search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    அ.தி.மு.க.பூத்கமிட்டி ஆலோசனைக்கூட்டம்
    X

    அ.தி.மு.க.பூத்கமிட்டி ஆலோசனை கூட்டத்தில் ஆர்.பி.உதயகுமார் பேசினார்.

    அ.தி.மு.க.பூத்கமிட்டி ஆலோசனைக்கூட்டம்

    • மதுரை வாடிப்பட்டி அருகே அ.தி.மு.க.பூத்கமிட்டி ஆலோசனைக்கூட்டம் நடந்தது.
    • கூட்டத்தில் மாவட்ட செயலாளர் முன்னாள் அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் பேசியதாவது:-

    வாடிப்பட்டி

    மதுரை மாவட்டம் வாடிப்பட்டி வடக்குஒன்றிய அ.தி.மு.க.பூத்கமிட்டி ஆலோசனைக்கூட்டம் திருவாலவாயநல்லூர், சி.புதூர், சித்தாலங்குடி, கட்டக்குளம், குட்லாடம்பட்டி, செம்மினிப்பட்டி ஊராட்சிகளில் நடந்தது.

    இந்த கூட்டத்திற்கு ஒன்றிய செயலாளர் காளிதாஸ் தலைமை தாங்கினார். முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் கருப்பையா, மாணிக்கம், யூனியன் சேர்மன் மகாலட்சுமி ராஜேஷ கண்ணா, பேரூர் செயலாளர் டாக்டர் அசோக்குமார், எம்.ஜி.ஆர்.மன்ற, மாநில நிர்வாகி ராம கிருஷ்ணன், பகுதி பொறுப்பாளர் தண்டரை மனோ கரன், மாநில பேர வை இணை செயலாளர் வெற்றிவேல், மாநில பேரவை துணை செயலாளர் துரை.தன்ராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். பாசறை மாவட்டதுணைச் செயலாளர் எம்.கே. மணிமாறன் வரவேற்றார்.

    கூட்டத்தில் மாவட்ட செயலாளர் முன்னாள் அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் பேசியதாவது:-

    தி.மு.க.ஆட்சியின் மீது மக்கள் வெறுப்படைந்து உள்ளனர்.

    மக்களின் நலனில் அக்கறை கொண்டது அ.தி.மு.க.தான். முதல்- அமைச்சர் எல்லா குடும்ப தலைவிக்கும் மகளிர் உரிமைதொகை ஆயிரம் ரூபாய் கொடுக்கி றோம் என்று சொல்லிவிட்டு ஏமாற்றி வருகின்றனர். அ.தி.மு.க. ஆட்சி காலத்தில் கொண்டு வந்த தாலிக்கு தங்கம் திட்டம், மடிக்கணினி திட்டம் என்று ஏராளமான திட்டங்களை இன்றைக்கு தி.மு.க. ஆட்சியில் முடக்கி வைத்து விட்டார்கள்.

    இனிவரும் தேர்தல் காலங்களில் கழக செய லாளர்கள் சிப்பாய்களா கவும் பாசறையினர் துணை ராணுவமாக நின்று எதிரி களுக்கு சிம்ம சொப்பனமாக இருப் பார்கள். ஒவ்வொரு பூத்கமிட்டியில் 19 பேர்களும், மகளிர்குழுவில் 25 பேரும், பாசறையினர் 25 பேரும் என்று 69 பேர்கள் ராணுவ சிப்பாய்களாக களம் இறங்கும்போது எந்த கொம்பாதி கொம்பனாலும் அ.தி.மு.க. வெற்றியை யாராலும் தடுக்கமுடியாது

    இவ்வாறு அவர் பேசினார்.

    இந்த கூட்டத்தில் ஊரட்சி மன்ற தலைவர்கள் ஆலய மணி, பாண்டுரங்கன், தெய்வ தர்மர், துணைத்தலைவர் மாலிக், வி.எஸ்.பாண்டியன், பிரசன்னா, முன்னாள் ஒன்றிய கவுன்சிலர் பரந்தாமன், ராமகிருஷ்ணன், ஜெயராமன், பாலாஜி, சந்திரபோஸ், நாகமணி, மூர்த்தி, முருகன் உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் கோட்டை மேடுபாலன் நன்றிகூறினார்.

    Next Story
    ×