search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "நெற்பயிர்கள்"

    • 3 ஆயிரம் ஹெக்டேருக்கும் அதிகமான பரப்பில் நெல் சாகுபடி செய்யப்பட்டுள்ளது.
    • வேளாண்துறையினர் ஆய்வு செய்து தடுப்பு நடவடிக்கைகள் குறித்து வழிகாட்டுதல் வழங்க வேண்டும்.

    மடத்துக்குளம் : 

    மடத்துக்குளம் வட்டாரத்தில் நடப்பு சீசனில் 3 ஆயிரம் ஹெக்டேருக்கும் அதிகமான பரப்பில் நெல் சாகுபடி செய்யப்பட்டுள்ளது. அமராவதி பாசனத்தை ஆதாரமாகக்கொண்டு சாலரப்பட்டி பகுதியிலும், நெல் சாகுபடி செய்து பயிர்கள் வளர்ச்சி தருணத்தில் உள்ளன. இந்நிலையில் புதிய வகை நோய் தாக்குதலால் பயிர்கள் சாய்ந்து வருவதாக விவசாயிகள் வேதனை தெரிவிக்கின்றனர்.

    இது குறித்து அப்பகுதி விவசாயிகள் கூறியதாவது:-  இப்பகுதியில் ஆண்டுக்கு ஒரு போக நெல் சாகுபடி மட்டுமே மேற்கொள்ளும் சூழல் உள்ளது. தற்போதைய சாகுபடியில் பயிர்களில் புதிய வகை தாக்குதல் காணப்படுகிறது. தண்டு மற்றும் பிற பகுதிகளில் சேதம் ஏற்பட்டு பயிர்கள் சாய்ந்து விடுகின்றன. இத்தாக்குதல் பெரும்பாலான வயல்களில் காணப்படுகிறது. எவ்வகையான தாக்குதல் என்பது தெரியாததால் கட்டுப்படுத்தும் முறையையும் துவக்காமல் திணறி வருகிறோம். இதே நிலை நீடித்தால் பயிரிழப்பு அதிகரித்து மகசூல் பாதியாக குறைந்து விடும். வேளாண்துறையினர் ஆய்வு செய்து தடுப்பு நடவடிக்கைகள் குறித்து வழிகாட்டுதல் வழங்க வேண்டும். இவ்வாறு விவசாயிகள் தெரிவித்தனர். 

    • ஆற்றங்கரையை ஒட்டி உள்ள நெல் வயல்களில் மேய்ந்து சேதத்தை ஏற்படுத்துகிறது.
    • வயல் ஓரங்களில் சேற்றை நோண்டி, நெல் செடிகளில் உள்ள வேர்களை தின்று விடுகின்றன.

    திருவாரூர்:

    திருவாரூர் அருகே வண்டாம்பாளை ஊராட்சியில் திருப்பள்ளி முக்கூடல் கிராமத்தில் பன்றிகள் தொல்லை அதிகரித்துள்ளது.

    இந்த கிராமத்தின் வழியே பாய்ந்து ஓடும் வெட்டாறு கரைகளில் உள்ள படுகை ஓரங்களில் ஏராளமான பன்றிகள் முகாமிட்டுள்ளன.

    நகரங்களில் பன்றி வளர்ப்பதற்கான ஏதுவான சூழல் இல்லாததால் நகரங்களை ஒட்டியுள்ள கிராமங்களில் பன்றி வளர்ப்பவர்கள், தங்களது பன்றிகளை கொண்டு வந்து விட்டுவிடுகின்றனர்.

    இப்பன்றிகள் ஆற்றங்கரையை ஒட்டி உள்ள நெல் வயல்களில் மேய்ந்து சேதத்தை ஏற்படுத்துகிறது.

    பன்றிகளுக்கு உணவான கோரை புல் கிழங்குகள் கிடைக்காததால், வயல்வெளிகளில் நுழைந்து நெல் செடிகளில் உள்ள வேர்களை தின்று சேதப்படுத்துகின்றன.

    இதனால் வண்டாம்பாளை, திருப்பள்ளி முக்கூடல், விளாகம் ஆகிய கிராமங்களில் உள்ள நெல் வயல்கள் சேதமாகியுள்ளது.

    வயல் ஓரங்களில் சேற்றை நோண்டி, நெல் செடிகளில் உள்ள வேர்களை தின்று விடுகின்றன.

    இதனால் சாகுபடி செய்யப்பட்ட நெற்பயிர்கள் வீணாகிறது.

    உடனடியாக இந்த பன்றிகளை பிடித்து அப்புறப்படுத்த வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • எலிகளின் எண்ணிக்கையை குறைக்க அறுவடைக்கு பின் எலிகளின் வளைகளை கண்டறிந்து வெட்டி அழிக்கலாம்.
    • தேங்காய் மட்டை தண்ணீரில் மூழ்கி களிமண் கரைசலில் விழுந்து இறந்துவிடும்.

    நீடாமங்கலம்:

    குடவாசல் பகுதியில் சம்பா, தாளடி நெற்பயிர்களை சேதப்படுத்தும் எலிகளை கட்டுப்படுத்தும் வழிமுறைகள் குறித்து குடவாசல் வேளாண்மை உதவி இயக்குனர் ஜெயசீலன் விளக்கம் அளித்துள்ளார்.

    இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    பொதுவாக எங்கெ ல்லாம் ஆட்டுக்கிடை போடுகிறோமோ அந்த வயல்களில் எலி தொல்லைகள் இருக்காது.

    மேலும் நெல் வயல்களில் ஒரு ஏக்கரில் 10 இடங்களில் டி வடிவ குச்சிகளை நட்டால் அதில் இரவு நேரங்களில் ஆந்தைகள் அமர்ந்து வயலில் சேதப்படுத்தும் எலிகளைப் பிடித்து தின்றுவிடும்.

    இதேபோன்று காய்ந்த தென்னை மட்டைகளை வயல்களில் தலைகீழாக சொருகி வைத்தாலும், அதில் ஆந்தைகள் அமர்ந்து பூச்சிகள் மற்றும் எலிகளை பிடிக்கும்.எலிகளின் எண்ணிக்கையை குறைக்க அறுவடைக்குப் பின்பு எலிகளின் வளைகளை கண்டறிந்து வெட்டி அழிக்கலாம்.

    ஒரு பெரிய வட்ட வடிவில் மண் பானையை வயலில் தரை மட்டத்தில் புதைத்து, அதில் களிமண் கரைசலை பாதிஅளவு நிரப்பி, அதன்மேல் தேங்காய் மட்டையில் நெல் பொரிகளை தேங்காய் எண்ணெய் கலந்து வைத்தால் எலிகள் அதனை சாப்பிடும் போது தேங்காய் மட்டை தண்ணீரில் மூழ்கி களிமண் கரைசலில் விழுந்து இறந்துவிடும்.

    அல்லது வேர்கடலை பொடி, வறுத்த எள்ளு பொடி, வெல்லம், நெய் இவற்றுடன் சிமெண்ட் ½ கிலோ கலந்து கொதிக்க வைத்து, பிசுபிசுப்பான தன்மையுடன் இருக்கும் போது உருண்டையாக உருட்டி வரப்புகள் மற்றும் எலி வளைகள் அருகே வைத்தால் வாசனையாக உள்ள உருண்டையை சாப்பிட்டு அதில் உள்ள சிமெண்டு இறுகும் போது எலிகள் தானாக இறந்து விடும்.

    இதேபோன்று கருவாட்டு பொடியுடன் சம அளவு சிமெண்டு கலந்து உருண்டையாக உருட்டி எலி நடமாட்டம் உள்ள இடங்களில் வைத்தாலும் அதனை சாப்பிட்டு எலி இறந்து விடும்.

    மேற்கண்ட வழிமுறைகளை விவசாயிகள் கையாண்டால், நெற் பயிர்களை சேதப்படுத்தும் எலிகளை அழித்து அதிக மகசூல் பெறலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • மழையின்றி நெற்பயிர்கள் கருகி வருகின்றன.
    • நிலுவையில் இருக்கும் பயிர் காப்பீடு தொகையை அரசு உடனே வழங்க வேண்டும்.

    முதுகுளத்தூர்

    ராமநாதபுரம் மாவட்டம் கமுதி மற்றும் அதன் சுற்றுவட்டாரத்தில் முக்கியமான தொழிலாக விவசாயம் அதிகளவில் நடைபெறுகிறது.

    பருவ மழை இல்லாமல் போனதால் சீமானேந்தல், குண்டுகுளம், வேப்பங்குளம், கோவிலாங்குளம், முதல்நாடு, பசும்பொன் ஆகிய கிராம பகுதிகளில் நெற்பயிர்கள் கருகி வருகிறது. இதுகுறித்து விவசாயி முருகேசன் கூறுகையில், கடந்த 3 ஆண்டுகளாக கமுதி வட்டாரத்தில் சரியான மழையில்லாமல் போனதால் விவசாயம் சரிவர விளைச்சல் இல்லாமல் போய்விட்டது. அதுபோல 3 ஆண்டுகளாக எங்கள் பகுதிக்கு அக்ரி இன்சூரன்ஸ் நிறுவனம் இதுவரை பயிர் காப்பீடு நிதியை வழங்கவில்லை. நிலுவையில் இருக்கும் பயிர் காப்பீடு தொகையை அரசு உடனே வழங்க வேண்டும்.

    கடலில் வீணாக கலக்கும் வைகை ஆற்றின் தண்ணீரை கமுதி பகுதிக்கு கொண்டு வந்தால் விவசாயம் செழிக்கும். அதற்கு கலெக்டர், அமைச்சர், அதிகாரிகள் அனைவரும் கவனத்தில் கொண்டு விவசாயிகளின் வாழ்வாதாரத்தை பாதுகாக்க முன்வர வேண்டும் என்றார்.

    • நெற்பயிர்களை பல்வேறு வகையான பூச்சிகள் தாக்குகின்றன.
    • குருத்து பூச்சி தாக்குதலால் 60 சதவீதம் வரை மகசூல் இழப்பு.

    நாகப்பட்டினம்:

    நாகை மாவட்டம் திருமருகல் ஒன்றியத்தில் 25 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் விவசாயிகள் சம்பா, தாளடி நெல் சாகுபடி செய்துள்ளனர்.

    இந்த நெற்பயிர்கள் வளர்ந்து தூர்கட்டும் பருவத்திலும், சில பகுதிகளில் இளம் பயிராகவும் உள்ளது.

    தற்போது சம்பா,தாளடி நெல் பயிர்களை குருத்துப்பூச்சி, இலை சுருட்டு பூச்சி மற்றும் தோகை பூச்சி அதிக அளவில் தாக்கி வருகிறது.

    மேலும் நெற்பயிர்களை பல்வேறு வகையான பூச்சிகள் தாக்குகின்றன. இதனால் மகசூல் பாதிக்கப்படும் நிலை ஏற்ப்பட்டுள்ளது.

    அவற்றுள் குருத்துப் பூச்சியின் தாக்குதல் மட்டும் 60 சதவீதம் வரை மகசூல் இழப்பு ஏற்படுவதாக தெரிவிக்கின்றனர்.

    எனவே உரிய பாதுகாப்பு முறையினை பின்பற்றி குருத்துப் பூச்சியின் தாக்குதலை கட்டுப்படுத்தவில்லை என்றால் அதிக மகசூல் ஏற்படும் பாதிப்பு ஏற்படும் நிலை ஏற்பட்டுள்ளது.

    இதனால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.

    எனவே உரிய நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி உள்ளனர்.

    • நேரடி நெல் விதைப்பு மூலம் சம்பா சாகுபடி செய்து உள்ளனர்.
    • வேளாண் இடுபொருட்களை இலவசமாக வழங்க வேண்டும்.

    நாகப்பட்டினம்:

    நாகை மாவட்டம் திருமருகல் ஒன்றியத்தில் திருமருகல், சீயாத்தமங்கை, எரவாஞ்சேரி, கோட்டூர், வடகரை, ஏனங்குடி, நரிமணம், குத்தாலம், அம்பல், போலகம், வாழ்குடி உள்ளிட்ட 39 ஊராட்சிகளிலும்

    கடந்த சில நாட்களாக பெய்த கனமழையால் சியத்த மங்கை கோவில் சியாத மங்கை தென்படாகை வருவாய் கிராமம் பகுதிகளில் சுமார் 50 ஏக்கர் பரப்பளவில் சாகுபடி செய்யப்பட்டிருந்த சம்பா இளம் நெற்பயிர்கள் மழைநீரில் முழ்கி பாதிக்கப்பட்டுள்ளது.

    இதனால் அழுகி துர்நாற்றம் விசுவதால் விவசாயிகள் வேதனையில் உள்ளனர்.

    இது குறித்து விவசாயிகள் கூறுகையில் ஏக்கர் ஒன்றுக்கு ரூபாய் 25 ஆயிரம் வரை செலவு செய்து சம்பா சாகுபடி செய்துள்ளோம் தற்போது பெய்து வரும் தொடர் மழையால் நெற்பயிர்கள் நீரில் மூழ்கி பயிர்கள் அழுகி துர்நாற்றம் வீசியது.

    எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடன் உரிய கணக்கெடுப்பு செய்து விவசாயிகளுக்கு விதை மற்றும் உரங்கள் உள்ளிட்ட வேளாண் இடுபொருட்களை இலவசமாக வழங்க வேண்டுமென விவசாயிகள் கோரிக்கை விடுத்து காத்துள்ளனர்.

    • 36 ஏக்கர் பரப்பளவில் நெற்பயிர்கள் பாதிக்கப்பட்டுள்ளது.
    • வயல் வெளிகளில் தேங்கிய தண்ணீரை வெளியேற்றும் பணியில் விவசாயிகள்.

    திருவாரூர்:

    திருவாரூர் மாவட்டத்தில் கடந்த இரண்டு நாட்களாக பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்தது. இந்த மழையால் மாவட்டத்தில் தாழ்வான இடங்களில் உள்ள நெல் வயல்களில் தண்ணீர் சூழ்ந்துள்ளது.

    திருவாரூர் மாவட்டத்தில் 1 லட்சத்து 15 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் தாளடி நெற்பயிர் சாகுபடியும், 2 லட்சத்து 50 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் சம்பா சாகுபடியும் செய்யப்பட்டுள்ளது.

    இந்த நிலையில் திருவாரூர் மாவட்டத்தில் பெய்த மழையின் காரணமாக கடந்த நவம்பர் 1ஆம் தேதி முதல் 12 ஆம் தேதி வரை சம்பா மற்றும் தாளடி நெற்பயிர்கள் பாதிப்பு குறித்து மாவட்ட வேளாண் துறை தகவல் வெளியிட்டுள்ளது.

    அதன் அடிப்படையில் சம்பா மற்றும் தாளடி நெற்பயிர்கள் சேர்த்து திருவாரூரில் 25 ஏக்கர், திருத்துறைப்பூண்டியில் 1020 ஏக்கர், முத்துப்பேட்டையில் 712 ஏக்கர், மன்னார்குடியில் 350 ஏக்கர், நன்னிலத்தில் 1085 ஏக்கர், நீடாமங்கலத்தில் 5 ஏக்கர், குடவாசலில் 725 ஏக்கர், வலங்கைமானில் 675 ஏக்கர் என மொத்தம் 4747 ஏக்கர் பரப்பளவில் நெற்பயிர்கள் மழை நீரில் மூழ்கியுள்ளது.

    அதில் 36 ஏக்கர் பரப்பளவில் நெற்பயிர்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

    திருவாரூர் மாவட்டத்தில் கடந்த இரண்டு நாட்களில் மட்டும் 568 மில்லி மீட்டர் மழை அளவு பதிவாகியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. வயல் வெளிகளில் தேங்கிய தண்ணீரை வெளியேற்றும் பணியில் விவசாயிகள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.

    • மழைநீரில் மூழ்கிய நெற்பயிர்களை வேளாண்மை துறை அதிகாரிகளுடன் சேர்ந்து கலெக்டர் ஆய்வு.
    • தண்ணீரை வடிய வைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

    தஞ்சாவூர்:

    தஞ்சை மாவட்டத்தில் கடந்த 2 நாட்களாக கனமழை பெய்து வருகிறது. வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில் மேலும் கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

    இந்த நிலையில் தஞ்சை மாவட்டத்தில் மழைநீரில் மூழ்கிய நெற்பயிர்களை வேளாண்மை துறை அதிகாரிகளுடன் சேர்ந்து கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் ஆய்வு செய்தார்.

    அப்போது தண்ணீர் வடிய வைக்க உரிய நடவடிக்கை எடுப்பதாக விவசாயிகளிடம் உறுதி அளித்தார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

    தஞ்சையில் ஒரே நாளில் அதிகபட்சமாக 177 மில்லி மீட்டர் மழை பதிவாகியுள்ளது.

    தஞ்சை மற்றும் சுற்றுப்புற கிராமங்களில் சம்பா நெற்பயிர்கள் தண்ணீரில் மூழ்கி உள்ளது. மாவட்டம் முழுவதும் 1000 ஏக்கர் நெற்பயிர்கள் மூழ்கி உள்ளன.

    தண்ணீர் வடிய வைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

    பருவமழையில் விவசாயிகள் பாதிக்காத வகையில் அனைத்து நடவடிக்கையும் எடுக்க அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

    • குலை நோய், அம்மை எனும் ஊதுபத்தி நோய் அறிகுறி அதிகளவில் காணப்படுகிறது.
    • நடவு செய்யப்பட்ட நெற்பயிரில் தான் ஆணை கொம்பன் புழு தாக்குதல் அதிகம்.

    நாகப்பட்டினம்:

    நாகை மாவட்டம் திருமருகல் ஒன்றிய பகுதிகளான திட்டச்சேரி, திருமருகல், திருக்கண்ணபுரம், கோட்டூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் சுமார் 20 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் விவசாயிகள் ஏ.டி.டி., கோ - 45, கோ - 51, பி.பி.டி., (ஆந்திரா பொன்னி) நெல் சாகுபடி செய்தனர்.

    அதில் பெரும்பாலான நிலங்களில் நெற்பயிர்களில் ஆணை கொம்பன் நோய், இலை சுருட்டு புழு, குலை நோய், அம்மை எனும் ஊதுபத்தி நோய் அறிகுறி அதிகளவில் காணப்படுகிறது.

    இதனால் விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர்.இதுகுறித்து விவசாயிகள் கூறும்போது:-

    கடந்த சில ஆண்டுக்கு முன்னர் நெற்பயிர்களில் கதிர் வரும் சமயத்தில் ஆணை கொம்பன் நோய் பரவியது.

    இதனால், பயிர்களில் கதிர் வராமல், நெல் உற்பத்தி குறைந்து விட்டது. நடப்பாண்டு சாகுபடி செய்துள்ள நெற்பயிர்களில், இந்நோய் அறிகுறி காணப்படுகிறது.

    அதை கட்டுப்படுத்த வேளாண் அதிகாரிகள் அறிவுரை வழங்க வேண்டும்.

    நடவு செய்யப்பட்ட நெற்பயிரில் தான் ஆணை கொம்பன் புழு தாக்குதல் அதிகமாக உள்ளதால் இதனால் மகசூல் பாதிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது என்றனர்.

    • மாவட்டத்தில் 1 லட்சம் ஏக்கர் நிலப்பரப்புக்கு அதிகமாக குறுவை சாகுபடி செய்யப்பட்டது.
    • திருவாரூர் உள்ளிட்ட காவிரி டெல்டா பகுதிகளில் அடிக்கடி மழை பெய்து வருகிறது.

    திருவாரூர்:

    திருவாரூர் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் குறுவை நெல் சாகுபடி நிறைவடைந்து அறுவடை செய்யும் பணிகள் நடைபெற்று வருகிறது.

    மாவட்டத்தில் 1லட்சம் ஏக்கர் நிலப்பரப்புக்கு அதிகமாக குறுவை சாகுபடி செய்யப்பட்டது.

    இதில் பெரும்பாலான நெல் வயல்களில் அறுவடை நடைபெற்றுள்ளன.

    மீதமுள்ள நெல் வயல்களிலும் அறுவடை நடைபெற்று வருகிறது.

    இந்நிலையில் மேலடுக்கு சுழற்சியின் காரணமாக திருவாரூர் உள்ளிட்ட காவிரி டெல்டா பகுதிகளில் அடிக்கடி மழை பெய்து வருகிறது.

    இதனால் பல இடங்களில் அறுவடைக்கு தயாராக இருந்த குறுவை நெற்பயிர்கள் வயலில் சாய்ந்தன.

    தொடர்ந்து விட்டுவிட்டு மழை பெய்வதால் அறுவடை பணிகளையும் தொடர முடியாத நிலை உள்ளது.

    இதனால் வயலில் சாய்ந்த பயிர்கள் தண்ணீரில் மூழ்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

    இதனால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.

    இந்த ஆண்டு மேட்டூர் அணை முன்கூட்டியே திறக்கப்பட்டதால் விவசாயிகள் ஆர்வத்துடன் குறுவை சாகுபடி பணியில் ஈடுபட்டிருந்தனர்.

    உரத்தட்டுப்பாடு, பூச்சி தாக்குதல் உள்ளிட்ட இடர்பாடுகளையும் தாண்டி சாகுபடி பணிகளை முடித்து அறுவடை செய்யும் நிலையில் மழை பாதிப்புக்கு ஆளாகி இருப்பது விவசாயிகளை வேதனையில் ஆழ்த்தி உள்ளது.

    விரைந்து அறுவடை பணிகளை மேற்கொள்ளும் வகையில் கூடுதல் அறுவடை எந்திரங்களை வரவழைத்து உதவிட வேண்டுமென விவசாயிகள் தமிழக அரசை கேட்டுக் கொண்டுள்ளனர்.

    • அறுவடை பணி நடந்து வந்ததால் அறுவடை எந்திரம் வயலிலேயே நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது.
    • மழையால் போட்ட முதலீட்டை கூட மீட்க முடியுமா என்பது கூட தெரியவில்லை.

    தஞ்சாவூர்:

    காவிரி டெல்டா மாவட்ட பாசனத்துக்காக இந்த ஆண்டு முன்கூட்டியே அதாவது மே மாதத்திலேயே மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறந்து விடப்பட்டது.

    இதனால் குறுவை சாகுபடி பணியை விவசாயிகள் மும்முரமாக செய்தனர்.

    தஞ்சை மாவட்டத்தில் மட்டும் 72 ஆயிரத்து 816 எக்டேரில் குறுவை சாகுபடி செய்யப்பட்டது.

    தற்போது பயிர்கள் வளர்ந்துள்ள நிலையில் மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் அறுவடை பணிகள் முழுவீச்சில் நடந்து வருகின்றன.

    இன்னும் 2 வாரத்திற்குள் அறுவடை பணிகள் முடிவடையும் என எதிர்பார்க்கப்பட்டது.

    இந்த நிலையில் தஞ்சை மாவட்டத்தில் நள்ளிரவில் கனமழை கொட்டியது.

    தொடர்ந்து 3 மணி நேரத்தி ற்கும் மேலாக இடைவிடாது கனமழை பெய்தது.

    இதன் காரணமாக தஞ்சை மாவட்டம்புதுகல்வி ராயன்பேட்டை,மானோ ஜிபட்டி, சித்திரைக்குடி, பூதலூர், கல்விராய ன்பே ட்டை மற்றும் சுற்றுவ ட்டார பகுதிகளில் மட்டும் 500 ஏக்கரில் அறுவடைக்கு தயாரான குறுவை நெற்பயி ர்கள் வயலில் மழைநீர் புகுந்தது.

    தொடர்ந்து தண்ணீர் சென்றதால் வயல்கள் வெள்ளக்காடாக மாறியது.

    அறுவடைக்கு தயாரன பயிர்கள் மூழ்கி சாய்ந்தன. இதனால் விவசாயிகள் கவலை அடைந்தனர். மேலும் புதுகல்விராயன்பேட்டை பகுதியில் 2 நாட்களாக அறுவடை பணி நடந்து வந்ததால் அறுவடை எந்திரம் வயலிலேயே நிறுத்தி வைக்கப்பட்டு இருந்தது.

    தற்போது பெய்த மழையால் அறுவடை எந்திரம் வெளியே வர முடியாமல் வயலிலேயே நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

    மாவட்டம் முழுவதும் கனமழை பெய்ததால் 1000 ஏக்கர் அளவுக்கு அறுவடைக்கு தயாரான குறுவை நெற்பயிர்கள் மூழ்கி சாய்ந்து பாதிக்கப்பட்டு இருக்கும் என விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.

    இது குறித்து விவசாயிகள் கூறும்போது:-

    தஞ்சை மாவட்டத்தில் குறுவை அறுவடை இறுதி கட்டத்தை எட்டிய நிலையில் எதிர்பாராத கனமழையால் பல இடங்களில் அறுவ டைக்கு தயாரான குறுவை நெற்பயிர்கள் மூழ்கி பாதிக்கப்பட்டுள்ளது.

    லேசான மழை பெய்தால் இந்த அளவுக்கு பாதிப்பு இருக்காது.

    ஆனால் 4 நாட்களுக்கு சேர்த்து மிகப்பெரிய அளவில் கனமழையாக பெய்ததால் வயலில் தண்ணீர் சூழந்து பயிர்கள் மூழ்கி விட்டன.

    இதனால் மகசூல் பெருமளவில் குறைய வாய்ப்பு உள்ளது.

    மேலும் ஒரு வயலில் 1 மணி நேரம் எந்திரம் மூலம் அறுவடை நடந்தால் இனி அது 3 மணி நேரமாக அதிகரிக்கும்.

    இதனால் கூடுதல் செலவு ஏற்படும். நாங்கள் ஏக்கருக்கு ரூ.40 ஆயிரம் வரை செலவழித்து பயிரிட்டிருந்தோம்.

    தற்போது மழையால் போட்ட முதலீட்டை கூட மீட்ட முடியுமா என்பது கூட தெரியவில்லை.

    எனவே உடனடியாக குறுவை பயிர்களுக்கு காப்பீடு திட்டத்தை கொண்டு வர வேண்டும்.

    தஞ்சை மாவட்டத்தில் மூழ்கி பாதிப்படைந்த பயிர்களை கணக்கீட்டு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என்றனர்.

    • சுமார் 30 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் குறுவை சாகுபடி பணிகள் நடைபெற்று வருகிறது.
    • சாகுபடி செய்த விவசாயிகள் கொள்முதல், குறைந்து விடுமோ என்ற கவலையில் உள்ளனர்.

    திருவாரூர்:

    நீடாமங்கலம் பகுதியில் குறுவை சாகுபடி செய்து அறுவடைக்கு தயிராக இருந்த நெல் மணிகள் மழையால் தரையில் சாய்ந்தது. திருவாரூர் மாவட்டம் நீடாமங்கலம் வட்டத்தில் 52 ஆயிரம் ஏக்கர் நிலங்கள் உள்ளது. இதில் சுமார் 30 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் குறுவை சாகுபடி பணிகள் நடைபெற்று வருகிறது.

    ராயபுரம், காளாஞ்சிமேடு, கடம்பூர், பரப்பனாமேடு, சித்தமல்லி மேல்பாதி, பூவனூர், அனுமந்தபுரம், பெரம்பூர், காளாச்சேரி, ராயபுரம், மேலபூவனூர், காணூர், அனுமந்தபுரம், தேவங்குடி, ரிஷியூர் உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் விவசாயிகள் நிலத்தடி நீரினை பயன்படுத்தி முன் கூட்டியே குறுவை சாகுபடிக்கு தொடங்கினர்.

    இவ்வாறு முன்கூட்டியே சாகுபடி செய்த நெல் பயிர்கள் தற்போது அறுவடைக்கு வரும் நிலையில் நெல் மணிகள் பழுத்து வருகிறது. இந்நிலையில் நீடாமங்கலம் பகுதியில் இரவு நேரங்களில் பெய்து வரும் மழையால் சுமார் 1000 ஏக்கர் பரப்பளவில் அறுவடைக்கு தயாராக இருந்த நெல்மணிகள் மழையில் தரையில் சாய்ந்துள்ளது. இதனால் சாகுபடி செய்த விவசாயிகள் கொள்முதல், குறைந்து விடுமோ என்ற கவலையில் உள்ளனர். வயல்களில் தேங்கிய மழை நீரை வடித்தெடுக்கும் பணியில் விவசாயிகள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.

    ×