search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    வங்கி அதிகாரியை கொலை செய்த பயங்கரவாதி சுட்டுக்கொலை
    X
    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்

    வங்கி அதிகாரியை கொலை செய்த பயங்கரவாதி சுட்டுக்கொலை

    • கொல்லப்பட்ட பயங்கரவாதிகளில் ஒருவர் ஷோபியானைச் சேர்ந்த ஜான் முகமது லோன் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
    • குல்காம் மாவட்டத்தில் ஜூன் 2-ம் தேதி வங்கி மேலாளர் விஜய் குமாரைக் கொன்றதில் பயங்கரவாதி ஈடுபட்டுள்ளது தெரியவந்துள்ளது.

    ராஜஸ்தான் மாநிலம் ஹனுமன்கர் பகுதியைச் சேர்ந்த விஜய் குமார் என்பவர் கடந்த 2-ம் தேதி காஷ்மீரில் துப்பாக்கியால் சுட்டுக்கொல்லப்பட்டார்.

    இந்நிலையில், வங்கி மேலாளரைக் குறிவைத்து கொல்லப்பட்ட பயங்கரவாதி நேற்றிரவு ஷோபியானில் என்கவுண்ட்டரில் சுட்டுக் கொல்லப்பட்ட இரண்டு லஷ்கர்-இ-தொய்பா பயங்கரவாதிகளின் ஒருவன் என காஷ்மீர் காவல்துறை தெரிவித்துள்ளது.

    கொல்லப்பட்ட பயங்கரவாதிகளில் ஒருவர் ஷோபியானைச் சேர்ந்த ஜான் முகமது லோன் என அடையாளம் காணப்பட்டுள்ளார். மற்ற பயங்கரவாத குற்றங்களைத் தவிர குல்காம் மாவட்டத்தில் ஜூன் 2-ம் தேதி வங்கி மேலாளர் விஜய் குமாரைக் கொன்றதில் அவர் ஈடுபட்டுள்ளார் என்று போலீசார் தனது டுவிட்டர் மூலம் தெரிவித்துள்ளார்.

    Next Story
    ×