search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மனுநீதிநாள் முகாம்"

    • முகாமில் சேரன்மகா தேவி சப்-கலெக்டர், தனித்துணை கலெக்டர் ஆகியோர் கொண்ட குழுவினரால் மனுக்கள் பெறப்படும்.
    • முகாம் முடிந்த உடன் அன்று பிற்பகல் அக்கிராமத்தில் மக்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் குறித்தும், மேற்படி குழுவினரால் ஆய்வு மேற்கொள்ளப்படுகிறது.

    நெல்லை:

    சேரன்மகாதேவி வட்டம் திருவிருத்தான்புள்ளி ஊராட்சிப் பகுதியில் மாவட்ட கலெக்டரின் மக்கள் தொடர்பு முகாம் அடுத்த மாதம் 22-ந்தேதி நடைபெற உள்ளது. எனவே அதற்கு முன்னோடியாக நாளை மறுநாள் (வியாழக்கிழமை) 1 திருவிருத்தான்புள்ளி பகுதி-2 கிராமம், கங்கனாங்குளம் அரசு திருமண மண்டபத்தில் காலை 10 மணி முதல் மதியம் 1 மணி வரை மனுக்கள் பெறப்பட உள்ளன.

    இந்த முகாமில் சேரன்மகா தேவி சப்-கலெக்டர், தனித்துணை கலெக்டர், மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலர் மற்றும் மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் நல அலுவலர் ஆகிேயார் கொண்ட குழுவினரால் மனுக்கள் பெறப்படும். முகாம் முடிந்த உடன் அன்று பிற்பகல் அக்கிராமத்தில் மக்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் குறித்தும், மேற்படி குழுவினரால் ஆய்வு மேற்கொள்ளப்படுகிறது.

    எனவே ஆய்வுக் குழுவிற்கு பொதுமக்கள் முழு ஒத்துழைப்பு வழங்குமாறு மாவட்ட கலெக்டர் கார்த்திகேயன் கேட்டுக் கொண்டுள்ளார். 

    • 38 பேருக்கு பட்டா மாற்றம் செய்யப்பட்டது
    • 128 பேருக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன

    வந்தவாசி:

    வந்தவாசியை அடுத்த மும்முனி கிராமத்தில் மனுநீதிநாள் முகாம் நடைபெற்றது.

    முகாமுக்கு மாவட்ட தனித்துணை கலெக்டர் கோ.வெங்கடேசன் தலைமை தாங்கி பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். தாசில்தார்கள் முருகானந்தம், சுபாஷ்சந்தர் உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர்.

    முகாமில் 38 பேருக்கு பட்டா மாற்றம், 6 பேருக்கு மின்னனு குடும்ப அட்டை, 73 பேருக்கு முதியோர் மற்றும் இதர உதவித் தொகை, 3 பேருக்கு நத்தம் பட்டா நகல் உள்ளிட்ட 128 பேருக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.

    முகாமில் துணை தாசில்தார் அகத்தீஸ்வரன் வருவாய் ஆய்வாளர் கலைவாணி, மருத்துவர் பூவிதா கிராம நிர்வாக அலுவலர் சுரேஷ், ஒன்றியக்குழு உறுப்பினர் சுகந்தி வேலு, ஊராட்சி மன்றத் தலைவர் ஜெயலட்சுமி தங்கராஜ் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

    • 90 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள்
    • ஏராளமானோர் கலந்து கொண்டனர்

    சேத்துப்பட்டு:

    திருவண்ணாமலை மாவட்டம் சேத்துப்பட்டு, தாலுகா தேவிகாபுரம் பிர்காவில் உள்ள பெரணம்பாக்கம், கிராமத்தில் மனு நீதி நாள் முகாம் நடைபெற்றது.

    விழாவிற்கு சேத்துப்பட்டு ஒன்றிய குழு தலைவர் ராணி அர்ஜுனன் தலைமை தாங்கினார்.சேத்துப்பட்டு தாசில்தார் கோவிந்தராஜ், சமூக பாதுகாப்பு தாசில்தார் குமரவேல், வேளாண்மை உதவி இயக்குனர் நாராயணமூர்த்தி, ஆகியோர் முன்னிலை வகித்தனர். அனைவரையும் தேவிகாபுரம், பிர்கா வருவாய் ஆய்வாளர் ராதாகிருஷ்ணன், வரவேற்றார்.

    விழாவில் சிறப்பு அழைப்பாள ராகசெய்யாறு (சிப்காட்) தனித்துணை கலெக்டர் நாராயணன், கலந்து கொண்டார்.

    முகாமில் 90 பயனாளி களுக்கு நலத்திட்ட உதவிகளை ஒன்றியகுழு தலைவர் ராணிஅர்ஜுணன், தனித்துணை கலெக்டர் நாராயணன், ஆகியோர் வழங்கி பேசினார்கள்.

    விழாவில் ஒன்றிய குழு துணை தலைவர் முருகையன், மாவட்ட அட்மா குழு உறுப்பினர் எழில்மாறன், வட்ட வழங்கல் அலுவலர் சுரேஷ்பாபு, மற்றும் வேளாண்மை துறை, தோட்டக்கலைத்துறை, வருவாய் ஆய்வாளர்கள், கிராம நிர்வாக அலுவலர்கள், பொதுமக்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் கிராம நிர்வாக அலுவலர் குமரேசன், நன்றி கூறினார்.

    ×