என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
தமிழ்நாடு
எல்.கே.ஜி. முதல் 5-ம் வகுப்பு வரை பள்ளிகள் நாளை திறப்பு
- சிறு குழந்தைகளுக்கு வகுப்புகள் தொடங்குவதால் பாதுகாப்பு நடைமுறைகளை கடைபிடிக்க வேண்டும் என்று கல்வித்துறை அறிவுறுத்தி உள்ளது.
- மாநகராட்சி, தனியார் பள்ளிகள், மழலையர் பள்ளிகளுக்கு முதன்முதலாக வரும் குழந்தைகளை வரவேற்க சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்படுகிறது.
சென்னை:
தமிழகத்தில் கோடை விடுமுறை முடிந்து பள்ளிகளை திறப்பதில் தாமதம் ஏற்பட்டது. வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்து வருவதால் பள்ளிகள் திறப்பு தள்ளி வைக்கப்பட்டது. 6 முதல் 12-ம் வகுப்பு வரை உள்ள மாணவ-மாணவிகளுக்கு நேற்று பள்ளிகள் திறக்கப்பட்டன.
1 முதல் 5-ம் வகுப்பு மாணவர்களுக்கு நாளை (புதன்கிழமை) பள்ளிகள் திறக்கப்படுகிறது. அரசு, உதவி பெறும் பள்ளிகள், தனியார் மெட்ரிக்குலேசன் பள்ளிகளில் படிக்கும் குழந்தைகளுக்கு நாளை வகுப்புகள் தொடங்குகிறது.
இது தவிர எல்.கே.ஜி., யு.கே.ஜி. படிக்கும் குழந்தைகளுக்கும் நாளை வகுப்பு நடைபெறுகிறது. சிறு குழந்தைகளுக்கு வகுப்புகள் தொடங்குவதால் பாதுகாப்பு நடைமுறைகளை கடைபிடிக்க வேண்டும் என்று கல்வித்துறை அறிவுறுத்தி உள்ளது.
மாநகராட்சி, தனியார் பள்ளிகள், மழலையர் பள்ளிகளுக்கு முதன்முதலாக வரும் குழந்தைகளை வரவேற்க சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்படுகிறது. இதுவரையில் பெற்றோர் அரவணைப்பில் இருந்த குழந்தைகள், அவர்களை பிரிந்து பள்ளிக்கு வருவதால் அழவும், கூச்சலிடவும் வாய்ப்பு உள்ளது.
அவர்களை அன்போடும், பாசத்தோடும் ஆசிரியர்கள் வரவேற்று வகுப்பறைக்கு அழைத்து செல்லவும், அழுதால், விளையாட்டு பொருட்களை கொடுத்து சிரிக்க வைக்கவும் தயார்படுத்தப்பட்டு உள்ளது. குழந்தைகளுக்கு விளையாட்டு சூழலை ஏற்படுத்தும் வகையில் பல பள்ளிகளில் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளது. ஆசிரியைகள் குழந்தைகளோடு குழந்தைகளாகவே மாறி வகுப்பறையில் அமர வைக்க பல்வேறு அணுகுமுறைகளை கையாள தயாராக உள்ளனர்.
பள்ளிக்கு முதன்முதலாக தங்கள் குழந்தைகள் செல்ல இருப்பதால் இன்றே அவர்களை தயார்படுத்தும் பணியில் பெற்றோர்கள் ஈடுபட்டனர். செல்லக்கூட்டி அழக்கூடாது... அம்மா உன்பக்கத்தில் தான் இருப்பேன்... மிஸ்கூட ஜாலியா விளையாடணும் செல்லம்... என கொஞ்சி கொஞ்சி அவர்களை நாளைய வகுப்பறைக்கு தயார்படுத்தி வருகிறார்கள்.
புதிய சீருடை, ஷூ, பெல்ட், சிறிய புத்தக பை இவற்றுடன் பள்ளிக்கு செல்லும் காட்சியை பெற்றோர் பார்க்க ஆர்வமாக உள்ளனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்