search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    அ.தி.மு.க. பூத் கமிட்டி ஆலோசனை கூட்டம்
    X

    பூத் கமிட்டி கூட்டத்தில் ஆர்.பி.உதயகுமார் கலந்து கொண்டார்.

    அ.தி.மு.க. பூத் கமிட்டி ஆலோசனை கூட்டம்

    • அ.தி.மு.க. பூத் கமிட்டி ஆலோசனை கூட்டம் நடந்தது.
    • பேரூர் துணைச் செயலாளர் தியாகு உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    சோழவந்தான்

    மதுரை புறநகர் மேற்கு மாவட்டம் வாடிப்பட்டி தெற்கு ஒன்றியம் சார்பில் சோழவந்தானில் அ.தி.மு.க. பூத் கமிட்டி ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு வாடிப்பட்டி தெற்கு ஒன்றிய செயலாளர் கொரியர் கணேசன் தலைமை தாங்கினார். முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் கருப்பையா, மாணிக்கம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். பேரூர் செயலா ளர் முருகேசன், வாடிப்பட்டி வடக்கு ஒன்றிய செயலாளர் காளிதாஸ், வாடிப்பட்டி யூனியன் சேர்மன் மகா லட்சுமி ராஜேஷ் கண்ணா, மாவட்ட கவுன்சிலர் அகிலா ஜெயக்குமார், பொதுக்குழு நாகராஜ், முன்னாள் சேர்மன் முருகேசன், மாவட்ட நிர்வாகிகள் திருப்பதி, ஆர்யா, சிங்கராஜ பாண்டியன், மகேந்திர பாண்டிலட்சுமி ஆகியோர் வரவேற்று பேசினர்.

    கூட்டத்தில் முன்னாள் அமைச்சரும், புறநகர்மேற்கு மாவட்ட செயலாளருமான ஆர்.பி.உதயகுமார் பேசியதா வது:-

    வருகிற பாராளுமன்ற தேர்தலில் தமிழகம் மற்றும் புதுச்சேரி உள்ளிட்ட 40 தொகுதிகளிலும் வெற்றி பெற்று வெற்றிக்கனியை பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி காலடியில் சமர்ப்பிக்க வேண்டும். அதனை தொடர்ந்து தி.மு.க.வின் ஆட்சிக்கு முடிவு கட்ட வேண்டும். மீண்டும் எடப்பாடி பழனிசாமியை முதல்வராக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் பேசினார்

    கூட்டத்தில் ஒன்றிய கவுன்சிலர்கள் தென்கரை ராமலிங்கம், கருப்பட்டி தங்கபாண்டி, நாச்சிகுளம் தங்கப்பாண்டி, சோழ வந்தான் பேரூராட்சி கவுன்சிலர்கள் டீக்கடை கணேசன், ரேகா ராமச்சந்திரன், சண்முக பாண்டியராஜா, சரண்யா கண்ணன், கச்சிராயிருப்பு முனியாண்டி, சோழவந்தான் நகர இளைஞரணி கேபிள் மணி, மருத்துவரணி கருப்பட்டி தங்கப்பாண்டி, பேரூர் துணைச் செயலாளர் தியாகு உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×