search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    இலவச சித்த மருத்துவ முகாம்
    X

    இலவச சித்த மருத்துவ முகாம்

    • முகாமில் யோகா மருத்துவ சிசிச்சைகள் நோயாளிகளுக்கு வழங்கப்பட்டது.
    • மருத்துவ முகாமில் கலந்து கொண்ட அனைவருக்கும் நிலவேம்பு கசாயம் வழங்கப்பட்டது.

    வள்ளியூர்:

    நெல்லை தட்சணமாற நாடார் சங்க கல்லூரி தாவரவியல் துறை, அகத்தர மதிப்பீட்டு குழு மற்றும் பாளையங்கோட்டை அரசு சித்த மருத்துவக்கல்லூரி இணைந்து நடத்திய இலவச சித்த மருத்துவ முகாம் தெற்கு கள்ளிகுளத்தில் உள்ள காமராஜ் நடு நிலைப்பள்ளியில் நடைபெற்றது.

    நெல்லை தட்சண மாற நாடார் சங்க கல்லூரி செயலர் வி.பி. ராமநாதன் தலைமை தாங்கினார். கல்லூரி முதல்வர் து.ராஜன், கல்லூரிக்குழு உறுப்பினர் எஸ்.கே.டி.பி. காமராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். முகாமை பாளை யங்கோட்டை அரசு சித்த மருத்துவக்கல்லூரி பேராசி ரியர் மனோகரன் மற்றும் காமராஜ் நடுநிலைப்பள்ளி தாளாளர் டாக்டர் எம். ஜெபஸ்டின் ஆனந்த் ஆகியோர் தொடங்கி வைத்து சிறப்புரை ஆற்றினர்.

    முகாமில் வர்ம மருத்து வத்துறை தலைவர் முனிஸ்வரன், புற மருத்துவ துறை மருத்துவர் சுஜாதா, விரிவுரை யாளர் பிச்சையாகுமார், மருத்துவ தாவரவியல் துறை ராஷேஸ், தாவரவியல் துறை தலைவர் விஜயா, காமராஜ் நடு நிலைப்பள்ளி தலைமையாசிரி யர் லியோன்ஸ் லெட்டிசியா தங்கம் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.

    முகாமில் கல்லூரி பேராசி ரியர் பாலமுருகன், அகத்தர மதிப்பீட்டு குழு ஒருங்கிணைப்பாளர் புஷ்பராஜ், அலுவலக கண்கா ணிப்பாளர் பாலச்சந்திரன், பயிற்சி பயிற்றுநர் இளங்கோ ஜெகதீஸ், பேராசிரியர்கள், அலுவலர்கள், மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர். சித்த மருத்துவ முகாமில் தெற்கு கள்ளி குளத்தை சார்ந்த பொதுமக்கள் ஏராளமானோர் கலந்து கொண்டு பயன்பெற்றனர். முகாமில் சளி காய்ச்சல், தலைவலி, கை, கால், மூட்டுவலி, கழுத்து வலி மற்றும் வர்மம், புறமருத்துவம், யோகா மருத்துவ சிசிச்சைகள் நோயா ளிகளுக்கு வழங்கப்பட்டது.

    மேலும் கலந்து கொண்ட அனைவருக்கும் நிலவேம்பு கசாயம் வழங்கப்பட்டது. தாவரவியல் துறை உதவி பேராசிரியர் ஹரிகிருஷ்ணன் நன்றி கூறினார். முகாமிற்கான ஏற்பாடுகளை நெல்லை தட்சண மாற நாடார் சங்க கல்லூரி நிர்வாகம், தாவரவியல் துறை மற்றும் அகத் தர மதிப்பீட்டு குழு இணைந்து செய்திருந்தனர்.

    Next Story
    ×