search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "நெல்லை"

    • வண்ணார்பேட்டை கொக்கிரகுளத்தில் உள்ள எம்.ஜி.ஆர். சிலைக்கு மாநகர் மாவட்ட செயலாளர் தச்சை கணேசராஜா தலைமையில் நிர்வாகிகள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
    • நிகழ்ச்சியில் முன்னாள் எம்.பி. முத்துக்கருப்பன், முன்னாள் துணை மேயர் ஜெகநாதன் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

    நெல்லை:

    அ.தி.மு.க. 52-வது ஆண்டு தொடக்க விழாவை முன்னிட்டு நெல்லை மாநகர் மாவட்ட அ.தி.மு.க. சார்பில் வண்ணார் பேட்டை கொக்கிரகுளத்தில் உள்ள எம்.ஜி.ஆர். சிலைக் கும், அதன் முன்பு அலங்க ரித்து வைக்கப்பட்டிருந்த ஜெயலலிதா உருவப்படத் துக்கும் மாநகர் மாவட்ட செயலாளர் தச்சை கணேச ராஜா தலைமையில் நிர்வா கிகள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

    கலந்து கொண்டவர்கள்

    நிகழ்ச்சியில் அமைப்பு செயலாளர் கருப்பசாமி பாண்டியன், முன்னாள் எம்.பி. முத்துக்கருப்பன், முன்னாள் துணை மேயர் ஜெகநாதன், மாநில எம். ஜி.ஆர். மன்ற இணைச் செய லாளர் கல்லூர் வேலாயுதம், அமைப்பு சாரா ஓட்டுனர் அணி செயலாளர் சிவந்தி மகா ராஜேந்திரன், மாவட்ட துணைச் செயலாளர் பள்ளமடை பாலமுருகன், பொதுக்குழு உறுப்பினர் கங்கை வசந்தி, டவுன் கூட்டுறவு வங்கி தலைவர் பால் கண்ணன்,

    பகுதி செயலாளர்கள் காந்தி வெங்கடாசலம், சண்முக குமார், திருத்துச் சின்னத்துரை, ஜெனி, மாவட்ட எம்.ஜி.ஆர். மன்றம் சேவல் பரமசிவன், கவுன்சி லர் சந்திரசேகர், முன்னாள் அரசு வக்கீல் அன்பு அங்கப்பன், பகுதி துணை செயலாளர் மாரீசன், இணை செயலாளர் அப்பாஸ், பகுதி மாணவர் அணி செயலாளர் புஷ்ப ராஜ் ஜெய்சன், மாவட்ட பிரதிநிதி ஈஸ்வரி கிருஷ் ணன், நிர்வாகிகள் சீனி முகம்மது சேட், பாறையடி மணி மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

    • நிகழ்ச்சியில் விபத்து தடுப்பு உறுதிமொழி எடுத்துக் கொள்ளப்பட்டது.
    • மாணவ-மாணவிகள் பங்கேற்ற விழிப்புணர்வு நாடகங்களும் நடைபெற்றது.

    நெல்லை:

    நாடு முழுவதும் இன்று உலக விபத்து தடுப்பு தினத்தையொட்டி நெல்லை அரசு மருத்துவமனையின் விபத்து மற்றும் அவசர சிகிச்சை பிரிவு சார்பில் விழிப்புணர்வு பேரணி நடத்தப்பட்டது. பேரணியை நெல்லை மாநகர தலைமையிடத்து போலீஸ் துணை கமிஷனர் அனிதா கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

    நிகழ்ச்சியில் நெல்லை அரசு மருத்துவக் கல்லூரி டீன் டாக்டர் ரேவதி பாலன், மருத்துவமனை கண்காணிப்பாளர் பாலசுப்பிரமணியன் மற்றும் டாக்டர்கள், செவிலியர்கள் கலந்து கொண்டனர்.

    இந்த பேரணியில் மருத்துவ கல்லூரி செவிலியர் மாணவிகள் விழிப்புணர்வு பதாகைகளை ஏந்தியபடி மருத்துவமனை வளாகத்துக்குள்ளேயே ஊர்வலமாக சென்றனர்.

    அதனைத் தொடர்ந்து மருத்துவமனை வளாகத்தில் நடந்த நிகழ்ச்சியில் விபத்து தடுப்பு உறுதிமொழி எடுத்துக் கொள்ளப்பட்டது. அதன் பின்னர் விழிப்புணர்வு கண்காட்சி நடைபெற்றது. பின்னர் செவிலியர், மாணவ-மாணவிகள் பங்கேற்ற விழிப்புணர்வு நாடகங்களும் நடைபெற்றது.

    தொடர்ந்து கருத்தரங்கம் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிகளில் அவசர சிகிச்சை பிரிவு துறை தலைவர் முகமது ரபி, டாக்டர் அமலன் மற்றும் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.


    பேரணியை மாநகர போலீஸ் துணை கமிஷனர் அனிதா கொடியசைத்து தொடங்கி வைத்த காட்சி. அருகில் அரசு மருத்துவ கல்லூரி டீன் ரேவதி மற்றும் பலர் உள்ளனர்.

    பேரணியை மாநகர போலீஸ் துணை கமிஷனர் அனிதா கொடியசைத்து தொடங்கி வைத்த காட்சி. அருகில் அரசு மருத்துவ கல்லூரி டீன் ரேவதி மற்றும் பலர் உள்ளனர்.


     


    • மழை காரணமாக நீர்வரத்து ஏற்பட்டு அணைகளின் நீர்மட்டம் உயர்ந்துள்ளது.
    • மணிமுத்தாறு அணையின் நீர்மட்டம் 54.25 அடியாக உள்ளது.

    நெல்லை:

    நெல்லை, தென்காசி மாவட்டங்களில் கடந்த சில நாட்களாக பரவலாக மழை பெய்து வருகிறது. இதனால் மாநகர் மற்றும் புறநகர் பகுதிகளில் வெப்பம் தணிந்து குளிர்ச்சி நிலவி வருகிறது. அணை பகுதிகளிலும் மழை காரணமாக நீர்வரத்து ஏற்பட்டு அணைகளின் நீர்மட்டம் உயர்ந்துள்ளது.

    நெல்லை

    நெல்லையில் நேற்று மேற்கு தொடர்ச்சி மலையில் பெய்த மழையால் பிரதான அணையான 143 அடி கொள்ளளவு கொண்ட பாபநாசம் அணைக்கு நீர்வரத்து ஏற்பட்டது. அங்கு 8 மில்லிமீட்டர் மழை பெய்தது.

    சேர்வலாறு அணை பகுதியில் 13 மில்லிமீட்டர் மழை பெய்தது. இந்த அணைகளுக்கு வினாடிக்கு 697 கனஅடி நீர் வந்து கொண்டிருக்கிறது. சேர்வலாறு அணை நீர்மட்டம் 83.43 அடியாக உள்ளது. அணை பகுதிகளில் மழையால் பாபநாசம் அணையில் இருந்து வினாடிக்கு 1300 கனஅடி தண்ணீர் திறக்கப்படுவதால் தாமிரபரணி ஆற்றில் தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளது.

    118 அடி கொள்ளளவு கொண்ட மணிமுத்தாறு அணையின் நீர்மட்டம் 54.25 அடியாக உள்ளது. இந்த அணைக்கு வினாடிக்கு 98 கனஅடி நீர் வந்து கொண்டிருக்கிறது. இங்கு 1.8 மில்லிமீட்டர் மழை பதிவாகியது. கொடுமுடியாறு அணை நீர்மட்டம் 44.75 அடியாகவும், நம்பியாறு அணை 12.49 அடியாகவும் நீடிக்கிறது.

    மாவட்டத்தில் களக்காடு, சேரன்மகாதேவி, கன்னடியன், நாங்குநேரி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் பரவலாக மழை பெய்தது. அதிகபட்சமாக சேரன்மகாதேவியில் 1.6 மில்லிமீட்டர் மழை பெய்தது. மாஞ்சோலை, ஊத்து, நாலுமுக்கு எஸ்டேட்டுகளிலும் பரவலாக மழை பெய்தது.

    தென்காசி

    தென்காசி மாவட்டத்தில் தென்காசி, செங்கோட்டை, சிவகரி, சங்கரன்கோவில் மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் பலத்த மழை பெய்தது. சங்கரன்கோவிலில் அதிகபட்சமாக 24 மில்லிமீட்டர் மழை பெய்தது. வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. ஆலங்குளம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் மாலையில் சுமார் 1 மணி நேரம் கனமழை கொட்டித்தீர்த்தது. இதனால் தாழ்வான பள்ளங்களில் மழை நீர் தேங்கியது. சிவகிரியில் 6 மில்லிமீட்டரும், தென்காசி யில் 4 மில்லிமீட்டரும் மழை பெய்தது.

    அணைகளை பொறுத்த வரை கடனா நதி, கருப்பாநதி, குண்டாறு, அடவிநயினார் அணை பகுதிகளில் பரவலாக மழை பெய்தது. குற்றாலத்தில் அனைத்து அருவிகளிலும் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டி வருகிறது.

    • பிரதீபா ஒரு தனியார் பள்ளியில் 8-ம் வகுப்பு படித்து வருகிறார்.
    • தேசிய அளவிலான டென்னிஸ் போட்டிக்கு பிரதீபா தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

    நெல்லை:

    நெல்லை மாவட்டம் மூலக்கரைப்பட்டி அருகே உள்ள எடுப்பல் கிராமத்தை சேர்ந்தவர் காளிமுத்து. இவர் நெல்லை புறநகர் மாவட்டம் மூலக்கரைப்பட்டி பேரூர் அ.தி.மு.க. நகர துணை செயலாளராக பதவி வகித்து வருகிறார்.

    இவரது மகள் பிரதீபா (வயது 13). இவர் நெல்லை ஜவகர் நகரில் உள்ள ஒரு தனியார் பெண்கள் மேல்நிலை பள்ளியில் 8-ம் வகுப்பு படித்து வருகிறார். இவர் கடந்த 13-ந்தேதி சேலம் மாவட்டம் ஏற்காட்டில் நடந்த இந்திய பள்ளிகளின் விளையாட்டு குழுமம் நடத்த உள்ள தேசிய அளவிலான டென்னிஸ் போட்டிக்கான தமிழக மாநில அளவிலான தெரிவு போட்டியில் பங்கேற்றார்.

    அதில் 14 வயதிற்கு உட்பட்ட மாணவிகள் பிரிவில் பிரதீபா, தேசிய அளவிலான டென்னிஸ் போட்டிக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளார். இதையடுத்து மாணவி பிரதீபா, நெல்லை புறநகர் மாவட்ட அ.தி.மு.க. செயலாளர் இசக்கி சுப்பையா எம்.எல்.ஏ.வை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றார். அப்போது மாணவியின் தந்தை காளிமுத்து உடன் இருந்தார்.

    • முகாமில் சேரன்மகா தேவி சப்-கலெக்டர், தனித்துணை கலெக்டர் ஆகியோர் கொண்ட குழுவினரால் மனுக்கள் பெறப்படும்.
    • முகாம் முடிந்த உடன் அன்று பிற்பகல் அக்கிராமத்தில் மக்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் குறித்தும், மேற்படி குழுவினரால் ஆய்வு மேற்கொள்ளப்படுகிறது.

    நெல்லை:

    சேரன்மகாதேவி வட்டம் திருவிருத்தான்புள்ளி ஊராட்சிப் பகுதியில் மாவட்ட கலெக்டரின் மக்கள் தொடர்பு முகாம் அடுத்த மாதம் 22-ந்தேதி நடைபெற உள்ளது. எனவே அதற்கு முன்னோடியாக நாளை மறுநாள் (வியாழக்கிழமை) 1 திருவிருத்தான்புள்ளி பகுதி-2 கிராமம், கங்கனாங்குளம் அரசு திருமண மண்டபத்தில் காலை 10 மணி முதல் மதியம் 1 மணி வரை மனுக்கள் பெறப்பட உள்ளன.

    இந்த முகாமில் சேரன்மகா தேவி சப்-கலெக்டர், தனித்துணை கலெக்டர், மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலர் மற்றும் மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் நல அலுவலர் ஆகிேயார் கொண்ட குழுவினரால் மனுக்கள் பெறப்படும். முகாம் முடிந்த உடன் அன்று பிற்பகல் அக்கிராமத்தில் மக்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் குறித்தும், மேற்படி குழுவினரால் ஆய்வு மேற்கொள்ளப்படுகிறது.

    எனவே ஆய்வுக் குழுவிற்கு பொதுமக்கள் முழு ஒத்துழைப்பு வழங்குமாறு மாவட்ட கலெக்டர் கார்த்திகேயன் கேட்டுக் கொண்டுள்ளார். 

    • முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதா ஏழை, எளிய மக்கள் வயிறார உணவு உண்பதற்காக அம்மா உணவகங்களை ஏற்படுத்தித் தந்தார்.
    • அம்மா உணவகம் அருகே கழிவுகள், மது பாட்டில்கள் கிடக்கிறது.

    நெல்லை:

    நெல்லை மாநகராட்சி யில் இன்று வாராந்திர மக்கள் குறைதீர்க்கும் கூட்டம் நடைபெற்றது.

    இதில் மேயர் சரவணன் தலைமை தாங்கி பொது மக்களிடமிருந்து குறைகள் தொடர்பான மனுக்களை பெற்றுக் கொண்டார். துணை கமிஷனர் தாணு மூர்த்தி முன்னிலை வகித்தார்.

    நெல்லை மாநகர் மாவட்ட அ.தி.மு.க சார்பில் மாவட்டச் செயலாளர் தச்சை கணேசராஜா அறிவுறுத்தலின் பேரில் பகுதி செயலாளர் காந்தி வெங்கடாஜலம், சிந்து முருகன் ஆகியோர் தலைமையில் முன்னாள் அரசு வக்கீல் அன்பு அங்கப்பன் மற்றும் நிர்வாகிகள் திரண்டு வந்து அளித்த மனுவில் கூறியிருப்பதாவது:-

    அ.தி.மு.க ஆட்சிக்காலத்தின் போது முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதா ஏழை, எளிய மக்கள் வயிறார உணவு உண்பதற்காக குறைந்த செலவில் இட்லி, சாம்பார் சாதம், தயிர் சாதம் உள்ளிட்டவை ஏழைகளுக்கு கிடைக்க வழிவகை செய்யும் விதமாக அம்மா உணவகங்களை ஏற்படுத்தித் தந்தார்.

    தற்போது தி.மு.க. ஆட்சி காலத்தில் அந்த உணவகங்களை அவர்கள் கண்டு கொள்வதில்லை. தரமற்ற உணவுகள் வழங்குகின்றனர். பாளை மண்டலத்துக்குட்பட்ட மார்க்கெட் பகுதியில் அமைந்துள்ள அம்மா உணவகத்தின் அருகே மார்க்கெட் வியாபாரிகள் மற்றும் வந்து செல்பவர்களின் வசதிக்காக கழிப்பிடம் கட்டப்பட்டுள்ளது. அந்த கழிப்பிடங்கள் முறையாக பராமரிக்கப்படாமல் உள்ளது.

    இதனால் அந்த பகுதியில் உள்ள அம்மா உணவகம் அருகே மனித கழிவுகள், மது பாட்டில்கள் கிடக்கிறது. இதனால் அந்த வழியாக செல்லும் பொதுமக்கள் முகம் சுழிக்கின்றனர். உடனடியாக இந்த கழிப்பிடங்களை முறையாக பராமரிக்க வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறியிருந்தனர்.

    அப்போது பாளை பகுதி மாணவர் அணி செயலாளர் புஷ்பராஜ் ஜெய்சன், நெல்லை பகுதி துணைச் செயலாளர் மாரிசன், மாவட்ட பிரதிநிதி ஈஸ்வரி கிருஷ்ணன், நிர்வாகிகள் பாளை ரமேஷ், பாறையடி மணி, சம்சுல்தான், பக்கீர் மைதீன் மற்றும் ஏராளமான நிர்வாகிகள் உடன் இருந்தனர்.

    • புரட்டாசி மாதம் என்பதால் நம்பி கோவிலில் பக்தர்கள் கூட்டம் அதிகரித்து வருகிறது.
    • நம்பி கோவிலுக்கு செல்லும் பாதையில் காட்டு யானைகள் நடமாட்டம் அதிகரித்துள்ளது.

    களக்காடு:

    நெல்லை மாவட்டம் திருக்குறுங்குடி மேற்கு தொடர்ச்சி மலையில் அடர்ந்த வனப்பகுதியில் 108 வைணவ திவ்ய தேசங்களில் ஒன்றான திருமலை நம்பி கோவில் அமைந்துள்ளது. தற்போது புரட்டாசி மாதம் என்பதால் இந்த கோவிலில் பக்தர்கள் கூட்டம் அதிகரித்து வருகிறது.

    இந்நிலையில் திருமலை நம்பி கோவிலுக்கு செல்லும் வழிப்பாதையில் காட்டு யானைகள் நடமாட்டம் அதிகரித்து காணப்படுவதாக வனத்துறையினர் தெரி வித்துள்ளனர். இதையடுத்து இன்று (செவ்வாய் கிழமை) ஒரு நாள் மட்டும் பக்தர்கள் நம்பி கோவிலுக்கு செல்ல தடை விதிக்கப்படுவதாக வனத்துறையினர் அறிவித்துள்ளனர்.

    • முகாமில் யோகா மருத்துவ சிசிச்சைகள் நோயாளிகளுக்கு வழங்கப்பட்டது.
    • மருத்துவ முகாமில் கலந்து கொண்ட அனைவருக்கும் நிலவேம்பு கசாயம் வழங்கப்பட்டது.

    வள்ளியூர்:

    நெல்லை தட்சணமாற நாடார் சங்க கல்லூரி தாவரவியல் துறை, அகத்தர மதிப்பீட்டு குழு மற்றும் பாளையங்கோட்டை அரசு சித்த மருத்துவக்கல்லூரி இணைந்து நடத்திய இலவச சித்த மருத்துவ முகாம் தெற்கு கள்ளிகுளத்தில் உள்ள காமராஜ் நடு நிலைப்பள்ளியில் நடைபெற்றது.

    நெல்லை தட்சண மாற நாடார் சங்க கல்லூரி செயலர் வி.பி. ராமநாதன் தலைமை தாங்கினார். கல்லூரி முதல்வர் து.ராஜன், கல்லூரிக்குழு உறுப்பினர் எஸ்.கே.டி.பி. காமராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். முகாமை பாளை யங்கோட்டை அரசு சித்த மருத்துவக்கல்லூரி பேராசி ரியர் மனோகரன் மற்றும் காமராஜ் நடுநிலைப்பள்ளி தாளாளர் டாக்டர் எம். ஜெபஸ்டின் ஆனந்த் ஆகியோர் தொடங்கி வைத்து சிறப்புரை ஆற்றினர்.

    முகாமில் வர்ம மருத்து வத்துறை தலைவர் முனிஸ்வரன், புற மருத்துவ துறை மருத்துவர் சுஜாதா, விரிவுரை யாளர் பிச்சையாகுமார், மருத்துவ தாவரவியல் துறை ராஷேஸ், தாவரவியல் துறை தலைவர் விஜயா, காமராஜ் நடு நிலைப்பள்ளி தலைமையாசிரி யர் லியோன்ஸ் லெட்டிசியா தங்கம் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.

    முகாமில் கல்லூரி பேராசி ரியர் பாலமுருகன், அகத்தர மதிப்பீட்டு குழு ஒருங்கிணைப்பாளர் புஷ்பராஜ், அலுவலக கண்கா ணிப்பாளர் பாலச்சந்திரன், பயிற்சி பயிற்றுநர் இளங்கோ ஜெகதீஸ், பேராசிரியர்கள், அலுவலர்கள், மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர். சித்த மருத்துவ முகாமில் தெற்கு கள்ளி குளத்தை சார்ந்த பொதுமக்கள் ஏராளமானோர் கலந்து கொண்டு பயன்பெற்றனர். முகாமில் சளி காய்ச்சல், தலைவலி, கை, கால், மூட்டுவலி, கழுத்து வலி மற்றும் வர்மம், புறமருத்துவம், யோகா மருத்துவ சிசிச்சைகள் நோயா ளிகளுக்கு வழங்கப்பட்டது.

    மேலும் கலந்து கொண்ட அனைவருக்கும் நிலவேம்பு கசாயம் வழங்கப்பட்டது. தாவரவியல் துறை உதவி பேராசிரியர் ஹரிகிருஷ்ணன் நன்றி கூறினார். முகாமிற்கான ஏற்பாடுகளை நெல்லை தட்சண மாற நாடார் சங்க கல்லூரி நிர்வாகம், தாவரவியல் துறை மற்றும் அகத் தர மதிப்பீட்டு குழு இணைந்து செய்திருந்தனர்.

    • போட்டியானது, வீரர்கள் மற்றும் வீராங்கனைகளுக்கு தனித்தனியாக நடத்தப்பட உள்ளது.
    • நெல்லை மாவட்டத்தில் உள்ள அனைத்து அணிகளும் இதில் கலந்துகொள்ளலாம்.

    நெல்லை:

    ஆக்கி யூனிட் ஆப் நெல்லை சார்பில் மாவட்ட ஆக்கி லீக் போட்டிகள் வருகிற 26-ந்தேதி முதல் 29-ந்தேதி வரை பாளை அண்ணா விளையாட்டு அரங்கில் நடைபெறு கிறது. போட்டியானது, வீரர்கள் மற்றும் வீராங்கனைகளுக்கு தனித்தனியாக நடத்தப்பட உள்ளது. இதில் முதல் 2 நிலை களை பெறுபவர்களுக்கு வெற்றிக்கோப்பைகளும், பங்கேற்பாளர்களுக்கு பங்கேற்பு கேடயங்களும், அனைவருக்கும் சான்றிதழ்களும் வழங்கப்படும். நெல்லை மாவட்டத்தில் உள்ள அனைத்து அணிகளும் இதில் கலந்துகொள்ளலாம். கலந்துகொள்ள வயது வரம்பு ஏதும் இல்லை. நுழைவு கட்டணம் இலவசம். கலந்துகொள்ள விரும்பும் அணிகள் 99403 41508, 90430 36967 என்ற வாட்ஸ் அப்பில் 20-ந்தேதிக்கு முன்னர் அணியின் பெயர்களை முன்பதிவு செய்யவேண்டும். இதற்கான விரிவான ஏற்பாடுகளை ஆக்கி யூனிட் ஆப் நெல்லை நிர்வாகிகள் சேவியர், முருகேசன், பீர் அலி, டாக்டர் மாரிக்கண்ணன், ஜான்சன், ராதாகிருஷ்ணன் ஆகியோர் செய்து வருகிறார்கள்.

    • புதுக்குளம், கொங்கந்தான்பாறை பஞ்சாயத்துகளில் அ.தி.மு.க. பூத் கமிட்டி ஆய்வு கூட்டம் நடைபெற்றது.
    • கூட்டத்தில் முன்னாள் எம்.எல்.ஏ. ரெட்டியார்பட்டி நாராயணன் கலந்து கொண்டு பேசினார்.

    நெல்லை:

    நெல்லை புறநகர் மாவட்ட அ.தி.மு.க. சார்பில் பாளை தெற்கு ஒன்றியத்திற்கு உட்பட்ட புதுக்குளம், கொங்கந்தான்பாறை பஞ்சாயத்துகளில் அ.தி.மு.க. பூத் கமிட்டி ஆய்வு கூட்டம் நடைபெற்றது.

    அ.தி.மு.க. அமைப்புச் செயலாளர் ஏ.கே. சீனிவாசன் தலைமை தாங்கினார். இதில் முன்னாள் எம்.எல்.ஏ. ரெட்டியார்பட்டி நாராயணன் கலந்து கொண்டு பேசினார். பாளை தெற்கு ஒன்றிய செயலாளரும், புதுக்குளம் பஞ்சாயத்து தலைவருமான முத்துக்குட்டி பாண்டியன் முன்னிலை வகித்தார்.

    இதில் ஒன்றிய அவை தலைவர் செல்ல பாண்டி யன், ஒன்றிய துணை செயலாளர் பூலான், இணை செயலாளர் ரேவதி, பொருளாளர் ரமேஷ், ஒன்றிய மாவட்ட பிரதிநிதி முத்துக்குமார், நாராயணன், கிளை செயலாளர் வேல்முருகன், பிரம்மா, பேச்சிமுத்து, ரவிக்குமார், தேரவல்லி, காமராஜர் நகர் தசரதன், பசும்பொன் நகர் கிளை செயலாளர் வீரபுத்திரன், வீரளப்பெருஞ்செல்வி கிளை செயலாளர் நாராயணன், மணல்விளை கிளை செயலாளர் சொர்ணப்ப நாடார், மல்லக்குளம் சுப்பையா, கொங்கந்தான் பாறை கிளை செயலாளர் மரியராஜ், அம்பேத்கார் நகர் கிளை செயலாளர் பரமசிவன், தகவல் தொழில்நுட்ப அணி செயலாளர் கிருஷ்ணன் மற்றும் அ.தி.மு.க. சார்பு அணி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

    • பேரணியில் மனோன்மணியம் சுந்தரனார் பல் கலைக்கழக உளவியல் துறை மாணவர்கள் கலந்து கொண்டனர்.
    • சாலையில் நின்றவர்களுக்கு விழிப்புணர்வு துண்டு பிரசுரங்களும் வழங்கப்பட்டது.

    நெல்லை:

    உலக மனநல நாள் ஆண்டுதோறும் அக்டோபர் 10-ந்தேதி அன்று கடை பிடிக்கப்படுகிறது. உலகளாவிய மனநலக் கல்வி, விழிப்புணர்வு மற்றும் சமூக மனப்பான்மைக்கு எதிராக வாதிடும் நாளாக இந்த நாள் கடைபிடிக்கப்படுகின்றது.

    இதனையொட்டி இன்று நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகம் சார்பில் உலக மனநல விழிப்புணர்வு சைக்கிள் பேரணி நடத்தப்பட்டது.

    பேரணியில் மனோன்ம ணியம் சுந்தரனார் பல் கலைக்கழக உளவியல் துறை மாணவர்கள் கலந்து கொண்டு நெல்லை பேட்டை போலீஸ் நிலையத்தில் இருந்து சைக்கிளில் புறப்பட்டு சென்றனர்.

    தொடர்ந்து பழைய பேட்டை, காந்திநகர் வழியாக மனோன்மணியம் சுந்த ரனார் பல்கலைக்கழகத்தை அடைந்தனர். இந்த பேரணியை நெல்லை டவுன் உதவி கமிஷனர் சுப்பையா தொடங்கி வைத்தார்.

    சைக்கிள் பேரணி நடைபெறுவதையொட்டி பேரணி செல்லும் சாலையில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர். மேலும் சாலையில் நின்ற வர்களுக்கு விழிப்புணர்வு துண்டு பிரசுரங்களும் வழங்கப்பட்டது. இதில் பல்கலைக்கழக மாணவர்கள் 50-க்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டு சைக்கிள் ஓட்டி சென்றனர்.

    • முருகனின் மகனுக்கும், சிவா என்ற சிவசுப்பிரமணியனுக்கும் முன்விரோதம் இருந்து வருகிறது.
    • ஆத்திரம் அடைந்த சிவா, முருகனை கத்தியால் குத்தினார்.

    களக்காடு:

    திருக்குறுங்குடி அருகே உள்ள தளவாய்புரத்தை சேர்ந்தவர் முருகன் (வயது43). விவசாயி. இவரது மகனுக்கும், ஏர்வாடி கோவில் வாசலை சேர்ந்த சிவா என்ற சிவசுப்பிரமணியனுக்கும் தகராறு ஏற்பட்டு முன்விரோதம் இருந்து வருகிறது.

    சம்பவத்தன்று சிவா, முருகன் வீட்டிற்கு வந்து, அவரது மகனை அவதூறாக பேசினார்.

    இதனை முருகன் தட்டிக்கேட்டார். இதனால் ஆத்திரம் அடைந்த சிவா, முருகனை கத்தியால் குத்தினார். இதுபற்றி திருக்குறுங்குடி போலீசில் புகார் செய்யப்பட்டது.

    அதன்பேரில் ஏர்வாடி இன்ஸ்பெக்டர் தர்மராஜ் மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி சிவாவை தேடி வருகின்றனர்.

    ×