search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    அ.தி.மு.க. பூத் கமிட்டி ஆய்வு கூட்டம்
    X

    அ.தி.மு.க. பூத் கமிட்டி ஆய்வு கூட்டம்

    • புதுக்குளம், கொங்கந்தான்பாறை பஞ்சாயத்துகளில் அ.தி.மு.க. பூத் கமிட்டி ஆய்வு கூட்டம் நடைபெற்றது.
    • கூட்டத்தில் முன்னாள் எம்.எல்.ஏ. ரெட்டியார்பட்டி நாராயணன் கலந்து கொண்டு பேசினார்.

    நெல்லை:

    நெல்லை புறநகர் மாவட்ட அ.தி.மு.க. சார்பில் பாளை தெற்கு ஒன்றியத்திற்கு உட்பட்ட புதுக்குளம், கொங்கந்தான்பாறை பஞ்சாயத்துகளில் அ.தி.மு.க. பூத் கமிட்டி ஆய்வு கூட்டம் நடைபெற்றது.

    அ.தி.மு.க. அமைப்புச் செயலாளர் ஏ.கே. சீனிவாசன் தலைமை தாங்கினார். இதில் முன்னாள் எம்.எல்.ஏ. ரெட்டியார்பட்டி நாராயணன் கலந்து கொண்டு பேசினார். பாளை தெற்கு ஒன்றிய செயலாளரும், புதுக்குளம் பஞ்சாயத்து தலைவருமான முத்துக்குட்டி பாண்டியன் முன்னிலை வகித்தார்.

    இதில் ஒன்றிய அவை தலைவர் செல்ல பாண்டி யன், ஒன்றிய துணை செயலாளர் பூலான், இணை செயலாளர் ரேவதி, பொருளாளர் ரமேஷ், ஒன்றிய மாவட்ட பிரதிநிதி முத்துக்குமார், நாராயணன், கிளை செயலாளர் வேல்முருகன், பிரம்மா, பேச்சிமுத்து, ரவிக்குமார், தேரவல்லி, காமராஜர் நகர் தசரதன், பசும்பொன் நகர் கிளை செயலாளர் வீரபுத்திரன், வீரளப்பெருஞ்செல்வி கிளை செயலாளர் நாராயணன், மணல்விளை கிளை செயலாளர் சொர்ணப்ப நாடார், மல்லக்குளம் சுப்பையா, கொங்கந்தான் பாறை கிளை செயலாளர் மரியராஜ், அம்பேத்கார் நகர் கிளை செயலாளர் பரமசிவன், தகவல் தொழில்நுட்ப அணி செயலாளர் கிருஷ்ணன் மற்றும் அ.தி.மு.க. சார்பு அணி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×