search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பட்டியல்"

    • புதுக்கோட்டை பா.ஜ.க. பூத்கமிட்டி உறுப்பினர்கள் பட்டியல் வெளியிடபட்டுள்ளது
    • பூத் கமிட்டியில் உள்ளவர்களின் புகைப்படம், வாக்காளர் அடையாள அட்டை, பாஜக உறுப்பினர் எண், கைபேசி எண் ஆகியன பூத் வாரியாக கணிணியில் பதிவேற்றம் செய்யப்பட்டு வருகிறது.

    புதுக்கோட்டை:

    பாஜக நிர்வாகிகள் ஒவ்வொருவரும், அவரவர் வசிக்கும் பகுதிகளில் உள்ள ஐந்து வாக்குச்சாவடிகளை கண்காணிக்க "சக்தி கேந்திர பொறுப்பாளர்" என்ற பெயரில் நியமிக்கப்பட்டுள்ளனர். ஒரு வாக்குச்சாவடிக்கு ஒரு தலைவர், பார்வையாளர், செயலாளர், முகவர் மற்றும் 9 செயற்குழு உறுப்பினர்கள் என்ற வீதத்தில் 13 பேர் கொண்ட பூத் கமிட்டி அமைக்கப்பட்டு வருகிறது. பூத் கமிட்டியில் உள்ளவர்களின் புகைப்படம், வாக்காளர் அடையாள அட்டை, பாஜக உறுப்பினர் எண், கைபேசி எண் ஆகியன பூத் வாரியாக கணிணியில் பதிவேற்றம் செய்யப்பட்டு வருகிறது.

    அதன்படி புதுக்கோட்டை நகரில் திலகர் திடல், வடக்கு ராஜ வீதி, அம்பாள்புரம் அக்கச்சியாவயல், பல்லவன் குளம் சந்து, சீதாபதி பிள்ளையார் கோவில் தெரு, மேல 2, மேல3, தெற்கு 2 ஆகிய பகுதிகளுக்கு உட்பட்ட பூத் எண்கள் 87 முதல் 91 வரையிலான ஐந்து வாக்குச்சாவடிகளுக்கு, 65 உறுப்பினர்கள் கொண்ட புகைப்படத்துடன் கூடிய பூத் கமிட்டி நிர்வாகிகள் பட்டியல் இறுதி செய்யப்பட்டு உள்ளது. இதனை ஆய்வு செய்த புதுக்கோட்டை மேற்கு பாரதிய ஜனதா கட்சியின் மாவட்ட பொது செயலாளர் ஏவிசிசி கணேசன், தமிழ்நாடு பாஜக இணையதளத்தில் பதிவேற்றம் செய்வதற்கான பட்டியலை வழங்கினார். இதனை மாவட்ட தலைவர் விஜயகுமார் ஆலோசனையுடன், புதுக்கோட்டை நகர பாஜக தலைவர் லெட்சுமணன், தரவு மேலாண்மை பிரிவு மாநில செயலாளர் கார்த்திகேயன் பெற்றுக்கொண்டார்.


    • மதுரை மாநகராட்சி ஊழல் பட்டியல் விரைவில் வெளியாகும் என பா.ஜ.க. நிர்வாகிகள் கூறினர்.
    • இதற்கான ஆடியோ எங்களிடம் உள்ளது.

    மதுரை

    மதுரை மாநகர மாவட்ட பா.ஜனதா அலுவலகத்தில் தமிழக பொருளாதார பிரிவு மாநில தலைவர் எம்.எஸ்.ஷா, மாவட்ட தலைவர் மகா.சுசீந்திரன் ஆகியோர் நிருபர்களிடம் கூறியதாவது:-

    தமிழகத்தில் வருகிற பாராளுமன்ற தேர்தலில் பா.ஜனதா யாருடன் கூட்டணி? என்பது பற்றி உயர் மட்ட குழு கலந்து பேசி முடிவு செய்து அறிவிக்கும். எங்களை பொருத்தவரை பாரதிய ஜனதா தனித்துப் போட்டியிட வேண்டும் என்பதுதான் ஒரே நோக்கம்.

    அதாவது கடந்த 2009-ம் ஆண்டு பொன். ராதா கிருஷ்ணன் தலைமையி லான கூட்டணி, தனித்துப் போட்டியிட்டு பெருவாரி யான வாக்குகளை பெற்றது. அதேபோல தேசிய ஜனநாயக கூட்டணி தனித்து போட்டியிட வேண்டும்.

    இல்லையென்றால் பாரதிய ஜனதா தலைமையில் கூட்டணி அமைய வேண்டும். இது தொடர்பாக பாரதிய ஜனதா மேலிடத்துக்கு கோரிக்கை வைக்க உள்ளோம்.

    மதுரை மாநகரில் பாதாள சாக்கடை இணைப்பு பணிக்கு ரூ.60 ஆயிரம் லஞ்சம் பெறப்படு கிறது. இதற்கான ஆடியோ எங்களிடம் உள்ளது. அதே போல குடிநீர் இணைப்புக்கு ரூ.50 ஆயிரம், குடிநீர் குழாய் இணைப்பை சரி செய்ய ரூ.10 ஆயிரம் லஞ்சம் பெறப்பட்டு வருகிறது.

    மதுரை மாநகராட்சியின் 100 வார்டுகளிலும் நடந்துள்ள ஊழல் பற்றிய விவரங்களை சேகரித்து வருகிறோம். விரைவில் இது பொதுமக்கள் மத்தியில் பகிரங்கமாக வெளியிடப் படும்.

    தமிழகத்தில் 75 ஆண்டு காலமாக ஆட்சி செய்த திராவிட கட்சிகள் போட்டி போட்டிக்கொண்டு ஊழல் செய்து தங்களை வளர்த்துக் கொண்டன.

    அண்ணாமலை தி.மு.க. நிர்வாகிகளின் ஊழல் பட்டியலை வெளி யிட்டுள்ளார். அதனை திருப்புவதற்காக தேவை யற்ற விவரங்களை தி.மு.க. பெரிதுபடுத்தி வருகிறது.

    இவ்வாறு அவர்கள் கூறினர்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • சொந்த வீடு இல்லாத அன்றாட வாழ்க்கைக்கே கஷ்டப்படும் குடும்பத்தலைவிகள் எவ்வளவு பேர் உள்ளனர் என்ற விவரம் சேகரிக்கப்பட்டிருந்தது.
    • பயனாளிகளை தேர்வு செய்யும் பணிகளை அரசு நிர்வாகம் முடுக்கிவிட்டுள்ளது.

    சென்னை:

    தமிழகத்தில் குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ரூ.1000 உரிமைத்தொகை வழங்கும் திட்டம் 2021-சட்டசபை தேர்தலின் போது தி.மு.க. அளித்த தேர்தல் வாக்குறுதிகளில் ஒன்றாகும்.

    மக்கள் மத்தியில் கவனத்தை ஈர்த்த அறிவிப்புகளில் இந்த அறிவிப்பு மிக முக்கியமாகும். இந்த திட்டத்தை தி.மு.க. அரசு சொன்னபடி நிறைவேற்றவில்லை என்று எதிர்க்கட்சியினர் குறைகூறிவந்த நிலையில் இந்த திட்டத்தை கண்டிப்பாக நிறைவேற்றுவோம் என்று முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அடிக்கடி கூறி வந்தார்.

    இது தொடர்பாக உயர் மட்ட அதிகாரிகள் அளவில் பலமுறை ஆலோசனை நடத்தினார். பொருளாதார ஆலோசனை குழுவுடனும் கலந்து பேசினார். இதில் குடும்பத்தலைவி களுக்கு இந்த ஆண்டே மாதம் ரூ.1000 வழங்கும் திட்டத்தை செயல்படுத்துவது என்று முடிவு செய்யப்பட்டது.

    அந்த அடிப்படையில் தான் ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலின் போது பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இந்த மாதம் சட்டசபையில் தாக்கலாகும் பட்ஜெட்டில் இதுபற்றிய அறிவிப்பு வெளியாகும் என்று அறிவித்தார்.

    இதையடுத்து இந்த திட்டத்தில் யார் யாருக்கு மாதம் ரூ.1000 கிடைக்கும் என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. இதற்கிடையே பயனாளிகளை தேர்வு செய்யும் பணிகளை அரசு நிர்வாகம் முடுக்கிவிட்டுள்ளது.

    மகளிர் மேம்பாட்டு கழகம், ஊரக வளர்ச்சி மற்றும் பஞ்சாயத்து ராஜ் துறையின் கீழ் உள்ள ஏஜென்சியால் தமிழகத்தில் வறுமை கோட்டில் உள்ள ஏழைகள் எவ்வளவு பேர் உள்ளனர் என்று ஒரு சர்வே எடுக்கப்பட்டது.

    அதில் சொந்த வீடு இல்லாத அன்றாட வாழ்க்கைக்கே கஷ்டப்படும் குடும்பத்தலைவிகள் எவ்வளவு பேர் உள்ளனர் என்ற விவரம் சேகரிக்கப்பட்டிருந்தது.

    நிலையான மாத வருமானம் இல்லாமல் அன்றாட கூலி வேலை செய்யும் உழைக்கும் பெண்கள் எவ்வளவு பேர் இருக்கிறார்கள் என்றும் கணக்கெடுக்கப்பட் டிருந்தது. கணவனால் கைவிடப்பட்டவர்கள், ஆகியோரது பட்டியலும் இதில் இடம்பெற்றுள்ளது.

    அந்த வகையில் வறுமை கோட்டுக்கு கீழ் உள்ள பெண்களுக்கு ரூ.1000 வழங்க திட்டமிட்டுள்ளது. பி.எச்.எச். என்ற வறுமை கோட்டுக்கு கீழ் உள்ள ரேசன் அட்டைதாரர்களுக்கும், பி.எச்.எச்., ஏ.ஏ.ஒய். என்ற அந்த்யோதயா அன்ன யோஜனா ரேசன் அட்டை வைத்திருக்கும் நபர்களுக்கும் ரூ.1000 கிடைக்கும்.

    ஆனாலும் இதில் கணவரின் ஆண்டு வருமானம் கணக்கில் எடுக்கப்பட உள்ளது. இந்த பட்டியல் தற்போது இறுதிக்கட்டத்தை எட்டி உள்ளது. மகளிர் மேம்பாட்டு கழகம் தகுதியானவர்களின் பட்டியலை ஆய்வு செய்து வருகிறது.

    இதுகுறித்து உயர் அதிகாரி ஒருவர் கூறியதாவது:-

    குடும்பத்தலைவிகளுக்கு மாதம் ரூ.1000 உரிமைத் தொகை வழங்கும் திட்டத்தை இந்த ஆண்டே செயல்படுத்திட முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஏற்பாடு செய்து வருகிறார்.

    அதற்கான பணிகள் அனைத்தும் வேகப்படுத்தப்பட்டுள்ளது. அரசு ஊழியர்கள் மற்றும் மாதம் ரூ.15 ஆயிரத்துக்கும் அதிகமாக சம்பாதிக்கும் குடும்பத்தினருக்கு இந்த உதவித்தொகை கிடைக்காது.

    தமிழ்நாட்டில் தற்போது 1.14 கோடி ரேஷன் கார்டுகள் ஏழைகளுக்காக வழங்கப்பட்டுள்ளது. கடந்த ஜூலை மாதம் வரை 34.27 லட்சம் பேர் 9 பிரிவுகளின் கீழ் ரூ.1000 ஓய்வூதியம் பெற்றுள்ளனர். பெரும்பாலான ஏ.ஏ.ஒய். கார்டுதாரர்களும் ஏற்கனவே முதியோர் ஓய்வூதியத் திட்டத்தில் சேர்ந்துள்ளனர்.

    எனவே இவை அனைத்தையும் ஒப்பிட்டு தகுதியான குடும்பத்தலைவிகளுக்கு உரிமைத்தொகை ரூ.1000 கிடைக்க அரசு தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளும்.

    இந்த திட்டத்தில் சேர தகுதியான பயனாளிகளை வருவாய்த்துறையும், மகளிர் மேம்பாட்டுக்கழகமும் ஆய்வு செய்து வருகிறது. இந்த பணி முடியும் தருவாயில் உள்ளது. எனவே விரைவில் தகுதியான இறுதி பட்டியல் தயாராகிவிடும். அதன் பிறகு முதலமைச்சர் பார்வைக்கு கொண்டு சென்று இதை இறுதி செய்வோம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • அனைத்து திருத்தங்களுக்காக 17,511 படிவங்களும் ஏற்கப்பட்டது.
    • கிராம சபை கூட்டத்தில் வாக்காளர் பட்டியலை பொதுமக்கள் பார்வைக்கு வைக்கப்படும்.

    தஞ்சாவூர்:

    தமிழகத்தில் இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டது. அதன்படி தஞ்சை கலெக்டர் அலுவலகத்தில் அனைத்து அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகளின் முன்னிலையில் இறுதி வாக்காளர் பட்டியலை கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் வெளியிட்டார்.

    அதன்படி, மாவட்டத்தில் ஆண் வாக்காளா்கள் 9,93,844 பேரும், பெண் வாக்காளா்கள் 10,49,103 பேரும், இதர பாலினத்தவா்கள் 169 பேரும் என மொத்தம் 20,43,116 வாக்காளா்கள் உள்ளனா்.

    இதில், 2022 நவம்பா் 9ஆம் தேதி முதல் டிசம்பா் 8ஆம் தேதி வரை புதிதாக சோ்ப்பதற்கு 33,351 படிவங்களும், இறந்த, இடம் பெயா்ந்தவா்களை நீக்குவதற்கு 23,389 படிவங்களும், அனைத்து திருத்தங்களுக்காக 17,511 படிவங்களும் ஏற்கப்பட்டது.

    இந்த வாக்காளா் பட்டியல் மாவட்டத்திலுள்ள அனைத்து மாநகராட்சி, நகராட்சி, வட்டாட்சியா் அலுவலகங்களிலும் பொதுமக்களின் பாா்வை க்காக வைக்கப்படவுள்ளது. மேலும், ஜனவரி 26 ஆம் தேதி நடைபெறவுள்ள கிராமசபைக் கூட்டத்திலும் வாக்காளா் பட்டியல் பொதுமக்கள் பாா்வைக்கு வைக்கப்படும்.

    நிகழாண்டு முழுவதும் நடைபெறவுள்ள தொடா் திருத்தப் பணியில் 18 வயது நிறைவடைந்தவா்கள் அடுத்துவரும் நான்கு காலாண்டுகளின் மையத் தகுதிநாளில் அதாவது ஜனவரி 1, ஏப்ரல் 1, ஜூலை 1, அக்டோபா் 1 ஆகிய காலாண்டின் தகுதி நாளில் முன்கூட்டியே வாக்காளா் பட்டியலில் பெயா் சோ்க்க படிவம் 6ஐ வட்டாட்சியா் அலுவலகத்தில் பெற்று பாஸ்போா்ட் அளவு புகைப்படம், வயது, இருப்பிடத்துக்கான ஆவண ஆதாரங்களை இணைத்து நிறைவு செய்யப்பட்ட படிவத்தை தொடா்புடைய வட்ட அலுவலகத் தோ்தல் பிரிவில் வழங்கலாம். (அல்லது) NVSP Portal என்ற இணையதளம் மற்றும் voters help line என்ற மொபைல் செயலி மூலமாகவும் விண்ணப்பிக்கலாம் என்று கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் தெரிவித்தார்.

    சட்டப்பேரவை தொகுதி வாரியாக வாக்காளா்கள் விவரம்:

    திருவிடைமருதூா்

    ஆண் வாக்காளர்கள்- 1,28,359 -, பெண் வாக்காளர்கள் 1,30,839 , மூன்றாம் பாலினத்தவர் 16. மொத்தம் 2,59,214.

    கும்பகோணம்

    ஆண் வாக்காளர்கள் 1,32,152, பெண் வாக்காளர்கள்-1,39,285, மூன்றாம் பாலினத்தவர் - 17, மொத்தம் - 2,71,454.

    பாபநாசம்

    ஆண் வாக்காளர்கள்- 1,27,552, பெண் வாக்காளர்கள் - 1,33,607 , மூன்றாம் பாலினத்தவர்- 19, மொத்தம் - 2,61,178.

    திருவையாறு

    ஆண் வாக்காளர்கள் - 1,29,872, பெண் வாக்காளர்கள் - 1,36,620 , மூன்றாம் பாலினத்தவர்- 20, மொத்தம் - 2,66,512.

    தஞ்சாவூா்

    ஆண் வாக்காளர்கள்- 1,33,991 , பெண் வாக்காளர்கள்- 1,46,184, மூன்றாம் பாலினத்தவர் - 59, மொத்தம் - 2,80,234.

    ஒரத்தநாடு

    ஆண் வாக்காளர்கள் - 1,19,004, பெண் வாக்காளர்கள் - 1,26,065, மூன்றாம் பாலினத்தவர் - 5, மொத்தம் - 2,45,074.

    பட்டுக்கோட்டை

    ஆண் வாக்காளர்கள் - 1,16,604, பெண் வாக்காளர்கள் - 1,26,521 , மூன்றாம் பாலினத்தவர்- 24, மொத்தம் - 2,43,149.

    பேராவூரணி

    ஆண் வாக்காளர்கள் - 1,06,310, பெண் வாக்காளர்கள் - 1,09,103 , மூன்றாம் பாலினத்தவர்- 9, மொத்தம் - 2,16,301.

    இறுதி வாக்காளர் பட்டியல் வெளியீட்டு நிகழ்ச்சியில் கூடுதல் ஆட்சியா் (வருவாய்) என்.ஓ. சுகபுத்ரா, எல்.ஜி.அண்ணா, புண்ணியமூர்த்தி (தி.மு.க) , சரவணன் ( அ.தி.மு.க ), ஜெய்சதீஷ், விநாயகம் , முரளிதரன் ( பா.ஜ.க ), மோகன்ராஜ், பழனியப்பன் ( காங்கிரஸ் ), அடைக்கலம் , லக்கி செந்தில் ( தே.மு.தி.க) மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

    • சேலம் மாவட்டத்தில் சிறப்பு சுருக்கமுறை திருத்தம் 2023, இறுதி வாக்காளர் பட்டியலை மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட கலெக்டருமான கார்மேகம் இன்று சேலம் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் இன்று வெளியிட்டார்.
    • மேலும் www.nvsp.in என்ற இணையதள முகவரியிலும், Voter Helpline App என்ற கைபேசி செயலி மூலமாகவும் விண்ணப்பிக்கலாம்.

    சேலம்:

    சேலம் மாவட்டத்தில் சிறப்பு சுருக்கமுறை திருத்தம் 2023, இறுதி வாக்காளர் பட்டியலை மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட கலெக்டருமான கார்மேகம் இன்று சேலம் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் இன்று வெளியிட்டார். பின்னர், மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் அவர் தெரிவித்ததாவது:

    சேலம் மாவட்டத்தில் கடந்த நவம்பர் மாதம் 9-ந்தேதி வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டது. தொடர்ந்து 1.1.2023-ந் தேதியைத் தகுதி நாளாகக் கொண்டு வாக்காளர் பட்டியல் திருத்தம் செய்யும் பணி டிசம்பர் 8-ந்தேதி வரை நடைபெற்றது.

    இதனைத் தொடர்ந்து அனைத்து வாக்குப் பதிவு மையங்களில் சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்டு படிவங்கள் பெறப்பட்டன.அதன் மீது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு இறுதி வாக்காளர் பட்டியல் இன்று வெளியிடப்பட்டது. இதை மாவட்ட தேர்தல் அலுவலரும் கலெக்டருமான கார்மேகம் வெளியிட்டார். இதில் மாவட்டம் முழுவதும் உள்ள 11 சட்டமன்ற தொகுதிகளில் ஆண்கள் 14,73,024 பேரும், பெண்கள் 14,87,294 பேரும், இதரர் 275 பேரும் என மொத்தம் 29 லட்சத்து 60 ஆயிரத்து 593 வாக்காளர்கள் இடம்பெற்றுள்ளனர்.

    இதை தொடர்ந்து கலெக்டர் கார்மேகம் கூறியதாவது:-

    வரைவு வாக்காளர் பட்டியலில் சேலம் மாவட்டம் முழுவதும் மொத்தம் 53,370 வாக்காளர்களின் பெயர் சேர்க்கப்பட்டும், 67,027 வாக்காளர்களின் பெயர் நீக்கப்பட்டும், இன்று வெளியிடப்பட்ட இறுதி வாக்காளர் பட்டியலில் 18-19 வயதுக்குட்பட்ட புதிய வாக்காளர்கள் 45,880 வாக்காளர் பட்டியலில் இடம்பெற்றுள்ளனர்.

    தொடர்ச்சியாக வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்கல் மற்றும் திருத்தங்கள் மேற்கொள்வதற்கு அந்தந்த வாக்குப் பதிவு மையங்கள், வட்டாட்சியர் அலுவலகங்கள், நகராட்சி, மாநகராட்சி அலுவலகங்கள், வருவாய் கோட்டாட்சியர் அலுவலங்களில் விண்ணப்பப்படி வங்களைப் பெற்று, பூர்த்தி செய்து தகுந்த ஆவணங்களுடன் விண்ணப்பிக்கலாம். மேலும் www.nvsp.in என்ற இணையதள முகவரியிலும், Voter Helpline App என்ற கைபேசி செயலி மூலமாகவும் விண்ணப்பிக்கலாம். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

    நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் மேனகா, உதவி கலெக்டர் (பயிற்சி) சங்கீத் பல்வந்த் வாகி, சேலம் வருவாய் கோட்டாட்சியர் விஷ்ணுவர்த்தினி, மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் (தேர்தல்கள்) எம்.ஜி.சரவணன் மற்றும் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சியின் பிரதிநிதிகள் கலந்துகொண்டனர்.

    • நாமக்கல் மாவட்ட கலெக்டர் அலுவகலத்தில் கலெக்டர் ஸ்ரேயா சிங் இறுதி வாக்காளர் பட்டியலை அரசியல் கட்சி பிரமுகர்கள் முன்னிலையில் இன்று வெளியிட்டார்.
    • நாமக்கல் மாவட்டத்தில் 77 சதவீத வாக்காளர்கள் படிவம் 6பி மற்றும் ஓட்டர் ஹெல்ப் லைன் செயலியை பயன்படுத்தி ஆதார் எண்ணை வாக்காளர் அட்டையுடன் இணைத்துள்ளனர்.

    நாமக்கல்:

    நாமக்கல் மாவட்ட கலெக்டர் அலுவகலத்தில் கலெக்டர் ஸ்ரேயா சிங் இறுதி வாக்காளர் பட்டியலை அரசியல் கட்சி பிரமுகர்கள் முன்னிலையில் இன்று வெளியிட்டார். அதன்படி, ராசிபுரம் சட்டமன்ற தொகுதியில் 1,13,085 ஆண், 1,19,375 பெண், மற்றவர்கள் - 6 என மொத்தம் 2,32,466 வாக்காளர்களும், சேந்தமங்கலம் சட்டமன்ற தொகுதியில் 1,19,092 ஆண், 1,25,110 பெண், 30 மற்றவர்கள் என மொத்தம் 2,44,232 வாக்காளர்களும் உள்ளனர்.

    நாமக்கல் சட்டமன்ற தொகுதியில் 1,22,835 ஆண், 1,31,964 பெண், 47 மற்றவர்கள் என மொத்தம் 2,54,846 வாக்காளர்களும், பரமத்திவேலூர் சட்டமன்ற தொகுதியில் 1,05,778 ஆண், 1,14,976 பெண், 8 மற்றவர்கள் என மொத்தம் 2,20,762 வாக்காளர்களும், திருச்செங்கோடு சட்டமன்ற தொகுதியில் 1,11,712 ஆண், 1,18,421 பெண், 46 மற்றவர்கள் என மொத்தம் 2,30,179 வாக்காளர்களும், குமாரபாளையம் சட்டமன்ற தொகுதியில் 1,23,193 ஆண், 1,29,465பெண், 55 மற்றவர்கள் என மொத்தம் 2,52,713 வாக்காளர்களும் உள்ளனர்.

    இதன்படி மாவட்டத்தில் ஆண் வாக்காளர்கள் 6,95,695, பெண் வாக்காளர்கள் 7,39,311, மற்றவர்கள் 192 வாக்காளர்கள் என நிகர வாக்காளர்கள் 14,35,198 பேர் உள்ளனர். இதேபோல், நாமக்கல் மாவட்டத்தில் ராசிபுரம் சட்டமன்ற தொகுதியில் 260, சேந்தமங்கலம் -284, நாமக்கல் -289, பரமத்தி வேலூர்-254, திருச்செங்கோடு- 261 மற்றும் குமாரபாளையம்-279 என மொத்தம் 1627 வாக்குச்சாவடிகள் உள்ளன.

    இறுதி வாக்காளர் பட்டியலில் புதிதாக 24,090 வாக்காளர்கள் சேரக்கப்பட்டு உள்ளனர். 19,845 வாக்காளர்கள் பெயர் நீக்கப்பட்டு உள்ளது. வாக்காளர் பட்டியலில் புதிதாக சேர்க்கப்பட்ட திருத்தம் மற்றும் முகவரி மாற்றம் செய்தவர்களுக்கு வாக்காளர் புகைப்பட அடையாள அட்டைகள் அஞ்சல் மூலமாக வழங்கப்பட்டு, இந்த இறுதி வாக்காளர் பட்டியல் வெளியீட்டின் தொடர்ச்சியாக இன்று முதல் வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடும் நாள் வரை தொடர் திருத்த முறை வாக்காளர் பட்டியல் திருத்த பணி நடைபெற உள்ளது.

    31-12-2005 அன்றோ அதற்கு முன்னரோ பிறந்தவர்கள் தங்களின் பெயர்களை வாக்காளர் பட்டியலில் சேர்த்துக் கொள்ள விண்ணப்பிக்கலாம். இவர்களின் பெயர் 18 வயது பூர்த்தியடைந்த காலாண்டுகளில் வெளியிடப்படும் வாக்காளர் பட்டியலில் இடம் பெறும். மேலும் இதுவரை வாக்காளர் பட்டியிலில் பெயர் சேர்த்துக் கொள்ளாதவர்கள், திருத்தங்கள் செய்ய விரும்புவர்களும் உரிய விண்ணப்பங்களை கோட்டாட்சியர், வட்டாட்சியர் அல்லது நகராட்சி அலுவலகங்களில் அளிக்கலாம். இணையதளம் முலமாகவும் விண்ணப்பிக்கலாம்.

    நாமக்கல் மாவட்டத்தில் 77 சதவீத வாக்காளர்கள் படிவம் 6பி மற்றும் ஓட்டர் ஹெல்ப் லைன் செயலியை பயன்படுத்தி ஆதார் எண்ணை வாக்காளர் அட்டையுடன் இணைத்துள்ளனர். இதுவரை இணைத்துக் கொள்ளாதவர்களும் இந்த செயலியை பயன்படுத்தி இணைக்குமாறு மாவட்ட கலெக்டர் ஸ்ரேயா சிங் கேட்டுக் கொண்டுள்ளார்.

    • பிரதிநிதிகள் முன்பாக மாவட்ட கலெக்டரால் வெளியிடப்பட உள்ளது.
    • திருவையாறு மற்றும் பூதலூர் வட்ட அலுவலகங்களில் சிறப்பு சுருக்க திருத்த பணிகள் குறித்து ஆய்வு.

    தஞ்சாவூர்:

    தஞ்சை மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்க திருத்த பணிகள் தொடர்பான ஆய்வுக்கூட்டம் நடந்தது.

    மாவட்ட வாக்காளர் பட்டியல் பார்வையாளரும், சமூக சீர்திருத்தத்துறை அரசு செயலாளருமான ஆபிரகாம் தலைமை தாங்கினார். கலெக்டர் தினேஷ்பொன்ராஜ் ஆலிவர் முன்னிலை வகித்தார்.

    பணிகள் குறித்து ஆய்வு கூட்டத்தில் அரசு செயலாளர் ஆபிரகாம் பேசும்போது,

    தஞ்சை மாவட்டத்தில் இறுதி வாக்காளர் பட்டியல் நாளை (வியாழக்கிழமை) அனைத்து அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகள் முன்பாக மாவட்ட கலெக்டரால் வெளியிடப்பட உள்ளது.

    நாளை முதல் இந்த ஆண்டு முழுவதும் நடைபெற உள்ள தொடர் திருத்த முறையில் 18 வயது நிறைவடைய உள்ளவர்கள் அடுத்து வரும் 4 காலாண்டுகளின் மைய தகுதி நாளில் அதாவது ஜனவரி 1, ஏப்ரல் 1, ஜூலை 1, அக்டோபர் 1 தொடர்புடைய காலாண்டின் தகுதி நாளில் 18 வயது நிறைவடையும் இளம் வாக்காளர்கள் முன்கூட்டியே வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க அந்தந்த வட்டாட்சியர் அலுவலக தேர்தல் பிரிவில் தேர்தல் துணை வட்டாட்சியரிடம் படிவங்கள் வழங்கலாம்.

    அல்லது NVSP Portal என்ற இணையதளம் மற்றும் Voters helpline என்ற செயலி மூலமாகவும் விண்ணப்பிக்கலாம். இவ்வாறு அவர் கூறினார்.

    தொடர்ந்து அவர், வல்லம், திருவையாறு மற்றும் பூதலூர் வட்ட அலுவலகங்களில் சிறப்பு சுருக்க திருத்த பணிகள் குறித்து நேரில் ஆய்வு செய்தார்.

    கூட்டத்தில் கூடுதல் கலெக்டர் (வருவாய்) சுகபுத்ரா, வருவாய் கோட்டாட்சியர்கள் ரஞ்சித் (தஞ்சை), பிரபாகரன் (பட்டுக்கோட்டை), பூர்ணிமா (கும்பகோணம்) மற்றும் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

    • தாசில்தாரிடம் இருந்து சாதிச்சான்றிதழ் நிலுவை பட்டியல் போன்ற பல்வேறு கருத்துக்கள் குறித்து விவாதிக்கப்பட்டது.
    • ஆதிதிராவிடர் நல பள்ளிகளில் மாவட்ட அளவிலான விளையாட்டு போட்டிகள் நடத்த வேண்டும்.

    தஞ்சாவூர்:

    தஞ்சாவூர் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை சார்பில் கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் தலைமையில் அரசு தலைமை கொறடா கோவி.செழியன் முன்னிலையில் நீதித்துறை, அரசுத்துறை மற்றும் காவல்துறை அலுவலர்களுடன் விழிக்க ண் குழுக் கூட்டம் நடை பெற்றது.

    கூட்டத்தில் தலைமை கொறடா கோவி செழியன் பேசியதாவது:-

    உண்மைக்கு புறம்பான வழக்குகள், முந்தைய கூட்டத்தில் இறுதி

    செய்யப்படாதவை, உண்மைக்கு புறம்பான வழக்குகள், புதிதாக ஆய்வுக்கு வைக்கப்படும் வழக்குகள், புலன் விசாரணை வழக்குகள் மொத்த வழக்குகள், நீதிமன்ற விசாரணையில் உள்ள , விசாரணை முடிவுற்ற வழக்குகள்,

    தீருதவித்தொகை நிலுவை, தாசில்தாரிடம் இருந்து சாதிச்சான்றிதழ் நிலுவை பட்டியல் போன்ற பல்வேறு கருத்துக்கள்கு றித்து பொருள் விவாதிக்கப்பட்டது.

    விவாதிக்கப்பட்ட அனைத்து பணிகளும் விரைவாக தரமாகவும் முடித்திட சம்ப ந்தப்பட்ட அலுவலர்களுக்கு உத்தரவிடப்பட்டு உள்ளது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    பின்னர் மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் மேற்கொள்ளப்பட்டு வரும் பணிகள் முன்னேற்றம் குறித்த கலந்தாய்வுக் கூட்டம் நடைபெற்றது.

    ஆதிதிராவிடர் நலப் பள்ளிகளில் தரமான கல்வி வழங்குவதுடன் தேவையான கட்டமைப்புகள், விடுதிகளில் விளையாட்டு வசதிகள், நூலகம், போட்டி தேர்வுக்கான வசதிகள் ஆகியவற்றை ஏற்படுத்த வேண்டும் என்று அலுவலர்களுக்கு தலைமை கொறடா கோவி செழியன் அறிவுறுத்தினார்.

    இக்கூட்டத்தில் கூடுதல் கலெக்டர் ஸ்ரீகாந்த், மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலர் இலக்கியா, தாட்கோ மாவட்ட மேலாளர் ரங்கராஜன், திருவிடைமருதூர் ஒன்றிய குழு தலைவர் சுபா திருநாவுக்கரசு, அரசு சிறப்பு வழக்கறிஞர் இளஞ்செழியன், வழக்கறிஞர் விஜயகுமார் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    • உயர்கல்வி படித்தவர்களுக்கு ஊக்க ஊதியம் வழங்க வேண்டும்.
    • மத்திய அரசு நடைமுறையில் உள்ள கல்வியை மாநில அரசின் பட்டியலுக்கு கொண்டு வர வேண்டும்.

    திருவாரூர்:

    திருவாரூர் அருகே பவித்திரமாணிக்கத்தில் தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் கொரடாச்சேரி வட்டாரக்கிளை நிர்வாகிகள் பொது உறுப்பினர் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு வட்டாரத் தலைவர் நக்கீரன் தலைமை வகித்தார். மாவட்டச் செயலாளர் ஈவேரா சிறப்புரை ஆற்றினார்.

    கூட்டத்தில் மாநில செயற்குழு உறுப்பினர் ஐயப்பன், மாநில பொதுக்குழு உறுப்பினர் ஜெயந்தி, மேனாள் மாநில செயற்குழு உறுப்பினர் வீரசேகரன், மேனாள் நற்பணி தலைவர் அறிவழகன், வட்டாரத் செயலாளர் தேர்தல் ஆணையர் வேதமூர்த்தி, வட்டாரச் செயலாளராக சந்திரமோகன், வட்டாரப் பொருளாளர் யசோதா, வட்டார மகளிர் வலையமைப்பு தலைவர் கார்த்திகாராணி, செயலாளர் யோகப்பிரியா, பொருளாளர் மாலதி ஆகியோர் உரையாற்றினர்.

    கூட்டத்தில் வட்டார துணைத் தலைவர்கள் ஜெய்சங்கர், சாந்தி, துணைச் செயலாளர்கள் மார்க்ரெட் ஹேமலதா, தனலட்சுமி, அகஸ்டின் மகளிர் வலையமைப்பு துணைத்தலைவர்கள் சுபா, லட்சுமி, துணைச் செயலாளர்கள் தமிழ்ப்பிரியா, நல்லம்மாள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    கூட்டத்தில் புதிய நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டனர். நிகழ்ச்சியில் பழைய ஓய்வூதிய திட்டத்தை அமுல் படுத்த வேண்டும். அகவிலைப் படியை உடனே வழங்க வேண்டும். உயர்கல்வி படித்தவர்களுக்கு ஊக்க ஊதியம் வழங்க வேண்டும்.

    நாடு முழுவதும் ஒரே மாதிரியான ஊதி்யம் வழங்குவதற்கு தேவையான நிதியை மாநில அரசுகளுக்கு மத்திய அரசு வழங்க வேண்டும்.

    மத்திய அரசு நடைமுறையில் உள்ள கல்வியை மாநில அரசின் பட்டியலுக்கு கொண்டு வர வேண்டும் என்பன உள்ளிட்ட பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

    • தஞ்சாவூா் மாவட்டத்தில் பதிவேட்டை கொண்டு இறந்த வாக்காளா்களின் பெயரை நீக்க வேண்டும்.
    • 18 முதல் 19 வயது வரையுடைய வாக்காளா்களிடமிருந்து 28,894 படிவங்கள் பெறப்பட்டுள்ளன.

    தஞ்சாவூர்:

    தஞ்சை கலெக்டர் அலுவலகத்தில் வாக்காளா் பட்டியல் சிறப்பு சுருக்க திருத்தப் பணிகள் தொடா்பாக அலுவலா்களுடனான ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் முன்னிலை வகித்தார்.

    மாவட்ட வாக்காளா் பட்டியல் பாா்வையாளரும், சமூக சீா்திருத்தத் துறை அரசுச் செயலருமான ஆபிரகாம் தலைமை தாங்கி பேசியதாவது :-

    வட்டம், ஊராட்சி, பேரூராட்சி, நகராட்சி, மாநகராட்சி ஆகிய அலுவலகங்களில் பராமரிக்கப்பட்டு வரும் இறப்பு பதிவேட்டைக் கொண்டு வாக்காளா் பட்டியலில் உள்ள இறந்த வாக்காளா்களின் பெயரை நீக்க வேண்டும்.

    மேலும், நவம்பா் 9 ஆம் தேதி முதல் டிசம்பா் 8 ஆம் தேதி வரை பொதுமக்களிடமிருந்து பெறப்பட்ட கோரிக்கைகள் மற்றும் ஆட்சேபணைகள் மீது டிசம்பா் 26 ஆம் தேதிக்குள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    தோ்தல் சிறப்பு முகாம்களில் பெறப்பட்ட படிவங்கள் அனைத்தையும் நிலுவையில் இல்லாமல் கணினியில் பதிவேற்றம் செய்ய வேண்டும். பதிவேற்றம் செய்த தோ்தல் படிவங்களை இந்திய தோ்தல் ஆணையம் அறிவுறுத்தியவாறு அனைத்து அலுவலா்கள் நிலையிலும் ஆய்வு செய்து, தூய வாக்காளா் பட்டியல் என்ற இலக்கை அடைய தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    மாவட்டத்தில் புதிய வாக்காளா்களைச் சோ்ப்பதற்கு 34,302 படிவங்கள், நீக்கம் செய்ய 23,807 படிவங்கள், திருத்தம் செய்ய 17,988 படிவங்கள் பொதுமக்களிடமிருந்து பெறப்பட்டுள்ளது. சிறப்பு முகாம்களில் 52,394 படிவங்களும், 18 முதல் 19 வயது வரையுடைய வாக்காளா்களிடமிருந்து 28,894 படிவங்கள் பெறப்பட்டுள்ளன.

    இச்சிறப்பு கருக்க முறைத் திருத்தப் பணிகள் நிறைவு பெற்று ஜனவரி 5 ஆம் தேதி அனைத்து அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகள் முன் இறுதி வாக்காளா் பட்டியல் வெளியிடப்படும்.இவ்வாறு அவர் பேசினார்.

    இக்கூட்டத்தில் கூடுதல் ஆட்சியா் (வருவாய்) சுகபுத்ரா, மாநக ராட்சி ஆணையா்கள் சரவண குமாா் (தஞ்சாவூா்), செந்தில் முருகன் (கும்பகோணம்), மாவட்ட ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (பொது) ரெங்கராஜன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    • தேர்தல் வாக்குறுதிப்படி அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கு பழைய ஓய்வூதியத் திட்டம் தொடர்ந்திட வேண்டும். உயர் கல்விக்கான ஊக்க ஊதியம் வழங்க வேண்டும். 4 சதவீத அகவிலைப்படி உயர்த்தி வழங்க வேண்டும்.
    • பள்ளிகளில் சுகாதாரத்தை மேம்படுத்த முழு நேர தூய்மை பணியாளர்களை நியமிக்க வேண்டும். கல்வியை மாநில பட்டியலுக்கு கொண்டு வர வேண்டும்.

    ராசிபுரம்:

    தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றம் ராசிபுரம் ஒன்றிய நிர்வாகிகள் தேர்தல், ராசிபுரத்தில் உள்ள தனியார் நடுநிலைப் பள்ளியில் நடந்தது. ஒன்றிய செயலாளர் கதிரேசன், நாமகிரிப்பேட்டை முருகேசன் ஆகியோர் தேர்தலை நடத்தினர்.

    இதில் ஒன்றிய பொறுப்பாளர்களாக 21 பேர் தேர்ந்தெடுக்கப்பட்டனர். பிறகு நடந்த கூட்டத்திற்கு ஒன்றிய தலைவர் குணவதி தலைமை தாங்கினார். ஒன்றிய செயலாளர் லட்சுமி வரவேற்றார். மாவட்ட மகிளர் அணி அமைப்பாளர் பாரதி முன்னிலை வகித்தார்.

    கூட்டத்தில் மாவட்ட செயலாளர் சங்கர், மாநில பொருளாளர் முருக செல்வராசன், பொதுக்குழு உறுப்பினர் தியாகராஜன், தணிக்கை குழு உறுப்பி னர் தண்டபாணி, நாமகி ரிப்பேட்டை முன்னாள் ஒன்றிய தலைவர் சிதம்பரம், இலக்கிய அணி அமைப்பாளர் ஜெயவேல் ஆகியோர் பேசினர்.

    இதில், தேர்தல் வாக்கு றுதிப்படி அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கு பழைய ஓய்வூதியத் திட்டம் தொடர்ந்திட வேண்டும். உயர் கல்விக்கான ஊக்க ஊதியம் வழங்க வேண்டும். 4 சதவீத அகவிலைப்படி உயர்த்தி வழங்க வேண்டும். அனைத்து பள்ளிகளிலும் கம்ப்யூட்டர் மற்றும் முழுநேர கணினி இயக்குபவர் நியமனம் செய்ய வேண்டும்.

    பள்ளிகளில் சுகாதா ரத்தை மேம்படுத்த முழு நேர தூய்மை பணியா ளர்களை நியமிக்க வேண்டும். கல்வியை மாநில பட்டியலுக்கு கொண்டு வர வேண்டும். தமிழ் ஆட்சி மொழி சட்டத்தை முழுமையாக அமல்படுத்த வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. முடிவில் ஒன்றிய பொருளாளர் ஆரோக்ய மேரி நன்றி கூறினார்.

    • சேலம் மாவட்டத்தில் கடந்த நவம்பர் 9-ந்தேதி வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்படது. தொடர்ந்து 1.1.2023-ந் தேதியை தகுதி நாளாகக் கொண்டு வாக்காளர் பட்டியல் திருத்தம் செய்யும் பணி தொடங்கப்பட்டு படிவங்கள் கடந்த 8-ந்தேதி வரை வரை பெறப்பட்டன.
    • அனைத்து விண்ணப்பங்களும் பரிசீலனை செய்யப்பட்டு இறுதி செய்து வருகிற ஜனவரி 5-ந்தேதி அன்று இறுதி வாக்காளர் பட்டி யல் வெளியிடும் செய்யும் பணிகள் தற்போது நடைபெற்று வருகிறது.

    சேலம்:

    இந்திய தேர்தல் ஆணையத்தின் உத்தரவின்படி, சேலம் மாவட்டத்தில் கடந்த நவம்பர் 9-ந்தேதி வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்படது. தொடர்ந்து 1.1.2023-ந் தேதியை தகுதி நாளாகக் கொண்டு வாக்காளர் பட்டியல் திருத்தம் செய்யும் பணி தொடங்கப்பட்டு படிவங்கள் கடந்த 8-ந்தேதி வரை வரை பெறப்பட்டன.

    அனைத்து விண்ணப்பங்களும் பரிசீலனை செய்யப்பட்டு இறுதி செய்து வருகிற ஜனவரி 5-ந்தேதி அன்று இறுதி வாக்காளர் பட்டி யல் வெளியிடும் செய்யும் பணிகள் தற்போது நடைபெற்று வருகிறது.

    சேலம் மாவட்டத்தில் சிறப்பு சுருக்கமுறைத் திருத்தம் பணிக்காக நியமிக்கப்பட்ட மாவட்ட வாக்காளர் பட்டியல் பார்வையாளர் ஷோபனா, மாவட்ட கலெக்டர் கார்மேகம் முன்னிலையில் அனைத்து வாக்காளர் பதிவு அலுவலர்கள், அனைத்து உதவி பதிவு அலுவலர்கள் மற்றும் தேர்தல் துணை வட்டாட்சியர்கள் ஆகியோ ருடன் ஆலோசனை நடத்தினார்.

    அப்போது சிறப்பு சுருக்க முறைத் திருத்தத்துக்காக பெறப்பட்ட படிவங்கள் குறித்தும், களப்பணி குறித்தும், உதவி வாக்காளர் பதிவு அலுவலர், வாக்காளர் பதிவு அலுவலர் மற்றும் மாவட்ட தேர்தல் அலுவலரால் மேல்த ணிக்கை செய்யப்பட்ட சேர்த்தல், நீக்கல் மற்றும் திருத்தத்திற்கான படிவங்கள் குறித்தும் விவாதிக்கப்பட்டது.

    இந்த படிவங்கள் இறுதி செய்யப்பட்டு பிழையில்லா வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட வேண்டும் என வாக்காளர் பதிவு அலுவலர்கள் மற்றும் உதவி வாக்காளர் பதிவு அலுவலர்களுக்கு மாவட்ட வாக்காளர் பட்டியல் பார்வையாளர் ஷோபனா அறிவுரை வழங்கினார். கூட்டத்தில் வருவாய் கோட்டாட்சியர்கள் விஷ்ணு வர்த்தினி, சரண்யா,

    சவும்யா, தணிகாஜலம், மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் (தேர்தல்) சரவணன், வாக்காளர் பதிவு அலுவலர்கள் மற்றும் உதவி வாக்களார் பதிவு அலுவலர்கள் உள்ளிட்ட அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

    ×