search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Human Rights Day Camp"

    • மனுநீதிநாள் முகாமில் மாவட்ட கலெக்டர் ராஜகோபால் சுன்கரா தலைமையில் நடைபெற்றது.
    • 135 பயனாளிகளுக்கு பல்வேறு சான்றிதழ்களை வழங்கினார்.

    ஈரோடு:

    ஈரோடு மாவட்டம், அந்தியூர் வட்டம், பர்கூர் ஊராட்சி, கத்திரிமலை அரசு பழங்குடியினர் உண்டு உறைவிட நடுநிலைப் பள்ளி வளாகத்தில் மனுநீதிநாள் முகாமில் மாவட்ட கலெக்டர் ராஜகோபால் சுன்கரா தலைமையில் நடைபெற்றது.

    இம்மனு நீதிநாள் முகாமில் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறையின் சார்பில் 11பயனாளிகளுக்கு பிறப்பு சான்றிதழ்களும், 28 பயனாளிகளுக்கு மின்னணு வாக்காளர் அடையான அட்டையினையும்,

    23 பயனாளிகளுக்கு குடும்ப அட்டையில் திருத்தம் மற்றும் குடும்ப அட்டையில் தொலைபேசி எண் மாற்றம் செய்யப்பட்ட தற்கான ஆணையினையும், 24 பயனாளிகளுக்கு பழங்குடியினர் சாதி சான்றிதழ்களையும், 8 பயனாளிகளுக்கு பழங்குடியினர் நலவாரிய அட்டையினையும்,

    11 பயனாளிகளுக்கு புதிய ஆதார் அட்டை யினையும் மற்றும் 33 பயனாளிகளுக்கு ஆதார் அட்டை புதுப்பித்த ஆணையினையும் என 135 பயனாளிகளுக்கு பல்வேறு சான்றிதழ்களை கலெக்டர் வழங்கினார்.

    மேலும் இம்முகாமில் பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய மனுக்களை பொதுமக்களிடம் இருந்து பெற்றுக்கொண்டு இம்மனுக்கள் மீது உரிய நடவடிக்கை மேற்கொள்ளு மாறு அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.

    முன்னதாக கத்திரிமலை அரசு பழங்குடியினர் உண்டு உறைவிட நடுநிலைப் பள்ளியினை கலெக்டர் ஆய்வு மேற்கொண்டு மாணவ, மாணவிகளிடம் கலந்துரையாடினார்.

    மேலும் மாணவ, மாணவி களின் கல்வித்திறனை மேம்படுத்தும் வகையில் காணொலி காட்சி வாயிலாக நடைபெற்ற சிறப்பு வகுப்பினையும் பார்வையிட்டார்.

    தொடர்ந்து கத்திரிமலை மாதம்பட்டி மற்றும் மலையம்பட்டி ஆகிய பழங்குடியினர் பகுதியில் பாரத பிரதம மந்திரி குடியிருப்பு திட்டத்தின் கீழ் தலா ரூ.2.40 லட்சம் மதிப்பீட்டில் 15 வீடுகள் கட்டப்பட்டுள்ளதையும்,

    பசுமை வீடுகள் திட்டத்தின் கீழ் தலா ரூ.3 லட்சம் மதிப்பீட்டில் 20 வீடுகள் கட்டப்பட்டுள்ளதையும் மற்றும் இப்பகுதிமக்கள் பயன்பெறும் வகையில் தன்னார்வலர்கள் மூலமாக ரூ.2.65 லட்சம் மதிப்பீட்டில் மாவு அரைக்கும் எந்திரம் வழங்கப்பட்டு அதன் பயன்பாடுகளையும் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

    இம்முகாமில் தனித்துணை கலெக்டர் ராஜ கோபால், மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் சரவணன், அந்தியூர் தாசில்தார் பெரிய சாமி, அந்தியூர் வட்டார வளர்ச்சி அலுவலர் சரவணன், உள்ளாட்சி அமைப்பு பிரதிநிதிகள் உள்பட துறை சார்ந்த அலுவலர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

    • இந்திய அரசமைப்புச் சட்டத்திலும், இந்தியாவில் செயல்படுத்தத்தக்க பன்னாட்டு சட்டங்களிலும் வரையறுக்கப் பெற்ற மனித உரிமைகள் குறித்து உண்மையுடனும், பற்றுறுதியுடனும் நடந்துகொள்வேன் என்று நான் உளமாற உறுதி மொழிகிறேன்.
    • மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர்(பொது) வாசிக்க அனைவரும் உறுதிமொழியேற்றுக்கொண்டனர்.

    திண்டுக்கல்:

    திண்டுக்கல் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் கலெக்டரின் நேர்முக உதவியாளர்(பொது) அமர்நாத் தலைமையில் அலுவலர்கள் மனித உரிமைகள் தின உறுதிமொழியேற்றுக் கொண்டனர்.

    "இந்திய அரசமைப்புச் சட்டத்திலும், இந்தியாவில் செயல்படுத்தத்தக்க பன்னாட்டு சட்டங்களிலும் வரையறுக்கப் பெற்ற மனித உரிமைகள் குறித்து உண்மையுடனும், பற்றுறுதியுடனும் நடந்துகொள்வேன் என்று நான் உளமாற உறுதி மொழிகிறேன். எவ்வித வேறுபாடுமின்றி, அனைவரின் மனித உரிமைகளை மதித்து நடப்பதுடன், மனித உரிமைகளைப் பாதுகாக்கும் வகையில்,

    நான் என்னுடைய கடமைகளை ஆற்றுவேன். என்னுடைய எண்ணம், சொல் அல்லது செயல் மூலம், பிறருடைய மனித உரிமைகளை மீறுகிற எந்தவொரு செயலையும் நேரடியாகவோ, மறைமுகமாகவோ செய்யமாட்டேன்.

    மனித உரிமைகள் மேம்படுத்துவதற்கு, நான் எப்போதும் ஆயத்தமாக இருப்பேன் என்று உளமாற உறுதி கூறுகிறேன்" என்று மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர்(பொது) வாசிக்க அனைவரும் உறுதிமொழியேற்றுக்கொண்டனர்.

    இந்நிகழ்ச்சியில் அலுவலக மேலாளர்(குற்றவியல்) லட்சுமி உட்பட அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.

    • 38 பேருக்கு பட்டா மாற்றம் செய்யப்பட்டது
    • 128 பேருக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன

    வந்தவாசி:

    வந்தவாசியை அடுத்த மும்முனி கிராமத்தில் மனுநீதிநாள் முகாம் நடைபெற்றது.

    முகாமுக்கு மாவட்ட தனித்துணை கலெக்டர் கோ.வெங்கடேசன் தலைமை தாங்கி பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். தாசில்தார்கள் முருகானந்தம், சுபாஷ்சந்தர் உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர்.

    முகாமில் 38 பேருக்கு பட்டா மாற்றம், 6 பேருக்கு மின்னனு குடும்ப அட்டை, 73 பேருக்கு முதியோர் மற்றும் இதர உதவித் தொகை, 3 பேருக்கு நத்தம் பட்டா நகல் உள்ளிட்ட 128 பேருக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.

    முகாமில் துணை தாசில்தார் அகத்தீஸ்வரன் வருவாய் ஆய்வாளர் கலைவாணி, மருத்துவர் பூவிதா கிராம நிர்வாக அலுவலர் சுரேஷ், ஒன்றியக்குழு உறுப்பினர் சுகந்தி வேலு, ஊராட்சி மன்றத் தலைவர் ஜெயலட்சுமி தங்கராஜ் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

    • 90 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள்
    • ஏராளமானோர் கலந்து கொண்டனர்

    சேத்துப்பட்டு:

    திருவண்ணாமலை மாவட்டம் சேத்துப்பட்டு, தாலுகா தேவிகாபுரம் பிர்காவில் உள்ள பெரணம்பாக்கம், கிராமத்தில் மனு நீதி நாள் முகாம் நடைபெற்றது.

    விழாவிற்கு சேத்துப்பட்டு ஒன்றிய குழு தலைவர் ராணி அர்ஜுனன் தலைமை தாங்கினார்.சேத்துப்பட்டு தாசில்தார் கோவிந்தராஜ், சமூக பாதுகாப்பு தாசில்தார் குமரவேல், வேளாண்மை உதவி இயக்குனர் நாராயணமூர்த்தி, ஆகியோர் முன்னிலை வகித்தனர். அனைவரையும் தேவிகாபுரம், பிர்கா வருவாய் ஆய்வாளர் ராதாகிருஷ்ணன், வரவேற்றார்.

    விழாவில் சிறப்பு அழைப்பாள ராகசெய்யாறு (சிப்காட்) தனித்துணை கலெக்டர் நாராயணன், கலந்து கொண்டார்.

    முகாமில் 90 பயனாளி களுக்கு நலத்திட்ட உதவிகளை ஒன்றியகுழு தலைவர் ராணிஅர்ஜுணன், தனித்துணை கலெக்டர் நாராயணன், ஆகியோர் வழங்கி பேசினார்கள்.

    விழாவில் ஒன்றிய குழு துணை தலைவர் முருகையன், மாவட்ட அட்மா குழு உறுப்பினர் எழில்மாறன், வட்ட வழங்கல் அலுவலர் சுரேஷ்பாபு, மற்றும் வேளாண்மை துறை, தோட்டக்கலைத்துறை, வருவாய் ஆய்வாளர்கள், கிராம நிர்வாக அலுவலர்கள், பொதுமக்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் கிராம நிர்வாக அலுவலர் குமரேசன், நன்றி கூறினார்.

    ×