெரும் பாதிப்படைந்து வந்தனர். இதனை தொடர்ந்து கடந்த ஜூன் 7-ம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் வெயிலின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்த நிலையில் மாணவர்கள் நலன் கருதி 6-ம் வகுப்பு முதல் 10 ம் வகுப்பு வரை இன்று 12 -ந் தேதியும் மற்றும் 1-ம் வகுப்பு முதல் 5-ம் வகுப்பு வரை நாளை மறுநாள் 14-ந் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என தமிழக அரசு சார்பில் அறிவிக்கப்பட்டிருந்தது. 

    இதனை தொடர்ந்து மாணவர்களும் பெற்றோர்க ளும் இந்த அறிவிப்புக்கு வரவேற்பு தந்ததோடு மாண வர்கள் மகிழ்ச்சி அடைந்தனர். மேலும் கூடுதலாக விடுமுறை விடப்பட்டிருந்த நிலையில் இன்று தமிழகம் முழுவதும் 6-ம் வகுப்பு முதல் பத்தாம் வகுப்பு வரை பள்ளிகள் திறக்கப்பட்டன. இதில் கடலூர் மாவட்டத்தில் அரசு மற்றும் தனியார் உயர்நிலைப்பள்ளி, மேல்நிலைப்பள்ளி, தொடக்கப்பள்ளிகள் என 2200-க்கும் மேற்பட்ட பள்ளிகள் இயங்கி வருகின்றது. இதில் இன்று 6-ம் வகுப்பு முதல் 10-ம் வகுப்பு வரை 800-க்கும் மேற்பட்ட அரசு மற்றும் தனியார் பள்ளிகள் திறக்கப்பட்டன. இதனை தொடர்ந்து இன்று பள்ளிகள் திறந்ததை முன்னிட்டு கடந்த சில தினங்களாக பள்ளி வளாகங்கள் மற்றும் கழிவறைகள் சுத்தம் செய்யும் பணி, வர்ணம் பூசும்பணிகள், வகுப்பறைகளில் டேபிள்கள் வைக்கும் பணி மற்றும் குடிநீர் தொட்டியை சுத்தம் செய்து பாதுகாப்பான குடிநீர் வழங்கும் நடவடிக்கை உள்ளிட்ட பல்வேறு பணிகள் தீவிரமாக மேற்கொண்டு வந்தனர். 

    இன்று காலை 6-ம் வகுப்பு முதல் 10-ம் வகுப்பு வரை மாணவ - மாணவிகள் பள்ளி சீருடையில் மகிழ்ச்சியாக பள்ளிகளுக்கு வந்தனர். பள்ளிகள் திறக்கப்பட்ட முதல் நாள் என்பதால் காலை முதல் முக்கிய சாலைகளில் பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளை மோட்டார் சைக்கிள் மற்றும் வாகனங்களில் பாதுகாப்பாக பள்ளிக்கு அழைத்து வந்து விட்டு சென்றதை காண முடிந்தது. அப்போது ஒரு சில மாணவ, மாணவிகள் பள்ளியில் விட்டுச்சென்ற தனது பெற்றோர்களிடமிருந்து பள்ளிக்கு செல்லாமல் அழுததையும் காண முடிந்தது. பள்ளிகளில் செயல்படும் விடுதிகளில் மாணவர்கள் தங்கி படிக்கும் விதமாக இரும்பு பெட்டிகள் மற்றும் தங்களுக்கு தேவையான உடைமைகளை பெற்றோர்களுடன் எடுத்து வந்ததையும் காண முடிந்தது. முன்னதாக பள்ளிகளில் ஆசிரியர்கள் மாணவர்களை அன்புடன் வரவேற்று பள்ளி வகுப்பறைக்கு அழைத்துச் சென்றனர். மேலும் கடலூர் திருப்பாதிரிப்புலியூர் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் இன்று பள்ளிகள் திறக்கப்பட்ட நிலையில் மாணவிகளுக்கு ரோஜா பூ மற்றும் பன்னீர் தெளித்து ஆசிரியர்கள் அன்புடன் வரவேற்றனர். காலை முதல் அதிக அளவில் வாகன போக்குவரத்து இருந்த காரணத்தினால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டிருந்த நிலையில் போலீசார் போக்குவரத்து சரி செய்தனர். 

    இதேபோல் விருத்தாசலம் பகுதியில் உள்ள அனைத்து பள்ளிகளும் திறக்கப்பட்டு மாணவர்கள் மகிழ்ச்சியாக பள்ளிக்கு சென்றனர். இதில் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில், பள்ளிக்கு வந்த மாணவிகளுக்கு தலைமை யாசிரியர் செல்வகுமாரி , உதவி தலைமைஆசிரியர் கலைவாணி உள்ளிட்ட பள்ளி ஆசிரியர்கள் பூங்கொத்து மற்றும் சாக்லேட்டுகள் கொடுத்து மாணவிகளை வரவேற்றனர். மேலும் தமிழக அரசின் உத்தரவின்பேரில் பள்ளிகள் திறந்த முதல் நாளான இன்று பள்ளி மாணவர்களுக்கு புத்தகங்கள் வழங்கப்பட்டது.

    இதேபோல் பண்ருட்டி யிலும் உள்ள அனைத்து பள்ளிகளும் கோடை விடுமுறைக்கு பின் இன்று 6-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்பட்டது. முதல் நாளில் பாடப்புத்த கங்கள், நோட்டுகள் உள்பட இலவச கல்வி உபகரணங்கள் வழங்குவதற்கான ஏற்பாடு கள் தீவிரமாக நடந்து வரு கிறது.இதனைமுன்னிட்டு, மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் உத்தரவின்பேரில் பள்ளிகளில் தூய்மை பணிகள் மேற்கொள்ள பட்டது.

    • கலெக்டர் பாட புத்தகங்களை வழங்கினார்
    • மாணவ சேர்க்கை விறுவிறுப்பாக நடந்தது

    வேலூர்:

    வேலூர், திருவண்ணாமலை உள்பட 4 மாவட்டங்களில் பள்ளி திறந்த முதல் நாளிலே மாணவ, மாணவிகள் உற்சாகத்துடன் பள்ளிக்கு வந்தனர்.

    தமிழகத்தில் 2022-23-ம் கல்வியாண்டுக்கான ஆண்டு இறுதித்தேர்வு, பொதுத்தேர்வு அனைத்தும் நடத்தி முடிக்கப்பட்டு, மாணவ-மாணவிகளுக்கு கோடை விடுமுறையும் அளிக்கப்பட்டன. விடுமுறை காலத்தில் அவர்கள் தேர்வில் பெற்ற தேர்ச்சியையும் பள்ளி கல்வித்துறை வெளியிட்டுவிட்டது.

    கடந்த மாதம் இறுதியில் வெயிலின் கோரத்தாண்டவம் தொடங்கி, இந்த மாதம் தொடக்கத்தில் உக்கிரத்தை காட்டியது.

    தமிழ்நாட்டில் வேலூர் உள்ளிட்ட பெரும்பாலான இடங்களில் வெயில் 100 டிகிரியை கடந்து பதிவானது. அனல் காற்றும் சேர்ந்து வீசியதால் மக்கள் கடும் அவதி அடைந்தனர்.

    இதனை கருத்தில் கொண்டு, பள்ளி திறப்பு தேதி 2-வது முறையாக தள்ளி வைக்கப்படுவதாக அரசு அறிவிப்பு வெளியானது.

    அந்த வகையில், 6 முதல் பிளஸ்-2 வகுப்பு வரையிலான மாணவ-மாணவிகளுக்கு இன்றும், 1 முதல் 5-ம் வகுப்பு வரையிலான மாணவ-மாணவிகளுக்கு 14-ந் தேதியும் நாளை மறுதினம் பள்ளிகள் திறக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது.

    இதில் வேலூர் மாவட்டத்தில் 1,266 பள்ளிகள், திருவண் ணாமலை மாவட்டத்தில் 2 ஆயிரத்து 55 பள்ளிகள், திருப்பத்தூர் மாவட்டத்தில் 980 பள் ளிகள், ராணிப்பேட்டை மாவட்டத்தில் 1,168 பள்ளி. கள் என 4 மாவட்டங்க ளில் 5 ஆயிரத்து 469 பள்ளிகள் உள்ளன.

    இந்த பள்ளிகளில் கடந்த சில நாட்களாக வகுப்பறைகளை முழு அளவில் தயார்படுத்தும் பணிகள் நடைபெற்றது. கழிவறைகள், குடிநீர் வசதி, மின்வசதி உள்ளிட்டவைகள் தயார் நிலையில் வைத்திருக்க பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது.

    இந்த நிலையில் வேலூர், திருவண்ணாமலை உட் பட 4 மாவட்டங்களில் கோடை விடுமுறை முடிந்து, 6-ம் வகுப்பு முதல் பிளஸ்-2 வரையுள்ள உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளிகள் இன்று திறக்கப்பட்டன. பள்ளி திறக்கப்பட்ட முதல் நாளே மாணவர்கள் உற்சாகத்துடன் வகுப்பறைக்கு வந்தனர்.

    பள்ளிகளில் நீண்ட இடைவெளிக்கு பின்பு சந்தித்த தனது சக மாணவர்களை அரவணைத்து தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.

    அனைத்துப் பள்ளிகளிலும் நேற்று முதல் மாணவர்களுக்கு பாட புத்தகங்கள் வழங்கப்பட்டது.

    அதன்படி வேலூர் முஸ்லீம் மேல்நிலைப் பள்ளியில் மாணவர்களுக்கு, கலெக்டர் குமாரவேல் பாண்டியன் பாட புத்தகங்களை வழங்கினார். அரசு பள்ளிகளில் முதல் நாளான இன்று மாணவ சேர்க்கை விறுவிறுப்பாக நடந்தது.

    ×