search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    பயங்கரவாத ஒழிப்பு வேட்டை: 2 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை
    X

    பயங்கரவாதிகள் தேடுதல் வேட்டை

    பயங்கரவாத ஒழிப்பு வேட்டை: 2 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை

    • ராணுவத்துடன் இணைந்து காஷ்மீர் போலீசாரும் அப்பகுதியில் இன்று அதிகாலை தீவிர தேடுதல் வேட்டை நடத்தினர்.
    • பதுங்கி இருக்கும் பயங்கரவாதிகளை தேடுதல் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது என்று போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    ஸ்ரீநகர்:

    ஜம்மு காஷ்மீரில் கடந்த சில நாட்களாக சிறுபான்மையினர் மீது பயங்கராவாதிகள் தாக்குதல் நடத்தி வந்தனர். இதில் 8 பொதுமக்கள் வரை கொல்லப்பட்டனர். இதையடுத்து பயங்கரவாதிகளை தடுப்பதற்காக, ஜம்மு-காஷ்மீரில் பாதுகாப்பு படையினர் மற்றும் காஷ்மீர் போலீசார் இணைந்து பயங்கரவாத ஒழிப்பு நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர்.

    இந்நிலையில், காஷ்மீரின் குப்வாரா மாவட்டத்தில் பயங்கரவாதிகள் சிலர் பதுங்கி இருப்பதாக பாதுகாப்பு படையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து, ராணுவத்துடன் இணைந்து காஷ்மீர் போலீசாரும் அப்பகுதியில் இன்று அதிகாலை தீவிர தேடுதல் வேட்டை நடத்தினர்.

    சக்ரதாஷ் கண்டி என்ற பகுதியில் தேடுதல் வேட்டை நடந்தபோது, அங்கு பதுங்கியிருந்த பயங்கரவாதிகள் திடீரென துப்பாக்கிச்சூடு நடத்தினர். இந்த தாக்குதலையடுத்து அப்பகுதியை சுற்றிவளைத்த பாதுகாப்பு படையினர் பதில் தாக்குதல்களை நடத்தி வருகின்றனர். இந்த தாக்குதலில் பாகிஸ்தானை சேர்ந்த பயங்கரவாதியான துபைல், தடை செய்யப்பட்ட லஷ்கர்-இ-தொய்பா இயக்கத்தை சேர்ந்த பயங்கரவாதி ஒருவர் என இரண்டு பேர் சுட்டுக்கொல்லப்பட்டனர்.

    இன்னும் பதுங்கி இருக்கும் பயங்கரவாதிகளை தேடுதல் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது என்று போலீஸார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    Next Story
    ×