search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பயங்கரவாதி"

    • இந்திய ராணுவம் மூன்று ஊடுருவல் முயற்சிகளை முறியடித்தது.
    • இந்திய எல்லைக்குள் ஊடுருவ முயன்ற 2 பாகிஸ்தான் பயங்கரவாதிகள் உயிரிழப்பு,

    ஸ்ரீநகர்:

    கடந்த 72 மணி நேரத்தில் பாகிஸ்தானில் இருந்து ஜம்மு காஷ்மீருக்குள் பயங்கரவாதிகளின் மூன்று ஊடுருவல் முயற்சிகள் முறியடிக்கப் பட்டுள்ளதாக ராணுவ அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

    அக்னூர் செக்டரில் உள்ள பல்லன்வாலா பகுதியில் செவ்வாய்க்கிழமை இரவு ஒரு ஊடுருவல் முயற்சி இந்திய ராணுவத்தால் முறியடிக்கப்பட்டது. முன்னதாக ஆகஸ்ட் 21 அன்று, நௌஷேராவின் ஜங்கர் செக்டாரில் பணியில் இருந்த ராணுவ வீரர்கள், அதிகாலையில் எல்லைக்கட்டுப்பாட்டுக் கோடு பகுதியில் மூன்று பயங்கரவாதிகள் நடமாட்டத்தைக் கண்டனர். அவர்களில் ஒருவன் இந்திய போஸ்ட் அருகே வந்து வேலியை வெட்ட முயன்றான்.

    இதையடுத்து அந்த பயங்கரவாதி மீது ராணுவ வீரர்கள் துப்பாக்கி சூடு நடத்தி உயிருடன் பிடித்தனர். உடனடியாக அந்த பயங்கரவாதிக்கு மருத்துவ உதவி வழங்கப்பட்டு உயிர்காக்கும் சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. பிடிபட்ட பயங்கரவாதி பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரின் கோட்லி மாவட்டத்தில் உள்ள சப்ஸ்கோட் கிராமத்தில் வசிக்கும் தபாரக் உசேன் என்பது அடையாளம் காணப்பட்டுள்ளது.

    மேலும் நடைபெற்ற விசாரணையில், இந்திய ராணுவ முகாம் மீது தாக்குதல் நடத்தத் திட்டமிட்டிருந்ததை பயங்கரவாதி ஒப்புக்கொண்டான். பாகிஸ்தான் உளவுத்துறை சேர்ந்த கர்னல் யூனுஸ் சௌத்ரி என்பவர் தனக்கு 30,000 பாகிஸ்தான் ரூபாயை கொடுத்து அனுப்பியதாக தபாரக் உசேன் தெரிவித்தான்.

    இந்நிலையில் கடந்த 22ந் தேதி ஜம்முகாஷ்மீரின் நௌஷேரா மாவட்டத்தின் லாம் செக்டாரில் எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டைத் தாண்ட முயன்ற இரண்டு பயங்கரவாதிகள் கண்ணிவெடியில் சிக்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். அவர்களது உடல்களை கைப்பற்றிய ராணுவ வீரர்கள் ஏராளமான வெடிமருந்துகளை பறிமுதல் செய்தனர்.

    • துருக்கி, இஸ்தான்புல் சென்று ஐ.எஸ் இயக்கத்தில் இணைந்ததாக பயங்கரவாதி தகவல்.
    • கைதான பயங்கரவாதிக்கு துருக்கி நாட்டில் பயிற்சி அளிக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

    இந்தியாவில் தற்கொலை படை தாக்குதல் நடத்த திட்டமிட்ட ஐ.எஸ். பயங்கரவாதி ரஷ்யாவில் கைது செய்யப்பட்டுள்ளார்.

    கைதான ஐ.எஸ். பயங்கரவாதி மத்திய ஆசிய நாடு ஒன்றை சேர்ந்தவர் என ரஷிய உளவுத்துறை தகவல் தெரிவித்துள்ளது.

    பயங்கரவாதியிடம் நடத்தி விசாரணையில் துருக்கி, இஸ்தான்புல் சென்று ஐ.எஸ் இயக்கத்தில் இணைந்ததாக தெரிவித்துள்ளார்.

    மேலும், கைதான பயங்கரவாதிக்கு துருக்கி நாட்டில் பயிற்சி அளிக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • தப்பி ஓடிய கைதிகளில் 300 பேரை போலீசார் பிடித்தனர். மற்றவர்களை தேடி வருகிறார்கள்.
    • ஜெயிலில் உள்ள சக கூட்டாளிகளை மீட்க தாக்குதலை நடத்தி உள்ளனர்.

    நைஜீரியா நாட்டு தலைநகர் அபுஜாவில் உள்ள ஜெயில் மீது பயங்கரவாதிகள் வெடிகுண்டுகளை வீசி தாக்குதல் நடத்தினர். அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் மீது துப்பாக்கி சூடு நடத்தினர்.

    பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் ஜெயிலின் சுவர் இடிந்து விழுந்தது. இதையடுத்து 600-க்கும் மேற்பட்ட கைதிகள் ஜெயிலில் இருந்து தப்பி ஓடினர்.

    இந்த தாக்குதலில் ஜெயில் காவலர் ஒருவர் பலியானார். ஜெயிலில் அடைக்கப்பட்டிருந்த போகோ ஹராம் அமைப்பை சேர்ந்தவர்களை விடுவிக்க தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

    இந்தநிலையில் தப்பி ஓடிய கைதிகளில் 300 பேரை போலீசார் பிடித்தனர். மற்றவர்களை தேடி வருகிறார்கள்.

    இதுகுறித்து உள்துறை அமைச்சகத்தின் செயலாளர் ஷூஜப் பெல்கோர் கூறும்போது, "அபுஜாவின் குஜேவில் உள்ள சிறைச்சாலை மீது சக்திவாய்ந்த வெடிகுண்டுகளை வீசி தாக்குதல் நடத்தினர்.

    அவர்கள் போகோஹராம் அமைப்பை சேர்ந்தவர்கள். ஜெயிலில் உள்ள சக கூட்டாளிகளை மீட்க தாக்குதலை நடத்தி உள்ளனர்' என்றார்.

    • என்கவுன்டரின்போது இரண்டு பயங்கரவாதிகளும் அவர்களது பெற்றோர் மற்றும் காவல்துறையின் வேண்டுகோள் விடுத்ததை அடுத்து சரணடைந்துள்ளனர்.
    • பயங்கரவாதிகளிடம் இருந்து வெடி பொருட்கள், ஆயுதங்கள் மற்றும் வெடி மருந்துகள் பறிமுதல் செய்யப்பட்டன.

    ஜம்மு காஷ்மீர் மாநிலம் குல்காம் மாவட்டம் ஹதிகம் பகுதியில் நேற்று நள்ளிரவில் என்கவுன்டர் தொடங்கியது. இதில் இரண்டு பயங்கரவாதிகள் பாதுகாப்புப் படையினரிடம் சரணடைந்துள்ளனர்.

    சரணடைந்த இரண்டு பயங்கரவாதிகளும் உள்ளூரைச் சேர்ந்தவர்கள் என போலீசார் தெரிவித்துள்ளனர்.

    மேலும், என்கவுன்டரின்போது இரண்டு பேரும் அவர்களது பெற்றோர் மற்றும் காவல்துறையின் மூறையீட்டின்பேரில் சரணடைந்துள்ளனர். பின்னர், பயங்கரவாதிகளிடம் இருந்து வெடி பொருட்கள், துப்பாக்கி உள்ளிட்ட ஆயுதங்கள் மற்றும் வெடி மருந்துகள் பறிமுதல் செய்யப்பட்டன என்று காஷ்மீர் மண்டல காவல்துறை தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளனர்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • காவல் ஆய்வாளர் ஃபரூக் அகமது மிர் துப்பாக்கியால் சுட்டுக் கொலை.
    • சிடிசி லெத்போராவில் உள்ள ஐஆர்பி 23வது பட்டாலியனில் ஃபரூக் மிர் நியமிக்கப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

    ஜம்மு காஷ்மீர் மாநிலம் புல்வாமா மாவட்டம் அருகே பாம்பூரில் காவல் உதவி ஆய்வாளரை பயங்கரவாதிகள் சுட்டுக் கொன்றனர்.

    காவல் ஆய்வாளர் ஃபரூக் அகமது மிர் மீதான தாக்குதல் நேற்று இரவில் பாம்பூர் பகுதியில் உள்ள சம்பூரா என்ற இடத்தில் நடந்ததாக அவர்கள் தெரிவித்தனர்.

    சிடிசி லெத்போராவில் உள்ள ஐஆர்பி 23-வது பட்டாலியனில் ஃபரூக் மிர் நியமிக்கப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • கொல்லப்பட்ட பயங்கரவாதிகளில் ஒருவர் ஷோபியானைச் சேர்ந்த ஜான் முகமது லோன் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
    • குல்காம் மாவட்டத்தில் ஜூன் 2-ம் தேதி வங்கி மேலாளர் விஜய் குமாரைக் கொன்றதில் பயங்கரவாதி ஈடுபட்டுள்ளது தெரியவந்துள்ளது.

    ராஜஸ்தான் மாநிலம் ஹனுமன்கர் பகுதியைச் சேர்ந்த விஜய் குமார் என்பவர் கடந்த 2-ம் தேதி காஷ்மீரில் துப்பாக்கியால் சுட்டுக்கொல்லப்பட்டார்.

    இந்நிலையில், வங்கி மேலாளரைக் குறிவைத்து கொல்லப்பட்ட பயங்கரவாதி நேற்றிரவு ஷோபியானில் என்கவுண்ட்டரில் சுட்டுக் கொல்லப்பட்ட இரண்டு லஷ்கர்-இ-தொய்பா பயங்கரவாதிகளின் ஒருவன் என காஷ்மீர் காவல்துறை தெரிவித்துள்ளது.

    கொல்லப்பட்ட பயங்கரவாதிகளில் ஒருவர் ஷோபியானைச் சேர்ந்த ஜான் முகமது லோன் என அடையாளம் காணப்பட்டுள்ளார். மற்ற பயங்கரவாத குற்றங்களைத் தவிர குல்காம் மாவட்டத்தில் ஜூன் 2-ம் தேதி வங்கி மேலாளர் விஜய் குமாரைக் கொன்றதில் அவர் ஈடுபட்டுள்ளார் என்று போலீசார் தனது டுவிட்டர் மூலம் தெரிவித்துள்ளார்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • சோபூர் என்கவுண்டரில் இருந்து தப்பிய அதே பயங்கவாதக் குழு ஆகும். அவர்களின் நடமாட்டத்தை நாங்கள் கண்காணித்து வருகிறோம்.
    • கொல்லப்பட்ட மற்றொரு பயங்கரவாதி அனந்த்நாக் மாவட்டத்தில் வசிக்கும் சுஃபியான் என்கிற அடில் ஹூசைன் மிர் என அடையாளம் காணப்பட்டுள்ளது.

    ஜம்மு காஷ்மீர், ஸ்ரீநகரில் பாதுகாப்புப் படையினர் நடத்திய என்கவுண்டரில் பாகிஸ்தானைச் சேர்ந்த பயங்கரவாதி உள்பட இரண்டு லஷ்கர்-இ-தொய்பா பயங்கரவாதிகளை சுட்டுக் கொன்றனர்.

    இதுகுறித்து காஷ்மீர் மண்டல காவல்துறை இன்ஸ்பெக்டர் ஜெனரல் விஜய் குமார் கூறியதாவது:-

    ஸ்ரீநகர் நகரின் பெமினா பகுதியில் நடந்த என்கவுண்டரில் லஷ்கர்-இ-தொய்பா பயங்கரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர். இந்த என்கவுண்டர் நடவடிக்கையில் போலீஸ் ஒருவருக்கு சிறிய காயம் ஏற்பட்டுள்ளது.

    என்கவுண்டர் நடந்த பகுதியில் இருந்து ஆவணங்கள் மற்றும் பிற பொருட்களை ஆராய்ந்ததில், கொல்லப்பட்ட பயங்கரவாதிகளில் ஒருவர் பாகிஸ்தானில் உள்ள பைசலாபாத்தில் வசிக்கும் அப்துல்லா கவுஜ்ரி என அடையாளம் காணப்பட்டுள்ளது.

    ஏற்கவனே நடந்த சோபூர் என்கவுண்டரில் இருந்து தப்பிய அதே பயங்கவாதக் குழு ஆகும். அவர்களின் நடமாட்டத்தை நாங்கள் கண்காணித்து வருகிறோம்.

    கொல்லப்பட்ட மற்றொரு பயங்கரவாதி அனந்த்நாக் மாவட்டத்தில் வசிக்கும் சுஃபியான் என்கிற அடில் ஹூசைன் மிர் என அடையாளம் காணப்பட்டுள்ளது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • ராணுவத்துடன் இணைந்து காஷ்மீர் போலீசாரும் அப்பகுதியில் இன்று அதிகாலை தீவிர தேடுதல் வேட்டை நடத்தினர்.
    • பதுங்கி இருக்கும் பயங்கரவாதிகளை தேடுதல் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது என்று போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    ஸ்ரீநகர்:

    ஜம்மு காஷ்மீரில் கடந்த சில நாட்களாக சிறுபான்மையினர் மீது பயங்கராவாதிகள் தாக்குதல் நடத்தி வந்தனர். இதில் 8 பொதுமக்கள் வரை கொல்லப்பட்டனர். இதையடுத்து பயங்கரவாதிகளை தடுப்பதற்காக, ஜம்மு-காஷ்மீரில் பாதுகாப்பு படையினர் மற்றும் காஷ்மீர் போலீசார் இணைந்து பயங்கரவாத ஒழிப்பு நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர்.

    இந்நிலையில், காஷ்மீரின் குப்வாரா மாவட்டத்தில் பயங்கரவாதிகள் சிலர் பதுங்கி இருப்பதாக பாதுகாப்பு படையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து, ராணுவத்துடன் இணைந்து காஷ்மீர் போலீசாரும் அப்பகுதியில் இன்று அதிகாலை தீவிர தேடுதல் வேட்டை நடத்தினர்.

    சக்ரதாஷ் கண்டி என்ற பகுதியில் தேடுதல் வேட்டை நடந்தபோது, அங்கு பதுங்கியிருந்த பயங்கரவாதிகள் திடீரென துப்பாக்கிச்சூடு நடத்தினர். இந்த தாக்குதலையடுத்து அப்பகுதியை சுற்றிவளைத்த பாதுகாப்பு படையினர் பதில் தாக்குதல்களை நடத்தி வருகின்றனர். இந்த தாக்குதலில் பாகிஸ்தானை சேர்ந்த பயங்கரவாதியான துபைல், தடை செய்யப்பட்ட லஷ்கர்-இ-தொய்பா இயக்கத்தை சேர்ந்த பயங்கரவாதி ஒருவர் என இரண்டு பேர் சுட்டுக்கொல்லப்பட்டனர்.

    இன்னும் பதுங்கி இருக்கும் பயங்கரவாதிகளை தேடுதல் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது என்று போலீஸார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    காஷ்மீரில் 2016-ம் ஆண்டு நக்ரோடா ராணுவ முகாம் தாக்குதல் நடத்திய ஜெய்ஷ் இ முகமது இயக்கத்தை சேர்ந்த பயங்கரவாதியை தேசிய புலனாய்வு முகமை காவலுக்கு எடுத்து விசாரித்துவருகிறது.
    புதுடெல்லி:

    காஷ்மீர் மாநிலத்தில் உள்ள நக்ரோடா ராணுவ முகாம் மீது 2016-ம் ஆண்டு நவம்பர் மாதம் பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தியதில் 3 அதிகாரிகள் உள்பட 7 வீரர்கள் பலியானார்கள். இதில் 3 பாகிஸ்தான் பயங்கரவாதிகளும் இந்திய வீரர்களால் சுட்டுக்கொல்லப்பட்டனர். இந்த சம்பவம் தொடர்பாக காஷ்மீர் போலீசார் வடக்கு காஷ்மீர் லோலாப் பகுதியை சேர்ந்த முனீருல் ஹசன் காத்ரி என்பவரை கைது செய்தனர்.

    போலீஸ் விசாரணையில், அவர் ஜெய்ஷ் இ முகமது என்ற தடை செய்யப்பட்ட பயங்கரவாத இயக்கத்தை சேர்ந்தவர் என்று தெரிந்தது. அந்த தாக்குதலில் தனது பங்கு என்ன? என்றும் பாகிஸ்தானில் இந்த தாக்குதலுக்கு திட்டமிடப்பட்டதாகவும் அவர் போலீஸ் விசாரணையில் தெரிவித்து இருந்தார். இதனைத் தொடர்ந்து தேசிய புலனாய்வு முகமை காத்ரியை காவலுக்கு எடுத்து விசாரித்துவருகிறது.
    பாகிஸ்தானில் பயிற்சி பெற்று மும்பை திரும்பிய பயங்ரவாதி பல்வேறு சதி திட்டம் நடத்த திட்டமிட்டிருந்த நிலையில் மகாராஷ்டிர போலீஸ் உதவியுடன் அதிரடியாக கைது செய்யப்பட்டான்.
    மும்பை:

    பாகிஸ்தானில் பயிற்சி பெற்று மும்பை திரும்பிய பயங்ரவாதி பல்வேறு சதி திட்டம் நடத்த திட்டமிட்டிருந்த நிலையில் மகாராஷ்டிர போலீஸ் உதவியுடன் அதிரடியாக கைது செய்யப்பட்டான்.

    மும்பை மேற்கு பகுதியில் உள்ள புறநகரில் பாகிஸ்தானில் பயிற்சி பெற்ற ஒரு பயங்ரவாதி பதுங்கி இருப்பதாக கொல்கத்தா போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து கொல்கத்தா போலீசின் தனிப்படை மும்பைக்கு விரைந்து வந்தது. மும்பை போலீசாரும், கொல்கத்தா போலீசாரும் இணைந்து அதிரடி தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.

    அப்போது அந்த பயங்ரவாதி பிடிபட்டான். அவனது பெயர் மிர்சா பைசல் கான் என்று தெரிய வந்துள்ளது. 32 வயதாகும் இவன் மராட்டிய மாநிலத்தை சேர்ந்தவன்.

    சில மாதங்களுக்கு முன்பு இவன் பாகிஸ்தானுக்கு சென்று தீவிரவாத பயிற்சி பெற்றுள்ளான். வெடி குண்டு தயாரிப்பதோடு தற்கொலை தாக்குதலை நடத்துவதற்கும் அவன் பயிற்சி பெற்றான்.

    கடந்த வாரம் அவன் மும்பை திரும்பி இருந்தான். கொல்கத்தா போலீசாருக்கு அவனை பற்றிய தகவல்கள் கிடைத்ததால் சரியான நேரத்தில் பிடிபட்டுள்ளான்.

    பயங்ரவாதி மிர்சா பைசல்கான் மராட்டியத்தில் ஆளும் கட்சியை சேர்ந்த முக்கிய தலைவரை கடத்தி கொண்டு கொலை செய்ய திட்டமிட்டு இருந்தான். பிரபல இந்தி நடிகர் ஒருவருக்கும் அவன் குறிவைத்து இருந்தான்.

    இவை தவிர இந்தியாவில் சில நகரங்களில் தொடர் குண்டு வெடிப்புகளுக்கும் அவன் சதி திட்டம் தீட்டி இருந்தான். பாகிஸ்தானில் உள்ள பயங்ரவாதிகள் உத்தரவு வந்ததும் தனது சதி திட்டத்தை நிறைவேற்ற காத்திருந்தான். அதற்கு முன்னதாக அதிரடி போலீசார் அவனை பிடித்துவிட்டனர். அவனை 21-ந்தேதி வரை காவலில் வைத்து விசாரிக்க கோர்ட்டு அனுமதி வழங்கியுள்ளது. #tamilnews
    ×