search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    காரையூரில் மக்கள் தொடர்பு முகாம்
    X

    காரையூரில் மக்கள் தொடர்பு முகாம்

    • காரையூரில் மக்கள் தொடர்பு முகாம் நடந்தது.
    • இதில் பயனாளிகளுக்கு பட்டா மாறுதல், மாற்றுத்திறனாளிகள் அடையாள அட்டை, போன்ற நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.

    திருப்பத்தூர்

    சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் அருகே உள்ள காரையூர் கிராமத்தில் வருவாய்த்துறை மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை சார்பில் மக்கள் தொடர்பு நடந்தது. மாவட்ட வருவாய் அலுவலர் மணிவண்ணன் தலைமை தாங்கினார். முகாமில் பல்வேறு துறைகளின் மூலம் 53 பயனாளிகளுக்கு பட்டா மாறுதல், மாற்றுத்திறனாளிகள் அடையாள அட்டை, இலவச வீட்டுமனை பட்டா போன்ற நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது. மேலும் முகாமில் பெற்ற கோரிக்கை மனுக்கள் மீது விரைந்து நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

    இந்த முகாமில் வட்டாட்சியர் வெங்கடேசன், தனி வட்டாட்சியர் ராஜா மற்றும் கண்ணதாசன், மண்டல துணை வட்டாட்சியர் செல்லமுத்து, வருவாய் ஆய்வாளர் மன்சூர் அலி, ஊராட்சி மன்ற தலைவர் செந்தமிழ் செல்வி மதியழகன், உப தலைவர் அருணகிரி, இளைஞர் அணி துணை அமைப்பாளர் தமிழ் நம்பி, திருப்பத்தூர் கிராம நிர்வாக அலுவலர் விக்னேஷ் மற்றும் வட்டத்திற்கு உட்பட்ட கிராம நிர்வாக அலுவலர்கள், கிராம உதவியாளர்கள், மருத்துவர்கள், செவிலியர்கள், அங்கன்வாடி உதவியாளர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×