search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பல்கலைக்கழகம்"

    • பல்கலைக்கழகங்களில் வெளிப்படை தன்மையுடன் சிண்டிகேட், செனட் கூட்டங்கள் நடைபெறுவதில்லை.
    • பல பல்கலைக்கழகங்களில் ஆசிரியர் மற்றும் ஆசிரியர் அல்லாத பணியிடங்கள் காலியாக உள்ளன.

    சென்னை:

    தமிழக ஆளுநரும், பல்கலைக்கழகங்களின் வேந்தருமான ஆர்.என்.ரவி தலைமையில் கவர்னர் மாளிகையில் அனைத்து பல்லைக்கழக பிரதிநிதிகள் உடனான ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. 

    இந்த கூட்டத்திற்குப் பிறகு ஆளுநர் மாளிகை சார்பில் வெளியிடப்பட்ட அறிக்கை:

    பல்கலைக்கழக சிண்டிகேட், செனட் கூட்டங்கள் தலைமைச் செயலகத்தில் தான் நடைபெறுகின்றன. பல்கலைக்கழகங்களில் வெளிப்படை தன்மையுடன் சிண்டிகேட், செனட் கூட்டங்கள் நடைபெறுவதில்லை.

    பல பல்கலைக்கழகங்களில் ஆசிரியர் மற்றும் ஆசிரியர் அல்லாத பணியிடங்கள் காலியாக உள்ளன. நேர்மையான முறையில் இந்த பணியிடங்களை நிரப்ப வேண்டும். பதிவாளர், தேர்வு கட்டுப்பாட்டு அலுவலர் போன்ற பணியிடங்கள் காலியாக உள்ளன. கூடுதல் பொறுப்பு என்ற நிலையிலேயே இந்த பணியிடங்கள் பல ஆண்டுகளாக செயல்பட்டு வருகின்றன. பல பல்கலைக்கழகங்களில் துணைவேந்தர்கள் இல்லாததால் பல்கலைக்கழக செயல்பாடுகள் முடங்கி உள்ளன.

    இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

    உயர் கல்வித்துறையின் செயல்பாடுகள் மீது ஆளுநர் அதிருப்தி தெரிவித்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • தேசிய தரவரிசை பட்டியலில் கலசலிங்கம் பல்கலைகழகத்துக்கு 29-வது இடம் வகிக்கிறது.
    • பேராசிரியா்கள் மற்றும் அலுவலா்களை பாராட்டினர்.

    ஸ்ரீவில்லிபுத்தூர்

    புதுடெல்லி கல்வி அமைச்சகம் 2023-ம் ஆண்டுக்கான பல்கலை கழகங்களுக்கான தேசிய அளவிலான தரவரிசை பட்டியலை வெளியிட்டுள்ளது. இந்த பட்டியலில் விருதுநகா் மாவட்டம் கிருஷ்ணன்கோவிலில் உள்ள கலசலிங்கம் பல்கலைக்கழகம் 29-வது இடம் பிடித்துள்ளது.

    மேலும் கல்வி அமைச்சகத்தின் தகவல்படி தேசிய பொறியியல் கல்லூரிகளுக்கான தரவரிசை பட்டியலில் 36-வது இடத்தையும், தேசிய அளவிலான அனைத்து பிரிவு கல்லூரிகளின் தரவரிசை பட்டியலில் 48-வது இடத்தையும் கலசலிங்கம் பல்கலைக்கழகம் பிடித்துள்ளது.

    இதைத்தொடர்ந்து பல்கலைக்கழக வேந்தா் ஸ்ரீதரன், இணை வேந்தா் அறிவழகி ஸ்ரீதரன், துணைத்தலைவா்கள் சசிஆனந்த், அா்ஜூன் கலசலிங்கம், துணைவேந்தா் மற்றும் பதிவாளா் ஆகியோர் டீன்கள், துறைத்தலைவா்கள், பேராசிரியா்கள் மற்றும் அலுவலா்களை பாராட்டினர்.

    • பல்கலைக்கழக வளாத்திற்குள் ஒரு மர்ம கார் வந்தது. அதில் வந்தவர்கள் 2 மாணவிகளை கடத்த முயன்றனர்.
    • மாணவ-மாணவிகள் அடையாள அட்டையை காட்டிய பிறகு தான் உள்ளே செல்ல அனுமதிக்கபடுவார்கள் என அறுவுறுத்தப்பட்டு இருச்கிறது.

    புது டெல்லி:

    டெல்லியில் ஜவகர்லால் நேருபல்கலைக்கழகம் உள்ளது. இங்கு பல்வேறு மாநிலங்களை சேர்ந்த ஏராளமான மாணவ-மாணவிகள் விடுதியில் தங்கி படித்து வருகின்றனர்.

    நேற்று இரவு பல்கலைக்கழக வளாத்திற்குள் ஒரு மர்ம கார் வந்தது. அதில் வந்தவர்கள் 2 மாணவிகளை கடத்த முயன்றனர். ஒரு மாணவிக்கு அந்த கும்பல் பாலியல் தொந்தரவு கொடுத்தாகவும் கூறப்படுகிறது. இதனால் பயந்து போன மாணவிகள் சத்தம் போட்டனர். உடனே மர்ம கும்பல் தப்பி சென்று விட்டது. இது பற்றி போலீசில் புகார் செய்யப்பட்டது.

    போலீசார் வழக்குப்பதிவு செய்து பல்கலைக்கழக வளாகத்தில் பொருத்தப்பட்டு இருந்த கண்காணிப்பு கேமரா பதிவுகளை ஆய்வு செய்தனர். அதன் அடிப்படையில் அபிஷேக் என்பவரை போலீசார் பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    இந்த சம்பவத்தை தொடர்ந்து இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை வெளி வாகனங்கள் பல்கலைக்கழக வளாகத்தில் நுழைய தடை விதிக்கப்பட்டு உள்ளது. மாணவ-மாணவிகள் அடையாள அட்டையை காட்டிய பிறகு தான் உள்ளே செல்ல அனுமதிக்கபடுவார்கள் என அறுவுறுத்தப்பட்டு இருக்கிறது.

    • 291 பி.எட் மாணவர்களுக்கு பட்டங்களை வழங்க உள்ளார்.
    • தொலைநிலைக் கல்வி மூலம் பயின்ற 11 ஆயிரத்து 451 பேருக்கு பட்டங்கள் வழங்கப்பட உள்ளது.

    தஞ்சாவூர்:

    தஞ்சாவூர் தமிழ் பல்கலைக்கழகத்தில் ஆராய்ச்சி படிப்பு, முதுகலை, இளநிலை, தொலை நிலைக்கல்வி ஆகிய பிரிவுகளில் மாணவ-மாணவிகளுக்கு கல்வி பயிற்றுவிக்க ப்படுகிறது.

    இந்நிலையில் கடந்த 2019-20, 2020-21, 2021-22, 2022-23 ஆகிய 4 ஆண்டு களில் படித்தவர்க ளுக்கு பட்டங்கள் தற்போது வழங்க ப்பட உள்ளது.

    அதன்படி நாளை (திங்கட்கிழமை) காலை 10 மணிக்கு தமிழ் பல்கலைக்கழக வளாகத்தில் தமிழ்நாடு கவர்னரும் வேந்தருமான ஆர்.என்.ரவி கலந்து கொண்டு 325 பி.எச்டி படிப்பு முடித்தவர்களுக்கும், 723 எம்.பில், 190 முதுகலை மாணவர்கள், 45 இளங்கலை மாணவர்கள், 291 பி.எட் மாணவர்களுக்கு பட்ட ங்களை வழங்க உள்ளார்.

    இதனைத் தொடர்ந்து தமிழ்ப் பல்கலைக் கழகத்தில் தொலைநிலைக் கல்வி மூலம் பயின்ற 11,451 பேருக்கு பட்டங்கள் வழங்க ப்பட உள்ளது.

    இதில் தமிழ் ஆட்சி மொழி மற்றும் தமிழ் பண்பாடு தொல்லியல் துறை அமைச்சர் தங்கம்தென்னரசு, டாக்டர் எம்.ஜி.ஆர். பல்லை க்கழக துணை வேந்தர் டாக்டர் சுதாசே ஷய்யன் ஆகியோரும் கலந்து கொள்கிறார்கள்.

    தமிழ்ப் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் கவர்னர் பங்கேற்க இருப்பதால், விழாவுக்கான ஏற்பாடுகளை பல்க லைக்கழக துணைவேந்தர் திருவள்ளுவன் தலைமையில் விரிவான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது.

    • தமிழ், இந்தி உள்பட 13 மொழிகளில் கணினி வழியில் தேர்வு நடைபெறும்.
    • தேர்வு முடிவுகள் https://cuet.samarth.ac.in என்ற அதிகாரப்பூர்வ இணையதத்தில் வெளியிடப்படும்

    சென்னை:

    மத்திய பல்கலைக்கழகங்களில் இளங்கலைப் படிப்புகளில் சேருவதற்கான பொதுப் பல்கலைக்கழ நுழைவுத் தேர்வுக்கான (கியூட்) தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.

    நாட்டில் உள்ள மத்திய பல்கலைக்கழகங்களில் இளங்கலை, முதுகலை பட்டப்படிப்புகளில் மாணவர்களை சேர்க்க மத்திய பல்கலைக்கழக பொது நுழைவுத் தேர்வு எனப்படும் (கியூட்) தேர்வை மத்திய அரசு நடத்தி வருகிறது.

    மத்திய பல்கலைக்கழகங்களில் 2023-ம் ஆண்டிற்கான இளங்கலை, முதுகலை படிப்புகளுக்கான மாணவர்கள் சேர்க்கைக்கான கியூட் பொதுத்தேர்வை தேசிய தேர்வு முகமை அறிவித்துள்ளது.

    அதன்படி, இளங்கலை படிப்புகளுக்கான கியூட் 2023 தேர்வுகள் அடுத்த ஆண்டு மே 21 முதல் 31-ந்தேதிகள் வரை நடைபெறும் என்றும், விண்ணப்பதிவு வரும் பிப்ரவரி முதல் வாரத்தில் தொடங்கும் என்றும், நுழைவுத் தேர்வு முடிவுகள் ஜூன் மாதம் 3-வது வாரத்தில் வெளியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    அதேபோன்று முதுகலை படிப்புகளுக்கான நுழைவுத் தேர்வுகள் ஜூன் முதல் மற்றும் இரண்டாவது வாரத்தில் நடைபெறும், நுழைவுத் தேர்வு முடிவுகள் ஜூலை மாதத்தில் வெளியாகும் என்றும் தேசிய தேர்வு முகமை தெரிவித்துள்ளது. https://www.nta.ac.in/cuetexam என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

    பொது, ஓ.பி.சி., இ.டபுள்யு.எஸ். பிரிவு விண்ணப்பத்தாரர்கள் ரூ. 650, எஸ்சி,எஸ்டி, மாற்றுத்திறனாளிகள் மற்றும் திருநங்கைகள் ரூ.550. தேர்வு கட்டணத்தை டெபிட், கிரெடிட் கார்டு, நெட் பேங்கிங் மூலம் செலுத்தவேண்டும்.

    கியூட் நுழைவுத் தேர்வை இந்தியாவிற்கு உள்ளே 259 நகரங்களில் உள்ள 489 தேர்வு மையங்களிலும், நாட்டிற்கு வெளியே 2 நகரங்களிலும் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.

    தமிழ், இந்தி உள்பட 13 மொழிகளில் கணினி வழியில் தேர்வு நடைபெறும். தேர்வு முடிவுகள் https://cuet.samarth.ac.in என்ற அதிகாரப்பூர்வ இணையதத்தில் வெளியிடப்படும் என தேசிய தேர்வு முகமை தெரிவித்துள்ளது.

    • நாடக வடிவில் படிக்கும் போது, இன்றைய இளைஞர்களுக்கு எளிதில் சென்றடையும்.
    • திருப்பூர் தொழிலதிபர்கள் 10பேரின் வாழ்க்கை வரலாற்றையும் சேர்க்க முயற்சிகள் எடுக்கப்பட்டு வருகின்றன.

    திருப்பூர் : 

    கோவை பாரதியார் பல்கலைக்கழகத்தில் சுதந்திர போராட்ட வீரரான திருப்பூர் குமரனின் வாழ்க்கை வரலாற்றை சேர்க்க முயற்சிகள் மேற் கொள்ளப்படும் என பல்கலைக்கழக செனட் உறுப்பினர் டாக்டர் ஆதலையூர் சூரியகுமார் தெரிவித்தார்.

    இதுகுறித்து அவர் கூறியதாவது:- இந்திய சுதந்திர போராட்ட வரலாற்றில் திருப்பூர் குமரனின் தியாகம் மறக்க முடியா தது. இவரது வாழ்க்கையும், அவரது போராட்ட வழிமுறைகளும், நெஞ்சுறுதியும் இளைஞர்களிடையே தேசபக்தியை வளர்க்கக்கூடியது.

    இந்திய சுதந்திரத்தின் 75வது ஆண்டு நிறைவை கொண்டாடி கொண்டிருக்கும் இவ்வேளையில் திருப்பூர் குமரனின் வாழ்க்கை வரலாறு பாடத்திட்டத்தில் சேர்க்கப்படுவது என்பது அவருக்கு செலுத்தும் பெரும் புகழஞ்சலியாக இருக்கும்.

    குறிப்பாக நாடக வடிவில் படிக்கும் போது, இன்றைய இளைஞர்களுக்கு எளிதில் சென்றடையும். இதற்காகவே, திருப்பூர் தமிழ் பட்டறை இலக்கிய பேரவை தலைவர் ஆழ்வை கண்ணன் எழுதிய திருப்பூர் குமரன் நாடக நூல் பரிந்துரைக்கப்பட்டுள்ளது. விரைவில் இதற்கான உரிய முயற்சிகள் மேற்கொள்ளப்படும்.

    இத்துடன் உள்ளூர் வரலாற்றையும், வளர்ச்சியையும் மாணவர்களுக்கும் எடுத்துக்கூறும் விதமாகவும், தன்னம்பிக்கை ஏற்படுத்தும் வகையில் திருப்பூர் தொழிலதிபர்கள் 10பேரின் வாழ்க்கை வரலாற்றையும் சேர்க்க முயற்சிகள் எடுக்கப்பட்டு வருகின்றன.இவ்வாறு அவர் கூறினார்.

    • மத்திய பல்கலைக்கழகங்களில் பயிற்சி மொழியாக இந்தி இருக்க வேண்டும்.
    • ஆயிரத்திற்கும் மேற்பட்ட தி.மு.க.வினர் கலந்து கொண்டனர்.

    நாகப்பட்டினம்:

    நாகையில் தி.மு.க. பொது உறுப்பினர்கள் கூட்டம் நடைபெற்றது. அமைச்சர் மெய்யநாதன் மற்றும் மீன் வளர்ச்சி கழக தலைவர் கவுதமன் தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில், நாகை, கீழ்வேளூர், வேதாரண்யம் சட்டமன்ற தொகுதியைச் சேர்ந்த ஆயிரத்திற்கும் மேற்பட்ட திமுகவினர் இதில் கலந்து கொண்டனர்.

    கூட்டத்தில் அமைச்சர் மெய்யநாதன், மத்திய அரசால் நடத்தப்படுகின்ற ஐஐடி என்ஐடி, கேந்திர வித்யாலயா உள்ளிட்ட மத்திய பல்கலைக்கழகங்களில் ஆங்கிலத்திற்கு பதிலாக அதன்பயிற்சி மொழியாக இந்தி இருக்க வேண்டும் என்ற ஆய்வறிக்கையினை குடியரசு தலைவரிடம் உள்துறை அமைச்சர் அமித்ஷா சமர்ப்பித்துள்ளது ஏற்றுக்கொள்ளக் கூடியது அல்ல என அமைச்சர் மெய்யநாதன் குறை கூறினார்.

    மேலும் இந்தியாவில் தமிழ்நாடு மட்டுமே பிற மாநில உரிமைக்காகவும் அதன் மாநில மொழிகளுக்காகவும் முதன் முதலில் குரல் கொடுத்ததாகவும் அதனை தமிழக முதல் அமைச்சர் தற்போதும் வலியுறுத்தி வருவதாகவும் அவர் அமைச்சர் மெய்யநாதன் பேசினார்.

    • ராமநாதபுரத்தில் பசும்பொன் தேவர் பெயரில் பல்கலைக்கழகம் தொடங்க வேண்டும்.
    • அனைத்து மறவர் நல கூட்டமைப்பு சார்பில் வலியுறுத்தப்பட்டது.

    பரமக்குடி

    பசும்பொன் முத்துராம லிங்க தேவர் குருபூஜை விழா மற்றும் ஜெயந்தி விழாவை முன்னிட்டு அனைத்து மறவர் நல கூட்டமைப்பு மற்றும் செம்பிய நாடு மறவர் சங்கம் சார்பில் பசும்பொன்னில் அன்னதானம் வழங்கும் விழா நடைபெற்றது. அனைத்து மறவர் நல கூட்டமைப்பின் பொதுச்செயலாளரும், ஓய்வு பெற்ற காவல் துறை ஐ.ஜி.யுமான விஜயகுமார் தலைமை தாங்கி அன்னதானத்தை தொடங்கி வைத்தார். ஓய்வு பெற்ற டி.ஐ.ஜி. துரைச்சாமி, செம்பிய நாடு மறவர் சங்கத் தலைவர் சி. எம். டி. ராஜாஸ் சேதுபதி, மலேசியா முக்குலத்தோர் சங்கத்தலைவர்-தொழில் அதிபர் குணாத்தேவர் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    விழாவையொட்டி ஆயிரக்கணக்கானோருக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. இந்த விழாவில் பசும்பொன் முத்துராமலிங்கத்தேவர் புகைப்படம் பொறித்த ரூபாய் நோட்டுகளை வெளியிட வேண்டும் என்றும், பசும்பொன் முத்துராமலிங்கத் தேவருக்கு பாரத ரத்னா விருது வழங்க வேண்டும் என்றும், அவரின் நினைவாக ராமநாதபுரத்தில் பசும்பொன் தேவர் பல்கலைக்கழகம் தொடங்க வேண்டும் என்றும், மதுரை விமான நிலையத்திற்கு முத்துராமலிங்கத் தேவர் பெயர் சூட்ட வேண்டும் என்றும் மத்திய-மாநில அரசுகளுக்கு வேண்டுகோள் விடுத்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதில் அனைத்து மறவர் நல கூட்டமைப்பு நிர்வாகிகள் மற்றும் செம்பிய நாடு மறவர் சங்க நிர்வாகிகள் திரளாக கலந்து கொண்டனர்.

    • டெல்லி உள்பட நாடு முழுதும் செயல்படும் 21 பல்கலைக்கழகங்கள் போலியானவை.
    • அவை பட்டம் வழங்க தகுதியற்றவை என யு.ஜி.சி. தெரிவித்துள்ளது.

    புதுடெல்லி:

    மத்திய பல்கலைக்கழக மானியக் குழு (யுஜிசி) நாட்டில் செயல்படும் போலி பல்கலைக்கழகங்களின் பட்டியலை வெளியிட்டுள்ளது.

    பல்கலைக்கழக மானியக் குழுவிடம் அங்கீகாரம் பெறாமல் நடத்தப்படும் 21 போலி பல்கலைக்கழகங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

    அதில், தலைநகர் டெல்லியில் சுமார் 8 போலி பல்கலைக்கழகங்களும், உத்தர பிரதேசத்தில் 7, ஒடிசா, மேற்குவங்காளம், ஆந்திரா, கேரளா, மகாராஷ்டிரா, புதுச்சேரியில் தலா ஒரு போலி பல்கலைக்கழங்கள் இருப்பதாகத் தெரிவித்துள்ளது.

    மேலும், இந்தப் போலி பல்கலைக்கழகங்கள் வழங்கும் பட்டங்கள் செல்லாது என யுஜிசி எச்சரிக்கை விடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

    • பல்கலைக்கழக துணைவேந்தர்களுடன் முதல்வர் ஸ்டாலின் ஆலோசனை நடத்தவுள்ளார்.
    • வரும் 30ம் தேதி இந்த ஆலோசனை நடக்க உள்ளது.

    சென்னை:

    தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வரும் 30-ம் தேதி தமிழக பல்கலைக்கழக துணைவேந்தர்களுடன் ஆலோசனை நடத்த உள்ளார்.

    மாநில கல்விக் கொள்கை, உயர்கல்வி மேம்பாடு, தேர்ச்சி விகிதத்தை உயர்த்துவது உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் குறித்து ஆலோசனை

    நடத்தப்படும் என தெரிகிறது.

    • இதற்கு பட்டியல் அணியின் தெற்கு மாவட்ட தலைவர் விக்னேஷ்குமார்ராஜா தலைமை வகித்தார்.
    • ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட தலைவர்கள் ஜெய்சதீஷ், சதீஷ்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    தஞ்சாவூர்:

    சேலம் பெரியார் பல்கலைக்கழகத்தில் நடத்தப்பட்ட பருவ தேர்வு வினாத்தாளில் ஜாதி பெயரை குறிப்பிட்டு கேட்கப்பட்ட ஒரு கேள்வி சர்ச்சையை ஏற்படுத்தியது. இதனை கண்டித்தும், அந்த பல்கலைக்கழக துணைவேந்தர் மீது நடவடிக்கை எடுக்க கோரியும் இன்று தஞ்சை கலெக்டர் அலுவலகம் முன்பு பா.ஜ.க. பட்டியல் அணி சார்பில் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

    இதற்கு பட்டியல் அணியின் தெற்கு மாவட்ட தலைவர் விக்னேஷ்குமார்ராஜா தலைமை வகித்தார். ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட தலைவர்கள் ஜெய்சதீஷ், சதீஷ்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    மாவட்ட பொதுச் செயலாளர் முரளிதரன், விவசாய அணி மாநில துணை தலைவர் பண்ணவயல் இளங்கோ, ஐ.டி. பிரிவு மாவட்ட தலைவர் தங்கதுரை உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    • தஞ்சை தமிழ் பல்கலை கழகத்தில், தமிழ்ப் பல்கலைக்கழக இணைய வழி வானொலி தொடக்க விழா நடைபெற்றது.
    • துணைவேந்தர் முனைவர் வி. திருவள்ளுவன் இதனை தொடங்கி வைத்தார்.

    தஞ்சாவூர்:

    தஞ்சை தமிழ் பல்கலை கழகத்தில், தமிழ்ப் பல்கலைக்கழக இணைய வழி வானொலி தொடக்க விழா நடைபெற்றது. துணைவேந்தர் முனைவர் வி. திருவள்ளுவன் இதனை தொடங்கி வைத்தார்.

    அப்போது அவர் பேசியதாவது:-

    உலக அளவில் தமிழ்மொழியைப் பரப்பும் நோக்கத்திலும், தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் நடைபெறும் அன்றாட நிகழ்வுகளை, பொதுமக்களுக்கும், மாணவர்கள் ஆய்விற்கும் இந்த பல்கலைக்கழக ஓசை என்ற இணையவழி வானொலி மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    இந்நிகழ்வில் பதிவாளர்(பொ) முனைவர் தியாகராஜன், ஆட்சிக்குழு உறுப்பினர் நீலகண்டன், புலத் தலைவர்க ள் கண்ணன், கவிதா, இளையாப்பிள்ளை, துணைப்பதிவாளர் பன்னீர்செல்வம், தொழில்நுட்பாளர்கள் செல்வம், அர்ணால்ட்டு மற்றும் கல்வியாளர்கள், அலுவல்நிலைப் பணியாளர்கள், மாணவர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

    ×