search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பயனாளிகள்"

    • பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.
    • மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் சந்திரசேகர் உள்பட பல்வேறு துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

    விருதுநகர்

    விருதுநகர் மாவட்ட கலெக்டர் அலுவலக வளர்ச்சி மன்றக் கூட்டரங்கில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் கலெக்டர்(பொறுப்பு) ரவிகுமார் தலைமையில் நடந்தது. இலவச வீட்டுமனை பட்டா மற்றும் பட்டா மாறுதல், குடும்ப அட்டை, வேலைவாய்ப்பு, முதியோர், விபத்து நிவாரணம், மாற்றுத்திறனாளிகள், நலிந்தோர் நலத்திட்டம், விதவை உதவித்தொகை, திருமண உதவித்தொகை உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் தொடர்பாக மனுக்கள் பெறப்பட்டன. மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் சார்பில் 2 பயனாளிகளுக்கு ரூ.1 லட்சத்து 30 ஆயிரம் மதிப்பிலான நவீன செயற்கைகால்களையும், செவித்திறன் குறைபாடுடைய 2 மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.26 ஆயிரம் மதிப்பிலான பிரத்தியேகமாக வடிவமைக்கப்பட்ட கைப்பேசிகளையும் கலெக்டர்(பொறுப்பு) ரவிகுமார் வழங்கினார்.

    மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் சந்திரசேகர் உள்பட பல்வேறு துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

    • 77 பயனாளிகளுக்கு ரூ. 167 லட்சத்து 55 ஆயிரம் மானியம் வழங்கப்பட்டது.
    • 7 பயனாளிகளுக்கு ரூ. 106 லட்சத்து 33 ஆயிரம் மானியம் வழங்கப்பட்டது.

    தரங்கம்பாடி:

    மயிலாடுதுறை மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் மாவட்ட தொழில் மையம் மற்றும் மாவட்ட முன்னோடி வங்கிகள் சார்பில் பிரதம மந்திரி வேலைவாய்ப்பு உருவாக்கும் திட்டத்தின் கீழ் கடனுதவி வழங்கிய வகையில் மாநிலத்தில் கடந்த ஜனவரி மாதம் வரை மயிலாடுதுறை மாவட்டம் மூன்றாவது இடத்தை பெற்றுள்ளது என கலெக்டர் லலிதா தெரிவித்துள்ளார்.இதுகுறித்து அவர் கூறியிருப்பதாவது:-

    மாவட்ட தொழில் மையம் மூலம் பிரதமரின் வேலைவாய்ப்பு உருவாக்கும் திட்டம் (பி.எம்.இ.ஜி.பி), படித்த, வேலையற்ற இளைஞர்களுக்கான வேலைவாயப்பு உருவாக்கும் திட்டம், (யு.ஒய்.இ.ஜி.பி.), புதிய தொழில் முனைவோர் வேலைவாயப்பு உருவாக்கும் திட்டம் (நீட்ஸ்) மற்றும் பிரதான் மந்திரி உணவு பதப்படுத்தும் குறு நிறுவனங்க ளுக்கான முறைப்படுத்தும் திட்டம்;-

    (பி.எம்.எப்.எம்.இ) ஆகிய திட்டங்கள் செயல்படுத்த ப்பட்டு வருகிறது.

    இத்திட்டங்களின் கீழ் 2022-23-ம் நிதியாண்டில் பிரதமரின் வேலைவாய்ப்பு உருவாக்கும் (பி.எம்.இ.ஜி.பி,) திட்டத்தின் கீழ் திட்ட இலக்கீடு 114 பயனாளிகளில் 176 பயனாளிகளுக்கும், இதன் நிதி இலக்கீடான ரூ. 331.50 லட்சத்தில், வங்கியிலிருந்து ரூ. 361.27 லட்சம் மானியத்துடன் கடனுதவியும், இவற்றில் 77 பயனாளிகளுக்கு ரூ.167.55 லட்சம் மானியம் வழங்கப்பட்டது.

    படித்த, வேலையற்ற இளைஞர்களுக்கான வேலைவாயப்பு உருவாக்கும் (யு.ஒய்.இ.ஜி.பி.), திட்டத்தின் கீழ் திட்ட இலக்கீடு 42 பயனாளிகளில் 32 பயனாளிகளுக்கும் இதன் நிதி இலக்கீடான ரூ.34 லட்சத்தில், வங்கியிலிருந்து ரூ.32.9 லட்சம் மானியத்துடன் கடனுதவியும், இவற்றில் 30 பயனாளிகளுக்கு ரூ.29.59 லட்சம் மானியம் வழங்கப்பட்டது.

    புதிய தொழில் முனை வோர் வேலைவாயப்பு உருவாக்கும் (நீட்ஸ்) திட்டத்தின் கீழ் திட்ட இலக்கீடு 17 பயனாளிகளில் இதுவரை 13 பயனாளிகளுக்கும் இதன் நிதி இலக்கீடான ரூ.168 லட்சத்தில், வங்கியிலிருந்து ரூ.456.95 இலட்சம் மானியத்துடன் கடனுதவியும், இவற்றில் 7 பயனாளிகளுக்கு ரூ.106.33 இலட்சம் மானியமும் வழங்கப்பட்டது.

    பிரதமரின் வேலை வாய்ப்பு உருவாக்கும் (பி.எம்.எப்.எம்.இ.) திட்டத்தின் கீழ் 12 பயனாளிகளுக்கு ரூ.20.94 லட்சம் மானியத்துடன் கூடிய கடனுதவியும் வழங்கப்பட்டுள்ளது.

    2022-ம் ஆண்டில் மாவட்ட தொழில் மையம் மூலம் செயல்படுத்தப்படும் திட்டங்களின் கீழ் சிறப்பாக கடனுதவி வழங்கிய 33 வங்கி மேலாளர்களை பாராட்டி சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது.

    மேலும் பிரதமரின் வேலைவாய்ப்பு உருவாக்கும் (பி.எம்.இ.ஜி.பி.) திட்டத்தின் கீழ் கடனுதவி வழங்கிய வகையில் மாநிலத்திலேயே மயிலாடுதுறை மாவட்டம் ஜனவரி மாதம் வரை 3-வது இடத்தை பெற்றுள்ளது.

    மேலும், இத்திட்டத்தின் கீழ் மாற்றுத்திறனாளிகள், சிறுபான்மையினர், பட்டியலினத்தவர் மற்றும் பழங்குடியினர்களுக்கு சிறப்பு ஒதுக்கீடு செய்யப்ப ட்டுள்ளது.

    மேலும், தொழில் தொடங்க ஆர்வமுள்ள தொழில் முனைவோர்கள், பொதுமேலாளர் மாவட்டதொழில் மையம், 2-ம் தளம், செந்தில் பைப்ஸ் வளாகம், கச்சேரி சாலை, மயிலாடுதுறை அல்லது தொலைபேசி எண்: 04364-212295, கைபேசி எண்: 9788877322 ஆகிய எண்களுக்கு தொடர்பு கொண்டு பயனடையலாம் என்றார்.

    • மகளிர் நலனுக்காக வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் வகையில் இலவச தையல் பயிற்சி மையம்.
    • 10 பயனாளிகளுக்கு இலவச தையல் எந்திரம் வழங்கப்பட்டுள்ளது.

    தஞ்சாவூர்:

    தஞ்சாவூர் மகர்நோம்புச்சாவடியில் மாவட்ட முஸ்லிம் மகளிர் உதவும் சங்கம் சார்பில் இலவச தையல் பயிற்சி மையத்தினை கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலினர் திறந்து வைத்து பயிற்சி உதவி பொருட்களை வழங்கினார்.

    இதுகுறித்து அவர் கூறியதாவது :-

    தமிழ்நாடு முதலமைச்சர் வழிகாட்டுதலின்படி மகளிர் உதவும் சங்கங்களுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகளை தமிழக அரசு நிறைவேற்றி வருகிறது .

    அத்தகைய வகையில் தஞ்சாவூர் மாவட்ட முஸ்லிம் மகளிர் உதவும் சங்கம் சார்பில் மகர்நோன்புச்சாவடி வாடிவாசல் வைக்கோல்கார தெருவில் இலவச தையல் பயிற்சி முகாம் இஸ்லாமிய மதத்தைச் சார்ந்த வயது முதிர்ந்த ஆதரவற்ற கணவரால் கைவிடப்பட்ட முஸ்லிம் மகளிர் நலனுக்காக வாழ்வாதாரத்தினை மேம்படுத்தும் வகையில் தையல் பயிற்சி அளித்திட இலவச தையல் பயிற்சி மையம் தொடங்கப்பட்டு உள்ளது.

    இதில் 10 பயனாளிகளுக்கு இலவச தையல் இயந்திரம் வழங்கப்பட்டுள்ளது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இந்நிகழ்ச்சியில் முஸ்லிம் மகளிர் உதவி சங்கம் செயலாளர் முகமது ரபி, மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலர் ரேணுகாதேவி, ஸ்டாலின் பீட்டர் பாபு, மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

    • கல்வி கடன் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய 490 மனுக்கள் பெறப்பட்டது.
    • 6 பயனாளிகளுக்கு இலவச வீட்டு மனை பட்டாவிற்கான ஆணை வழங்கல்.

    தஞ்சாவூர்:

    தஞ்சாவூர் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் நடைபெற்ற பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் தலைமையேற்று பேசியதாவது:-

    குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் இலவச வீட்டுமனை பட்டா. முதியோர் உதவித்தொகை, குடும்ப அட்டை, பட்டா மாற்றம், கல்வி கடன் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய 490 மனுக்கள் பெறப்பட்டது.

    இந்த மனுக்களை விசாரணை செய்து உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ள சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.

    மேலும், மனுக்கள் மீது மேற்கொள்ளப்படும் நடவடிக்கை குறித்த விவரத்தை உடனடியாக மனுதாரருக்கு தெரிவிக்க சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    பின்னர் அவர், திருக்காட்டுப்பள்ளி கிராமம் கூடநாணல் பகுதியில் வசிக்கும் 6 பயனாளிகளுக்கு விலை இல்லா வீட்டு மனை பட்டாவிற்கான ஆணைகளை வழங்கினார்.

    முன்னதாக தஞ்சை இராமதாசு எழுதிய அரசின் பல்வேறு துறைகளில் செயல்படுத்தப்படும் திட்டங்களை மக்கள் அறிந்து பயன்பெறும் வகையில் தொகுக்கப்பட்டுள்ள ஒன்வொன்றும் உதவிடும் உங்களுக்கு என்னும் நூலினை வெளியிட்டார்.

    இக்கூட்டத்தில் கூடுதல் கலெக்டர்கள் சுகபுத்ரா, ஸ்ரீகாந்த், தனித்துணை ஆட்சியர் (சமூக பாதுகாப்பு திட்டம்) தவவளவன், ஆதிதிராவிடர் நலத்துறை அலுவலர் இலக்கியா மற்றும் அனைத்துத்துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர். 

    • சிவகங்கையில் குறை தீர்க்கும் கூட்டத்தில் 59 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
    • பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, பொதுமக்களிடமிருந்து 259 மனுக்கள் பெறப்பட்டன.

    சிவகங்கை

    சிவகங்கை மாவட்ட கலெக்டர் அலுவலகக் கூட்டரங்கில் மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம், கலெக்டர் மதுசூதன் ரெட்டி தலைமையில் நடந்தது.

    இலவச வீட்டுமனைப் பட்டா, சமூக பாதுகாப்பு திட்டத்தின் கீழ் உதவித் தொகை, உள்ளிட் பல்வேறு கோரிக்கைகளை வலியு றுத்தி, பொதுமக்களிடமிருந்து 259 மனுக்கள் பெறப்பட்டன. தகுதியுடைய மனுக்கள் மீது கவனம் செலுத்தி, விரைந்து நடவடிக்கை எடுக்க துறை அலுவலர்களுக்கு கலெக்டர்அறிவுறுத்தினார்.

    இந்த கூட்டத்தில் வருவாய்த்துறை, தொழிலாளர் நலத்துறை, தாட்கோ உள்ளிட்ட பல்வேறு துறைகள் சார்பில் 59 பயனாளிகளுக்கு ரூ.35.37 லட்சம் மதிப்பிலான அரசின் நலத்திட்ட உதவிகளை கலெக்டர் மதுசூதன்ரெட்டி வழங்கினார்.

    இளையான்குடி வட்டத்தைச் சேர்ந்த சுப்பிரமணியன் என்பவர் மின்சாரம் தாக்கி இறந்தார். அவரது வாரிசுதாரராகிய மனைவிக்கு முதல்-அமைச்சரின் பொது நிவாரண நிதியில் இருந்து ரூ.1 லட்சம் மதிப்பீட்டிலான நிவாரண உதவித்தொகைக்கான காசோலை வழங்கப்பட்டது.

    இந்த நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் மணிவண்ணன், சமூகப் பாதுகாப்புத் திட்ட தனித்துணை ஆட்சியர் காமாட்சி, தொழிலாளர் நல ஆணையர் கோட்டீ சுவரி, மாவட்ட மாற்றுத்தி றனாளிகள் நல அலுவலர் கதிர்வேலு உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • திட்ட தொழில் சாரா வல்லுநர் லெட்சுமி அனைவரையும் வரவேற்றார்.
    • 62 பயனாளிகளுக்கு சுமார் ரூ.75 ஆயிரம் மதிப்பில் அலுமினிய அன்னக்கூடை வழங்கப்பட்டது.

    முத்துப்பேட்டை:

    முத்துப்பேட்டை அடுத்த ஆலங்காடு கிராமத்தில் தமிழக அரசின் வாழ்ந்து காட்டுவோம் திட்டத்தின் கீழ் மகளிர் குழுவில் உள்ள கால்நடைகள் வளர்க்கும் பெண்களுக்கு உபகரணங்கள் வழங்கும் நிகழ்ச்சி ஒன்றிய கவுன்சிலர் மோகன் தலைமையில் நடைபெற்றது.

    ஊராட்சி மன்ற தலைவர் தமிழரசி முன்னிலை வகித்தார்.

    முன்னாக திட்டத்தின் தொழில் சாரா வல்லுநர் லெட்சுமி அனைவரையும் வரவேற்றார்.

    இதில் 62 பயனாளிகளுக்கு சுமார் ரூ.75 ஆயிரம் மதிப்பில் அலுமினிய அன்னக்கூடை, சில்வர் பால் வாலி ஆகியவை வழங்கப்பட்டது.

    இதில் ஊராட்சி உநுப்பினார்கள் பாலசுப்பிரமணியன், பாலசுப்பிரமணியன், செங்குட்டுவன், லோகநாதன், கலையரசன், குழு நிர்வாகிகள், உறுப்பினார்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • பயனாளிகளுக்கு உதவித்தொகை, இலவச வீட்டுமனை பட்டா மற்றும் பல்வேறு நலத்திட்டங்களை வழங்கினார்.
    • முகாமில் தமிழக அரசின் சிறப்பு திட்டங்கள் குறித்து கலெக்டர் கூறினார்.

    பேராவூரணி:

    தஞ்சாவூர் மாவட்டம், பேராவூரணி வட்டம், சேதுபாவாசத்திரம் ஒன்றியம், குப்பத்தேவன் ஊராட்சி கணேசபுரத்தில் மக்கள் நேர்காணல் முகாம் நடைபெற்றது.

    நிகழ்ச்சிக்கு தஞ்சை மாவட்ட கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் தலைமை வகித்தார்.

    தஞ்சாவூர் கலால் உதவி ஆணையரும், பட்டுக்கோட்டை வருவாய் கோட்டாட்சியர் (பொறுப்பு) கோ.பழனிவேல் வரவே ற்றார். கூடுதல் கலெக்டர் (வருவாய்) சுகபுத்திரா, சட்டமன்ற உறுப்பினர் நா.அசோக்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    நிகழ்ச்சியில் சமூக பாதுகாப்பு திட்டத்தின் கீழ் 56 பயனாளிகளுக்கு, ரூபாய் 1000 மாதாந்திர உதவித்தொகை, வருவாய் பேரிடர் மேலாண்மை துறை சார்பில் 380 பயனாளிகளுக்கு ரூபாய்.36 லட்சத்து 56 ஆயிரத்து 125 மதிப்பிலான விலையில்லா வீட்டு மனைப்பட்டா, 30 பயனாளிகளுக்கு குடும்ப அட்டைகள், 10 பயனாளிகளுக்கு பட்டா மாறுதல் ஆணை, 20 மகளிர் சுய உதவிக் குழுவிற்கு கடன் உதவி, வேளாண்மை மற்றும் தோட்டக்கலைத் துறை சார்பில் இடு பொருட்கள், மானியம் மற்றும் பவர் டில்லர் என மொத்தம் ரூ.1 கோடியே 85 லட்சத்து 15 ஆயிரத்து 583 மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை மாவட்ட கலெக்டர் வழங்கி தமிழக அரசின் சிறப்பு திட்டங்கள் குறித்து பேசினார். முடிவில் பேராவூரணி வட்டாட்சியர் சுகுமார் நன்றி கூறினார்.

    அதனை தொடர்ந்து மனோரா கடற்கரை பகுதியில் கடல் அரிப்பை தடுக்க அலையாத்தி காடுகள் உருவாக்க 14000 மரக்கன்றுகள் நடும் பணியை தொடங்கி வைத்தார்.கழனிவாசல் ஊராட்சி கொரட்டூர் கிராமத்தில் 1 ஏக்கரில் ஊருக்கு ஒரு வனம் திட்டத்தில் தென்னை உள்ளிட்ட பல்வேறு வகையான மரக்கன்றுகள் நடும் விழாவை தொடங்கி வைத்தார்.

    நிகழ்ச்சியில் சேதுபாவா சத்திரம் ஒன்றிய பெருந்தலைவர் மு.கி.முத்துமாணிக்கம், ஊரக வளர்ச்சி உதவி இயக்குனர் (ஊராட்சிகள்) சங்கர், மாவட்ட வன அலுவலர் அகில் தம்பி, கவின்மிகு தஞ்சை தலைவர் ராதிகா மைக்கேல், ஒன்றிய குழு உறுப்பினர் சுதாகர், குப்பத்தேவன் ஊராட்சி மன்ற தலைவர் பாலமுருகன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    • நில உரிமையாளா்களின் ஆக்கிரமிப்பில் இருந்து வந்த உச்சவரம்பு நிலத்தை இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினா் மீட்டனா்.
    • 45 பயனாளிகளுக்கும் அவா்களுக்கு பட்டாவில் குறிப்பிட்டுள்ளபடி விவசாய நிலத்தை பிரித்து வழங்கினா்.

    தாராபுரம்:

    தமிழகத்தில் அதிக அளவு விவசாய நிலங்களை தங்கள் வசம் வைத்திருந்த நில சுவான்தாரா்களிடம் இருந்து நில உச்சவரம்பு சீா்திருத்த சட்டத்தின்கீழ் விவசாய நிலங்களை கையகப்படுத்திய தமிழக அரசு, அவற்றை நிலமற்ற ஏழை விவசாய கூலி தொழிலாளா்களுக்கு பிரித்து வழங்கியது.

    அதன்படி திருப்பூா் மாவட்டம் தாராபுரம் பகுதியை சோ்ந்த தளவாய்பட்டினம், ஊத்துப்பாளையம் பகுதிகளில் நில சுவான்தாரா்களிடம் இருந்து கையகப்படுத்திய 55 ஏக்கா் விவசாய நிலத்தை பிரித்து 45 பயனாளிகளுக்கு கடந்த 2003-ம் ஆண்டு அரசு நில பட்டா வழங்கியது.பட்டா பெற்ற விவசாயிகளுக்கு அவா்களுக்கான நிலத்தை அளந்து பிரித்து எடுப்பதில் கடந்த 19 ஆண்டுகளாக சட்டப்போராட்டம் நடைபெற்று வந்தது. மேலும் அந்த நிலங்கள் நில உரிமையாளா்களின் ஆக்கிரமிப்பில் இருந்ததாக கூறப்படுகிறது.

    இந்நிலையில் அரசு வழங்கிய நிலப்பட்டாக்களுக்கு உரிய இடத்தை 45 பயனாளிகளுக்கும் உடனடியாக பிரித்து நில அளவீடு செய்து வழங்க சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவிட்டதைத் தொடா்ந்து நில உரிமையாளா்களின் ஆக்கிரமிப்பில் இருந்து வந்த உச்சவரம்பு நிலத்தை இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினா் மீட்டனா்.

    இதைத்தொடா்ந்து திருப்பூா் மக்களவை உறுப்பினரும், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் கட்டுப்பாட்டு குழுத் தலைவருமான கே.சுப்பராயன், மாநில துணைச்செயலா் நா.பெரியசாமி, மாநில செயற்குழு உறுப்பினா் எம்.ரவி ஆகியோா் அரசு வழங்கிய உச்சவரம்பு நிலத்துக்கான பட்டாக்களை பெற்றிருந்த 45 பயனாளிகளுக்கும் அவா்களுக்கு பட்டாவில் குறிப்பிட்டுள்ளபடி விவசாய நிலத்தை பிரித்து வழங்கினா்.இதில் சிபிஐ., கட்சியின் தாராபுரம் பகுதி நிா்வாகிகள், பட்டாதாரா்கள் கலந்துகொண்டனா். 

    • காரையூரில் மக்கள் தொடர்பு முகாம் நடந்தது.
    • இதில் பயனாளிகளுக்கு பட்டா மாறுதல், மாற்றுத்திறனாளிகள் அடையாள அட்டை, போன்ற நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.

    திருப்பத்தூர்

    சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் அருகே உள்ள காரையூர் கிராமத்தில் வருவாய்த்துறை மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை சார்பில் மக்கள் தொடர்பு நடந்தது. மாவட்ட வருவாய் அலுவலர் மணிவண்ணன் தலைமை தாங்கினார். முகாமில் பல்வேறு துறைகளின் மூலம் 53 பயனாளிகளுக்கு பட்டா மாறுதல், மாற்றுத்திறனாளிகள் அடையாள அட்டை, இலவச வீட்டுமனை பட்டா போன்ற நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது. மேலும் முகாமில் பெற்ற கோரிக்கை மனுக்கள் மீது விரைந்து நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

    இந்த முகாமில் வட்டாட்சியர் வெங்கடேசன், தனி வட்டாட்சியர் ராஜா மற்றும் கண்ணதாசன், மண்டல துணை வட்டாட்சியர் செல்லமுத்து, வருவாய் ஆய்வாளர் மன்சூர் அலி, ஊராட்சி மன்ற தலைவர் செந்தமிழ் செல்வி மதியழகன், உப தலைவர் அருணகிரி, இளைஞர் அணி துணை அமைப்பாளர் தமிழ் நம்பி, திருப்பத்தூர் கிராம நிர்வாக அலுவலர் விக்னேஷ் மற்றும் வட்டத்திற்கு உட்பட்ட கிராம நிர்வாக அலுவலர்கள், கிராம உதவியாளர்கள், மருத்துவர்கள், செவிலியர்கள், அங்கன்வாடி உதவியாளர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

    • ராமநாதபுரத்தில் 314 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை அமைச்சர்கள் ராஜகண்ணப்பன், மஸ்தான் வழங்கினர்.
    • சிறுபான்மையினர் நலத்துறையின் மூலம் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.

    ராமநாதபுரம்

    ராமநாதபுரம் கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் சிறுபான்மையினர் நலத்துறையின் மூலம் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. இதில் அமைச்சர்கள் ராஜகண்ணப்பன், மஸ்தான் ஆகியோர் தலைமை தாங்கி பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கினர்.

    விழாவில் அமைச்சர் மஸ்தான் பேசுகையில், பன்முக நோக்கத்தோடு இந்தியாவில் எந்த மாநி லத்திலும் இல்லாத வகையில் தமிழகத்தை அமைதி மாநிலமாக மாற்றி ஆளுமை திறன் கொண்ட முதல்வராக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இருந்து வருகிறார்.

    இங்கு பொதுமக்கள் முன்வைத்த கோரிக்கைகளை முதல்-அமைச்சரின் கவனத்திற்கு கொண்டு சென்று அரசின் திட்டங்களை பெற்றுதர பக்கபலமாக இருப்பேன் என்றார். இதையடுத்து சிறுபான்மையினர் நலத்துறையின் மூலம் 314 பயனாளிகளுக்கு ரூ.33 லட்சத்து 99 ஆயிரத்து 983 மதிப்பீட்டில் நலத்திட்ட உதவிகளை அமைச்சர்கள் வழங்கினர். செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் பாண்டி தொகுத்து வழங்கினார்.

    இதில் மாவட்ட வருவாய் அலுவலர் காமாட்சி கணேசன், ராமநாதபுரம் எம்.பி. நவாஸ்கனி, எம்.எல்.ஏ.க்கள் காதர்பாட்ஷா முத்துராமலிங்கம், பரமக்குடி முருகேசன், திருவாடனை கருமாணிக்கம், மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலர் சிவசுப்பி ரமணியன், ராமநாதபுரம் நகரசபை தலைவர் கார்மேகம், துணைத் தலைவர் பிரவீன் தங்கம், மாவட்ட ஊராட்சிக்குழு துணைத் தலைவர் வேலுசாமி மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

    • அனைத்து வங்கிகளையும் ஒரே இடத்தில் வரவழைத்து கல்விக்கடன் வழங்கப்பட்டுள்ளது.
    • 68 பயனாளிகளுக்கு கடன் வழங்கியது போல், மற்ற விண்ணப்பங்கள் மீதும் நடவடிக்கை.

    நாகப்பட்டினம்:

    பொருளாதார நெருக்கடி யின் காரணமாக உயர்கல்வியை தொடர முடியாமல் தவிக்கும் மாணவர்களுக்கு உதவும் வகையில், நாகப்பட்டினம் மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில், கல்விக் கடன் முகாம், கடந்த 28-ந் தேதி அன்று நடத்தப்பட்டது.

    தேசியமயமாக்கப்பட்ட வங்கிகள் மற்றும் தனியார் வங்கிகள் என மொத்தம் 18 வங்கிகள் பங்கேற்ற அந்த முகாமில், மொத்தம் 304 மாணவர்கள் கல்விக் கடன் கேட்டு விண்ணப்பித்தனர். அந்த விண்ணப்பங்களை உடனடியாக பரிசீலித்து அதில் 68 பயனாளிகளுக்கு நேற்று 2.70 கோடி ரூபாய் கல்விக் கடன் வழங்கப்பட்டது.

    மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற்ற விழாவில் பேசிய நாகை எம்.எல்.ஏ முகம்மது ஷா நவாஸ், வங்கிகளை தேடி மாணவர்கள் அலைந்த நிலை மாற்றப்பட்டு, அனைத்து வங்கிகளையும் ஒரே இடத்தில் வரவழைத்து கல்விக்கடன் வழங்கப்பட்டுள்ளது.

    விரைந்து செயல்பட்டு கடன் வழங்கிய வங்கிகளுக்கு பாராட்டுகள்.

    கடன் பெற்ற மாணவர்கள் அதை பொறுப்புடன் திருப்பிச் செலுத்த வேண்டும். 68 பயனாளிகளுக்கு கடன் வழங்கியது போல், மற்ற விண்ணப்பங்கள் மீதும் விரைந்து நடவடிக்கை எடுக்கப்படும்.

    இவ்வாறு ஷா நவாஸ் எம்.எல்.ஏ பேசினார்.

    விழாவில், மாவட்ட கலெக்டர் அ.அருண்தம்புராஜ் தமிழ்நாடு மீன் வளர்ச்சி கழக தலைவர் என்கெளதமன், தாட்கோ தலைவர் உ.மதிவாணன், நாகைமாலி எம்.எல்.ஏ மற்றும் வங்கி அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

    • சிவகங்கையில் நடந்த குறைதீர்க்கும் கூட்டத்தில் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை கலெக்டர் வழங்கினார்.
    • பல்வேறு துறைகளின் சார்பில் 69 பயனாளிகளுக்கு ரூ.40.84 லட்சம் மதிப்பிலான அரசின் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.

    சிவகங்கை

    சிவகங்கை மாவட்ட கலெக்டர் அலுவலகக் கூட்டரங்கில் மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம், கலெக்டர் மதுசூதன் ரெட்டி தலைமையில் நடந்தது.

    இலவச வீட்டுமனைப் பட்டா, சமூக பாதுகாப்பு திட்டத்தின் கீழ் உதவித் தொகை, மாவட்ட ஊனமுற்றோர் மற்றும் மறு டிவாழ்வுத்துறை உதவித் தொகை, மாற்றுத்திறனா ளிகளுக்கான உபக ரணங்கள், புதிய மின்னணு குடும்ப அட்டை போன்ற பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, பொது மக்களிடம் இருந்து 376 மனுக்கள் பெறப்பட்டன.

    தகுதியுடைய மனுக்கள் மீது தனி கவனம் செலுத்தி, விரைந்து நடவடிக்கை எடுக்க அலுவலர்களுக்கு கலெக்டர் அறிவுறுத்தினார்.

    இதில் மாவட்ட பிற்படு த்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை, சமூக பாதுகாப்பு திட்டம், மாவட்ட தொழில் மையம், மாற்றுத்திறனாளிகள் நலத்துறை உள்ளிட்ட பல்வேறு துறைகளின் சார்பில் 69 பயனாளிகளுக்கு ரூ.40.84 லட்சம் மதிப்பிலான அரசின் நலத்திட்ட உதவிகளை கலெக்டர் மதுசூதன் ரெட்டி வழங்கினார். மேலும், தமிழ் வளர்ச்சித்துறையின் சார்பில் ஜவகர்லால் நேரு பிறந்த நாளையொட்டி மாவட்ட அளவில நடத்தப்பட்ட பேச்சுப் போட்டியில் வெற்றி பெற்ற 5 பள்ளி மாணவிகளுக்கும், 3 கல்லூரி மாணவிகளுக்கும் பரிசுத்தொகை மற்றும் பாராட்டு

    சான்றிதழ்களையும் கலெக்டர் வழங்கினார்.

    இந்த நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் மணிவண்ணன், தமிழ்வளர்ச்சித்துறை உதவி இயக்குநர் நாகராசன், சமூகப் பாதுகாப்புத் திட்ட தனித்துணை கலெக்டர் காமாட்சி, மாவட்ட வழங்கல் அலுவலர் ரத்தினவேல், மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலர் தனலட்சுமி, மாவட்ட மாற்றுத்தி றனாளிகள் நலத்துறை அலுவலர் கதிர்வேலு உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    ×