search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    அவினாசியில் அ.தி.மு.க. பூத் கமிட்டி கூட்டம்
    X

    அ.தி.மு.க. பூத் கமிட்டி கூட்டம் நடைபெற்ற காட்சி. 

    அவினாசியில் அ.தி.மு.க. பூத் கமிட்டி கூட்டம்

    • அவினாசிலிங்கம்பாளையம் எ.வி.தனபால், செந்தில்குமார், சுப்பிரமணியம், உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.
    • வக்கீல் பிரிவு மாவட்ட துணை செயலாளர் சுதர்சன் , பொருளாளர் செல்வம் உள்ளிட்ட திரளான அதிமுக.வினர் கலந்து கொண்டனர்.

    அவினாசி:

    கோவை புறநகர் வடக்கு மாவட்டம் அவினாசி தெற்கு ஒன்றிய அதிமுக., பூத் கமிட்டி செயல் வீரர் கூட்டம் நடந்தது.அமைப்புசாரா ஓட்டுநர் அணி மாவட்ட செயலாளர் விஜய் ஆனந்த் தலைமையில் நடந்த கூட்டத்தில் ஜெயலலிதா பேரவை மாவட்ட செயலாளர் நாசர், ஒன்றிய செயலாளர் ஜெகதீசன், ஜெயலலிதா பேரவை ஒன்றிய செயலாளர் தம்பி ராஜேந்திரன், அவினாசிலிங்கம்பாளையம் எ.வி.தனபால், செந்தில்குமார், சுப்பிரமணியம், உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்துகொண்டனர். இதில் நாடாளுமன்ற தேர்தல் பணிக்காக பூத் கமிட்டி அமைத்தல், தேர்தல் பணி மேற்பார்வை ஆகியவை குறித்துவிளக்கம் அளிக்கப்பட்டது மேலும் தெற்கு ஒன்றியத்தில் 15000 வாக்குகள் அதிகம் பெற அனைவரும் ஒன்றிணைந்து பாடுபட வேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

    இதேபோல் அவினாசி நகர அதிமுக., சார்பில் பூத்கமிட்டி பொறுப்பாளர் கூட்டம் மாவட்ட ஜெயலலிதா பேரவை செயலாளர் நாசர் தலைமையில் நடந்தது நிகழ்ச்சியில் பொதுக்குழு உறுப்பினர் கணேசமூர்த்தி, இளைஞரணி செயலாளர் ஜெயபால், அதிமுக., நகர துணை செயலாளர் எம். எஸ். மூர்த்தி, மாணவரணி செயலாளர் மோகன், வக்கீல் பிரிவு மாவட்ட துணை செயலாளர் சுதர்சன் , பொருளாளர் செல்வம் உள்ளிட்ட திரளான அதிமுக.வினர் கலந்து கொண்டனர்.நிகழ்ச்சி ஏற்பாடுகளை தம்பி ராஜேந்திரன் செய்திருந்தார்.

    Next Story
    ×