என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
தொடர்மழையால் சாய்ந்து கிடக்கும் குறுவை நெற்பயிர்கள்
- மாவட்டத்தில் 1 லட்சம் ஏக்கர் நிலப்பரப்புக்கு அதிகமாக குறுவை சாகுபடி செய்யப்பட்டது.
- திருவாரூர் உள்ளிட்ட காவிரி டெல்டா பகுதிகளில் அடிக்கடி மழை பெய்து வருகிறது.
திருவாரூர்:
திருவாரூர் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் குறுவை நெல் சாகுபடி நிறைவடைந்து அறுவடை செய்யும் பணிகள் நடைபெற்று வருகிறது.
மாவட்டத்தில் 1லட்சம் ஏக்கர் நிலப்பரப்புக்கு அதிகமாக குறுவை சாகுபடி செய்யப்பட்டது.
இதில் பெரும்பாலான நெல் வயல்களில் அறுவடை நடைபெற்றுள்ளன.
மீதமுள்ள நெல் வயல்களிலும் அறுவடை நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் மேலடுக்கு சுழற்சியின் காரணமாக திருவாரூர் உள்ளிட்ட காவிரி டெல்டா பகுதிகளில் அடிக்கடி மழை பெய்து வருகிறது.
இதனால் பல இடங்களில் அறுவடைக்கு தயாராக இருந்த குறுவை நெற்பயிர்கள் வயலில் சாய்ந்தன.
தொடர்ந்து விட்டுவிட்டு மழை பெய்வதால் அறுவடை பணிகளையும் தொடர முடியாத நிலை உள்ளது.
இதனால் வயலில் சாய்ந்த பயிர்கள் தண்ணீரில் மூழ்கும் நிலை ஏற்பட்டுள்ளது.
இதனால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.
இந்த ஆண்டு மேட்டூர் அணை முன்கூட்டியே திறக்கப்பட்டதால் விவசாயிகள் ஆர்வத்துடன் குறுவை சாகுபடி பணியில் ஈடுபட்டிருந்தனர்.
உரத்தட்டுப்பாடு, பூச்சி தாக்குதல் உள்ளிட்ட இடர்பாடுகளையும் தாண்டி சாகுபடி பணிகளை முடித்து அறுவடை செய்யும் நிலையில் மழை பாதிப்புக்கு ஆளாகி இருப்பது விவசாயிகளை வேதனையில் ஆழ்த்தி உள்ளது.
விரைந்து அறுவடை பணிகளை மேற்கொள்ளும் வகையில் கூடுதல் அறுவடை எந்திரங்களை வரவழைத்து உதவிட வேண்டுமென விவசாயிகள் தமிழக அரசை கேட்டுக் கொண்டுள்ளனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்