search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "அ.தி.மு.க. பூத் கமிட்டி"

    • சிவகங்கை சட்டமன்ற தொகுதி கல்லல் ஒன்றிய அ.தி.மு.க. சார்பில் பூத் கமிட்டி ஆய்வுக்கூட்டம் நடந்தது.
    • தி.மு.க.வில் இருந்து 15-க்கும் மேற்பட்டவர்கள் விலகி அ.தி.மு.க.வில் மாவட்ட செயலாளர் முன்னிலையில் இணைந்தனர்.

    சிவகங்கை

    சிவகங்கை சட்டமன்றத் தொகுதி கல்லல் தெற்கு ஒன்றிய அ.தி.மு.க. சார்பில் பூத் கமிட்டி பொறுப்பாளர்கள் ஆய்வுக் கூட்டம் பனங்குடியில் ஒன்றிய செயலாளர் சேவியர் தாஸ் தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் மாவட்ட செயலாளர் செந்தில்நாதன் எம்.எல்.ஏ., சிவகங்கை மாவட்ட பொறுப்பாளரும், அமைப்பு செயலாளருமான ஏ.கே.சீனிவாசன், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் நாகராஜன், நகர செயலாளர் ராஜா ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து கொண்டு ஆய்வுப் பணிகளை மேற்கொண்டனர்.

    அப்போது அ.தி.மு.க. அமைப்பு செயலாளர் சீனிவாசன் பேசுகையில், அ.தி.மு.க. ஆட்சியில் தான் தமிழகத்தில் 80 சதவீத மருத்துவ கல்லூரி, 90 சதவீத சட்டக் கல்லூரிகள் அமைக்கப்பட் டது. மேலும் 20 ஆயிரத்திற் கும் மேற்பட்ட ரேசன் கடைகள் திறக்கப்பட்டது. 12 ஆயி ரத்திற்கும் மேற்பட்ட கிராம நிர்வாக அலுவலர்களை நியமனம் செய்துள்ளது.

    இதை நமது கட்சி நிர்வா கிகள் பொதுமக்களிடம் எடுத்து கூறி விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் என்றார். மேலும் கல்லல் ஒன்றியத்தில் தி.மு.க.வில் இருந்து 15-க்கும் மேற்பட்டவர்கள் விலகி அ.தி.மு.க.வில் மாவட்ட செயலாளர் செந் தில் நாதன் முன்னிலையில் இணைந்தனர்.

    • மதுரை வாடிப்பட்டி அருகே அ.தி.மு.க.பூத்கமிட்டி ஆலோசனைக்கூட்டம் நடந்தது.
    • கூட்டத்தில் மாவட்ட செயலாளர் முன்னாள் அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் பேசியதாவது:-

    வாடிப்பட்டி

    மதுரை மாவட்டம் வாடிப்பட்டி வடக்குஒன்றிய அ.தி.மு.க.பூத்கமிட்டி ஆலோசனைக்கூட்டம் திருவாலவாயநல்லூர், சி.புதூர், சித்தாலங்குடி, கட்டக்குளம், குட்லாடம்பட்டி, செம்மினிப்பட்டி ஊராட்சிகளில் நடந்தது.

    இந்த கூட்டத்திற்கு ஒன்றிய செயலாளர் காளிதாஸ் தலைமை தாங்கினார். முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் கருப்பையா, மாணிக்கம், யூனியன் சேர்மன் மகாலட்சுமி ராஜேஷ கண்ணா, பேரூர் செயலாளர் டாக்டர் அசோக்குமார், எம்.ஜி.ஆர்.மன்ற, மாநில நிர்வாகி ராம கிருஷ்ணன், பகுதி பொறுப்பாளர் தண்டரை மனோ கரன், மாநில பேர வை இணை செயலாளர் வெற்றிவேல், மாநில பேரவை துணை செயலாளர் துரை.தன்ராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். பாசறை மாவட்டதுணைச் செயலாளர் எம்.கே. மணிமாறன் வரவேற்றார்.

    கூட்டத்தில் மாவட்ட செயலாளர் முன்னாள் அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் பேசியதாவது:-

    தி.மு.க.ஆட்சியின் மீது மக்கள் வெறுப்படைந்து உள்ளனர்.

    மக்களின் நலனில் அக்கறை கொண்டது அ.தி.மு.க.தான். முதல்- அமைச்சர் எல்லா குடும்ப தலைவிக்கும் மகளிர் உரிமைதொகை ஆயிரம் ரூபாய் கொடுக்கி றோம் என்று சொல்லிவிட்டு ஏமாற்றி வருகின்றனர். அ.தி.மு.க. ஆட்சி காலத்தில் கொண்டு வந்த தாலிக்கு தங்கம் திட்டம், மடிக்கணினி திட்டம் என்று ஏராளமான திட்டங்களை இன்றைக்கு தி.மு.க. ஆட்சியில் முடக்கி வைத்து விட்டார்கள்.

    இனிவரும் தேர்தல் காலங்களில் கழக செய லாளர்கள் சிப்பாய்களா கவும் பாசறையினர் துணை ராணுவமாக நின்று எதிரி களுக்கு சிம்ம சொப்பனமாக இருப் பார்கள். ஒவ்வொரு பூத்கமிட்டியில் 19 பேர்களும், மகளிர்குழுவில் 25 பேரும், பாசறையினர் 25 பேரும் என்று 69 பேர்கள் ராணுவ சிப்பாய்களாக களம் இறங்கும்போது எந்த கொம்பாதி கொம்பனாலும் அ.தி.மு.க. வெற்றியை யாராலும் தடுக்கமுடியாது

    இவ்வாறு அவர் பேசினார்.

    இந்த கூட்டத்தில் ஊரட்சி மன்ற தலைவர்கள் ஆலய மணி, பாண்டுரங்கன், தெய்வ தர்மர், துணைத்தலைவர் மாலிக், வி.எஸ்.பாண்டியன், பிரசன்னா, முன்னாள் ஒன்றிய கவுன்சிலர் பரந்தாமன், ராமகிருஷ்ணன், ஜெயராமன், பாலாஜி, சந்திரபோஸ், நாகமணி, மூர்த்தி, முருகன் உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் கோட்டை மேடுபாலன் நன்றிகூறினார்.

    • அ.தி.மு.க. பூத் கமிட்டி ஆலோசனை கூட்டம் நடந்தது.
    • செந்தில்நாதன் எம்.எல்.ஏ. பங்கேற்றார்.

    திருப்பத்தூர்

    சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூரில் அ.தி.மு.க. திருப்பத்தூர் சட்டமன்ற தொகுதி பூத் கமிட்டி, இளை ஞர் மற்றும் இளம்பெண்கள் பாசறை, மகளிரணி நிர்வாகிகள் கமிட்டி குறித்த ஆலோசனை கூட்டம் நடந்தது. அ.தி.மு.க. மாவட்ட செய லாளரும், எம்.எல்.ஏ.வுமான செந்தில் நாதன் தலைமை தாங்கினார்.

    சிங்கம்புணரி ஊராட்சி ஒன்றிய தலைவர் திவ்யா பிரபு வரவேற்றார். மாவட்ட அமைப்பு செயலாளர் சீனிவாசன் கலந்து கொண் டார். கூட்டத்தில் அ.தி.மு.க.வில் இணைந்த மாற்று கட்சியினருக்கு செந்தில் நாதன் பொன்னாடை போர்த்தி கவுரவித்தார்.

    நிகழ்ச்சியில் மாவட்ட அவைத்தலைவர் நாகரா ஜன், மாநில எம்.ஜி.ஆர். மன்ற துணைச் செயலாளர் உமாதேவன், இணை செய லாளர் நாகராஜன், அம்மா பேரவை மாவட்ட செய லாளர் இளங்கோவன், மாவட்ட ஜெய லலிதா பேரவை இணை செயலாளர் முருகேசன், மாவட்ட பாசறை செயலாளர் பிரபு, மாவட்ட எம்.ஜி.ஆர். அணி துணைச் செயலாளர் துளாவூர் பார்த்திபன்,

    முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் நாகராஜன், ஒன்றிய செயலாளர்கள் வாசு, குணசேகரன், செந்தில்குமார், திருவாசகம், சேவியர்தாஸ், ஜெகன், கோபி, வடிவேலு, ராஜா, புயல் செந்தில், மாவட்ட அமைப்பு சார அணி செயலாளர் சரவணன்,

    மாவட்ட தொழில் சங்க துணை செயலாளர் அந் தோணி, மாவட்ட சிறு பான்மை பிரிவு இணைச் செயலாளர் ராஜா, மாவட்ட சிறுபான்மை துணை செயலாளர் ஆசிப் இக்பால், மாவட்ட, ஒன்றிய, நகர, நிர்வாகிகள் கலந்து கொண் டனர். அதோடு நூற்றுக் கணக்கான கிளை நிர்வாகி களும் கலந்து கொண்டனர். திருப்பத்தூர் நகர செய லாளர் இப்ராம்சா நன்றி கூறினார்.

    • பேச்சிப்பாறை ஊராட்சி, திற்பரப்பு பேரூராட்சி ஆகிய பகுதிகளிலும் பூத் கமிட்டி கூட்டம் நடைபெற்றது.
    • அனைத்து குடும்ப பெண்களுக்கும் மாதந்தோறும் ரூ.1000 வழங்க வேண்டும்.

    திருவட்டார் :

    குமரி மேற்கு மாவட்டம் திருவட்டார் கிழக்கு ஒன்றிய அ.தி.மு.க. சார்பில் பூத் கமிட்டி நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் குலசேகரத்தில் நடை பெற்றது. ஒன்றிய செயலா ளர் குற்றியார் நிமால் தலைமை தாங்கினார். பேரூர் செயலாளர் ஜெஸ்டின்ராஜ் முன்னிைல வகித்தார். அமைப்பு செயலாளர் சின்னத்துரை சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு பல்வேறு ஆலோசனை வழங்கினார்.

    குமரி மேற்கு மாவட்ட செயலாளர் ஜான்தங்கம், திருவட்டார் மேற்கு ஒன்றிய செயலாளர் ஜெயசுதர்ஷன், ஒன்றிய துணை செயலாளர் வழக்கறிஞர் அண்ணா மற்றும் பலர் கலந்துகொண்டனர்.

    அதைத்தொடர்ந்து பேச்சிப்பாறை ஊராட்சி, திற்பரப்பு பேரூராட்சி ஆகிய பகுதிகளிலும் பூத் கமிட்டி கூட்டம் நடைபெற்றது.

    கூட்டத்தில் வருகிற பாராளுமன்ற தேர்தலில் அனைத்து பேரூராட்சி, ஊராட்சி பகுதிகளில் பூத் கமிட்டி கூட்டம் நடத்துவது. ஒவ்வொரு பூத் கமிட்டியிலும் கிளை செயலாளர்கள், மகளிரணி நிர்வாகிகள், இளைஞர் மற்றும் இளம்பெண்கள் பாசறை நிர்வாகிகள் என 69 பேர் வீதம் ஒவ்வொரு பூத் கமிட்டியிலும் இருக்க வேண்டும். இவர்கள் ஒவ்வொரு வீடுதோறும் சென்று அ.தி.மு.க. ஆட்சியில் கொண்டு வரப்பட்ட திட்டங்கள் பற்றி மக்களிடம் எடுத்து கூறி வாக்கு சேகரிக்க வேண்டும்.

    கட்சியின் பொது ச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி யாரை வரும் பாராளுமன்ற தேர்தலில் வேட்பாளராக அறிவிக்கி றாரோ அவரை அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற செய்ய வேண்டும்.

    பொய் வாக்குறுதிகளை மக்களிடம் கொடுத்து ஆட்சிக்கு வந்த தி.மு.க. அரசு தேர்தல் வாக்குறுதியில் அறிவித்த அனைத்து குடும்ப பெண்களுக்கும் மாதந்தோறும் ரூ.1000 வழங்க வேண்டும்.

    அனைத்து கட்சி நிர்வாகிகளும், வருகிற பாராளுமன்ற தேர்தலில் முழு மூச்சாக கட்சி பணியாற்ற வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மா னங்கள் நிறைவேற்றபட்டன.

    • புதுக்குளம், கொங்கந்தான்பாறை பஞ்சாயத்துகளில் அ.தி.மு.க. பூத் கமிட்டி ஆய்வு கூட்டம் நடைபெற்றது.
    • கூட்டத்தில் முன்னாள் எம்.எல்.ஏ. ரெட்டியார்பட்டி நாராயணன் கலந்து கொண்டு பேசினார்.

    நெல்லை:

    நெல்லை புறநகர் மாவட்ட அ.தி.மு.க. சார்பில் பாளை தெற்கு ஒன்றியத்திற்கு உட்பட்ட புதுக்குளம், கொங்கந்தான்பாறை பஞ்சாயத்துகளில் அ.தி.மு.க. பூத் கமிட்டி ஆய்வு கூட்டம் நடைபெற்றது.

    அ.தி.மு.க. அமைப்புச் செயலாளர் ஏ.கே. சீனிவாசன் தலைமை தாங்கினார். இதில் முன்னாள் எம்.எல்.ஏ. ரெட்டியார்பட்டி நாராயணன் கலந்து கொண்டு பேசினார். பாளை தெற்கு ஒன்றிய செயலாளரும், புதுக்குளம் பஞ்சாயத்து தலைவருமான முத்துக்குட்டி பாண்டியன் முன்னிலை வகித்தார்.

    இதில் ஒன்றிய அவை தலைவர் செல்ல பாண்டி யன், ஒன்றிய துணை செயலாளர் பூலான், இணை செயலாளர் ரேவதி, பொருளாளர் ரமேஷ், ஒன்றிய மாவட்ட பிரதிநிதி முத்துக்குமார், நாராயணன், கிளை செயலாளர் வேல்முருகன், பிரம்மா, பேச்சிமுத்து, ரவிக்குமார், தேரவல்லி, காமராஜர் நகர் தசரதன், பசும்பொன் நகர் கிளை செயலாளர் வீரபுத்திரன், வீரளப்பெருஞ்செல்வி கிளை செயலாளர் நாராயணன், மணல்விளை கிளை செயலாளர் சொர்ணப்ப நாடார், மல்லக்குளம் சுப்பையா, கொங்கந்தான் பாறை கிளை செயலாளர் மரியராஜ், அம்பேத்கார் நகர் கிளை செயலாளர் பரமசிவன், தகவல் தொழில்நுட்ப அணி செயலாளர் கிருஷ்ணன் மற்றும் அ.தி.மு.க. சார்பு அணி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

    • அவினாசிலிங்கம்பாளையம் எ.வி.தனபால், செந்தில்குமார், சுப்பிரமணியம், உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.
    • வக்கீல் பிரிவு மாவட்ட துணை செயலாளர் சுதர்சன் , பொருளாளர் செல்வம் உள்ளிட்ட திரளான அதிமுக.வினர் கலந்து கொண்டனர்.

    அவினாசி:

    கோவை புறநகர் வடக்கு மாவட்டம் அவினாசி தெற்கு ஒன்றிய அதிமுக., பூத் கமிட்டி செயல் வீரர் கூட்டம் நடந்தது.அமைப்புசாரா ஓட்டுநர் அணி மாவட்ட செயலாளர் விஜய் ஆனந்த் தலைமையில் நடந்த கூட்டத்தில் ஜெயலலிதா பேரவை மாவட்ட செயலாளர் நாசர், ஒன்றிய செயலாளர் ஜெகதீசன், ஜெயலலிதா பேரவை ஒன்றிய செயலாளர் தம்பி ராஜேந்திரன், அவினாசிலிங்கம்பாளையம் எ.வி.தனபால், செந்தில்குமார், சுப்பிரமணியம், உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்துகொண்டனர். இதில் நாடாளுமன்ற தேர்தல் பணிக்காக பூத் கமிட்டி அமைத்தல், தேர்தல் பணி மேற்பார்வை ஆகியவை குறித்துவிளக்கம் அளிக்கப்பட்டது மேலும் தெற்கு ஒன்றியத்தில் 15000 வாக்குகள் அதிகம் பெற அனைவரும் ஒன்றிணைந்து பாடுபட வேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

    இதேபோல் அவினாசி நகர அதிமுக., சார்பில் பூத்கமிட்டி பொறுப்பாளர் கூட்டம் மாவட்ட ஜெயலலிதா பேரவை செயலாளர் நாசர் தலைமையில் நடந்தது நிகழ்ச்சியில் பொதுக்குழு உறுப்பினர் கணேசமூர்த்தி, இளைஞரணி செயலாளர் ஜெயபால், அதிமுக., நகர துணை செயலாளர் எம். எஸ். மூர்த்தி, மாணவரணி செயலாளர் மோகன், வக்கீல் பிரிவு மாவட்ட துணை செயலாளர் சுதர்சன் , பொருளாளர் செல்வம் உள்ளிட்ட திரளான அதிமுக.வினர் கலந்து கொண்டனர்.நிகழ்ச்சி ஏற்பாடுகளை தம்பி ராஜேந்திரன் செய்திருந்தார்.

    • அ.தி.மு.க. பூத் கமிட்டி ஆலோசனை கூட்டம் நடந்தது.
    • பேரூர் துணைச் செயலாளர் தியாகு உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    சோழவந்தான்

    மதுரை புறநகர் மேற்கு மாவட்டம் வாடிப்பட்டி தெற்கு ஒன்றியம் சார்பில் சோழவந்தானில் அ.தி.மு.க. பூத் கமிட்டி ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு வாடிப்பட்டி தெற்கு ஒன்றிய செயலாளர் கொரியர் கணேசன் தலைமை தாங்கினார். முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் கருப்பையா, மாணிக்கம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். பேரூர் செயலா ளர் முருகேசன், வாடிப்பட்டி வடக்கு ஒன்றிய செயலாளர் காளிதாஸ், வாடிப்பட்டி யூனியன் சேர்மன் மகா லட்சுமி ராஜேஷ் கண்ணா, மாவட்ட கவுன்சிலர் அகிலா ஜெயக்குமார், பொதுக்குழு நாகராஜ், முன்னாள் சேர்மன் முருகேசன், மாவட்ட நிர்வாகிகள் திருப்பதி, ஆர்யா, சிங்கராஜ பாண்டியன், மகேந்திர பாண்டிலட்சுமி ஆகியோர் வரவேற்று பேசினர்.

    கூட்டத்தில் முன்னாள் அமைச்சரும், புறநகர்மேற்கு மாவட்ட செயலாளருமான ஆர்.பி.உதயகுமார் பேசியதா வது:-

    வருகிற பாராளுமன்ற தேர்தலில் தமிழகம் மற்றும் புதுச்சேரி உள்ளிட்ட 40 தொகுதிகளிலும் வெற்றி பெற்று வெற்றிக்கனியை பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி காலடியில் சமர்ப்பிக்க வேண்டும். அதனை தொடர்ந்து தி.மு.க.வின் ஆட்சிக்கு முடிவு கட்ட வேண்டும். மீண்டும் எடப்பாடி பழனிசாமியை முதல்வராக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் பேசினார்

    கூட்டத்தில் ஒன்றிய கவுன்சிலர்கள் தென்கரை ராமலிங்கம், கருப்பட்டி தங்கபாண்டி, நாச்சிகுளம் தங்கப்பாண்டி, சோழ வந்தான் பேரூராட்சி கவுன்சிலர்கள் டீக்கடை கணேசன், ரேகா ராமச்சந்திரன், சண்முக பாண்டியராஜா, சரண்யா கண்ணன், கச்சிராயிருப்பு முனியாண்டி, சோழவந்தான் நகர இளைஞரணி கேபிள் மணி, மருத்துவரணி கருப்பட்டி தங்கப்பாண்டி, பேரூர் துணைச் செயலாளர் தியாகு உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    ×